ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

போலீஸ் நிலையத்தில் சிறுமி கற்பழித்துக் கொலை! போலீஸாரே கற்பழித்தனர்: தாய் பரபரப்புப் புகார்!!

Written By GM.BASHA on Monday, June 13, 2011 | 3:36 AM




உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர்பேரி மாவட்டத்தில் லிஹாஷான் பகுதியைச் சேர்ந்த இந்திஜாமலி தரணம் ஆகியோரின் மகள் சோனா. 14 வயதான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகில் ஆடு மேய்க்கச் சென்றாள். இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்தில் பிணமாக சோனா தொங்கிக் கொண்டிருந்தாள். போலீஸ் நிலையத்தில் போலீசார் சோனத்தை பலத்காரம் செய்து, கொலை செய்து விட்டதாகவும் தற்கொலை செய்து கொண்டார் என மற்றவர்களை நம்ப வைப்பதற்காக மரத்தில் தொங்க வி்ட்டதாகவும் தாய் தரணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
சோனா பிணமாகக் கிடந்த நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு சப்இன்பெக்டர்கள் உட்பட 11 போலீஸாரும் ஒட்டு மொத்தமாக சஸ்பன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சோனா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவரும் என்றும் போலீஸ் சூப்பிரண்ட் ராய் தெரிவித்தார்.
 
சோனா சாவில் போலீஸார் சம்பந்தப்பட்டுள்ளனரா எனக் கண்டறிவதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  
நன்றி:கிங் தமிழ் 

0 comments:

Post a Comment