ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஆர்.புதுப்பட்டினத்தில் மருத்துவ உதவி

Written By GM.BASHA on Wednesday, July 13, 2011 | 7:29 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாகஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் செய்யதலி அவர்களுக்கு மருத்துவ உதவியாகரூ.ஆயிரம்  (1000) 10-11-2010 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து வழங்கப்பட்டது.

இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கால் விரலை ஆபரேசன்
 செய்து அகற்றப்பட்டுள்ளது.
 என் கணவரை ஒரு மாத காலமாக  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட்
 செய்துள்ளேன் ஆனால் மருத்துவர்கள் யாரும் வந்து சரியாக பார்ப்பதில்லை,இதை
 நமதூர் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கூறி நீங்கள் வந்து மருத்துவரைப் பார்த்து சரியான
 முறையில் வைத்தியம் பாருங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சொன்னேன் அனால்
தங்களை ஊர்காரர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை,கண்டுகொள்ளவில்லை நாங்கள்
ஏழையாக இருப்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் இதுவே ஒரு பணக்காரராக
இருந்தால் MLA,MP என்று பலருக்கும் போன் செய்து மருத்துவமனையில் ஊரே
கூடியிருப்பார்கள் என்று அவரது மனைவி தனது ஆதங்கத்தை நம்மிடம்
தெரிவித்தார்கள்.
  இதை மருத்துவமனையில் சென்று பார்த்த நமது சகோதரர்கள் அவரின் பரிதாப (இவரை
குவிண்டால் என்று பட்டப் பெயர் வைத்து அழைப்பார்கள் அந்த அளவிற்கு பருமனாக
இருந்தவர் மிகவும் மெலிந்து காணப்படுகிறார்) நிலையை கண்டு கண்கலங்கி உடனே
நமது மாவட்டத்தை தொடர்பு கொண்டு உடனே சரியான முறையில் மருத்துவம்
பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.அவரின் முழுக்காலையும் அகற்ற வேண்டி இருந்தது
நமது ஜமாத்தின் முயற்ச்சியாலும் மருத்துவர்களின் தீவிர மருத்துவத்தாலும்
எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,அவரின் கால்விரல்
மட்டும் அகற்றப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளார் அல்ஹம்துலில்லாஹ்   .

0 comments:

Post a Comment