ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

வலைகுடா அரசியல் புரட்சிகளுக்கு அமெரிக்காதான் காரணமா?

Written By GM.BASHA on Tuesday, March 22, 2011 | 4:44 AM


தொகுப்பு: ரஸ்மின் Misc 

(வலை குடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அறிஞர் பி.ஜெ அவர்கள் கொடுத்த பதிலை எழுத்து வடிவில் தருகிறோம்.வீடியோவைப் பார்க்கஇங்கு க்லிக் செய்யவும்.

இன்றைக்கு வலைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் புரட்சிகளுக்கு மேற்கத்திய நாடுகளின் சதிதான் காரணம் என்று பலர் நினைப்பதுடன்,கேள்வியும் கேட்கிறார்கள்.

வலைகுடா நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினையைப் பொருத்தவரை மேற்கத்தய நாடுகளின் சதி கண்டிப்பாக இருக்காது என்பதே தெளிவு.இதற்கு சில காரணங்களை நாம் சொல்ல முடியும்.

ஏன் என்றால் மேற்கு நாடுகளின் சதியின் காரணமாகத்தான் வலைகுடா நாடுகளில் மக்கள் போராட்டம் நடத்துகிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அது தவறாகும். ஏன் என்றால் மக்கள் எழுச்சியை சதியின் மூலம் ஏற்படுத்த முடியாது என்பதே இதற்காக காரணம்.

இன்னும் சொல்லப் போனால் தற்போது வலைகுடா நாடுகளில் ஏற்பட்டு இருக்கும் புரட்சிகள் அனைத்தும் மேற்கு நாடுகளுக்க மரண அடி கொடுக்கக் கூடியதாகத்தான் இருக்கிறது.

ஒரு சில மண்ணர்களை கைக்குள் வைத்துக் கொண்டு அரபு நாடுகளை ஏமாற்றி வந்த துரோக ஆட்சியாளர்களுக்கு எதிராகத்தான் இந்தப் புரட்சிகள் வெடித்திருக்கின்றன.

பொம்மை ஆட்சிகள் இனிமேல் இருக்க முடியாத அளவுக்குத்தான் தற்போது மக்கள் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகள் எல்லாம் இது போன்ற பொம்மை ஆட்சியாளர்களை அதிபர்களாக வைத்துக் கொண்டுதான் அரபு தேசத்தின் எண்ணை வளத்தை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள் இது போன்ற நிலை இனி மாறும் வாய்ப்பிருக்கிறது.

மக்கள் ஆட்சி ஒரு நாட்டில் இருக்கும் போது அந்த நாட்டு மக்கள் விரும்பினால் தான் அந்த நாட்டின் எண்ணை வளத்தை அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு கொடுக்க முடியும், அத்துடன் மக்கள் ஆட்சி நடந்தால் அமெரிக்கா போன்ற நாடுகள் எந்தக் காரணம் கொண்டும் சட்டாம் பிள்ளை போன்று நடக்க இயலாது.

இது போன்ற மக்கள் எழுச்சி அமெரிக்க போன்ற நாடுகளுக்கு எதிராக இருக்குமேயேழிய சாதகமாக இருக்க வாய்ப்பில்லை.

உதாரணமாக எகிப்தின் அதிபராக இருந்த ஹொஸ்னி முபாரக் அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் நெருக்கமான உறவை வைத்துக் கொண்டிருந்தவர். அவரின் ஆட்சி பரிக்கப்பட்டதினால் அமெரிக்காவிற்கு இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது.இப்படி தனக்கே எதிரான ஒரு காரியத்தை அமெரிக்கா செய்யுமா என்றால் செய்யவே செய்யாது.

அங்கு நடந்தது என்ன?

எகிப்து போன்ற மக்கள் புரட்சி ஏற்பட்ட நாடுகளில் எல்லாம் ஆட்சியாளர்களால் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டிருந்தார்கள்.

பத்துப் பேராக இருந்தவர்கள் நூறாக, ஆயிரமாக, லட்சமாக மாறும் போது புரட்சி வெடிக்கத்தான் செய்யும் பொருத்திருந்தவர்கள் அந்த ஆட்சியாளர்களுக்கெதிராக கிளம்புவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தான் பயன்படுத்துவார்கள்.

வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி, வருமை சுதந்திரமற்ற அடக்குமுறை ஆட்சி, அரசர்களின் டாம்பீகமான, சொகுசு வாழ்க்கை இது போன்றவற்றைப் பார்த்து மக்கள் கொதித்தெழுந்துள்ளார்களே தவிர சதியெல்லாம் கிடையவே கிடையாது.

சதித்திட்டம் போட்டு சில தலைவர்களை விலைக்கு வாங்க முடியுமே தவிர இது போன்ற புரட்சிகளை எல்லாம் உண்டு பண்ண முடியாது.

அத்தோடு இந்தப் புரட்சிகளுக்கெல்லாம் தலைவர்களே கிடையாது என்பதையும் நாம் கவணத்தில் கொள்ள வேண்டும்.

எகிப்தில் நடந்த புரட்சி, டியுனிஷிய புரட்சி தற்போது லிப்யா, ஓமான்>பஹ்ரைன் போன்ற நாடுகளில் நடந்து வரும் புரட்சிகள் எதற்கும் எந்தத் தலைவருமோ அல்ல எதிர் கட்சியுமோ காரணமில்லை. மக்கள் ஆட்சியாளரின் ஆட்சியை வெறுத்து போராட்டம் நடத்தினார்கள் அவர்களுடன் மற்ற கட்சிகளின் தலைவர்களும் சேர்ந்து கொண்டார்கள்.

இது இயற்கையாக நடந்த ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறதே தவிர சதியாக இருக்க வாய்ப்பில்லை.

அத்துடன் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டிய இன்னுமொரு முக்கியமான விஷயம் புரட்சியினால் ஆட்சி மாறுகிறதே தவிர இஸ்லாத்திற்கும் இந்த புரட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

புரட்சி செய்தவர்களிடமும் இஸ்லாம் இல்லை, நாட்டை ஆட்சி செய்தவர்களிடமும் இஸ்லாம் இல்லை. ஆட்சி மாறினால் இஸ்லாம் நிலை நாட்டப்படும் என்றெல்லாம் நினைப்பதற்கு வாய்ப்பில்லை.

சோற்றிற்கு கஷ்டம், வாழ்கை செலவுக்கு கஷ்டம் என்பதற்காகத்தான் புரட்சி வெடித்ததே தவிர இஸ்லாத்தை நிலை நாட்டுவதற்கு புரட்சி வெடிக்கவில்லை.

ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்கள் ஒரு விதமாக மார்க்கத்திற்கு முரனாக செயல்பட்டார்கள்இவர்கள் இன்னுமொரு விதமான இஸ்லாத்திற்கு மாற்றமாக நடக்களாம்.

இது போல் மக்கள் புரட்சி வெடித்ததற்காக இஸ்லாமிய ஆட்சி வந்துவிடும் என்றெல்லாம் எண்ண முடியாது.

அதிகமான கஷ்டம் தரும் ஆட்சியாளரை நீக்கிவிட்டு, குறைவான கஷ்டம் ஏற்படும் ஆட்சியை ஏற்படுத்துவோம் என்ற நோக்கத்தில் இதை ஏற்படுத்தினால் அது அவர்களுக்கு சில நன்மைகளை ஏற்படுத்தலாம்.
நன்றி:  ரஸ்மின் Misc 
   
4:44 AM | 0 comments | Read More

அழிந்த பைல்களை மீட்டெடுக்க இதுவும் ஒரு வழிதான்..!

Written By GM.BASHA on Wednesday, March 16, 2011 | 12:55 AM

கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். பல முறை இந்த பக்கங்களில் பைல் பாதுகாப்பு குறித்து எழுதினாலும் இந்த பைல் இழக்கும் விபத்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. இழந்த பைல்களை மீட்டுத் தரும் இலவச புரோகிராம்கள் பல இணையத்தில் உள்ளன. சில, இலவச பதிப்பினையும் கூடுதல் வசதிகளுடன் கூடிய கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்பினையும் கொண்டதாக இருக்கின்றன. இந்த பக்கங்களில் இவை குறித்து அடிக்கடி எழுதப் பட்டு வருவதும் வாசகர்களுக்குத் தெரியும். அந்த வகையில் நன்றாகச் செயல்படும் டேட்டா ரெகவரி புரோகிராம் ஒன்று அண்மையில் இணையத்தில் தென்பட்டது. இதன் பெயர் ‘Raid2Raid’.

இதனை Data recovery  என்னும் முகவரி கொண்ட தளத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம் பல்வகைத் திறன் கொண்டது. இது ஹார்ட் டிஸ்க், பிளாஷ் டிரைவ் மற்றும் மெமரி கார்டுகளிலிருந்து பைல்களை மீட்டுத் தருகிறது. இணைத்து அறியக் கூடிய டிரைவில் உள்ள தொலைந்து போன பைல் எனில் அதனைக் கம்ப்யூட்டருடன் இணைத்து, மீட்கப்படும் பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் பதியும் படி செட் செய்யப்படுகிறது. பிரச்சினைக் குண்டானது ஹார்ட் டிஸ்க் எனில் சம்பந்தப்பட்ட டிரைவினை ஒரு இமேஜாகவும் கொடுக்கிறது. இந்த இமேஜை எங்கேணும் பதிந்து பாதுகாக்கும் படி வைத்துவிட்டு, சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க்கினை பார்மட் செய்திடலாம். பின் இமேஜைப் பயன்படுத்தி அழிக்கப்பட்ட பைல்களைப் பெறலாம். டவுண்லோட் செய்த இந்த புரோகிராமில் டபுள் கிளிக் செய்து இதனை இயக்க வேண் டும். பின் எந்த டிரைவில் இருந்து பைல்களை ரெகவர் செய்திட வேண்டுமோ அதன் மீது டபுள் கிளிக் செய்திட வேண்டும். சில நிமிடங்களில் அந்த டிரைவில் உள்ள அனைத்து பைல்களும், மீட்கப்படக் கூடிய பைல்களின் பெயர்கள் உட்பட, காட்டப்படும். எந்த பைல்களை மீட்க வேண்டுமோ அவற்றின் மீது கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் ‘Recover this file’ என்பதைத் தேர்ந்தெடுத்தால் பைல் மீண்டும் கிடைக்கும். அதற்கு முன் மீட்கப்படும் பைல் எங்கு சேவ் செய்யப்பட வேண்டும் என்பதனையும் தீர்மானித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

செய்துபார்த்தவர்கள் உங்கள் கருத்துக்களை போட மறக்காதீர்கள்....
12:55 AM | 0 comments | Read More

உங்கள் ஆன்டிவைரஸ் வேலைசெய்கிறதா? கண்டுபிடிப்போம் வாங்க...!


 இணையம் மற்றும் சாதாரணமாக கணினி உபயோகிப்போருக்கு இருக்கும் பெரும் தொல்லை இந்த வைரஸ் (virus) .நிறைய பணம் கொடுத்து வைரஸ் மென்பொருளை update செய்திருந்தாலும் சில சமயம் எப்படியாவது இந்த வைரஸ் நம் கணினியில் புகுந்து விடும் .நாம் instal செய்துள்ள antivirus ஒழுங்காக வேலை செய்கிறதா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது?
01. அனைவரினதும் கணினியிலும் உள்ள NOTE PAD இனை OPEN செய்துகொள்ளவும்.

02. கீழுள்ள வரியை காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.
 
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*


03. பின் அதனை fakevirus.exe என்ற பெயரில் save செய்யவும்.
04. அந்த பைல் DELETE ஆகிவிட்டால் உங்கள் ஆன்டிவைரஸ்  சிறப்பாக வேலை செய்கிறது என அறிந்துகொள்ளலாம். அவ்வாறு ஆகவில்லை என்றால் உங்கள் ஆன்டிவைரஸ் வேலை செய்யவில்லை என்று தெரிந்துகொள்ளலாம். 
12:52 AM | 0 comments | Read More