ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

வாழ்க தா.மு.மு.கவின் தவ்ஹீத் பனி.

Written By GM.BASHA on Monday, January 30, 2012 | 9:18 PM


சிலை திறக்க வாங்க….
நரகப்படுகுழியை நோக்கி அழைக்கும் மமக…
சிலை திறக்க வாங்க: தமுமுகவின் தவ்ஹீத் (?) அழைப்பு
ஏகத்துவப் பிரச்சாரம்தான் எங்களது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்று கூறி ஏகத்துவத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு, ஏகத்துவபிரச்சாரத்தை எட்டி உதைத்து விட்டு, அரசியல் ஆசையில் களம்காணச் சென்ற முன்னாள் சகாக்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய தியாகத்தையும் (?) செய்ய நாங்கள் தயார் என்பதை பறைசாற்றும் விதமாக தங்களது செயல்பாடுகளை மக்களுக்கு பறைசாற்றி வருகின்றார்கள்.
N சந்தியாகப்பர் திருத்தேர் திருவிழாவில் அவர்களது தலைவர் கலந்து கொண்டது..
N ஏசுவின் நீரோடை என்ற ஏசுவின் புகழ்பாடும் சீடிக்களை அவர்களது தலைவரே வெளியிட்டது
N பெருநாள் சந்திப்பு என்ற பெயரில் ஆபாச விருந்தில் கலந்து கொண்டது..
N ஆதீனத்திடம் சென்று ஆசிவாங்கியது..
N தீபாவளி, கிறிதும வாழ்த்துக்கள் கூறி போஸ்டர் அடித்தது..
N வாக்காளப் பெருமக்களே! வணக்கம் என்று கூறி வாக்கு கேட்டது..
N உங்கள் பாதம்தொட்டுக் கேட்டுக் கொள்கின்றோம் என்று நோட்டீ போட்டு சரணாகதி அடைந்தது..
N ஜோதி பாசு புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியது..
N பழனி பாதயாத்திரைக்கு பல்பு வழங்கியது..
N ஊழல் பெருச்சாளி அன்னா ஹசாரேவை வாழ்வின் முன்மாதிரியாக ஏற்றுக்கொள்வோம் என்று உறுதிமொழி எடுத்து நபிகளாரை இழிவுபடுத்தியது...
என்று இவர்களது கேடுகெட்ட செயல்கள் ஏராளம். தாராளம்.
இவற்றை மட்டும் நாம் பட்டியல் போட்டு உணர்வு இதழில் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினோம்.இவர்கள் தங்களது பதவி சுகத்திற்காக எத்தகைய கேடு கெட்ட செயல்களையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்பதற்கு மற்றுமொரு சான்றையும் தற்போது வழங்கியுள்ளார்கள்.


தஞ்சை வடக்கு மாவட்டம் ஆடுதுறையில் நடந்த ”சின்னதுரை” என்பவரது சிலை திறப்பு விழாவிற்கு இவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதன் மூலம் இவர்கள் எங்களுக்கு கொள்கை கோட்பாடு என்பதெல்லாம் கிடையாது. உலக ஆதாயத்தினை அடைவதற்காக நாங்கள் எத்தகைய மானங்கெட்டச் செயலையும் செய்யத் தயங்க மாட்டோம் என்பதை பறைசாற்றியுள்ளனர்.
மனித நேய மக்கள் கட்சியின் பெருநகர செயலாளரும், ஹாஜியார் கிளை செயலாளரும் இணைந்து சிலை திறப்பு விழாவிற்கு வருகை தரும் அனைவரையும் வரவேற்கின்றோம் என்று போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஒட்டியுள்ளார்கள் என்றால் ஏகத்துவக் கொள்கையை குழிதோண்டி புதைப்பதுதான் இவர்களது பிரதான கொள்கையாக இருக்குமோ என்ற சந்தேகம் நமக்கு எழும்புகின்றது.
நரகப் படுகுழியை நோக்கி மக்களை அழைப்பதற்கு வால்போஸ்டர் அடிக்கும் வேலையை இவர்கள் செய்கின்றார்கள் என்றால் இவர்களது மனிதநேயப் பணியை என்னவென்பது?
இப்படியே இவர்கள் போய்க் கொண்டிருந்தால் கூடிய விரைவில் தர்கா திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்தாலும் அடிப்பார்கள் போல. அதையும் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இவர்களை முஸ்லிம் இயக்கமாக கருதும் நியாயவான்கள் இனியாவது திருந்தட்டும். இவர்களுக்கு நன்கொடை வழங்கும் கொடையாளர்கள் இனியாவது சிந்திக்கட்டும். தாங்கள் வழங்கும் நன்கொடைகள் இது போன்ற சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு போஸ்டர் அடிப்பதிலும், இணைவைப்பு காரியங்களுக்கு கரம் கொடுப்பதிலும்தான் செலவிடப்படுகின்றது என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.
அறியாமையின் காரணமாக இணை வைப்புக் கொள்கையிருக்கும் இந்த சமுதாயத்தை சத்தியப் பிரச்சாரத்தின் வாயிலாக சுவனப்பாதைக்கு நாம் அழைத்துச் செல்லுகின்ற இவ்வேளையில் நிரந்தர நரகப் படுகுழியில் தள்ளும் இணை வைப்புக் காரியத்தை செய்ய, சிலை திறக்க இவர்கள் மக்களை அழைப்பது இவர்களுக்கு இந்த சமுதாயத்தின் மேல் உள்ள அக்கறையை (?) பறைசாற்றுகிறது.
குறிப்பு: இதே தஞ்சை மாவட்டத்தில் தான் இஸ்லாமிய சமுதாய மக்களிடத்தில் வசூல் செய்த தொகையில் இருந்து இவர்களது இயக்கம் சார்பாக வாங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை சன்டிவியின் ‘நாதஸ்வரம்’ மெகா சீரியலில் நடிக்க வாடகைக்கு விட்டனர் என்பது நன்கொடையாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயம்
-நன்றி: உணர்வு
தமுமுகவின் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி பகுதியைச் சேர்ந்த தமுமுக கொள்கைச் சகோதரர்கள், பிழைக்க வேறு வழியில்லாமல் மக்களிடம் வசூல் செய்து வாங்கிய ஆம்புலன்ஸ் வாகனத்தை வாடகைக்கு விட்டு பிழைத்த காட்சி.

தவ்ஹீத் கொலை மாநாட்டில் கூடிய கொலையாளிகள்

Thursday, January 19, 2012 10:13 PM Posted by பொய்யன் டிஜே0 comments
N ஜாக் மாநாட்டில் பாக்கர், தமீம் அன்சாரி ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்வைப்பார்த்த போது ஐந்து ஆண்டுகளுக்கு முன் மறைந்து போன அனைத்து தவ்ஹீத் ஜமாஅத் கூட்டமைப்பு மீண்டும் உதயமாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றியது என்று ஒரு சகோ மார்வலஸ் ஷாகுல் என்பவர் எழுதியிருக்கிறாரே?
-அபூ ஸஃபீனா, பாதரசக்குடி

இந்தப் பண்ணாடைகளின் கூட்டத்தைப் பார்த்து அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பு போல் இருக்கிறது என்று சொன்னால் வாய் இல்லாத இல்லாத ஜீவன்கள் கூட சிரிக்கும் . இந்த மாநாட்டில் கூடியவர்களில் எவருக்கும் தவ்ஹீத் பற்றி பேச அருகதை இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அறுகதை இல்லை என்று நாம் கற்பனையில் சொல்லவில்லை.
தமுமுக செய்த தவ்ஹீத் பணிகள்:
இது புதுசு :
இராமேஸ்வரம் புனிதத்தளம் என்று வாத்தியார் சொல்லிவிட்டார். இனி தமிழ்நாடு முட்டாள் முன்னேற்றக் கழகத்தினரும், மாமா கட்சியினரும், இந்திய நித்தி ஜமாத்தினரும் இனி ராமேஸ்வரத்திற்கே புனிதப் பயணம் மேற்கொள்ளலாம்.





















நன்றி:பொய்யன் டிஜே 
9:18 PM | 0 comments | Read More

ரத்த அழுத்தம், ரத்தசோகை கட்டுப் படுத்துவது எப்படி


ரத்த அழுத்தம், ரத்தசோகை கட்டுப் படுத்துவது எப்படி


இந்தியர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி வருகிறது. ஏறத்தாழ 15 கோடி பேருக்கு இந்த பிரச்னை இருக்கிறது. இது உலகெங்கும்  உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 15 சதவீதம். மற்ற நாடுகளில் உயர் அழுத்தம் குறையும் நேரத்தில் இந்தியாவில் அது மேலே செல்வது உண்மையில் கவலைக்குரிய விஷயம். சைஸ்டாலிக் பிரஷர் என்று சொல்லப்படும் ரத்த அழுத்த அளவின் சராசரி 120 என்று கூறலாம்.
அதை தாண்டுவது நல்லதல்ல. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது பெரிய சவால் கிடையாது. உணவு கட்டுப்பாடுஉடற்பயிற்சி அல்லது நடை போதும். டாக்டர் சொல்லியிருந்தால் மாத்திரை தவறாமல் சாப்பிட வேண்டும். இந்த வழிகளை பின்பற்றியதால் கடந்த 30 ஆண்டுகளில் உலக அளவில் உயர் அழுத்தம் 2 புள்ளி 3 எம்எம் குறைந்தது. ஆனால்நமது நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட அதே அளவு அதிகமாகி இருக்கிறது.
அதிக ரத்த அழுத்தம் ஒரு நிலைதானே தவிர நோயல்ல என்று டாக்டர் ஆறுதலாக சொல்வதை அப்படியே பிடித்துக் கொள்வதால் பலர் இதில் அக்கறை காட்டுவதில்லை. அந்த நிலை & கண்டிஷன் & கொடிய பல நோய்களுக்கு நுழைவாயில் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இதய நோய்களின் தொடக்கம் ரத்த அழுத்த உயர்வுதான். ஆண்டுக்கு 70 லட்சம் பேர் இவ்வாறு இதய நோய்களால் மரணம் அடைகின்றனர். மூளையில் ரத்தக் குழாய் வெடிப்பதால் ஏற்படும் மரணங்களில் 57 சதவீதமும்மாரடைப்பால் நிகழும் சாவுகளில் 24 சதவீதமும் உயர் ரத்த அழுத்தத்தில் உருவானவைதான் என கணக்கிடப்பட்டுள்ளது.
எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆவதை உயர் ரத்த அழுத்தத்தின் பிரதான அடையாளமாக குறிப்பிடுகின்றனர். ஏதோ ஒரு காரணத்துக்காக ஒரு நாளில் ஒரு முறையாவது டென்ஷன் ஆகாத மனிதர்கள் எவரும் இருக்க முடியாது. வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கக்கூடும். அடக்கி வைத்தாலும் அழுத்தம் ஏறத்தான் செய்யும். இந்தியர்களை பொருத்தவரை உணவில் உப்புஎண்ணெய்அரிசிகோதுமை குறைத்து தினமும் அரை மணி நேரமாவது நடந்தால் போதும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முடிவு கட்டி விடலாம் என்று டாக்டர்கள் கூறுகின்றனர்.

ரத்தசோகை என்றால் என்ன ?
ரத்த சோகை என்பது ஒரு நோய் அல்ல என்று அப்போலோ மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் மருத்துவர்  கூறியுள்ளார்.
இரும்பு சத்து பற்றாக்குறை தான் ரத்தசோகைக்கு காரணம்.
இது ஒரு நோய் அல்ல, நோயின் தோற்றம். அனைத்து வகை ரத்த சோகையும் இரும்புச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுவதில்லை. ஒரு சில ரத்த சோகையில் இரும்பின் அளவு அதிகரித்திருக்கும்.
ரத்தசோகை ஏற்பட மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.
போதிய அளவு ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியின்மை,
போதிய இரும்பு சத்துள்ள உணவு சாப்பிடாதிருத்தல் அல்லது குறைந்த அளவு சத்துகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையை உடம்பு கொண்டிருத்தல்.
மலேரியாவால் அதிகளவு ரத்த சிகப்பணுக்கள் சேதமடைந்தால், ஹீமோகுளோபின் குறைவை ஏற்படுத்துவதுடன் தசைகளுக்கு ஆக்சிஜன் செல்வதையும் தடுக்கும்.பெண்களின் பிரசவ காலத்தில் ஏற்படும் உதிரப்போக்கும் இதற்குக் காரணம்.இரும்புச்சத்தை உடம்பு கிரகித்துக்கொள்ள சாப்பாட்டுடன் இறைச்சி, மீன், கோழி இறைச்சி மற்றும் வைட்டமின் சி சத்து நிறைந்தவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்வது நல்லது.மேலும், முழு தானியங்கள், அரைத்த தானியப் பொருள்கள், கறி சாண்ட்விச்கள், உலர் பழங்கள், கொட்டைகள், சோயா பொருள்களை சாப்பிட வேண்டும். உணவைத் தவிர்க்கவோ அல்லது பட்டினி கிடக்கவோ கூடாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.



இரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?

ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே "ஹீமோகுளோபின்' என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia)ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.

ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

ஒரு சொட்டு ரத்தத்தில் 55 லட்சம் ரத்த சிவப்பு அணுக்கள் இருக்கும். அதாவது சென்னையின் மக்கள்தொகைக்கு ஏறக்குறைய இணையானஅளவுக்கு இருக்கும்.

ரத்த சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகும் இடம் எது?

எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். இந்த வெற்றிடத்தைச் சுற்றி எலும்பு மஜ்ஜை (Bone Marrow) இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்டலட்டுகள் உற்பத்தியாகின்றன.

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?

ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.

ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?

ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.

ரத்தத்தில் உள்ள "பிளேட்லட்அணுக்களின் வேலை என்ன?

உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி "பிளேட்லட்' அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி "கார்க்' போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.

பிளாஸ்மா என்றால் என்ன?

ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.

ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?

ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் "பிளாஸ்மா' என்ற பொருளும் உள்ளது.

ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்' செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?

ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.

மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?

மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?

எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.

ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?

நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

* 24 மணி நேரத்தில் சிறுநீரகங்கள் வெளியேற்றும் சிறுநீன் அளவு எவ்வளவு தெயுமா?

24மணி நேரத்தில் சுழற்சி முறையில் 1700 லிட்டர் ரத்தத்தை சிறுநீரகங்கள் சுத்திகப்பு செய்கின்றன. இதில் ஒன்றரை லிட்டர் சிறுநீரை அவை வெளியேற்றுகின்றன.

தலசீமியா என்பது தொற்று நோயா?

இது தொற்று நோய் அல்ல. தந்தைக்கோ அல்லது தாய்க்கோ தலசீமியா நோய் இருந்தால் குழந்தைக்குப் பிறவியிலேயே இந் நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த பிறகு இந் நோய் வர வாய்ப்பில்லை.

மூளையின் செல்களுக்கு ரத்தம் செல்லாவிட்டால் விளைவு என்ன?

மூளையின் செல்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்லுவது ரத்தம்தான். தொடர்ந்து மூன்று நிமிஷங்களுக்கு ஆக்சிஜன் செல்லாவிட்டால் மூளையின் செல்கள் உயிழந்துவிடும். உடலின் இயக்கத்துக்கு ஆணையிடும் மூளையில் கோளாறு ஏற்பட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.

ரத்தம் உறைவதற்கு எது அவசியம்?

ரத்தத்தில் மொத்தம் உள்ள 13 காரணிகளில் முதல் காரணியில் ஃபிப்னோஜன்(Fibrinogen) என்ற வேதிப்பொருள்தான் ரத்தத்தை உறைய வைக்கிறது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இது இல்லாவிட்டால் ரத்தம் உறையாது. ஒரு லிட்டர் பிளாஸ்மாவுக்கு 2.5 - 4 கிராம் என்ற விகிதத்தில் ஃபிப்னோஜன் உள்ளது.

ரத்தத்தில் எத்தனை குரூப்புகள் உள்ளன?

ரத்தத்தில் நான்கு குரூப்புகள் உள்ளன. A’, ‘B’, ‘AB’, ‘O’ (K) என நான்கு குரூப்புகள் உள்ளன. இது நான்கைத் தவிர A1’, ‘A2’ என்ற உப குரூப்புகளும் ரத்தத்தில் உண்டு."‘O' பிவு ரத்தம் அனைவருக்கும் சேரும் என்பதால்தான்,‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு "யுனிவர்சல் டோனர்' என்று பெயர்.

ரத்தம் எவ்வாறு குரூப் வாயாக பிக்கப்படுகிறது?

ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒரு வகைப் புரதம் உள்ளது. அதன் தன்மைக்கு ஏற்ப குரூப் பிக்கப்படுகிறது. ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் இருந்தால், குரூப் ஆகும்; B’ ஆன்டிஜன் இருந்தால், B’ குரூப் ஆகும். AB என்ற இரண்டு ஆன்டிஜன் இருந்தால் ABகுரூப் ஆகும். எந்தவிதமான ஆன்டிஜனும் இல்லையென்றால் O (K) குரூப் ஆகும்.

ஆர்எச் நெகட்டிவ் ரத்தத்தைஆர்எச் பாசிட்டிவ் உள்ள நோயாளிக்குச் செலுத்தலாமா?

செலுத்தலாம். ஆனால் நோயாளி ஆணாக இருக்க வேண்டும் அல்லது குழந்தைப் பேறு இனி அவசியம் இல்லாத பெண்ணாக இருக்க வேண்டும். இளம் பெண்களுக்கு மாறுபட்ட ஆர்எச் ரத்தத்தைச் செலுத்தக் கூடாது.

ஆர்எச் ரத்தக் காரணிக்கும் பெண்களுக்கும் உள்ள தொடர்பு என்ன?

கர்ப்பம் தப்பதற்கு முன்பே கணவன் - மனைவி இருவரும் ரத்தப் பிவை சோதனை செய்வது அவசியம். கணவன் - மனைவி இருவருக்கும் ரத்தக் காரணி (ஆர்எச்) பாசிட்டிவ்வாகவோ அல்லது நெகட்டிவ்வாகவோ இருந்தால் பிரச்சினை ஏதும் இல்லை. மனைவிக்கு ஆர்எச் நெகட்டிவ்வாக இருந்தால் கர்ப்பம் தத்தவுடனேயே மகப்பேறு மருத்துவடம் சொல்லிவிட வேண்டும்.

கர்ப்பிணிக்கு ஆர்எச் நெகட்டிவ் ரத்தப் பிவு இருந்தால் ஏன் உஷார் தேவை?

கணவனுக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்து மனைவிக்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்க வாய்ப்பு உண்டு. பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் குழந்தை பிறக்கும் நிலையில், அது தாயின் நெகட்டிவ் ரத்தக் காரணியுடன் கலந்து, தாயின் உடலில் எதிர் அணுக்கள்(Antibodies) உற்பத்தியாக வழி வகுத்துவிடும்.

ஆர்எச் பாசிட்டிவ்ஆர்எச் நெகட்டிவ் என எதன் அடிப்படையில் ரத்தக் காரணி பிக்கப்படுகிறது?

ரீசஸ் எனும் ஒருவகை குரங்கின் ரத்த சிவப்பணுக்களில் ஆன்டிஜன் எனும் ஒருவகைப் புரதம் உள்ளது. மனிதர்களின் ரத்தத்தில் இதுபோன்ற ஆர்எச் காரணி இருந்தால் ஆர்எச் பாசிட்டிவ்; இல்லாவிட்டால் ஆர்எச் நெகட்டிவ். இந்தியாவில் பெரும்பாலானோருக்கு ஆர்எச் பாசிட்டிவ் வகை ரத்தக் காரணிதான்.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணிபிறந்த குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவு என்ன?

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி இருந்து பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி இருந்தால் முதல் பிரசவத்தின்போது பெரும்பாலும் பிரச்சினை வராது. ஆனால் குழந்தையின் பாசிட்டிவ் ரத்த செல்கள் தாயின் நெகட்டிவ் ரத்த செல்களுடன் கலந்து அடுத்த தடவை உருவாகும் கருவை அழித்து விடும் அபாயம் உண்டு.

தாய்க்கு நெகட்டிவ் ரத்தக் காரணி (ஆர்எச்)பிறக்கும் குழந்தைக்கு பாசிட்டிவ் ரத்தக் காரணி - விளைவைத் தடுப்பது எப்படி?

நெகட்டிவ் ரத்தக் காரணி உள்ள பெண்கள் குறித்து மகப்பேறு மருத்துவர்கள் அவர்களது கர்ப்ப காலத்தின்போதே குறித்து வைத்துக்கொள்வது அவசியம். குழந்தை பாசிட்டிவ் ரத்தக் காரணியுடன் பிறக்கும் நிலையில், கர்ப்பப் பையில் உருவாகியுள்ள எதிர் அணுக்களை (Antibodies) அழிக்க குழந்தை பிறந்த 72 மணி நேரத்துக்குள் தாய்க்கு ஊசி போட வேண்டும். இந்த ஊசிக்கு‘Anti D‘’ என்று பெயர்.

ரத்த தானம் கொடுக்கும் முன்பு என்ன சோதனைகள் அவசியம்?

வயது (18-55), எடை (45 கிலோவுக்கு மேல்) ஆகியவற்றைப் பார்த்த பிறகு தானம் கொடுப்பவன் ரத்த அழுத்தத்தைப் பார்ப்பது அவசியம். இது இயல்பான அளவில் இருக்க வேண்டும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவைப் பார்ப்பதும் அவசியம். முகாமிலோ அல்லது ரத்த வங்கி உள்பட எந்த இடமாக இருந்தாலும் தானத்துக்கு முன்பு இச் சோதனைகள் அவசியம்.

யார் ரத்த தானம் செய்யக்கூடாது?

உயர் ரத்த அழுத்தத்துக்குச் சிகிச்சை பெறுபவர்கள், சர்க்கரை நோய்க் கட்டுப்பாட்டில் இல்லாதவர்கள், எய்ட்ஸ் நோயாளிகள், பால்வினை நோய் உள்ளவர்கள், வலிப்பு நோயாளிகள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், ஹெபடைடிஸ் பி, சி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானோர், போதைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டவர்கள் (Organ transplant - recipient) ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது.

மருத்துவமனைகளில் எல்லா உயிர்களையும் காப்பாற்றும் அளவுக்கு ரத்தம் கிடைக்கிறதா?

இல்லை. தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 கோடி. இவர்களில் சுமார் 10 சதவீதம் பேர் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்தாலே, ரத்தத்தின் தேவை முழுவதும் பூர்த்தியாகிவிடும். ரத்தம் இன்றி உயிர் இழப்பு ஏற்படுவதைத் தடுத்து விடலாம்.

தானம் கொடுத்த பிறகு ரத்தம் எடுத்த இடத்தில் புண் ஏற்படுமா?

புண் ஏற்படாது. தானம் கொடுத்த பிறகு ரத்த எடுத்த இடத்தில் போடப்படும் பிளாஸ்தியை நான்கு முதல் ஆறு மணி நேரத்துக்கு எடுக்காமல் இருப்பது நல்லது. எப்போதுமே புகை பிடிக்காமல் இருப்பது நல்லது என்றாலும், தானம் கொடுத்த பிறகு ஒரு மணி நேரத்துக்காவது புகை பிடிக்காமல் இருப்பது நல்லது. தானம் கொடுத்த பிறகு, 24 மணி நேரத்துக்காவது மது அருந்தாமல் இருப்பது நல்லது.

ரத்தம் தானம் செய்வதற்கு முன் நன்றாகச் சாப்பிடலாமா?

நன்றாக உணவு சாப்பிட்டு ஒன்றரை மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்வது நல்லது. தானம் செய்வதற்கு முன்பு மோர் உள்பட அதிக அளவு பானங்களைக் குடிப்பதும் நல்லது. ரத்த தானம் செய்ய 10 நிமிஷங்களே ஆகும். ஒருவருக்குத் தொலைபேசி செய்ய ஆகும் நேரத்தைவிடக் குறைவுதான்.

ரத்த தானம் செய்த பிறகு ஓய்வு அவசியமா?

ரத்த தானம் செய்த பிறகு, ரத்த வங்கியிலிருந்தோ அல்லது முகாமிலிருந்தோ உடனடியாகச் செல்லக்கூடாது. மாறாக, குளிர் பானம், பிஸ்கட் சாப்பிட்டு 15 நிமிஷம் ஓய்வு எடுக்க வேண்டும். அடுத்த வேளை உணவை நன்றாகச் சாப்பிடுவது நல்லது. உங்களது தினச வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம்.

தெரியுமா 

உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் "பம்ப்'செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை. ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போதுஅதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! - மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்துமாவுச் சத்துபுரதம்தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் - டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கச் சோலைகளுக்கு அனுப்பப்படுவார்கள். அவற்றின் கீழ்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் தமது இறைவனின் விருப்பப்படி நிரந்தரமாக இருப்பார்கள். ஸலாம் என்பதே அதில் அவர்களின் வாழ்த்தாக இருக்கும்.விரிவான விளக்கத்திற்கு (159)அல்குர்ஆன்14:23

நன்றி:பயனுள்ளதகவல்.
9:13 PM | 0 comments | Read More