ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஈரான் அதிபரைக்கொள்ள இஸ்ரேல் முயற்சி

Written By GM.BASHA on Wednesday, August 4, 2010 | 4:36 AM

தெஹ்ரான்: ஈரான் அதிபர் மெஹ்மூத் அஹமதிநிஜாதைக் கொல்ல முயற்சி நடந்தது. அவரது வாகனம் மீது கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இன்று காலை மேற்கு ஈரானி்ல் உள்ள ஹமேதான் நகருக்கு அவர் சென்றார். அவரது காருக்கு முன்னும் பின்னும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன.

இந் நிலையில் அகமதிநிஜாத் சென்ற காரை குறி வைத்து ஒரு கிரனைட் குண்டு வீசப்பட்டது. ஆனால், அந்த குண்டு தவறி இன்னொரு கார் மீது விழுந்து வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் கார் பலத்த சேதமடைந்தாலும் யாரும் உயிரிழந்ததாகத் தகவல் இல்லை.

இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குண்டு வெடித்ததையடுத்து அதிபரின் வாகனமும் பிற வாகனங்களும் அங்கிருந்து வேகமாக பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

இநத சம்பவத்தைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் அவர் நேரடியாக உரையாற்றினார். ஆனால், இந்த குண்டுவெடிப்பு குறித்து அவர் ஏதும் பேசவில்லை.

இந்த தாக்குதல சம்பவத்துக்கு முன் இன்று காலை சிரிய நாட்டு அதிபர் பஸர் ஆசாத்துடன் அவர் தொலைபேசியில் பேசினார்.

அப்போது லெபனான் நாட்டுக்குள் இஸ்ரேலியப் படைகள் ஊடுருவியதை அவர் கண்டித்ததோடு, இந்த விவகாரத்தில் லெனானில் இஸ்ரேலை எதிர்ததுப் போராடி வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு தனது ஆதரவு தொடரும் என்றும் கூறினார்.

தன்னைக் கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக சில காலமாகவே அகமதிநிஜாத் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

   நன்றி:தட்ஸ் தமிழ். 





0 comments:

Post a Comment