ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஐ.நாவில் தனிநாடு அங்கீகாரத்துக்கு முந்தைய நிலை தகுதியை பெற்றது பாலஸ்தீனம்!: கடுப்பில் அமெரிக்கா

Written By GM.BASHA on Thursday, November 29, 2012 | 9:59 PM

ஐக்கிய நாடுகள் சபையினால் முழுமையாக ஒரு தனி நாடு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முந்தைய நிலையான ‘பார்வையாளர் நாடு" என்கிற தகுதியை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு மூலம் பாலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது.
பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான மோதல் நிலையால் இன்னமும் ஒரு தனிநாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு பாலஸ்தீனம் இருந்து வருகிறது. இத்தகுதிக்கு ஒருபடி மேலாக அதாவது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையான ஐ.நாவின் ‘பார்வையாளார் தகுதி"பெற்ற நாடாக (Observer status) பாலஸ்தீனம் உருவெடுத்திருக்கிறது.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா உட்பட 138 நாடுகள் வாக்களித்த. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்காவின் லாபிக்குட்பட்ட 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ‘பார்வையாளர் தகுதி' பெற்ற நாடாகி இருக்கிறது பாலஸ்தீனம்.
இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கக் கூடிய உரிமை பாலஸ்தீனத்துக்கு இன்னமும் கிடைக்காவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் இதர அமைப்புகளில் பாலஸ்தீனம் இணைந்து செயல்படலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக நேரடியாக முறையிடக் கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது்.
பாலஸ்தீனத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை ஏற்க முடியாத அமெரிக்காவும் இஸ்ரேலும் காசா போர் முனையில் மேலும் மோசமான விளைவுகளை இது உருவாக்கும் என்று குமுறியிருக்கின்றன.
ஐ.நா.வின் அங்கீகாரத்தை பாலஸ்தீனம் பெற்ற செய்தியை அந்நாடு உற்சாகமாகக் கொண்டாடியது. யுத்த முனையான காசா பகுதியில் குண்டு மழை பொழிய உற்சாகம் கரைபுரண்டோடியது. ஐக்கிய நாடுகள் சபையின் 194-வது நாடாக பாலஸ்தீனம் உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நன்றி:தட்ஸ்தமிழ்  

0 comments:

Post a Comment