ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினத்தில் கொலைவெறித் தாக்குதல் நடந்த உண்மைகள்!!!

Written By GM.BASHA on Tuesday, February 22, 2011 | 1:32 AM

ஆர்.புதுப்பட்டினம்,புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் இங்கு தவ்ஹீத் ஜமாத்தை சார்ந்த சகோதரர்கள் சொற்ப எண்ணிக்கையில் அதாவது ஒற்றை இலக்கத்திற்குள் உள்ளனர்.கடந்த 18-02-2011 அன்றைய பொழுது 
மிகவும் பரபரப்புடன் விடிகிறது காரணம் என்ன?ஆம் தவ்ஹீதை போதிக்கக்கூடிய நம்மை  முற்றிலுமாக ஒரு வழி பண்ணுவதற்கு ஏகத்துவத்தின் எதிரிகள் சதித்திட்டம் தீட்டி களம் காண அவர்களால் தேர்வு செய்யப்பட நாள் தான் 18-02-2011. தவ்ஹீத் சகோதரர்களுக்கு முடிவு கட்டும் அளவிற்கு அப்படி அவர்கள் என்னதான் செய்தார்கள் ஆம் அவர்கள் மிகப் பெரிய ஒரு குற்றத்தைச் செய்து இருக்கிறார்கள் என்னதெரியுமா? மவுலீதை கண்டித்து தெருமுனைப் பிரச்சாரம் செய்ய முனைந்தது தான் அவார்கள் செய்த மிகப்பெரிய தவறு. 
இதைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள கடந்த 13-02-2011  அன்று என்ன நடந்தது என்பதை முழுமையாக அறிந்து கொள்ளவேண்டும்.அதைப்பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் இதற்காக நடந்தது என்ன தெரியுமா? சகோ.நைனா முஹம்மது மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டது இவர் உடல் நிலை சரியில்லாததால்  ஒருவாரம் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு சம்பவம் நடந்த அன்றுதான் ஊருக்கு வந்தார் அன்று ஜூம்ஆ தொழுககைக்கு பள்ளிக்குச்சென்றார் தொழுதுவிட்டு பள்ளியைவிட்டு வெளியேறுகையில் நேயாளியான அவர்மீது பள்ளிவாசலுக்குள்ளேயே  கொலை வெறி தாக்குதல் நடத்தப் பட்டிருக்கிறதென்றால் மற்றவர்கள் மீது இவர்கள் எந்த அளவுக்கு கொலைவெறி தாக்குதல் நடத்துவார்கள் என்பது நாம் சொல்லவும் வேண்டுமோ!                                                                                                                                      கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான சகோ.நைனா முஹம்மது.


அடுத்ததாகதவ்ஹீது சகோதரர்கள் செய்த தவறுதான் என்ன?  நடந்த சம்பவத்தை இணையதளத்தில்  வெளியிட்டது, நாம் இணையதளத்தில் எழுதியிருக்கும் அனைத்து சம்பவங்களும் எங்கள் ஊரில் நடைபெறும் விஷயங்கள் தான் கூட்டி குறைத்து நாம் எழுதிவிடவில்லை.அவர்கள் மறுப்பார்கள் என்றால் நாம் ஆதாரத்தை ஒவ்ஒவொன்றாக வெளியிடுவோம்.ஆக அவர்கள் கட்டப் பஞ்சாயத்து செய்கிறார்கள் என்பதை அவர்கள் நடவடிக்கை மூலம் அவர்கள் முழு உலகுக்கும் ஒப்புதல் அளித்துவிட்டார்கள்.தாக்குதல் நடத்தியவர்களின் மீதும் ஆதற்கு காரணமானவர்களின் மீதும் சட்டப்படி நமது ஜமாஅத் நடவடிக்கை எடுத்து வருகிறது.


    இந்த பள்ளிக்குள் வைத்துதான் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது

0 comments:

Post a Comment