ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

அரைவேக்காட்டிற்கு பதிலடி

Written By GM.BASHA on Friday, March 29, 2013 | 9:31 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டைமாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக  கடந்த சில வாரங்களாக ஜும்ஆ வில் தவ்ஹீத் ஜமாஅத் தை பற்றி சகட்டு மேனிக்கு ஆதாரமில்லாமல் விமர்சித்து வந்த போலி மத்ஹபு வாதிக்கு பதிலடியாக சஹாபாக்களை பின்பற்றலாமா?என்ற பிரசுரம் ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சஹாபாக்களை பின்பற்றலாமா?

இஸ்லாமிய மார்க்கம் தெளிந்த நீரோடை போன்று தெளிவான மார்க்கம் இதில் எந்த குழப்பத்திற்கும்  இடமில்லை, அல்லாஹ் திருமறையில் குர் ஆன்,ஹதீஸை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளான். ஆனால் போலி மத்ஹப் இமாமோ சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்றும் அவ்வாறு  சஹாபாக்களை பின் பற்றாதவர்கள் யூதர்கள்,காபிர்கள் என்றும்  நம்மீது உள்ள வெறுப்பின் காரணமாக தனது அரிப்பை ஜூம்ஆ  மேடையில் சொரிந்து தீர்த்து கொண்டுள்ளார். நாம் ஏற்கனவே குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரத்தோடு விளக்கியுள்ளோம் "யார் யூதர்கள்" என்று, யூதராக  இருப்பவர்  முஸ்லிமாக இருக்க முடியாது இது உலகறிந்த உண்மை. இனி விசயத்திற்கு வருவோம்.

முஸ்லீம்கள் வஹீயை (இறைச் செய்தியை ) மட்டுமேஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை,செய்ததைக் கூட மார்க்கமாக செய்ய வேண்டியதில்லை என்பதை விளங்காத காரணத்தினால் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர். வஹீ  இல்லாமல் தேனை நபி(ஸல்அவர்கள் ஹராமாக்கியதையும்,வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் தமது சொல்,செயலைக்கூட  வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும்,வஹீயை பெறாத சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று  மத்ஹபு ஜமாஅத் இமாம் பலஹீனமான செய்தியை கொண்டும், குர் ஆனுக்கு தவறான விளக்கம் வைத்தும் கூறுவது இவரது அறியாமையை படம் பிடித்து காட்டுகிறது.

 
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை ) பொருப்பாளராக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(அல்குர் ஆன் 2:38)

(
முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!   (அல்குர் ஆன் 6:106)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும்,அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்;கட்டுப்பட்டோம்"என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும்.அவர்களே வெற்றிபெற்றோர்.(அல்குர் ஆன் 24:51)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரன்படாதீர்கள் (அவ்வாறு செய்தால் ) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன்  அல்லாஹ் இருக்கிறான்.(அல்குர் ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி.எனவே இதனையே பின்பற்றுங்கள்!பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை,அவனது (ஒரு )வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும்.நீங்கள் (இறைவனை ) அஞ்சுவதற்காக  இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.(அல்குர் ஆன் 6:153)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது  நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு  விட்டார்.(அல்குர் ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்!இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.எனது அருளை உங்களுக்கு முழுமை படுத்திவிட்டேன் இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக்கொண்டேன்.(அல்குர் ஆன் 5:3)

இந்தவசனங்களும் இன்னும் சில வசனங்களும் இறைச் செய்தியை,குர் ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத்  தெளிவாக  எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது சஹாபாக்களை மதிக்காத,திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகின்றனர் இந்த போலி மத்ஹபு வாதிகள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள்,நம்மைவிட ஈமானில் சிறந்தவர்கள்  என்றெல்லாம் வரக் கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.இதற்கு ஏராளமான குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் சான்றாக உள்ளன.
உதாரனத்திற்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்,

 
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியலவைக்கூட  அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:அபூசயீத் அல்குத்ரீ (ரலி ) நூல்:புகாரி 3673.

உங்களில் (மக்கா )வெற்றிக்கு முன் (நல்வழியில் )செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும் )சமமாக மாட்டார்கள்.அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களைவிட மகத்தான பதவியுடையவர்கள் .(அல்குர் ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதும் மறுத்ததில்லை.நபித்தோழர்களின் சிறப்புகளை சீண்டிப்பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்திலே ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையை தவ்ஹீத் ஜமாஅத் கிழிக்காமல் விட்டதில்லை.
அதேசமயம் இத்தகைய சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாக கருதும் எந்த வொரு செயல்பாட்டையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.குர்ஆன் ,ஹதீஸ் ஆகிய இரண்டும்தான் மார்க்கத்தின் ஆதாரங்கள்.சஹாபாக்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது அவர்களிடமும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை

#
சில நபித்தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர் ஆன் ,ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

#
பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளன.

#
குர் ஆன்,ஹதீஸில் இல்லாத சிலவிசயங்களை  அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.எனவேதான் குர் ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது  என்கிறோம்.

தமத்துஃ  ஹஜ்
தமத்துஃ  ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குகூட நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால் உமர் (ரலி ),உஸ்மான் (ரலி )ஆகிய மிகப்பெரிய நபித்தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது இது ஏன்? பார்க்க நூல்: திர்மிதி (753), புகாரி (1563). மத்ஹபு வாதி இமாம் பதிலளிக்கவேண்டும்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகாவிட்டால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி )இடம் கேட்டேன் அதற்கு,அவர் தமது ஆண்குறியை கழுவி விட்டு,தொழுகைக்கு உழுச்செய்வது போன்று செய்ய வேண்டும்.இதை நான் நபி (ஸல் )அவர்களிடமிருந்து கேட்டேன்  என உஸ்மான் (ரலி ) கூறினார்கள்.அறிவிப்பவர்:ஸைத் பின் காலித்(ரலி )  நூல்:புகாரி 179,292.

கடமையான குளிப்பு விசயத்தில் இதுதான் மார்க்க சட்டமா? மத்ஹபு வாதி இமாம் மழுப்பாமல் பதிலளிக்க வேண்டும்.
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் (ரலி )அவர்கள் தயம்மும் செய்து தொழக்கூடாது என்று கூறுகின்றார்கள்.பார்க்க புஹாரி 346,347.
இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன விரிவை அஞ்சி சுருக்கமாக இத்துடன் முடித்து கொள்கிறோம்.
சுன்னத் ஜமாஅத் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு இந்த போலி ஆலிம்கள் ஷியாக் கொள்கையை  மக்களுக்கு போதித்து மக்களை எவ்வாறெல்லாம் வழி கெடுக்கின்றனர் என்பதை இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களின் பார்க்கலாம்

                                                           
மார்க்கம் மற்றும் சமுதாயப்பணிகளில்
                                                                       
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
                                             
ஆர்.புதுப்பட்டினம் (கிளை ) புதுக்கோட்டை மாவட்டம்
                                                    
தொடர்புக்கு:9524681116,9047158483,9003574814

0 comments:

Post a Comment