ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினத்தில் ஏகத்துவத்தை எதிர்க்க வந்த ஏகத்துவத்தின் எதிரிகள்

Written By GM.BASHA on Monday, February 14, 2011 | 6:38 AM

           ஆர்.புதுப்பட்டினத்தில் நடந்தது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் ரபியுல் அவ்வல் மாதத்தில் நடைபெறும் அனாச்சாரமான மவ்ளீதக்கண்டித்து நமது சகோதரர்கள் தெருமுனைப் பிரச்சாரம் செய்ய முறையாக காவல்துரையினரிடம் அனுமதி பெற்று ஏற்பாடு  செய்திருந்தனர்.இந்தச்செய்தி நமது சகோதரர்களால் எஸ்.எம்.எஸ்.செய்திமூலமாக அனைவருக்கும் தெரியப் படுத்தியிருந்தனர்.இதை அறிந்த ஏகத்துவத்தின் எதிர்கள் சிலர் இதை ஊர் பிரச்சினையாக்கி இவர்களுக்கு இத்தோடு முடிவுகட்டவேண்டும் என்று ரகசியமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.இதை அறியாத நமது சகோதரர்கள் தெருமுனைப் பிரச்சாரத்திர்க்கான ஆயத்தப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ஏகத்துவத்தின் எதிரிகள் நாம் எந்த இடத்தை தேர்வு செய்திருன்தோமோ அந்த இடத்தில் நமக்கு முன்னதாகவே நாங்கள் மீலாது விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில் மைக்செட்டை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.இதை பார்த்த நமது சகோதரர்கள் .நாங்கள் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதிபெற்றுள்ளோம் எங்களுக்கு இடையூறு செய்தால் நாங்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்க நேரிடும் என்று எச்சரித்துவிட்டு பிரச்சாரத்திர்க்கான பணியில் மும்புரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது,நாம் சொன்ன தகவல் ஊர்நிர்வாகத்திடம் சொல்லப்பட்டுள்ளது அவ்வளவுதான் ஏகத்துவத்தின் எதிர்கள் கொந்தளித்துவிட்டார்கள் உடனே ஊர் கூட்டம் அவசர அவசரமாக கூட்டப்பட்டு இவர்கள் நான்கைந்து பேர்கள் இருந்துகொண்டு ஊரை எதிர்த்துக்கொண்டுள்ளனர் இவர்களுக்கு சரியான முடிவுகட்டவேண்டும் என்று காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கும் போது நாம் பள்ளிவாசலுக்கு அடுத்தத் தெருவில் பிரச்சாராம் செய்ய ஆயத்தமாகிவிட்டோம் இத்தகவல் அவர்களுக்குக்கிடைத்தவுடன் சுமார் நூறு பேர்கொண்ட கும்பல் நம்மை நோக்கி டேய் நிறுத்துங்கட,டேய் நிறுத்துங்கட என்று கூச்சளிட்டவாறே வந்து நீங்கள் இங்கு பிரச்சாரம் செய்தால் கடுமையான பின் விளைவுகள் ஏற்படும் என்று நாகூசும் வார்த்தைகளால்  நம்மைப் பார்த்து மிரட்ட ஆரம்பித்து விட்டனர்.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வந்தவர்களில் பெரும்பாலோனோர் குடிபோதையில் இருந்ததைக் காணமுடிந்தது. அதேநேரத்தில் போலீசாரும் வந்துவிடவே கைகலப்பாக மாறஇருந்த பிரச்சினை அல்லாஹ்வின் அருளால் தவிர்க்கப்பட்டது.காவல்துறையினர் பெரும்பான்மையினர் என்று அவர்களுக்கே சப்போர்ட் செய்ததால் நாம் விஷயத்தை உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எஸ்.பீ.அவர்களின் கவனத்திற்கு கொண்டுசென்றோம் .எஸ்.பீ.அவர்கள் லோக்கல் காவல்நிலையத்திற்கு பிரசர் கொடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரசொல்லவும் உள்ளூர் காவல்துறையினர் நம்மிடம் சமாதானம் பேச ஆரம்பித்துவிட்டனர் இப்பொழுது நிலைமை சரியில்லை நீங்கள் பிரச்சாரம் பண்ணினால் அவர்கள் கலாட்ட செய்வார்கள் எனவே தவுசெய்து உங்கள் தலைமையிடம் பேசி வேறு திகதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் நாங்கள் அனுமதிதந்து தகுந்த பாதுகாப்பும் தருகிறோம் என்று வாக்குறுதி அளிக்கவும் நாம் நாமது மாவட்டத்தைத் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினோம்.நமது மாவட்டமும் சட்டத்திற்கும் காவல்துறைக்கும் கட்டுப் பட்டு இன்றைக்கு நாம் பிரச்சாரம் செய்யவேண்டாம் மீண்டும் நாம் முறைப்படி அனுமதிவாங்கி பொதுக்கூட்டமாக நடத்திக்கொள்வோம் என்று சொல்லவும் நாமும் தலைமைக்கு கட்டுப்பட்டு இது நமக்கு ஏற்பட்ட தோழ்வியில்லை ஏன் என்றால் எத்தனையோ நபிமார்கள் இந்த ஏகத்துவத்தச் சொன்னதற்காக கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பிரச்சாரம் செய்யமுடியாமல் தடுக்கப் பட்டுள்ளனர் இது காலம் காலமாக சத்தியத்திற்கு வரும் சோதனைதான் முதலில் அசத்தியவாதிகள் வெற்றிபெற்றதுபோல் தோன்றினாலும் இறுதிவெற்றி சத்தியத்திக்குத்தான் என்றவாறு அவ்விடத்தை விட்டு கலைந்துவந்தோம். பிரச்சாரத்திற்க்காக வந்த ரெத்தினக் கோட்டையைச் சார்ந்த சகோ.  சாதிக் அவர்கள் நமது சகோதரர்களுக்கு  இந்த இஸ்லாத்தை நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் பிரச்சாரம் செய்யும்போது அவர்களது  குடும்பத்தில் இருந்து, ஊரில் இருந்து, எவ்வாறு எதிர்ப்பு கணைகள் வந்தது அவர்கள் ஊர்விலக்கம் செய்யப்பட்டது, இனி நமது  செயல்பாடுகள் எவ்வாறு அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றி ஒரு சிறு உரை நிகழ்த்தினார்கள் .இது அந்த நேரத்தில் நாம் தொற்றுவிட்டோமோ என்று சோர்ந்து இருந்த நமது சகோதரர்களுக்கு ஒரு புத்துணர்வை அளிப்பதாக இருந்தது அல்ஹம்துலில்லாஹ்.
இந்த குடிகாரர்களின் அராஜக காட்சிகள் வீடியோ எடுப்பதற்கே பயந்து பயந்து ஒரு சகோதரர் எடுத்துள்ளார் அதைக்காண









இறுதியாக..
                 இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு காரணம் என்ன?
மது அருந்திவிட்டு ஊரில் கலகம் செய்பவர்களை இவர்கள் ஆதரிக்கின்றனர்,
சூதாட்டம் நமதூரில் எந்நேரமும் கொடிகட்டி பறக்கிறது அதை இவர்கள் எதிர்க்கவில்லை
வரதட்ச்சனை என்ற சமுதாய புற்றுநோய் சமுதாயத்தை அறித்துக் கொண்டிருக்கிறது அதை ஆதரிக்கின்றனர் கமிசன் வாங்கிக்கொண்டு
 இவர்கள் நம்மை எதிர்ப்பதற்கு ஒரே காரணம்
இவர்களின் பதவி வெறிதான் இந்த ஊரில் தவ்ஹீத் வளர்ந்தால் நாம் கட்டப் பஞ்சாயத்து செய்யமுடியாது பலவீனர்களை கைகட்டி நம்மிடத்திலே மன்னிப்பு கேட்க வைக்க முடியாது என்பதினால் தானே.
அல்லாஹ் திருமறையிலே "நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வின் ஜோதியை தமது வாய்களால் ஊதி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் ஆனால் அல்லாஹ் தனது ஜோதியை முழுமையாக்கியே தீருவான்"(அல் குரான் )
ஆர்.புதுப்பட்டினத்திலும் ஏகத்துவம் என்ற ஜுவாலை அனாச்சாரத்தையும் பித்அத்களையும் எரித்து சாம்பல் ஆக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
"நீங்கள் தளர்ந்து விடாதீர்கள் கவலையும் படாதீர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் நீங்களே வெற்றிபெறுவீர்கள்"(அல் குரான் ).
சத்தியம் தோற்றதாக வரலாறு நெடுகிலும் தேடிப்பார்த்தாலும் வரலாறு கிடையாது. தோற்கப் போவதும் இழிவடையப் போவதும் அசத்தியவாதிகள் தான் இன்ஷாஅல்லாஹ்.    

0 comments:

Post a Comment