ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

அடுத்தவர் 'இழுத்தாலே' ஆறுலட்சம் என்றால், 'இழுப்பவரின்' நிலை..?

Written By GM.BASHA on Sunday, November 28, 2010 | 8:51 PM


லண்டன், நவ. 27-
சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடானது. இதனால் இதயநோய்கள், புற்று நோய் போன்றவை ஏற்படுகின்றன. அதே நேரத்தில் சிகரெட் பிடிக்காதவர்களும், பலவித நோய்களால் பாதிக் கப்பட்டு உயிர் இழந்து வருகின்றனர்.

சிகரெட் பிடிக்காவிட்டாலும் கூட மற்றவர் விடும் புகையை சுவாசிப்பதால் இதயநோய் மற்றும் சுவாச நோயினால் பாதிக்கப்படு கின்றனர். அவ்வாறு பாதிக் கப்படுபவர்கள் குறித்து கடந்த 2004-ம் ஆண்டு முதல் 192 நாடுகளில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.
\
சிகரெட் புகைக்காமல் அடுத்தவர் பிடித்த சிகரெட் புகையால் பாதிக்கப்பட்டு ஆண்டுதோறும் சுமார் 6 லட்சம் பேர் பலியாகி வருவது தெரிய வந்துள்ளது. அவர்களில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் மற்றும் 30 சதவீதம் ஆண், பெண் அடங்குவர்.

மேலும், இதயநோயினால் 3 லட்சத்து 79 பேரும், 1 லட்சத்து 65 பேர் மூச்சு கோளாறு சம்பந்தப்பட்ட நோயினாலும், 36 ஆயிரத்து 900 பேர் ஆஸ்துமாவினாலும், 21 ஆயிரத்து 400 பேர் நுரை யீரல் புற்று நோயினாலும் ஆண்டுதோறும் மடிகின்றனர்.

இவ்வாறு இறப்பவர்களில் இது உலக அளவில் 1 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. சுவீடன் தேசிய சுகாதார நலக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. மேலும், குழந்தைகள் இருக்கும் போதே பெரும்பாலான பெற்றோர் சிகரெட் பிடிக்கிறார்கள். அந்த புகை குழந்தையை பெருமளவில் பாதிக்கிறது. அது அவர்களை சாவை நோக்கி அழைத்து செல்கிறது.

காதுகளில் நோய் பரவுதல், ஆஸ்துமா, நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் அவர்களை அதிரடியாக பற்றிக் கொள்கின்றன. எனவே, குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர் சிகரெட் பிடிக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

நன்றி; மாலைமலர்
-- 
8:51 PM | 0 comments | Read More

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகள் நியாயமாக தீர்ப்பு அளிப்பதில்லை; சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்!


முஸ்லிம்களுக்கு சொந்தமான பாபர் மஸ்ஜித் இடத்தை 'மத நம்பிக்கை'அடிப்படையில் மடத்தனமான தீர்ப்பின் மூலம், இந்துத்துவாக்களுக்கு தாரைவார்த்த நீதிபதிகள், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தான் என்பதை அனைவரும் அறிவோம். அலகாபாத்  நீதிமன்றத்தின் நீதிவழங்கும்[!] இந்த பாணியை  நாட்டு மக்கள் மட்டுமன்றி, உலகம் முழுவதும் உள்ள நடுநிலையாளர்கள் விமர்சித்தார்கள். ஆனால் இப்போது அலகாபாத்   நீதிமன்றத்தில் வழங்கப்படும் நீதி பெரும்பாலும் நீதியாக இருப்பதில்லை என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

 வக்பு போர்டு தொடர்ந்த ஒரு நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ச், கியான்சுதா மிஸ்ரா இவரும் இந்த கண்டனத்தை வெளியிட்டனர். அவர்கள் கூறியதாவது:-


அலகாபாத் ஐகோர்ட் நீதிபதிகள் குறித்து எங்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தபடி உள்ளது. அங்கு நீதிபதிகள் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறார்கள். இது நிறைய பேருக்கு தெரியும். ஆனால் கோர்ட்டு அவமதிப்பு என்ற பெயரில் தண்டனைக்கு ஆளாக நேரிடலாம் என்ற காரணத்தால் வாயைத் திறக்காமல் உள்ளனர்.

அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதிகளில் பலர் நேர்மையற்றவர்கள். அவர்களது மகன்களும், மகள்களும் அதே கோர்ட்டில்தான் பணியில் உள்ளனர். பயிற்சியில் சேர்ந்த சில மாதங்களிலேயே அவர்கள் கோடீசுவரர்களாகி விடுகிறார்கள். அவர்களது வங்கி கை இருப்பு பல மடங்கு உயர்ந்து விடுகிறது. ஆடம்பர பங்களாக்களில் வாழும் அவர்கள் விலை உயர்ந்த கார்களில் வலம் வருகிறார்கள். சொகுசு வாழ்க்கையை வாழ்கிறார்கள்.

நீதிபதிகள் இவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவதால்தான் இவர்களால் கோடீசுவரர்களாக முடிகிறது. ஷேக்ஸ்பியர் நாடகத்தில், டென்மார்க்கில் சில நேர்மையற்றவர்கள் உள்ளனர். என்ற வரிவரும். அதுபோல அலகாபாத் ஐகோர்ட்டிலும் சில நேர்மையற்றவர்கள் உள்ளனர்.

இத்தகைய நீதிபதிகளால் கோர்ட் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை குலைந்து விடும். எனவே அலகாபாத் ஐகோர்ட்டை சீரமைத்து, சுத்தப்படுத்த வேண்டியது தலைமை நீதிபதியின் கடமையாகும். நேர்மையற்ற நீதிபதிகள் மீது தயவுதாட்சன்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறினார்கள்.

நீதியரசர்கள் வெளிப்படுத்தியுள்ள  இந்த வார்த்தைகள் ஒவ்வொரு இந்தியனின் மனதில் உள்ள வார்த்தையாகும். மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய நீதியரசர்களை வாழ்த்துகிறோம்; வரவேற்கிறோம்.

அதே நேரத்தில் வெறும் கண்டனம் என்பதோடு நீதியரசர்கள் நின்றுவிடாமல், நீதி செலுத்தும் இடத்தில் அமர்ந்துள்ள 'கருப்பு ஆடு'களை இனம்கண்டு களை எடுக்க உச்சநீதிமன்றம் மூலம் முன்வரவேண்டும். ஏனெனில் அலகாபாத் மட்டுமன்றி பெரும்பாலான நீதிமன்றங்களின்  நிலை இதுதான். பணம் கொடுத்தால் பாக்தாத்  சதாமுக்கும் 'பிடிவாரன்ட்'  பிறப்பிக்கும் புண்ணியவான்களும் நீதிமன்றத்தில் உண்டு. உண்மைக்கு  பகரமாக நீதி வழங்குபவர்களை ஊக்குவித்து,
'உறை'க்கு பகரமாக [அ]நீதி வழங்குபவர்களை கடுமையாக தண்டிக்க முன்வரவேண்டும். அப்போதுதான் நீதிமன்றங்களின் மீது மக்களுக்கோர் நம்பிக்கை பிறக்கும்.

மேலும், நீதியரசர்களின் கண்டனத்திற்கு இலக்காகியுள்ள அதே அலகாபாத் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதியான தீர்ப்பை பாபர்மஸ்ஜித் வழக்கில் வழங்கியுள்ளதை உச்சநீதிமன்றம் அவதானித்திருக்கும் என நம்புகிறோம். அலகாபாத் நீதிமன்றம் தந்த வேதனைக்கு அருமருந்து அளித்து முஸ்லிம்களை தேற்ற வேண்டிய  கடமை உச்சநீதிமன்றத்திற்கு உண்டு. ஏனெனில் முஸ்லிம்கள் இறுதியாக உச்சநீதிமன்றத்தின்  மீதே நம்பிக்கை  வைத்து, அநீதிக்கு பின்னும் அமைதி காக்கிறார்கள்.

அலகாபாத் நீதிமன்றத்தின்  அநீதியை கண்டிக்கும் உச்சநீதிமன்றம், நீதிக்கு சான்றாக திகழுமா? என்பதே  பாபர் மஸ்ஜித் வழக்கின் மூலம் முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். [அல் குர்ஆன்;5:8 ]
நன்றி:TMB
8:47 PM | 0 comments | Read More

ராமனா? பாபரா? நாட்டை இடித்தவன் யாரெனச் சொல்

Written By GM.BASHA on Monday, November 15, 2010 | 10:26 PM


அயோத்தி தீர்ப்பு வெறும் இடப்பிரச்சனையோ, ஆவணங்களின் அடிப்படையிலான பிரச்சனையோ அல்ல. மக்களின் உயிரோடும் உடமைகளோடும் தொடர்புடையது எனவே தான் நீதிபதிகள் இடத்தைப் பிரித்துக்கொடுத்தி தீர்ப்பு எழுதியிருக்கிறார்கள் என்று பார்ப்பன பாசிச கட்டைப்பஞ்சாயத்து தீர்ப்புக்கு சப்பைக்கட்டு கட்டும் இந்துவெறியர்களுக்கு இதைச் சொல்லிக்கொள்கிறோம். தானும் இந்து என்று அப்பாவித்தனமாக நம்பிக்கொண்டிருப்பவர்கள் இதை படித்துப்பார்த்துக் கொள்ளட்டும்.

சுயசரிதை எழுதுவோரின் இளவரசன் என்பதுதான் ஜஹருத்தீன் ஷா பாபருக்கு வழங்கிய பட்டப்பெயர்.
உலக தன்வரலாற்று ஆவணத்தின் உண்மைத்தன்மையில் இலக்கியதரத்தில் ரூசோவுக்கும், செய்ண்ட அகஸ்டசுக்கும் அடுத்த இடம்பாபருக்குதான்.
னது பலவீனத்தை தோல்வியை தடுமாற்றத்தை பாபர் போல வேறு எந்த அரசனும் பதிவு செய்யவில்லை.
டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் தனது மகனுக்குஅவர் எழுதிய உயில் காட்சிக்கு உள்ளது.
இந்துக்களின் மனம் புண்படாமல் இருக்க பசு மாமிசம் சாப்பிடுவதைதன் மகனை கைவிடச் சொல்கிறார் பாபர்.
மாற்று மத வழிபாட்டுத் தலங்களை அவமதித்து விடாதே என்றும்ஹிமாயூனுக்கு எழுதிய உயிலில் பாபர் கூறுகிறார்
திரேதா யுகம் முடிவுக்கு வந்தது கிமு 3102 இல்திரேதா யுகத்தில்பிறந்தவன் ராமன் என்கிறது இந்து மதம்ஆனால் கிமு 700 க்கு முன்அயோத்தியில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றே இல்லைஎன்கிறது அகழ்வாராய்ச்சி.
பௌத்த இலக்கியமான தசரத ஜாதக கதையில் இருந்து இரவல்பெற்றுதான் கிமு 500 இல் வால்மீகி ராமாயணம் எழுதினான்.
ஒரு மனைவியை திருப்திபடுத்த மற்ற மனைவியின் மூத்தமகனான ராமனை காட்டுக்கு அனுப்புவான் தசரதன்.
அவனை அவனது சகோதர சகோதரிகளான லட்சுமணனும்சீதையும் பின்தொடர்வர் என்கிறது அந்த சாதக கதை
தந்தை இறந்த பிறகு வாரணாசிக்கே மீண்டும் வந்து சகோதரிசீதையை மணந்து ஆள்வான் ராமன்சமநிலை பிறழாதவன்என்பதுதான் அவனது சிறப்பு.
வால்மீகி இந்த கதையை சுட்டு இமயமலையைவிந்தியமலையாக்கினான்ஆனால் விஷ்ணு அவதாரம் எனமறந்தும் அவன் சொல்லவில்லை
சீதை கடத்தப்பட்ட கதை: இலியட் ம் ஓடிசியும் வாய்மொழியாகவணிகத்துடன் இந்தியா வந்தது, வால்மீகி இறந்து 700ஆண்டுகளுக்கு பிறகுதான் ராமாயணத்தில் ராமன் விஷ்ணுஅவதாரம் என சேர்க்கப்படுகிறது நாகார்ஜூனா
கோசல நாட்டின் முக்கிய நகரங்களாக சரஸவதியும் சாகித்தாவும்திகழ்ந்த்துஅன்றைய அயோத்தி கங்கைகரையில் இருந்ததுஎன்கிறது பௌத்த சமண இலக்கியங்கள்.
தற்போதைய அயோத்தி மேற்கிலிருந்து கிழக்காக பாயும் சரயூநதிக்கரையில் உள்ளதுவால்மீகி அந்த ஆறு கிழக்கிலிருந்துமேற்காக பாயும் என்கிறான்.
அப்படி ஒரு ஆறு இன்றும் நேபாளத்தில் உள்ளது மக்கள் நடமாட்டம்கிமு 700 ல் ஆரம்பிப்பதற்கு முன் ஆண்டுக்கு 50-60 அங்குல மழைபொழியும் பிரதேசம் அயோத்தி.
அந்த காடுகளை திருத்தி நகரம்அமைக்க இரும்பு பயன்பட்டிருக்கவேண்டும்ஆனால் கிமு 700க்கு முந்திய ஒரு இரும்புதுண்டு கூடஅயோத்தியில் சிக்கவில்லை
இதனை ஆர்க்யாலஜிகல் சர்வே ஆப் இந்தியா வெளியிட்ட 1976-77ரெவியூவில் பக்கம் 52, 53 இல் அறிவியல் சொல்லி உள்ளது #Indian Archeology – Areview 1979-80 page 76, 77 – cofirms the research-done by BB Lal, KN Thetchikth
சரி ராமர் கோவில யார் கட்டுனா என்றால் விகரமாதித்தர்என்கிறார்கள். 1975 இந்திய தொல்பொருள் துறை இயக்குநர் பிபிலால் ஆய்வு வேறு முடிவை தந்தது
விக்ரமாதித்தர் எனப்படும் இரண்டாம் சந்திரகுப்தன் காலம் கிபி 379-413. இன்னோரு விக்ராமாதித்த ஸ்கந்த குப்தன் காலம் கிபி 455-467.
ஆனால் ஆய்வில் அயோத்தியில் குப்தர்கள் ஆண்டதற்கு ஆதாரமேகிடைக்கவில்லைகாரணம்கிபி 300-1100 ல் மனிதர்களேஅயோத்தியில் வாழவில்லை
12 ஆம் நூற்றாண்டுக்கு முன் அயோத்தியில் இன்று உள்ளது போல18 கோயில் என்ன ஒரு கோயில் கூட ராமனுக்கு இல்லைஏனெனில்ராமன் அன்று இந்துக் கடவுளாக கூட அங்கீகரிக்கப்படவில்லை.
கிபி ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த அமரசிம்ஹா எழுதியஅமரகோசா என்ற சமஸ்கிருத சொல்லகராதியில் கடவுளர்களின்பெயரில் தப்பித்தவறி கூட ராமன் இல்லை
இந்துக்களின் புனித தலங்களை தனது தீராத் விவேகானி கலாப் இல்பட்டியலிட்ட 11 ஆம் நூற்றாண்டின் லட்சுமிதார் அதில்அயோத்தியை குறிப்பிடவில்லை
எஸ்எஸ் ஐயர் என்ற ஹிந்து அறிஞர் எழுதிய ஆய்வுக்குறிப்பேட்டுபுத்தகத்தில் விக்ரமாதித்தன் எழுப்பிய திக்கவா, எர்நாக், சான்சி,பாம்ரா, நாச்னா போன்ற‌ இடங்களை பட்டியலிட்டார்ஏழு அடுக்கும்84 கருப்பு கசவடி தூணையும் கொண்ட ராமர் கோவிலைஅயோத்தியில் விட்டு விட்டார். இல்லையா?
பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ராமனை யாரும்வணங்கவில்லைபாபரின் சமகாலத்தில் வாழ்ந்த துளசிதாசரின்இந்தி ராமாயணத்திற்கு பிறகுதான், அதுவும் மக்களதுகதையாடல்களும் இணைக்கப்பட்டதால்தான் (எந்திரன் ரஜினி போலஜாக்கி வைத்து) ராமன் தூக்கப்பட்டார்
ராமர் கோவில் இடித்தாக சொல்லப்படும் 1528ல் துளசிதாசருக்கு 30வயதுசிரிராம சரித்மானஸ் என்ற அவரது காவியத்தில் இதுபற்றிஏன் அவர்எழுதவில்லை?
இதனை சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் மகன் வரலாற்றாசிரியர்கோபால் கேட்கிறார்.
பாபரின் வடிவில் மரண தேவனை அனுப்பியிருப்பதாக தனது கிரந்தசாகிபில் வெளிப்படையாக எழுதியவர் சீக்கிய மதத்தை நிறுவியபாபரின் சமகாலத்தைய குருநானக்
அவரும் அயோத்திக்கு வந்து பாபர் மஸ்ஜித்தை பார்க்கிறார்.ஆனால் எங்குமே பாபர் ராமர் கோவிலை இடித்த்தாகசொல்லவில்லை. பயந்திருப்பார் என்று கூட சொல்ல்லாம்ஆனால்பாபர் இறந்து 9 ஆண்டு கழித்துதான் இறந்தார் குருநானக்அப்போதுஹிமாயூனோ ஒரு அகதியாக திரிந்தான்.
18 ஆம் நூற்றாண்டின் சிப்பாய் கலகம் துவங்கும் வரை அங்கு சைவமரபு தான் செல்வாக்கில் இருந்த்துஇந்து அறிஞரான ஆர்எஸ் சுக்லாதனது சச்தித்தரர் பரமாணிக் இதிகாஸ் என்ற நூலில் 16 ஆம்பக்கத்தில் பாபர் 500 பிகாசு நிலத்தை அயோத்தி தாண்டதவான்குண்ட கோவிலுக்கு வழங்கியதை குறிப்பிடுகிறார்அதற்கானஆவணம் அக்கோவிலில் இன்றும் உள்ளது.
குவாலியரில் கோவில் சிற்பங்களை ரசித்ததை தனதுசுயசரிதையான பாபர் நமாவில் குறிப்பிட்ட பாபர்ராமர் கோவில்இடிக்கப்பட்டதாக கருதப்படும் மார்ச் 1528 இல் அயோத்திக்கேவரவில்லை என்கிறார் அலகாபாத் பல்கலை வரலாற்றாசிரியர்சுசில் சிறீவத்சவாஅப்போது ஆப்கானிய பட்டாணியர்களுடன்போரிட்டு கொண்டிருந்தார் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரைஆக்ராவில் தங்கி கார்டனிங் வேலைகளில் ஈடுபட்டிருந்தார்
அயோத்தியின் ஹனுமன் கோவில் மகாந்த் ரகுபர்தாஸ்என்பவர்தான் இன்றுள்ள கட்டுக்கதைக்கு மூலப்புள்ளி
பிஎன் பாண்டே வழிகாட்டலில் செர்சிங் என்பவரது அகழவாய்வில்மசூதி குறித்த தகராறு 1855க்கு முன் இருந்தாக எந்த ஆவணமோகல்வெட்டோ நூலோ இல்லை
1845 ல் இங்கு வந்த ஆங்கில அதிகாரி சர் ஹென்ரி லாரன்சுஇதுபோன்ற தகராறுகளை அவுத் குறித்த புத்தகத்தில்சொல்லவில்லை

1856 
னவரியில் பைரகி என்ற வைணவ பிரிவினரால்முசுலீம்களின் அடக்கதலம் அனுமான் குன்றில் அழிக்கப்பட்டது
இந்த தகராறு மதவழிபாட்டுதலம் மீதான தாக்குதலுக்கு முசுலீம்கள்வருவதாக தவறாக கணிக்கப்பட்டு ஆங்கிலேய ஜெனரல் அவ்ட்ராம்ஆல் தாக்கப்பட்டனர். மௌலவி அமீர் அலி இத்தாக்குதலில்கொல்லப்பட்டார்பிறகுதான் பிரித்தாளும் சூழ்ச்சியை பிரிட்டிசார்புரிந்தனர்
வாரிசிலா கொள்கையை அன்று இந்தியா முழுதும் அமல் ஆகிகொண்டிருந்தது டல்ஹவுசியால்அயோத்தியின் அவுத் மீதும்ஆங்கிலேயருக்கு ஒரு கண் இருந்தது பிப்ரவரியில் அவுத்கிழக்கிந்திய கம்பெனிக்கு வாரிசு இல்லாத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டதுமன்னன் வாஜித் அலி ஷா கைது செய்யப்பட்டான்.
அவனது நான்கு மனைவிகளில் மூவர் சரண்டைய நான்காவதுராணி மட்டும் ஆங்கிலேயரை எதிர்க்க துணிந்தாள்.
பீகாரின் எளிய தாழ்த்தப்பட்டகுடும்பத்தில் அழகாக பிறந்த ஒரேகுற்றத்துக்காக கட்டாத வரிக்கு பதிலாக பெண்ணையேமனைவியாக்கி கொண்டிருந்தான் அந்தமன்னன்
அவளுடைய இழிபிறப்பு காரணமாக அவத் அவளை ராணிகளில்ஒருத்தியாக கூட ஏற்கவில்லை. ஆனால் அவத் இன் மானத்தைகாப்பாற்றிய அவள்தான் ஹஸ்ரத் பேகம்
ஜான்சியின் லட்சுமி பாயும் அவத் இன் ஹஸ்ரத் பேகமும் சிப்பாய்கலகத்தின் கதாநாயகிகள்ஹஸ்ரத் தன் 10 வயது பாலகனோடுபோர்க்களத்தில் நின்ற போது அவுத் இன் நிலபிரபுக்கள் நடுநிலைகாத்தார்கள்
அனுமன் கிரியின் பூசாரி ரகுபர் தாஸ் பிரிட்டிசாருக்கு சமையல்செய்ய ஆள் அனுப்பியும் உணவு அனுப்பியும் தைரியமூட்டியும்ஆதரவு அளித்தான். அப்போது ஆற்காட்டில் இருந்து ஆங்கிலம்தெரிந்த ஒரு 70 வயது மௌலவி ஒருவர் அயோத்திஅமைந்திருக்கும் பைசாபாத்க்கு வந்தார் பாளையக்கார்ர்களின்கலகத்திற்கு ஒரு விருப்பாட்சி கோபால் நாயக்கர் என்றால் சிப்பாய்கலகத்திற்கு பைசாபாத் மௌலவி அகமது ஷா
ஜிகாத் என்ற மதப்போர்வையில் பிரிட்டிசாருக்கு எதிராக பிரச்சாரம்செய்கிறார்கைதாகி சிறையிலிடப்படுகிறார்.
ஆயுதங்கள் பறிக்கப்படுகிறதுஆனால் சிறையில் இருந்து மக்கள்ஆதரவுடன் உடைக்கப்ட்டு விடுவிக்கப்படுகிறார்மௌலவி#சிறையையும் தனது பிரச்சார மேடையாக மாற்றியமௌலவி தனது உதவியாளருடன் கடைசியாக பிடிபட்டுதூக்கிலிடப்பட்டார்அப்போது வயது 71
அகமது ஷாவும் ஹஸ்ரத் மஹலும் உள்ள அவுத் இன் சிப்பாய்கலகம் பற்றி மட்டுமே ஜி.ஹட்சின்சன் ஒரு தனி புத்தகமே எழுதிஉள்ளார்
அப்புத்தகத்தில் கேப்டன் ரீத் என்பவர் ஹனுமன் கிரி பூசாரிகளின்உதவிக்கு நன்றி பாராட்டுகிறார்மெக்கால்டு இன்சும் அவுத் லக்னோகலகம் பற்றிய குறிப்புகளில் இதனை குறிப்பிடுகிறார்
ஹனுமன் கிரி பூசாரி மாத்திரம் உணவு தராமல் இருந்தால் தாங்கள்செத்திருப்போம் என்கிறார் வில்சன்தாமஸ் பொர்னஸ் Defence of Lucknow (1858 edition) இந்த துரோகத்திற்கு எதாவது பரிசளிக்கவிரும்பினார்கள் ஆங்கிலேயர்கள் ஹனுமன் கிரி பூசாரி ரகுபர்தாசுக்கு பாபர் மசூதிக்கு முன் உள்ள பொதுமனை அவர்களுக்குவழங்கப்பட்டது. 1865ல் அங்கு ராம் சபூட்ரா என்ற ராமர் பிறந்த இடம்தோன்றியது
முன்னர் கல்லறை வழிபாட்டு தகராறுக்கு நியாயம் கேட்க வந்தமுசுலீம்களை பழிவாங்கும் நோக்கம் இருந்ததை பூசாரியின்நடைமுறைகள் காட்டுகின்றன
கட்டபொம்மனை காட்டிக்கொடுத்த தொண்டைமானுக்கு ஒருவாளும் பட்டாடையும்சிப்பாய கலகத்தை காட்டிக் கொடுத்தஹனுமன் கிரி பூசாரிக்கு ராமஜென்ம பூமி
னது செல்வாக்கை பயன்படுத்தி ஆங்கிலேயர் பி.கார்னேஜிஎன்பவர்1870 இல் எழுதிய Historical sketch of Fyzabad புத்தகத்தில்முதன்முதலாக பாபர்மசூதி கட்ட யன்படுத்திய தூண்கள்ஜனமஸதான் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாக திரித்தனர்
இன்று மட்டுமா வரலாற்றை திரிக்கிறார்கள்
ராம் சாபூட்ரா திண்ணைக்கும் மசூதிக்கும் இடையில் வேலியும்போட்டு வடக்கு வாசல் வழியாக மட்டுமே முசுலீம்கள் வரலாம் எனநிபந்தனை விதித்தார்கள். 1859 இலிருந்து இது நடைமுறைக்குவந்தது.
ஆம் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்குகிடைத்த இடம்தான் ராமஜன்ம பூமிபிரிட்டிசாரின் தயவில் பிறந்தஅவதார புருசன்
1885 ல் ரகுபர்தாஸ் இந்த திண்ணையில் கோவில்கட்டஅனுமதிக்குமாறு பண்டிட் ஹரிகிருஷ்ண சாஸ்திரியின் சிவில் கோர்ட்டில் .எண் 61/280 பதிவு செய்கிறார் படுகொலைக்குவழிவகுக்கும் என அந்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து ஆனால்இடத்தை ஊர்ஜிதம் செய்தார்
அவுத் மாகாண நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடும் யங்என்பவரால் நவ 1 1886ல் தள்ளுபடி செய்யப்பட்டதுஆனால்பாபர்தான் இடித்தார் என ஏற்றுக்கொண்டது
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிதுறையின் இயக்குநர் .பூரேர் 1889ல் நடத்திய ஆய்வில் மசூதியின் பாரசீக கல்வெட்டு ஒன்றுகண்டெடுக்கப்படுகிறது. ஹிஜ்ரி 930ல் அதாவது கிபி 1524ல் இப்ராகிம்லோடியால் இப்பள்ளிவாசலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுகல்வெட்டில் உள்ள செய்தி
ஏப் 25 1526 இல் முதல் பானிபட் போரில் இப்ராகிம் லோடி பாபரால்கொல்லப்படுகிறார்பாபர் இந்த பள்ளிவாசல் கட்டப்படுவதைதொடர்ந்தார்
இந்த கல்வெட்டை கவனிக்காமல் திருட்டை உருப்படியாக செய்யமுடியாமல் மாட்டிக் கொள்ளவே கல்வெட்டுக்கு கன்னம் வைக்ககலவரத்திற்கு தேதி குறித்தார்கள்
1934 கலவரத்தில் வெற்றி பெற்றதாக ராக்த் ரஞ்சித் இதிகாஸ் நூலில்ராம ராக்ச திரிபாதி (பக்.60) குறிப்பிடுகிறார்
அந்த கலவரத்தில் கல்வெட்டை மட்டும் அழித்தால் மாட்டிவிடுவோம் என பயந்து வெளிச்சுவர் தூபி என பலவற்றைஇடித்தனர் இந்துமத வெறியர்கள்
லவரத்தில் சேதமடைந்த பகுதிகளை அரசு செப்பனிடகாண்டிராக்டு விட்டதற்கு ஆதாரம் உள்ளது
1949 டிச22 இரவில்தான் பூமியை பிளந்துகொண்டு ராமரும்லட்சுமண சீதா பிராட்டியும் அயோத்தியில் முளைத்தனர்
இதற்கு காரணமான கேகே நய்யர் கூட இந்த அற்புதத்தைஏற்றுக்கொள்ளவில்லை. 
மறுநாளே சிலைகளை அப்புறபடுத்த வாய்ப்பிருந்தும் அப்படிசெய்தால் அப்பாவிகள் மடிவார்கள் என நய்யர் அகற்றமறுத்துவிட்டார் இந்த உதவிக்காக ஜனசங்கம் பின்னர் அவரைஎம்பி ஆக்கியது
அகற்ற வாய்ப்பு இருந்ததை அன்றைய காங்கிரசு மா செயலர்அக்சாய் பிரம்மச்சாரி சுட்டிக்காட்டுகிறார்
சாஸ்திரிக்கு 1950ல் கடிதமும் எழுதி மசூதியை முசுலீம்களிடம்ஒப்படைக் கோரி உண்ணாவிரதமும் இருந்தார் அவர்ஏற்கெனவே1949டிச23 மசூதிக்கு பூட்டு
உண்ணாவிரதமிருந்த காந்தியவாதிகளை தாக்கி வீடுகளைசூறையாடினார்கள் இந்துமதவெறியர்கள்டிச291949ல்பைசாபாத்-அயோத்தி கூடுதல் முதல் மாஜிஸ்டிரேட் சொத்தின்ரிசீவராக நகராட்சி தலைவர் பிரியாதர்ராமை நியமித்த்துஅவர்இந்துக்களுக்கு மாத்திரம் விகரக தரிசனத்திற்கு அனுமதித்தார்
இந்திய கிரிமினல் சட்டம் 145 ன் கீழ் இந்நியமனம் நடந்ததுஇதன்படிசொத்தை பறிகொடுத்தவன் நீதிமன்ற இறுதிதீர்ப்பு வரை சொத்தைஅனுபவிக்கலாம்
ஆனால் முசுலீம்களை மசூதிக்கு அருகில் கூட அனுமதிக்கவில்லை
ஜன61950ல் சூட் நம்பர் 2ல் கோபல்சிங் விசாரத் ஒரு வழக்கைசிவில்நீதிமன்றம் பைசாபாத் தாக்கல் செய்தார் தடையின்றிஇந்துக்கள்வழிபாடு செய்வதற்கு
அரசு முசுலீம் என 8பேர் பிரதிவாதிகள்.உபி அரசு சார்பில் ஆசரானபைசாபாத் துணை ஆணையர் உக்ரா கள்ளத்தனமாக சிலைவைக்கப்பட்டதையும் மசூதியின் நீண்ட கால அனுபவபாத்யதையையும் ராமர் கோவிலின் ஆதாரமின்மையையும்அறிக்கையாக தந்தும் நீதிபதி என்என் சத்தர் சிலைகளை அகற்றஇடைக்கால தடை விதிக்கிறார்மார்ச் 51ல் ஒருமுறை தடைநீட்டிக்கப்பட்டது.பின் 1961அலகாபாத் உயர்நீதிமன்ற பெஞ்ச..12கீழ் வந்தது
ராமஜனம்பூமி மீட்பு ரதயாத்திரயை சீதை பிறந்தாக சொல்லப்படும்நேபாளின் ஜனக்பூரிலிருந்து 1984 செப் 25ல் விசுவிந்து பரிசத்துவங்கி அக்7,1984இல் அயோத்தி வந்தது மசூதி பூட்டை உடைத்துராமர் கோவிலாக மாற்ற உறுதிமொழி எடுத்தனர்.தாலா கோலே(பூட்ட உடைமுழக்கம்ஆனது
அக் 31 இந்திரா செத்ததால் கலவரத்தை ஓராண்டு தள்ளிபோட்டார்கள்மார்ச்9,1986க்குள் கதவு தங்களுக்கு திறக்காவிடில்பூட்டு உடைபடும் என்றனர் விஇப
டிச18,1985ல் விஇபல் உள்ள முன்னாள் நீதிபதிகள் கத்திவு அகர்வால்முன்னாள் போலிசு ஐஜி தீட்சித் ஆகியோர் பைசாபாத் மாவட்டமாஜிஸ்டிரேட் இந்துகுமார் பாண்டே  சந்தித்து கோவிலைபூட்டிவைப்பது சட்டவிரோதம் திறந்துவிட வேண்டும் என்றனர்
உமேஷ் சந்தர் பாண்டே என்ற 28 வயது (உயர்நீதிமன்றத்திற்குவழக்கு வந்தபோது 2 வயதுமுன்சீப் நீதிமன்றத்தில் பூஜிக்க தடையை நீக்ககோருகிறார்
முன்சீப் ஹரிசங்கர் துபே ஜன28,1986ல் இம்மனுவை உயர்நீதிமன்றவழக்கு நிலுவை காரண‌மாக நிராகரிக்கிறார்இம்மனுமேல்முறையீட்டுக்காக மாவட்ட நீதிபதி கேஎம் பாண்டே முன் பிப்1,1986 அன்று விசாரணைக்கு வருகிறதுஅன்று மாலையே பூட்டைதிறந்துவிடும்படி உத்தரவிட்டார்
உயர்நீதிமன்றத்தில் வழக்கு இருக்கையில் மாவட்ட நீதிமன்றம்அவ்வழக்கிற்கு தீர்ப்பு அளித்தது நீதித்துறை வரலாற்றில்விசித்திரம்தான்
தீர்ப்பில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவோ விக்ரகத்தைபாதுகாக்கவோ பூட்டு தேவையில்லை 35 ஆண்டுகளாக இந்துக்களைகைதிகள் போல இருந்துள்ளனர் என்றும்
பூட்டை திறப்பதால் வானம் இடிந்து விழாதுமுசுலீம்கள்ஏற்கெனவே வருவது இல்லைபூட்டை திறந்தால் மாத்திரம் எப்படிபிரச்சினை வரும் என்றும் தீர்ப்பளித்த பாண்டே, பிரதிவாதியாகசேர்க்க கோரிய முகமது காசிம் என்பவரது மனுவை தள்ளுபடிசெய்து பிப் 1,1986, 4.40க்கு உத்தரவிட 5.20க்கு அமலானது
பூட்டை திறந்தால் முசுலீமுக்கு பாதிப்பு என்பது கற்பனைக்கு கூடதகாது என பகடி செய்தார்சட்டம் ஒழுங்கு பாதிக்கபடாது என்றார்அல்லவா லவரம் வட இந்தியா முழுவதும் பற்றிப் படர்ந்தது
1985 ஏப்ரல ஷாபானு வழக்கில் முசுலீம்களை திருப்தி செய்யமுசுலீம் பெண்களின் வாழ்க்கையை பறித்தெடுத்த நேருவின்குலக்கொழுந்து 1986 சிவராத்ரி மார்ச்8க்குள் பூட்டை உடைக்கஅனுமதி தருவதாக விஇப இடம் அனுமதி கொடுத்தார்.அருண்நேருபோன்ற கூட்டாளிகளிடம்
முசுலீம் தனிநபர் சட்டத்திற்கான பழிக்குப்பழிதான் இது எனசொன்னது அக்பரே நவ் இன் பேட்டி ஒன்றில் அருண்நேருவேஒத்துக்கொண்டது நவ9,1989இல் 25 கோடியில் கோவில் கட்டஅலகாபாத் விராத் சாந்த சம்மேளன கூட்டத்தில் ஜனவரியில் 4ல்கட்ட‍ நடவடிக்கைக்கு திட்டமிடப்பட்டது
எம்கே நாராயணன்பூட்டாசிங்தவாண் போன்றோர் விஇப உடன்இது சம்பந்தாக பேசி உள்ளனர்செங்கற்களுக்கு வரும்வழியில்பாதுகாப்பு வழங்க,அடிக்கல் நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க அரசுசம்மதித்ததுஆக 14 89ல் அலகாபாத் உயர்நீதிமன்றம் ல்க்னோபெஞ்ச் ஸ்டேட்டஸ் கோ வை உத்தரவிட்டது ஆனால் நீதிமன்றதீர்ப்பை மீறி ஊர்வலம் நடந்ததுபகல்பூரின் கார்லிபிளவர்செடிகளுக்கு உரமான முசுலீம் பிணங்களை பார்த்த பிறகும் ராஜிவ்அக் 26 1989ல் ராம்லீலா ஊர்வலங்களை தடைசெய்ய முடியாதுஎன்றார் பாட்னா விமான நிலையத்தில் தானே அடிக்கல் நாட்டவரப்போவதாகவும் பூட்டாசிங் மூலம் தூது அனுப்பி சொன்னார்ராஜீவ்நவ 3 முதல் பிளாட் 586ல்
முசுலீம்களின் அடக்கதலத்தின் மீது காவிகொடி பறக்கவிட்டுஇடத்தை தேர்வு செய்தார்கள்அன்றுதான் ராஜீவ பைசாபாத்தில்தேர்தல்பிரச்சாரத்தை துவக்கினார்
ராமராஜ்யம் அமைக்கபோவதாகவும் கூறினார்ஜிகாத் என்றபெயரில் மக்களை திரட்டிய மௌலவிக்கும் இந்தபொறுக்கிக்கும்தான் எத்தனை வேறுபாடு முசுலீம் ஓட்டுக்களைஇழக்க விரும்பாமல் உபி அரசு மூலம் தடையும் கோரினார் ராஜிவ்.
மானஸாரா என்ற இந்துகட்டட‍ கலை குறித்த சிற்ப சாஸ்திர நூலின்வது அத்தியாயத்தில் மனித மண்டை ஓடுகள்-எலும்புக்ள-..பிணங்கள் நிறைந்து காணப்படும் இடத்தை கோவில் கட்ட தேர்வுசெய்ய கூடாது என உள்ளதுஆனால் தற்போது அடிக்கல் நாட்டியஇடம் முசுலீம்களின் கல்லறைதான்இது 2010 தீர்ப்பளித்தநீதிபதிகளுக்கு தெரியாதா?

மினரா இல்லாமல் பள்ளிவாசல் இருக்க முடியாது என்பதும் ஒருவாதம்செருசலத்தில் உள்ள பைத்துல் முகத்துஸஃ பள்ளிவாசல்,மெக்காவின் க்பாஇந்தியாவின் முதல் பள்ளிவாசலான கேரளத்தின்கொடுங்களூர் பள்ளிவசலிலும் மினரா கிடையாதுஎனவேஅயோத்தியில் இல்லாத்து பிரச்சினை இல்லை.
அக்பர் தான் எழுதிய திவான்  அக்பர் என்ற நூலில் தானேதிண்ணை அமைத்து ராமர்கோவில் கட்ட உதவியதாகவும் விஇபதனது அதீத் கி அஹூத்யான் வர்த்தமன் கி சங்கல்ப் என்ற நூலில்சொல்கிறது.அபூல் பசல் தனது அய்னி அக்பரியின் ஜலாலுதீன்அக்பருக்கு எழுத படிக்க தெரியாத்தை பதிவு செய்கிறார்மற்றபடிஅவர்கள் சொல்லும் நூற்கள் 18 ஆம் நூற்றாண்டின் சூபி மரபின்இலக்கிய பதிவுகளாக இரு புத்தகங்கள் உள்ளன சில வார்த்தைவித்தியாசங்களுடன்
பாபர் மசூதி கட்டப்பட்ட போது அதை எதிர்த்து 1,72,000 இந்துக்கள்போராடி மடிந்தனராம்.அதாவது 1528ல்ஆனால் 1881 இல் அயோத்தியின் மக்கட்தொகை11,643. 
ராமர் கோவிலின் கருப்பு கசவ்டி தூண்களைத்தான் மசூதிக்கும்பயன்படுத்தினார் பாபர் என்கிறார்கள்.கார்பன் 14 பரிசோதனை மூலம்இந்த தூணின் வயதை கண்டறிந்த போது அது எதுவும் 450 (1989ல்)ஆண்டுகளை தாண்டவில்லை.(Radiance Views Weekly, 24-30 April 1988, 25 June-1 July 1989, 17-23 Dec 1989) 
பாபர் நாமாவில் டிச 24,1528 ல் 26 தூண்களை வடிவமைத்ததைபாபர் குறிப்பிடுகிறார் (பக்கம் 362) பாபர்நாமா ஏப்ரல் முதல்செப்டம்பர் வரை 1528ல் எழுதப்படவில்லைஇந்த கட்டத்தில்தான்பாபர் அயோத்தி வந்து இடித்தார் என்கிறார்கள்
இக்குறிப்பிட்ட காலத்திற்கான குறிப்புகள் பலத்த சூறாவளி காற்றில்காணாமல் போனது பற்றி பாபர் நாமா பதிவு செய்து தான் உள்ளது.ஆனால் பாபரின் மகள் குல்பதன் எழுதிய ஹூமாயூன் நாமா வின்பக். 100-103ல் இதற்கு விளக்கம் உள்ளது1528 ஏப்ரல் 5-8ல் ஆக்ராவருகிறார்ஜூலைக்கு பிறகு பதேபூஃர சிக்கரிக்கு செல்கின்றனர்.அங்குள்ள பூந்தோட்டத்தில் பாபர் நாமா எழுத ஒரு இடம் பூங்காவில்அமைக்கப்பட்டதை பதிவு செய்கிறார்• ஃஆப்கானியர் மீதான வெற்றிமழையால் தள்ளிப் போனதை பற்றியும் குறிப்பு உள்ளது.
நன்றி:செங்கொடி
10:26 PM | 0 comments | Read More