ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

கற்பனை கோட்டை தேசிய சின்னமாக்குவதால் என்ன நன்மை?

Written By GM.BASHA on Friday, March 30, 2012 | 5:58 AM


எந்த ஒரு நல்ல திட்டத்தையும் அரசியல் ஆதாயத்துக்காக எதிர்ப்போர் இருந்துகொண்டேதான் இருப்பார்கள் ...

சேது சமுத்திர திட்டத்தை- பெரும் விழா எடுத்து தொடங்கினார்கள்..அது பொறுக்கவில்லை  சில மத வெறியர்களுக்கு...இல்லாத ஒன்றை உருவாக்கினார்கள். அதற்க்கு ராமர் பாலம் என்ற பெயரை சூட்டி,,அந்த திட்டத்தை தடுத்தார்கள்..

சேது சமுத்திர திட்டம் தொடங்குவதற்கு காரணம் நான்தான் என்று விளம்பர மோகம் பிடித்து அலைந்த அரசியல் "வியாதி'களெல்லாம், மதவெறி மிருகங்களின் இந்த திட்டத்திற்கு பலியாகின..

இந்த விஷயத்தை முளையிலேயே கில்லி எறியவேண்டிய நிலையில் இந்த நீதிமன்றங்களும், அந்த மதவெறியர்களின் - வழக்கை விசாரித்து இன்று சேதுசமுத்திர திட்டத்தை எட்டாகனியாக்கி...மேலும் மேலும் சிக்கலாக்கிவிட்டன..

போதாதற்கு இன்று முதலமைச்சர் ஜெயலலிதாவின் அறிக்கை அவர் தமிழகத்தின் முதல்வரா இல்லை சங்பரிவாரின் பினாமியா என்று  நினைக்க    வைக்கிறது.
அந்த கற்பனை கோட்டை, தேசிய சின்னமாக்க - நீதி மன்றங்களில் வழக்குகளை தொடர்ந்ததாக பெருமையடித்துக்கொள்ளும் ஜெயலலிதா அதை செயல்படுத்துமாறு பிரதமருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்..

சுப்ரீம் கோர்டில் மத்திய அரசு அவகாசம் கேட்டுள்ளது.

இந்த உபயோகமற்ற விசயத்திற்காக ஒட்டு பொருக்கி அரசியல் வியாதிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி நடத்தி பாராளுமன்ற நிகழ்வுகளை முடக்கி வைத்துள்ளனர்..

பகுத்தறிவுவாதிகள் என்று பீற்றிக்கொள்ளும் தி.மு.கவினரும் இதற்க்கு ஒத்தூதுவதுதான் வேதனைக்குரிய விஷயம்..

சேதுசமுத்திர திட்டம் செயல்பட தொடங்கினால்  நஷ்டம் இலங்கைக்குத்தான்  என்பதால்  இத்திட்டத்தை முடக்க திட்டமிடுவது இலங்கைதான் என்ற ஒரு செய்தி உண்டு..

விடுதலைப்புலிகளுக்காக  - இந்தியாவிற்கே துரோகம் செய்ய துணிந்த தமிழ் பற்று வியாபாரிகள் - இலங்கையை புறக்கணிக்க சொல்லிக்கொண்டும் அலைகிறார்கள்..இந்த விசயத்தில் இங்குள்ள அரசியல் வியாதிகள் இலங்கைக்கு சாதகமான நிலையை எடுத்திருக்கிறார்களே ..இதை இவர்கள் ஆதரிப்பார்களா.?.அப்படி அவர்கள் ராமர் பாலம் என்ற கற்பனை கோட்டை ஆதரித்தார்கள் என்றால் இவர்களின் தமிழ்பற்று நூறு சதவீதம் வியாபாரம்தான் என்று தெளிவாகிவிடும்.

மக்கள் நலனை மனதில் கொள்ளாமல், மூடநம்பிக்கை - மதவெறி வியாபாரம் செய்யும் இந்த அரசியல் வியாதிகளாலும், கற்பனை கோடுகளாலும் என்னதான் உபயோகம்?

நன்றி:மர்மயோகி.காம்

0 comments:

Post a Comment