ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!

Written By GM.BASHA on Wednesday, December 26, 2012 | 3:36 AM


மூச்சு காற்றை அடக்க நினைத்தவர்களே..... இதோ புறப்பட்டு விட்டோம் பெரும் புயலாக தலைநகரை நோக்கி.......

தலைநகர் சென்னையில் காவல்துறை மிருகங்களை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்...........!!

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்,

வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்………… என்று ? கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்,

நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்,

முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்...


தலைநகர் சென்னையில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

காலம் : 29.12.2012 சனிக்கிழமை (இன்ஷா அல்லாஹ்...)

களம் : முஸ்லிம்கள் மீது போர் தொடுத்த அதே திருவல்லிக்கேணி

அனல் பறக்கும் கண்டன உரை :

பி.ஜைனுல் ஆபிதீன்

காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும், துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும்,

சிறைக்கு செல்ல முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் அஞ்சாது என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும்.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு

அழைக்கிறது : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)

வங்கக்கடலோரம் மையம் கொள்ள மனித புயலாய் வாரீர்...........!
3:36 AM | 0 comments | Read More

இந்த வார 17:15 உணர்வு இதழில்..

Written By GM.BASHA on Thursday, December 6, 2012 | 7:53 PM

1.பைபிள் கடவுளின் வார்த்தை அல்ல! – கிறித்துவ போதகர்கள் ஒப்புதல் வாக்குமூலம்! கன்னியாகுமரியில் நடந்த பரபரப்பான விவாதம்!!
2.சமாதிக்குச் சந்தனம், யானைக்குப் பழம் – தமிழக அரசு திருந்துமா? – உணர்வலைகள்
3.கிராம மக்களை வெகுவாக ஈர்க்கும் டிஎன்டிஜேயின் கிராமப்புற தாவா!
4.நபிவழியில் ஜனாஸாவை அடக்கம் செய்தவர்களை தாக்க முயற்சி! – கப்ரு வணங்கிகள் அட்டகாசம்!
5.கோசாலை கோரிய சங்பரிவாரின் மர்மம விலகியது!
6.சூடுபிடிக்கும் DCW பிரச்சினை: காயல்பட்டிணவாசிகள் ஒருங்கிணைந்து போராட்டம்!
7.கேரள கிளைகளை ஒன்றிணைத்த மண்டல பொதுக்குழு
8.இந்துக்கள் கொண்டாடும் முஹர்ரம் பண்டிகை : ஓர் உண்மை விளக்கம்!
9.நாட்டுப்பற்று எங்கே போனது? : நாடும் நடப்பும்
10.முதன் முறையாக மத்திய உளவுத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட முஸ்லிம் : எதிர்பார்ப்பு என்ன?
11.அஸ்தியோடு கரைந்து போன பால்தாக்ரேயின் கொள்கை:
12.துப்பாக்கி கூத்தாடிகளுக்கு எதிராக அடுத்த கட்ட போராட்டம் என்ன? – பதில்கள்
13.பி.எஸ்.என்.எல்.லைத் தொடர்ந்து ஏகத்துவ காலர் ட்யூன்களை அறிமுகப்படுத்தின ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள்!
14.நபிகளாரை இழிவுபடுத்தி படம் எடுத்த 8 பேருக்கு மரண தண்டனை! – எகிப்து நீதிமன்றம் தீர்ப்பு!
தற்போது பரப்பான விற்பனையில்…
உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:
9080898880
30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1
7:53 PM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையின் தவா

Written By GM.BASHA on Wednesday, December 5, 2012 | 8:33 PM







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த சில நாட்களாக நபிகள் நாயகம் (ஸல் ) அவர்களை நாம் வாழும் பகுதில் உள்ள அனைத்து மாற்று மத சகோதரர்களுக்கும் அறிமுகம் செய்து அவர்களின் தூய வாழ்கையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்படுகிறது அந்த வகையில்  மீமிசலில் உள்ள அரசு மேல்நிலை  பள்ளி,ஆசிரியர்களுக்கும் ,ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இன்னும் மீமிசல் கடை வீதியிலும்  05.12.2012 அன்று  மாமனிதர் நபிகள் நாயம் என்ற புத்தகம் ,யார் இவர் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது  அல்ஹம்துல்லில்லாஹ்.   
8:33 PM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையில் 02.12.2012 அன்று ப்ராஜக்தர் நிகழ்ச்சி

Written By GM.BASHA on Tuesday, December 4, 2012 | 4:20 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக கடந்த 02.12.2012 அன்று புராஜக்டர் மூலம் தவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது வழக்கம் போல் மாமா கட்சியினர் சத்தியப் பிரச்சாரத்தை தடுப்பதில் நாங்கள் தான் முதல் ஆள் என்று காவல்துறைக்கு குராபிகள் மூலம் தகவல் கொடுத்தனர் தடுக்க முடியாமல் வழக்கம் போல் செருப்படி பட்டனர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.


4:20 AM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையில்02.12.2012அன்று ஆலோசனைக் கூட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையில் ஆலோசனைக் கூட்டம் 02.12.2012 அன்று மாலை நடைபெற்றது  இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் டிசம்பர் 15 தேதி அன்று SP எதிரே நடைபெறவிருக்கும் மாபெரும் கண்டன ஆர்பாட்டத்திற்கு ஆ.புதுப்பட்டினம் கிளையில் இருந்து அதிக அளவில் ஆண்களையும் பெண்களையும் கலந்துகொள்ளச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டது குறைந்தது ஒரு பஸ் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. 
4:14 AM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 02.12.2012 அன்று தர்பியா நடைபெற்றது சகோ.மக்தும் அவர்கள் தவ்ஹீத் வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பின் உரையாற்றினார்கள் இதில் சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.அல்ஹம்துலில்லாஹ்  
4:09 AM | 0 comments | Read More

ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக யார் இவர்யார் இவர்நோட்டீஸ் விநியோகம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மீமிசலில்01.12.2012 அன்று மீமிசல் கடைவீதியில் யார் இவர் என்ற தலைப்பில் 100 நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.
4:02 AM | 0 comments | Read More

மாமனிதர் நபிகள் நாயம் புத்தகம்விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக மீமிசலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியர்களுக்கு 02.12.2012 அன்று  மாமனிதர் நபிகள் நாயம் என்ற புத்தகம் 10,யார் இவர் என்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது  அல்ஹம்துல்லில்லாஹ்.
 


4:00 AM | 0 comments | Read More

ஐ.நாவில் தனிநாடு அங்கீகாரத்துக்கு முந்தைய நிலை தகுதியை பெற்றது பாலஸ்தீனம்!: கடுப்பில் அமெரிக்கா

Written By GM.BASHA on Thursday, November 29, 2012 | 9:59 PM

ஐக்கிய நாடுகள் சபையினால் முழுமையாக ஒரு தனி நாடு என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான முந்தைய நிலையான ‘பார்வையாளர் நாடு" என்கிற தகுதியை ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு மூலம் பாலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது.
பாலஸ்தீனம் -இஸ்ரேல் இடையேயான மோதல் நிலையால் இன்னமும் ஒரு தனிநாடாக பாலஸ்தீனம் அங்கீகரிக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத நாடு (non- member state) என்ற தகுதியோடு பாலஸ்தீனம் இருந்து வருகிறது. இத்தகுதிக்கு ஒருபடி மேலாக அதாவது தனிநாட்டு அங்கீகாரத்துக்கு முந்தைய படிநிலையான ஐ.நாவின் ‘பார்வையாளார் தகுதி"பெற்ற நாடாக (Observer status) பாலஸ்தீனம் உருவெடுத்திருக்கிறது.
இதற்காக ஐக்கிய நாடுகள் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. சபையில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்தியா உட்பட 138 நாடுகள் வாக்களித்த. அமெரிக்கா, இஸ்ரேல் உட்பட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அமெரிக்காவின் லாபிக்குட்பட்ட 41 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இதனால் ஐக்கிய நாடுகள் சபையின் ‘பார்வையாளர் தகுதி' பெற்ற நாடாகி இருக்கிறது பாலஸ்தீனம்.
இந்த அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையில் வாக்களிக்கக் கூடிய உரிமை பாலஸ்தீனத்துக்கு இன்னமும் கிடைக்காவிட்டாலும் ஐக்கிய நாடுகள் சபையின் இதர அமைப்புகளில் பாலஸ்தீனம் இணைந்து செயல்படலாம். குறிப்பாக சர்வதேச நீதிமன்றத்தில், இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக நேரடியாக முறையிடக் கூடிய தகுதி பாலஸ்தீனத்துக்குக் கிடைத்திருக்கிறது்.
பாலஸ்தீனத்துக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்தை ஏற்க முடியாத அமெரிக்காவும் இஸ்ரேலும் காசா போர் முனையில் மேலும் மோசமான விளைவுகளை இது உருவாக்கும் என்று குமுறியிருக்கின்றன.
ஐ.நா.வின் அங்கீகாரத்தை பாலஸ்தீனம் பெற்ற செய்தியை அந்நாடு உற்சாகமாகக் கொண்டாடியது. யுத்த முனையான காசா பகுதியில் குண்டு மழை பொழிய உற்சாகம் கரைபுரண்டோடியது. ஐக்கிய நாடுகள் சபையின் 194-வது நாடாக பாலஸ்தீனம் உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது அந்த மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.

நன்றி:தட்ஸ்தமிழ்  
9:59 PM | 0 comments | Read More

தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து - பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்

Written By GM.BASHA on Tuesday, November 27, 2012 | 2:53 AM

மும்பை: மறைந்த பால் தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்ததற்காகவும், அதற்கு லைக் கொடுத்ததற்காவும் இரு இளம் பெண்களைக் கைது செய்த மகாராஷ்டிர காவல்துறையினர் மீது மும்பை உயர்நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 10 சிவசேனா கட்சியினரை ஜஸ்ட் 7500 ஜாமீனில் வெளியே விட உத்தரவிட்ட மாவட்ட நீதிபதியையும் தூக்கியடிக்க உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பால் தாக்கரே மரணமடைந்தார். இதையடுத்து மும்பை நகரமே ஸ்தம்பித்துப் போனது. சிவசேனா கட்சியினரின் வன்முறைக்குப் பயந்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் உள்ளிட்டவை அடைக்கப்பட்டன. வாகனப் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து மகாராஷ்டிர மாநிலம் பால்கரைச் சேர்ந்த 21 வயதான ஷாஹின் தத்தா என்பவர் பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டிருந்தார். அதற்கு அவரது தோழியான ரேனு என்பவர் லைக் கொடுத்திருந்தார்.
இதனால் சிவசேனா கட்சியினர் கடும் ஆத்திரமடைந்தனர். ஷாஹீனின் உறவினர்களுக்குச் சொந்தமான மருத்துவமனையை அடித்து நொறுக்கி சூறையாடி விட்டனர். இதனால் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் மதிப்புக்கு பெரும் சேதம் ஏற்பட்டு விட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிர போலீஸார் சிவசேனாக் கட்சியினருக்கு சாதகமாக நடந்து கொண்டனர். அதாவது ஷாஹீனையும், ரேனுவையும் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் மீது மத நம்பிக்கையைப் புண்படுத்துதல், இரு தரப்புக்கு இடையே விரோதத்தை வளர்த்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கையும் போட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் கோர்ட்டிலும் நிறுத்தினர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொதிப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது.
மகாராஷ்டிர அரசும், போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தது. சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் பிருத்விராஜ் சவான் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கிளினிக்கைத் தாக்கிய 10 சிவசேனா கட்சியினரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அவர்களை பால்கர் மாஜிஸ்திரேட் வெறும் ரூ. 7500 ரொக்க ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டார். இது மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தானே எஸ்.பி. ரவீந்திர செங்கோகர், பால்கர் காவல் நிலைய முதுநிலை இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் பிங்க்ளே ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டது. அதன்படி இருவரையும் மகாராஷ்டிர மாநில டிஜிபி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் 10 சிவசேனா குற்றவாளிகளை சொற்ப ரொக்க ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்ட பால்கர் மாஜிஸ்திரேட், ராமச்சந்திர பகடேவையும் ஜல்கோன் கோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி அவரும் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
முன்னதாக, கொங்கன் சரக ஐஜி சுக்வீந்தர் சிங் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ரகசிய அறிக்கையில், இரு இளம் பெண்கள் மீதான காவல்துறை நடவடிக்கை தவறானது. அவர்கள் மீது போடப்பட்ட சட்டப் பிரிவுகளும் பொருத்தமற்றவை என்று கூறியிருந்தார். மேலும், இரு பெண்கள் மீதும் நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். அதன் அடிப்படையில் தற்போது உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி:தட்ஸ்தமிழ் 
2:53 AM | 0 comments | Read More

சினிமா கூத்தாடிகளின் கொட்டத்தை அடக்குவது எப்படி?

Written By GM.BASHA on Wednesday, November 21, 2012 | 9:22 PM

கூத்தாடி விஜய்  இஸ்லாத்திற்கு எதிரான, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரிக்கும் ‘துப்பாக்கி’ திரைப் படத்திற்கு எமது எந்தக் கண்டனமும் இடம்பெறவில்லையே! என்ற வாசகர்களின் ஆதங்கத்திற்கு உகந்ததாக தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் வார இதழ் உணர்வில் வெளியான அது பற்றிய கேள்வி பதிலை அப்படியே தருகிறோம்.


 
கேள்வி 1
நம் வீட்டிற்கு  முன் ஏதாவது  ஒரு நாள் ஒரு நாய் குலைத்தால் அதை விரட்டாமல் கண்டுகொள்ளாமல் விட்டு விடலாம். ஆனால் அதையே பொழுதுபோக்காக வைத்து தினமும் வந்து குலைத்தால் அந்த நாயை விரட்டத்தான் வேண்டும்.
அதேபோல் முதலில் அர்ஜுன், விஜயகாந்த், சரத்குமார், கமலஹாசன்  போன்ற  கூத்தாடிகள்தான்  சில படங்களில்  முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தார்கள். அதை நாம் பொறுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது மாதாமாதம் ஏதாவது ஒரு திரைப்படத்தில் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பதை நாம் காண்கிறோம். இந்தக் கூத்தாடிகளின் வரிசையில் இப்போது கூத்தாடி சிம்பு,  சூர்யா,  விக்ரம்,  விஜய், நாளை யாரோ…
இப்படி முஸ்லிம்களைக் கூத்தாடிகள் ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக்கொண்டுசீண்டுவதைப்  பார்க்கிறோம்.முஸ்லிம்கள்சிறுபான்மையினர்தானே , இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற தைரியம்தான் இவர்களை இவ்வாறு மேலும் மேலும் செய்யத் தூண்டுகிறது. இதைக் களைய வேண்டுமென்றால் நம் ஜமாஅத் இதைக் கையில் எடுக்க வேண்டும். களத்தில் இறங்கி போராடினால்தான் நிச்சயமாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதைப் பற்றி தற்போது நம் ஜமாத்தின் நிலைபாடு என்ன?
குறிப்பு: நபிகள் நாயகத்தை அவமதித்து திரைப்படம் எடுத்ததையும் நாம் சக்திக்கு உட்பட்டு போராட்டங்கள் நடத்தித்தான் வெல்ல முயற்சி செய்து வருகிறோம். நாம் போராட்டங்கள் செய்தால் அதுவே விளம்பரம் ஆகிவிடும் என்பது சரிதான். ஆனால் அதை விட பலமடங்கு மேலாக தொலைக்காட்சிகளின் எல்லா சேனல்களிலும் இந்த திரைப்படங்கள் பத்து நிமிடத்திற்கு ஒருமுறை விளம்பரம் ஆகி மூலை முடுக்கெல்லாம் சென்று பிரபலமாகத்தான் செய்கிறது. இறுதியாக இந்தக் கூத்தாடிகளுக்கு ரசிகர்களாக இருக்கும் நமது சமுதாய சகோதரர்களாவது இந்தப் போராட்டங்களைப் பார்த்து திருந்த வாய்ப்புண்டு  என்று  நான்  நம்புகிறேன். எனக்கு தெரிந்தே என் குடும்பத்தைச் சார்ந்த நான்கு சகோதரர்கள் இந்தக் கூத்தாடிகளை அடையாளம் கண்டு திருந்தி இருக்கிறார்கள்.
- பஹ்ரைன் மண்டலத்திலிருந்து பஞ்சலிங்கபுரம் அரஃபாத்
கேள்வி 2
கமலஹாசன் எடுத்து வெளியிடவுள்ள விஸ்வரூபம் திரைப்படமும் விஜய் நடித்து வெளியிட்ட படத்தைப் போலவே முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக சொல்லப்படுகிறதே? இதுபோல் தொடர்ந்து நடப்பதைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறீர்கள்?
- கடையநல்லூர் மசூது
கேள்வி 3
துப்பாக்கி என்ற படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக பிற மத மக்களைத் தூண்டிவிட்டு மதவெறியை ஊட்டும் வகையில் தயாரித்துள்ளார்கள். இதில் ஐந்து வசனங்கள் மட்டும் நீக்கப்பட்டுள்ளதாகவும் நடந்த தவறுக்கு சினிமாக்காரர்கள் தரப்பில் மன்னிப்பும் கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது. அந்த ஐந்து வசனங்கள் தவிர மற்றவை சரியாக உள்ளதா?
- கடையநல்லூர் மசூது
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில்
துப்பாக்கி என்ற படம் வெளிவந்து சிலர் போராட்டம் நடத்திய பிறகுதான் இது குறித்து நமக்குத் தகவல் வந்தது. அந்தப் படத்தில் முஸ்லிம்களை எவ்வாறு சித்தரித்துள்ளார்கள் என்பதை நாம் இன்று வரை பார்க்கவில்லை. ஆனாலும் பல சகோதரர்கள் அதைப் பார்த்து அந்தப் படம் ஒட்டு மொத்த முஸ்லிம்களையே பயங்கரவாதிகளாகவோ அல்லது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாளராகவோ காட்டியுள்ளது என்று தெரிவித்தனர்.
அப்படியானால் எங்கும் அந்தப் படத்தை திரையிட முடியாத அளவுக்கு கடுமையான எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என்று 15/ 11/2012 அன்று கூடிய அவசர நிர்வாகக் குழுவில் முடிவுசெய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை அன்று அந்தப் படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளையும் முற்றுகையிட்டு கடும் கண்டனத்தைப் பதிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் தொடர்ச்சியாக தினந்தோறும் முற்றுகை இடுவது எனவும் தீர்மானித்து காவல்துறையிலும்  15 ஆம் தேதி அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது.
போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் அல்லாத அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் அப்பல்லோ ஹனீபா அவர்கள் நமது நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டார்.
கூத்தாடி விஜய்யின் தந்தை சந்திரசேகரும்,  படத்தை இயக்கிய அயோக்கியன் முருகதாசும்,  படத்தை தயாரித்த அயோக்கியன் தானுவும் அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துவதாகவும், அந்தப் படத்தை நாங்கள் பார்த்து விட்டு ஆட்சேபனை செய்த காட்சிகளை நீக்கி விடுவதாக சொல்லி விட்ட்தாகவும், எழுத்து மூலமாகவும் கையெழுத்திட்டு தந்துள்ளதாகவும் இரண்டு நாட்களில் அவை நீக்கப்படும் என்று அவர்கள் தரப்பில் உறுதி சொல்வதாகவும் தெரிவித்து நீங்கள் போராட்டத்தைக் கைவிடலாமே என்று கேட்டுக் கொண்டார்.
அவர்கள் பணிந்து வந்ததற்கு மதிப்பளித்து தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் நடத்த வேண்டாம் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தார். இதே வேண்டுகோளை தேசியலீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்களும் நம் நிர்வாகிகளிடம் வைத்தார்.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை நாங்களும் இருக்கிறோம் என்று காட்டிக் கொள்வதற்காக எந்தப் போராட்டத்தையும் நடத்துவதில்லை. கோரிக்கை நிறைவேறிவிட்டால் அதன்பின்னர் போராட்டம் நடத்துவதில்லை என்பதைக் கொள்கையாகக் கொண்டுள்ளதால் அவர்களின்  கோரிக்கையை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைத்தோம்.
அனைத்து முஸ்லிம் தலைவர்களும் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு சில காட்சிகளை நீக்கச் சொல்லி விட்டதால்  அதன் பிறகு அந்தப் படம் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையில் இருக்காது என்று நம்பினோம்.
அனைத்து முஸ்லிம் இயக்கத்தினரும் அந்தப் படத்தைப் பார்த்து சில காட்சிகளை நீக்கினால் போதும் என்று சொன்னதால் அவர்கள் கவனமாகப் பார்த்துத்தான் இப்படி கோரிக்கை வைத்துள்ளனர் என்று நாமும் நினைத்தோம். ஆனால் நீக்கப்பட்ட பிறகும் அந்தப் படத்தின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை.
மூன்று நாட்கள் கழித்து அவர்கள் நீக்கிவிட்டு வெளியிட்ட படம் அதே கருத்தை கொஞ்சமும் குறையாமல் சொல்வதாக பல சகோதரர்கள் கொந்தளித்து போய் தலைமையை தொடர்பு கொண்டார்கள். ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக இப்போதும் அந்தப் படம் சித்தரித்துள்ளதாகக் கூறி அந்தக் காட்சிகளையும் விளக்கினார்கள்.
முஸ்லிம் இயக்கங்களின் தலைவர்கள் முன்னால் அழுது கண்ணீர் விட்டு நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று அந்த மூன்று அயோக்கியர்களும் நன்றாக நடித்துள்ளனர்.  எங்கள் பிள்ளை மேல் சத்தியம் செய்கிறோம் எங்களுக்கு முஸ்லிம்கள் மீது மிகுந்த மரியாதை உண்டு என்றெல்லாம் கூறி ஏமாற்றியுள்ளனர். இவர்களும் நன்றாக ஏமாந்து இப்படிப்பட்ட உத்தமர்களா என்று வியந்து போய் அவர்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில காட்சிகளை பெயரளவுக்கு நீக்கச் சொல்லி இருக்கிறார்கள். வந்தவர்கள் உண்மைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத சினிமாக்காரர்கள் என்பதும் நடித்து யாரையும் ஏமாற்றும் எத்தர்கள் என்பதும் அத்தனை பேருக்கும் எப்படி தெரியாமல் போனது?
நீக்குவது என்றால் முஸ்லிம் சமுதாயத்தை தீவிரவாதிகளாக்க் காட்டும் எந்த ஒரு அம்சமும் இருக்கக் கூடாது என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். அவர்கள் அப்படிச் செய்யவில்லை என்பதை நீக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட படமும் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.
படம் வெளியாகி வசூல் வேட்டை முடிந்து விட்ட நிலையில் போராட்டம் நடத்தினால் அந்த அயோக்கியர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. முஸ்லிம் தலைவர்களை ஏமாற்றி போதுமான அவகாசத்தை எடுத்துக் கொண்டார்கள்.
அந்தப் படத்திலுள்ள ஆட்சேபமான காட்சிகளை நீக்கி விட்டனர் என்று நம்மிடம் கூறி போராட்டம் நடத்த வேண்டாம் எனக் கூறினார்கள். ஆனால் தயாரிப்பாளன், இயக்குனர்,  நடிகன் ஆகிய மூன்று அயோக்கியன்களுக்கு வலிக்கக் கூடாது;  நட்டம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது போல் அவர்களின் நடவடிக்கை அமைந்துள்ளது.
முஸ்லிம் சமுதாயத்தைப் பாதிக்கும் இந்த விஷயத்தில் கடுமையான உறுதிப்பாட்டை இவர்களால் காட்ட முடியாது என்றால் இது போன்ற பிரச்சனைகளில் தலையைக் கொடுக்காமல் இருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்ளுமாறு விட்டிருக்க வேண்டும்.
பம்பாய் படம் வந்தபோது இதுபோன்ற கூட்டமைப்புக்கள் இருக்கவில்லை. மக்களின் உணர்வுகளை மழுங்கச்செய்ய யாரும் இருக்கவில்லை. அப்போது மக்களாக்க் கொடுத்த பதிலடிக்குப் பின் மணிரத்னம் இது போன்ற படங்களைப் பற்றி சிந்திப்பது கூட இல்லை.
பார்க்க வேண்டிய காசை அந்தக் கும்பல் பார்த்த பின்னர் இப்போது போராட்டம் நடத்துவதால் அந்த அயோக்கியர்கள் நட்டப்படப் போவதில்லை
நடிகன் விஜய் கிறித்தவனாக உள்ளதால் திருச்சபைகளின் ஆலோசனைப்படி தான் இவன் இப்படி படம் எடுத்திருக்கிறான். இஸ்லாத்தின் எழுச்சியைத் தடுக்க வேண்டும் என்பதற்காக கிறித்தவ திருச்சபைகளின் ஆலோசனையுடன்தான் இவன் இதுபோல் படம் எடுத்திருக்க முடியும். இதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. அவனது முழுபெயர் ஜோசப் விஜய்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த கிறித்தவனுக்கும் நடிகன் விஜய்க்கும் ஒரே சக்திதான் பின்னணியில் இருக்கிறது.
முஸ்லிம்கள்தான் பயங்கரவாதிகள் என்ற கருத்து நிலைநாட்டப்பட்டால் யாரும் இஸ்லாத்தின் பக்கம் தலைவைக்க மாட்டார்கள் என்ற திட்டம் இதன் பின்னால் இருக்கிறது. இதே திட்டம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி படம் எடுத்த அயோக்கியனுக்கும் இருந்தது.
இதை இனியும் நாம் சகித்துக் கொள்ள முடியாது. அண்ணன் தம்பிகளாக வாழும் மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் என்றாலே பயங்கரவாதிகள்தான் என்று சித்தரிப்பதைப் பொறுத்துக் கொண்டால் நாம் முற்றிலுமாக அந்நியப்பட்டுப் போவோம்.
அமைதிப்பூங்காவான தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறிப்போகும். இதை உணர்ந்து கடுமையான பதிலடி கொடுக்க வேண்டும்.  இது கூத்தாடிகளின் கற்பனை என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்தின் வாழ்க்கைப் பிரச்சனை. முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சின்ன பிரச்சனை வந்தால் அனைவரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க நினைக்கும் அளவுக்கு இந்தப் படம் மற்றவர்களுக்கு வெறியேற்றியுள்ளது.
அமெரிக்க அயோக்கிய அரசாங்கம் ஈராக், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் மீது அநியாயப் போர் தொடுத்ததை இந்த விஜய் என்ற நாய் படம் எடுப்பானா? அல்லது பாதிரியார்களின் லீலைகளைப் படம் எடுப்பானா?  உலகமகா தீவிரவாதிகள் கூட்டத்தைச சேர்ந்தவன் முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிக்க துணிவு பெற்றுள்ளான்.
இனிமேல் செய்ய வேண்டியது என்ன?:
விஜய், முருகதாஸ், தானு ஆகிய மூன்று அயோக்கியர்களும் தமிழகத்தில் எங்கெல்லாம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்களோ அந்தத் தகவல் கிடைத்தவுடன் இவர்களுக்கு எதிராக முற்றுகைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஈடுபட வேண்டும். இவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் எதிரிகள் என்று தொடர்ந்து அடையாளம் காட்ட வேண்டும். இது குறித்து தலைமை மூலம் முறைப்படி அறிவிப்புச் செய்யப்படும்.
கமலஹாசன் என்ற அயோக்கியனும் இதையே வழக்கமாகக் கொண்டுள்ளான். இவன் எடுக்கும் விஸ்வரூபம் படத்தின் பெயரையே அரபு எழுத்து போல் எழுதி விளம்பரம் செய்கிறான் என்றால் பரமக்குடி பார்ப்பான் கமலஹாசனுக்கு எவ்வளவு துவேசம் இருக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
விஸ்வரூபம் படம் இதுபோல் எடுக்கப்பட்டால் அடுத்த நிமிடமே , “பாபா” படத்துக்கு ராமதாஸ் கொடுத்தது போன்ற பதிலடியைப் போல் எந்த ஊரிலும் அந்தப் படத்தைத் திரையிட முடியாத நிலையை ஏற்படுத்தியதுபோல் சமுதாயம் பதிலடி கொடுத்தால் அதை எந்த முஸ்லிம் இயக்கமும் தடுக்கக் கூடாது.
பணம் சம்பாதிப்பதற்காக கட்டிய மனைவியைக் கூட கூட்டிக் கொடுக்கும் கூத்தாடிக் கும்பலின் இந்தப் போக்கை இனியும் சகித்துக் கொள்ள முடியாது.
பிற சமுதாய மக்களிடமிருந்து முஸ்லிம்களை அந்நியப்படுத்தி வெறுப்பை விதைக்கும் அக்கிரமத்தை எந்த விலை கொடுத்தாகிலும் தடுக்க வேண்டும். அதனால் எந்த விளைவு ஏற்பட்டாலும் பொருட்படுத்தத் தேவை இல்லை என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் அறிவிக்க வேண்டும். காயம்பட்ட முஸ்லிம்கள் அவர்களே பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களை விட்டுவிட வேண்டும்.
அப்போதுதான் இதையே வேலையாகக் கொண்டு திரியும் அயோக்கிய சினிமாக் கூட்டம் அடங்கும். இவர்களை அடக்கியே ஆக வேண்டும்.
காயம்பட்ட  முஸ்லிம்கள் அதற்கேற்ப எப்படி நடந்து கொண்டாலும் நாங்கள் அதில் தலையிட மாட்டோம் என்று அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் முன்னரே அறிவித்து விட வேண்டும்.
மக்கள் பார்க்க வேண்டிய விதத்தில் பார்த்துக் கொள்வார்கள்.
கேனத்தனமான பேச்சுவார்த்தைக்குப் போகாமல் எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருப்பதை உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
எவ்வளவு கடுமையான நிலைப்பாட்டை சமுதாயம் எடுத்தாலும் அதை யாரும் தடுக்கக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இது போன்ற கருத்துக்கள் விதைக்கப்பட்டால் அதன் விளைவாக
முஸ்லிம்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சொத்துக்கள் சூறையாடப்படும்.
அக்கம்பக்கத்தில் வசிக்கும் முஸ்லிமல்லாத மக்கள் சந்தேகத்துடன் முஸ்லிம்களைப் பார்ப்பார்கள்.
இன்னும் வேண்டாத பல விளைவுகள் ஏற்படும் என்பதால் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் இந்த அயோக்கிய சினிமாக் கூட்டத்துக்கு மக்கள் தங்கள் விருப்பப்படி தக்க பதிலடி கொடுத்தால் முஸ்லிம் தலைவர்கள் அதில் தலையிட்டு தடுக்க வேண்டாம் என்று கோருகிறோம்.

நன்றி:SLTJ WEB 
9:22 PM | 0 comments | Read More

தாயத்து ஈமானுக்கு ஆபத்து

Written By GM.BASHA on Wednesday, October 3, 2012 | 5:28 AM

 தாயத்து ஈமானுக்கு ஆபத்து என்ற தலைப்பில் நமதூரில் நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்





5:28 AM | 0 comments | Read More

Youtube யும் அமெரிக்க அயோக்கியர்களையும் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Friday, September 28, 2012 | 12:18 AM

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கடந்த 15-9-2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.


12:18 AM | 0 comments | Read More

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்க நாய் திடீர் கைது

Written By GM.BASHA on Thursday, September 27, 2012 | 10:01 PM

 Anti Muslim Filmmaker Who Sparked Violent Arrested
லாஸ் ஏஞ்செலஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தூக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர்.
உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஒன்று அவருக்கு ஒரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனைக்கு விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.
காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கம்ப்யூட்டர், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.
நகோலாவை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீ்ம்ஸ் என்ற பெயரில் நகோலா இயக்கிய படத்தின் 14 நிமிட டிரெய்லர்தான் யூடியூபில் வெளியிடப்பட்டது. இதுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதில் நபிகள் நாயகத்தை பெண் பித்தர் போலவும், மத மோசடியாளர் என்பதாகும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் நகோலா.
கடந்த ஜூலை மாதம் இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியிடரபப்பட்டது. ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகுதான் பிரச்சினை பெரிதானது.
நகோலா ஒரு கிறிஸ்தவர் ஆவார், இந்த படத்தை தயாரிக்க உதவியதும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :தட்ஸ் தமிழ் 
10:01 PM | 0 comments | Read More

இந்த வார 17:05 உணர்வு இதழில்..

Written By GM.BASHA on Wednesday, September 26, 2012 | 9:14 AM

1.தினமணியின் திமிர் வாதம்
2.போராட்டங்களை முறைபடுத்துவோம் – உணர்வலைகள்
3.இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் – புதிய திரைப்படம்(?)
4.அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது சரியா? – பதில்கள்
5.விநாயகர் சிலையை கரைக்க விடாமல் தடுத்த இந்துக்கள் – நாடும் நடப்பும்!
6.அயோக்கியனின் தலையை கொண்டு வருபவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது அதிரடி அறிவிப்பு!
7.மோனிகா எழுதும் கிளிண்டனுடனான நாறிப்போன கதை…
8.பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!!
9.வன்முறைக்கு வித்திட்ட வசந்த் தொலைக்காட்சி: முளையிலேயே கிள்ளி எறிந்த வடசென்னை டிஎன்டிஜே!
10.இப்படியும் தாவா செய்யலாம்…
11.கருவியல் – பாகம் 14
12.M.Sc படிப்புகளுக்கான JAM தேர்வுக்கான தேதி அறிவிப்பு
13.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் – கல்வி உதவி தொகை 2012 – 13
14.அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : தமுமுக – டிஎன்டிஜே ஓர் ஒப்பீடு – வாசகர் மன்றம்
15.காஜியாபாத் ஆர்ப்பாட்டத்தில் 12 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
16.நபிகளாரை இழிவு படுத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிஎன்டிஜே சார்பாக நடைபெற்ற போராட்டங்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி)
17.போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடாவடித்தனத்தை அடக்கிய டிஎன்டிஜே! – சிவகங்கை மாவட்டம் புதுவயலில் ஏகத்துவ எழுச்சி!!
18.”முஸ்லிம்களின் போராட்டம் போதும்” – கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம்
19.பொய்சுன்னத் ஜமாஅத்தினரின் எதிர்ப்பை தகர்த்தெரிந்து நடைபெற்ற இரத்ததான முகாம்
20.பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு விசிய சங்பரிவாரம்
21.“இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்படத்திற்கு பின்னால் உள்ள உண்மை
22.தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு
23.கூட்டுக்குர்பானி – தலைமயக அறிவிப்பு!
தற்போது பரப்பான விற்பனையில்…
உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:
9080898880
30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1
9:14 AM | 0 comments | Read More

இணையத்தில் கோப்புகளை சேவ் செய்திட

Written By GM.BASHA on Wednesday, September 12, 2012 | 7:40 AM

இணையத்தில் கோப்புகளை சேவ்
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாக கிடைத்தாலும், இணையத்தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கோப்புகளை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து கோப்புகளையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் நம் பெர்சனல் கணனியின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம்.
ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் கோப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணையத்தளங்களிலும் நம் கோப்புகளை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.
1. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ்(Microsoft Sky Drive):
இந்த தளத்தில் கோப்புகளை சேவ் செய்து வைத்திட 7 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. முதலில் 25 ஜிபி அளவு தரப்பட்டது. பின்னர், இது குறைக்கப்பட்டது. இருப்பினும் முன்பு பதிந்து கொண்டவர்களுக்குத் தொடர்ந்து 25 ஜிபி அனுமதிக்கப்படுகிறது.
நம் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், வீடியோ கோப்புகளை அதிக எண்ணிக்கையில் சேவ் செய்து வைத்திட இது நல்ல தளம். இதில் ஒரு குறைபாடு உள்ளது. இதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
எனவே பெர்சனல் தகவல்கள் அடங்கிய தனி நபர் கோப்புகளை இதில் சேவ் செய்து வைப்பதனைத் தவிர்க்கலாம். தளத்தின் இணைய முகவரி: https://skydrive.live.com/
2. மோஸி ஹோம் ப்ரீ(Mozy Home Free):
இலவசமாக 2ஜிபி வரை இத்தளத்தில் கோப்புகளை சேவ் செய்திடலாம். கூடுதலாக இடம் வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன் சிறப்பு, இந்த தளத்தில் உங்கள் கணக்கை செட் செய்து விட்டு குறிப்பிட்ட போல்டர்களை தேர்ந்தெடுத்து அமைத்தால் கோப்புகள் தாமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு சேவ் செய்யப்படும். இதன் தள முகவரி: http://mozy.com/home/free
3. ஐ ட்ரைவ்(IDrive):
இத்தளம் நமக்கு இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. குறிப்பிட்ட பெர்சனல் கணனி என்றில்லாமல், உங்களுடைய பெர்சனல் கணனி, மேக் கணனி, ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் உங்கள் சாதனம் எதிலிருந்தும் கோப்புகளை இந்த தளத்திற்குக் கொண்டு சென்று சேவ் செய்திடலாம்.
ஆனால் பயன்படுத்தும் மொத்த அளவு 5 ஜிபி ஆக இருக்க வேண்டும். இங்கு கோப்புகள் 256bit AES என்கிரிப்ஷன் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி சேவ் செய்யப்படுகின்றன. இதற்கான கீ உங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும்.
இந்த ட்ரைவில் கூட பதிந்து வைக்கப்பட மாட்டாது. எனவே முற்றிலும் பாதுகாப்பானது. இத்தளத்தில் கட்டணம் செலுத்தி இடம் பெற திட்டமிடுபவர்களுக்குப் பல்வேறு கட்டணத் திட்டங்கள் உள்ளன. இதன் தள முகவரி: http://www.idrive.com/index.html
4. சுகர் சிங்க்(SugarSync):
இந்த தளமும் இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில்(Android device, iPhone, iPad, BlackBerry, and Kindle Fire) இயங்கும் கணனியிலிருந்து கோப்புகளை மாற்றலாம்.
பெர்சனல் கணனியிலிருந்து மேக் கணனிக்கு கோப்புகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தளம். கோப்புகளை சுருக்கி பதிய இந்த தளம் TLS (SSL 3.3) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திகிறது.
எனவே நம் கோப்புகள் பாதுகாப்பாக பதியப்படுகின்றன. கட்டணம் செலுத்தி, கூடுதலாக இடம் பெற்றுக் கொள்ளலாம். இந்ததள முகவரி: https://www.sugarsync.com/?source=myss
7:40 AM | 0 comments | Read More

உரிமையை வென்றெடுக்க ஆர்ப்பரித்த டிஎன்டிஜே! அடங்கிய அதிகார வர்க்கம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் எத்தனை வகையான எதிர்ப்புகள் அடக்குமுறைகள் வந்தபோதும், அவற்றை எல்லாம் அல்லாஹ்வின் அருளால் தவிடு பொடியாக்கி இந்த சத்தியப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறது.
இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த ஜமாஅத்தில் இணைந்து வருவதையும் ஊர்கள்தோறும் மர்கஸ்கள் உருவாகி வருவதும்
நிகழ்கால நிதர்சன உண்மைகள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் (மீமிசல் புதூர்) இந்த சத்தியப்பிரச்சாரம் தற்போது அல்லாஹ்வின் அருளால் எழுச்சி பெற்று வருகிறது. இந்த ஊரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் எத்தனை ஏளனப்பேச்சுக்கள், எத்தனை அடக்குமுறைகள். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் நபிவழியின்படி தொழுத இரண்டு சகோதரர்களை கடுமையான முறையில் மிரட்டி மரத்தில் கட்டிவைத்து உதைப்போம் என்று கொக்கரித்தனர்.
அதன் பிறகு வரதட்சணை ஒரு சமூகத்தீமை என்பதை விளக்கி பிரச்சாரம் செய்ய காவல்துறையில் முறையான அனுமதிபெற்று பிரச்சாரத்தைத் தொடங்கும்போது ஊரே திரண்டுவந்து கடுமையான வசவு வார்த்தைகளைக்கூறி பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினர்.
ஏகத்துவ எதிரிகளின் கோபம் உச்சத்திற்குச் சென்று நைனாமுகம்மது என்ற சகோதரர் ஆபரேசன் செய்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் பள்ளிவாசலில் வைத்து கொலை வெறிதாக்குதலுக்குள்ளானார். வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத ஏகத்துவ எதிரிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து ஐக்கிய ஜமாஅத்தை ஒன்றுதிரட்டி இவர்களை ஒடுக்கவேண்டும் நசுக்கவேண்டும் என்று நம்மைப்பற்றி அந்த மக்களிடத்தில் தவறான தகவல்களைச் சொல்லி நமக்கு எதிராகத் திரட்டினர்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ஆர்.புதுப்பட்டினத்தில் எந்தவிதமான பகிரங்கமான பிரச்சாரமும் செய்யமுடியாத நிலையே இருந்தது.  
இந்த நிலையில் நமது சகோதரர்களால் 02-09-12 ஞாயிறு அன்று “சமுதாய ஒற்றுமை மார்க்கவிளக்கப் பொதுக்கூட்டம்” நடத்துவதற்கு டிஎன்டிஜே – ஆர்புதுப்பட்டிணம் கிளை சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கான வேலைகளில் நமது சகோதரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் ஏகத்துவ எதிரிகளும் குறிப்பாக ம.ம.கட்சியும், சுன்னத் ஜமாஅத்தினரைத் தூண்டி விட்டனர்.  
ம.ம.கட்சியின் சதியை அறிந்த ஊர்மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் சதியிலிருந்து விலகிக்கொண்டனர். காரணம் இவர்கள் வன்முறை குணம் கொண்டவர்கள் என்பதால். ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஜமாஅத் நிர்வாகிகள் மட்டும் அவர்களின் சூழ்சிக்குப் பலியாகி பொதுக்கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். காவல்துறையில் நமக்கு எதிராகப் புகார் செய்து தாசில்தார் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்லுமளவிற்கு அவர்களின் எதிர்ப்பு இருந்தது.
பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு யுக்திகளாக கையாண்டு வருகையில் ஒரு யுக்தியைக் கையாண்டனர். என்ன யுக்தி? அதுதான் கையெழுத்துவேட்டை. நாம் என்ன செய்தாலும் ஊர்மக்கள் தலையாட்டும் தலையாட்டி பொம்மைகள் என்ற இருமாப்பில் இருந்தனர் போலும். ஒவ்வொரு வீடாகச்சென்று அவர்கள் கையெழுத்துக் கேட்கும்போது ஒரு பெரியவர் ஓடு என்று விரட்டியடித்த சம்பவமும் நிகழ்ந்தது. பெரும்பாலான சகோதரர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கும்போதே இவர்கள் திருந்தி இருந்தால் இவர்கள் இன்று கேவலப்பட்டிருக்கமாட்டார்கள். பெரும்பாலான மக்கள் அவர்களாகவே முன்வந்து நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள்; நாங்கள் உங்களுக்கு கையெழுத்துப் போட்டுத்தருகின்றோம் என்று கூறி டிஎன்டிஜேவிற்கு கையெழுத்துப் போட்டுத்தந்தது இந்த ஜமாஅத்திற்கு அல்லாஹ் தந்த கண்ணியமாகும். அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையை உணர்ந்த ஐக்கிய ஜமாஅத்:
ஏற்கனவே நம்மைப்பற்றி பொய்யான காரணங்களைக் கூறி ஐக்கிய ஜமாஅத்தை நமக்கு எதிராகத் திரட்டிய இவர்கள் இம்முறையும் அந்த மக்களை நமக்கு எதிராகத் திரட்டி பொதுக்கூட்டத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் அந்த மக்களோ ம.ம.க. என்ற குள்ளநரிக்கூட்டம் பின்னால் இருப்பதை உணர்ந்துகொண்டு எங்களை ரவுடிகளாக பயன்படுத்த நினைக்கிறீர்களா என்று இவர்களை விரட்டியடித்துவிட்டனர்.
அருகில் உள்ள ஜமாஅத்களிடம் ஆதரவு கேட்டனர். அந்தோபரிதாபம்! அவர்களும் இவர்களை கைவிட்டுவிட்டனர். இவர்கள் கேவலத்துக்குமேல் கேவலப்பட்டுபோய் அசிங்கப்பட்டு நின்றனர்.
அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் போக்கிலேயே நடந்து கொண்டனர். எங்கள் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டால் தடையைமீறி நாங்கள் எங்கள் உரிமையை பெற்றுக்கொள்வோம் என்று அறிவித்தனர் நமது சகோதரர்கள்.
அதிகாரிகளை சந்திக்கும்போது அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்குவது நமது ஜமாஅத்தின் நடைமுறை. அந்த வகையில் நாமும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தாசில்தார் இராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பையன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ ஆகியோருக்கு திருக்குர்ஆன் வழங்கினோம். ஆனால் இன்ஸ்பெக்டரும் தாசில்தாரும் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்தி திருப்பிதந்தது அவர்கள் படித்த அதிகாரிகள்தானா? அல்லது பண்பற்ற காட்டுமிராண்டிகளா? என்று எண்ணுமளவிற்கு இருந்தது. அல்லது ஏகத்துவ எதிரிகள் கொடுத்த பணத்திற்கான விசுவாசமா? என்று தெரியவில்லை.
நாங்கள் தடையைமீறி எங்கள் உரிமையை வென்றெடுப்போம் என்று நாம் கூறும்போது இன்ஸ்பெக்டர் ஆணவத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு நீங்கள் தடையை மீறினால் நாங்கள் உங்களை கைது செய்து உள்ளே போடுவோம் என்று ஏகத்துவ எதிரிகளிடம் வாங்கியதற்கு விசுவாசம் காட்டினார். தாசில்தாரோ உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் பணம் இவர்களிடம் எந்த அளவிற்கு விளையாடியுள்ளது என்பதை தெளிவாக உணரமுடிகிறது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாமும் அங்கிருந்து வெளியேறி மாநிலத்தலைமையிடம் ஆலோசனை கேட்டு ஆர்.புதுப்பட்டினத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் காவல்துறையையும் வருவாய்த்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டத்தலைமை அறிவித்தது.
விளைவு என்ன? செய்தி காட்டுத் தீ போல் நம் கொள்கை சொந்தங்கள் மத்தியில் பரவுகிறது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் குழும இருக்கிறார்கள் என்ற தகவலை உளவுத்துறை மூலம் அறிந்த எஸ்.பி அவர்கள் நீங்கள் தெருமுனைக்கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி தருகின்றோம் என்று இறங்கிவரும் அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான அருள் இருந்ததை உணர முடிந்தது.
அதிகாரவர்க்கம் அடிபணிந்ததால் மாநிலத்தலைமையின் ஆலோசனையை ஏற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை கை விடுவது, தெருமுனைக்கூட்டத்தை நடத்துவது என்று நாம் முடிவுசெய்து கூட்டத்தை நடத்திக்கொண்டு சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருசில விஷமிகள் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் நமக்காக இலவச விளம்பரம் ஒன்றை செய்தனர். என்ன விளம்பரம் தெரியுமா? தெருமுனைப்பிரச்சாரம் என்றுகூறி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டுள்ளனர்; அனைவரும் திரண்டுவாருங்கள் என்பதுதான் அது.
கூட்டம் நடப்பதை அறியாத மக்களும் திரண்டுவந்து நம் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை கேட்டு இந்தக் கூட்டத்தைத்தான் இந்த கேடுகெட்டவர்கள் தடுக்க நினைத்தார்களா? என்று முனுமுனுத்ததை கேட்க முடிந்தது.
ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் தூரத்திலிருந்து வரும் கிளைகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது தெருமுனைக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது என்றும் கூடுதல் சிரமம் எடுத்துக்கொண்டு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டோம். திட்டமிட்டபடி அனைவரும் வந்திருந்தால் ஆர்.புதுப்பட்டினம் அல்லாஹ்வின் அருளால் அதிர்ந்திருக்கும்.
மாநாடுபோல் நடந்த இந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் வராதிருந்த எங்கள் கொள்கை சொந்தங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




7:18 AM | 0 comments | Read More

மிஹ்ராஜும் அதன் படிப்பினைகளும்

Written By GM.BASHA on Thursday, June 28, 2012 | 1:03 AM

 மிஹ்ராஜ் குறித்து மக்களிடம் இருக்கும் மூட நம்பிக்கைகளை களையும் விதமாக நமது கிளையில் மிஹ்ராஜும் அதன் படிப்பினைகளும் என்ற தலைப்பில் புத்தகம் விநியோகிக்கப்பட்டது .அல்ஹம்து லில்லாஹ்
1:03 AM | 0 comments | Read More

10-06-2012 ஞாயிறு அன்று நடைபெற்ற பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, June 11, 2012 | 11:16 PM

ஆ.புதுப்பட்டினத்தில் கடந்த 10-06-2012 ஞாயிறு அன்று சகோ.பிஸ்மில்லா கான் அவர்களின் இல்லத்தில் அன்றைய சஹாபிய பெண்களும் இன்றைய சமுதாய பெண்களும் என்ற தலைப்பில் பெண்களுக்கான சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் .சகோ.முஹம்மது அலி Misc அவர்கள் உரையாற்றினார்கள்

11:16 PM | 0 comments | Read More

புத்தக தாவா

Written By GM.BASHA on Wednesday, May 30, 2012 | 1:12 AM

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 29.05.2012 அன்று இஸ்லாமிய கொள்கை விளக்கம் என்ற ரூ 13 மதிப்புள்ள புத்தகம் 100 ம் இறைவனிடம் கையேந்துங்கள் என்ற புத்தகம் 50 ம் வழங்கப்பட்டது 











1:12 AM | 0 comments | Read More

தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத செயல்திட்டம்

Written By GM.BASHA on Tuesday, May 8, 2012 | 6:46 AM

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக   கடந்த 06 -05 -2012 ஞாயிறு மற்றும் 08-05-2012 செவ்வாய் அன்று "தினத்தந்தியை ஒழித்துக்கட்ட இரண்டு மாத செயல்திட்டம்" என்று உணர்வில் வெளியான செய்தியை 100 பிரதிகள்  ஜெராக்ஸ் எடுத்து விநியோகம் செய்யப்பட்டது  


6:46 AM | 0 comments | Read More

ஜாதி வாரி கணக்கெடுப்பைபற்றி விழிப்புணர்வு நோட்டீஸ்

Written By GM.BASHA on Saturday, May 5, 2012 | 6:15 AM

கடந்த  04/ /05 /2012 வெள்ளி கிழமை  அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் மத்திய அரசு அறிவித்துள்ள ஜாதி வாரி ,பொருளாதார  கணக்கெடுப்பைபற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டத்தின் சார்பாக அடிக்கப்பட்ட நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்.


6:15 AM | 0 comments | Read More

இஸ்லாத்தில் விதியை நம்புதல்

Written By GM.BASHA on Tuesday, May 1, 2012 | 11:49 PM

கடந்த  29 /04 /2012 ஞாயிறு அன்று  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையில் இஸ்லாத்தில் விதியை நம்புதல் என்ற தலைப்பில் சகோதரர் மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் சகோ.பிஸ்மில்லாஹ் கான் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கிளை சகோதரர்கள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்திருந்தனர் அல்ஹம்துலில்லாஹ்.

11:49 PM | 0 comments | Read More

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு- பெண்கள் பயான்

Written By GM.BASHA on Monday, April 16, 2012 | 7:55 AM


ஆர்.புதுப்பட்டினத்தில் நேற்று (15 -04 -2012) ஞாயிறு அன்று இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் பெண்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
7:55 AM | 0 comments | Read More

வெள்ளம் வருவதற்கு முன்னால் அணை

Written By GM.BASHA on Friday, April 13, 2012 | 5:18 AM

உடலில் என்ன பிரச்னை என்று தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் !

கண்கள்

கண்கள் உப்பியிருந்தால்...
என்ன வியாதி : சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

கண் இமைகளில் வலி

என்ன வியாதி : அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்


என்ன வியாதி : அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.


டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்.


கண்கள் உலர்ந்து போவது.


என்ன வியாதி: நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.


டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.

சருமம்
தோலில் தடிப்புகள் ஏற்படுதல்

என்ன வியாதி : இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.

டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.


முகம் வீக்கமாக இருப்பது


என்ன வியாதி: உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.


டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.


தோல் இளம் மஞ்சளாக மாறுவது

என்ன வியாதி: கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.


டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.


பாதம்
கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல்

என்ன வியாதி: சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.


டிப்ஸ்: வைட்டமின் ணி நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.


பாதம் மட்டும் மரத்துப் போதல்


என்ன வியாதி: நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள்


என்ன வியாதி : தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.


டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.


கைகள்

சிவந்த உள்ளங்கை
என்ன வியாதி: கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.


டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.


வெளுத்த நகங்கள்
என்ன வியாதி: இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!


ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.


டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.


விரல் முட்டிகளில் வலி


என்ன வியாதி: ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.


டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.


நகங்களில் குழி விழுதல்


என்ன வியாதி: சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.


டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
வாய்
ஈறுகளில் இரத்தம் வடிதல்.

என்ன வியாதி: பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.


டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.


சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல்
என்ன வியாதி: வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
 
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.


வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது.
என்ன வியாதி: உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.

டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்லபலன் தரும்.

Engr.Sulthan
5:18 AM | 0 comments | Read More

உங்கள் நாடித்துடிப்பைத் தெரிந்து கொள்வதன் மூலம் இதயத்தைக் காப்பாற்ற வழி இருக்கிறது.


1.
உங்கள் நாடித்துடிப்பை எங்கே உணர முடியும்?
மணிக்கட்டில், அதாவது கட்டை விரலுக்குச் சற்று கீழே. இதுவே மிக எளிதாக உங்கள் நாடித்துடிப்பை உணரக் கூடிய இடம்.

2.
ஏன் உங்கள் நாடித்துடிப்பை பரிசோதனை செய்ய வேண்டும்?
முக்கியமான காரணம் உங்கள் நாடித் துடிப்பின் எண்ணிக்கையை அறிந்து கொள்வது. இதன் மூலம் இதயம் சீராகச் சரியான எண்ணிக்கையிலும் துடிக்கிறதா என்று அறிந்து கொள்ள முடியும்.

3.
எப்போது நாடித்துடிப்பைப் பரிசோதனை செய்யலாம்?
நீங்கள் நல்ல ஓய்வில் இருக்கும்போது, காஃபின், நிக்கோடின் போன்ற ஊக்கிகளைப் பயன் படுத்தாது இருக்கும் போதும்.

4.
நாடித்துடிப்பின் இயல்பான அளவு என்ன?

ஒரு நிமிடத்திற்கு 60 முதல் 100 வரை. உங்கள் மன அழுத்தம், நீங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற மருந்துகள் போன்ற வற்றால் உங்கள் நாடித்துடிப்பு குறையவோ, கூடவோ செய்யலாம்.

5.
எப்பொழுது நாடித்துடிப்பு சம்பந்தமாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்?
நாம் ஒவ்வொருவரும் தனித்தனியான இயல்பு உள்ளவர்கள். ஆகவே பொது வான ஒரு வரையறையைச் சொல்வது கடினம். நாடித்துடிப்பு சிலருக்கு 100க்கு மேல் இருக்கலாம். சிலருக்கு 60க்குக் கீழ் இருக்கலாம். தொடர்ந்து 120க்கு மேல் இருந்தாலோ அல்லது தொடர்ந்து 40க்குக் கீழ் இருந்தாலோ நீங்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம்.
உங்கள் நாடித்துடிப்பு என்பது உங்கள் இதயம் துடிக்கிற அளவு. இதை இதயத் துடிப்பு அளவு (ஹார்ட் ரேட்) என்கிறோம். ஒரு நிமிடத்திற்கு உங்கள் இதயம் துடிக்கிற எண்ணிக்கையின் அளவு இது.
இதயத்துடிப்பு நபருக்கு நபர் வயது, மனநிலை, செய்கிற வேலையைப் பொறுத்து மாறுபடும். இதயத்துடிப்பு, நாடித்துடிப்பு இவற்றின் எண்ணிக்கை மாறுபடுவது, சீரற்ற தன்மை இரண்டுமே இருதய நோய் களாலோ அல்லது இருதயம் தொடர் புடைய வேறுசில பிரச்னைகளாலோ ஏற்படலாம். இதனை இதயத்தின் சீரற்ற தன்மை கார்டியாக் அரித் மியா என்று சொல்கிறோம். ஆகவே உங்கள் நாடித் துடிப்பை அறிந்து கொள்வது உங்கள் இதயத்தை அறிந்து கொள்வது ஆகும்.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலை
இந்நிலை மிகவும் ஆபத்தானது. ஆனால் சிகிச்சை மூலம் சீர் செய்யக் கூடிய நிலை. இந்த நிலையில் இதயத்தைச் செயல்படுத்துகிற மின் துடிப்புகள் ஒன்றுடன் ஒன்று சரியான முறையில் இணைந்து செயல்படாமல் இருக்கும். இதனால் இதயம் அதிக வேகத்திலோ அல்லது மிகக் குறைவான வேகத்திலோ அல்லது ஒழுங்கற்ற முறையிலோ துடிக்கக் கூடும்.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் வகைகள்
இதில் பல வகைகள் இருக்கின்றன. PSVT என்கிற ஒரு வகை பொதுவாக காணப் படுகிற வகை. இதில் இதயத்தின் அதிகத் துடிப்பு இதயத்தின் மேற்பகுதி அறை களில் இருந்து ஏற்படுகிறது. மற்றொரு வகை கிதி என்பது. இதில் இதயத்தின் மேல் பகுதி அறைகளில் இருந்து அதைவிட மிக அதிகமான மேலும் ஒழுங்கற்ற துடிப்புகள் ஏற்படும். க்ஷிஜி மற்றொரு வகை. இதில் அதிக துடிப்பு இதயத்தின் கீழ்ப் பகுதி அறைகளில் இருந்து ஏற்படும். இது உயிருக்கு ஆபத்தானது.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலைகளை ஏற்படுத்தும் பொதுவான காரணங்கள்
ரத்தக் கொதிப்பு, புகை பிடிப்பது, குடிப்பழக்கம், கட்டிகள் போன்றவை இதயத்துடிப்பின் சீரற்ற நிலை ஏற்படு வதற்கு மிகப் பரவலான காரணங்கள். தவிர இருதய ரத்தக் கு ழாய் நோய்கள், இருதய வால்வு பிரச்னைகள், இருதயத் தசைகளைத் தாக்கும் நோய்கள், இருதயத் துடிப்பு உருவாகும் இடத்தில் ஏற்படும் நோய்கள், இருதயத்தைச் சுற்றி இருக்கிற உறையில் ஏற்படும் அழற்சி சிளிறிஞிஎன்கிற நீண்ட நாள் மூச்சுக்குழல் அடைப்பு நோய்கள் போன்றவையும் இதயத் துடிப்பின் சீரற்ற நிலை உருவாகக் காரணங்களாக அமைகின்றன.
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையின் அறிகுறிகள்.
படபடப்பு, விட்டு விட்டு நாடித்துடிப்பு, தலைப் பாரம் மற்றும் லேசான தலை சுற்றல், தளர்ச்சி, மூச்சு வாங்குதல், மயக்கம் அல்லது மயக்கம் வருகிற நிலை ஆகியவை.
இதயத்துடிப்பு சீரற்ற நிலையின் தொடர் நிகழ்வுகள்
பெரும்பாலான இதயத்துடிப்பு சீரற்ற நிலை பொதுவாக எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் சில ஆபத்தான வை. உயிருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவை. இதயம் சீரற்றுத் துடிக்கும் போது போதுமான அளவு ரத்தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாமல் சிரமப்படும். போதுமான ரத்தம் கிடைக் காமல் மூளை, இதயம் மட்டுமல் லாமல் மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும். ஏற்றிரியல் சுப்ரலேஷன், ஏற்றிரியல் ஃப்ளட்டர் என்னும் இரண்டு வகை மிகப் பரவலாகக் காணப் படுகின்றன. இவை இதய மேற்புற அறைகளில் இதய ரத்தம் சேர்வதற்கு வழி செய்வதன் மூலம் ரத்த உறைவு ஏற்படுகிற நிலையை அதிகரிக்கின்றன. இதனால் பக்கவாதம் வருகிற பாதிப்பு அதிகரிக்கிறது.
மிக ஆபத்தான இதயத்துடிப்பு சீரற்ற நிலையைக்கூட வெற்றிகரமாக சிகிச்சை செய்து சரிப்படுத்த முடியும். இந்நிலை யில் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள் வழக்கமான ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இதயத்தின் இந்நிலையை முன்பே அறிந்து கொள்வது தான் மிக முக்கியமானது. உங்கள் நாடித் துடிப்பைத் தொடர்ந்து பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் உங்களுக்கு இந்தப் பிரச்னை உள்ளதா என்று தெரிந்து கொள்ள முடியும்.
இதயத்துடிப்பு சீரற்ற நிலைக்கான சிகிச்சை
இதற்கான சிகிச்சை வகைகளைப் பொறுத் தும், எவ்வளவு ஆபத்தானது என்பதைப் பொறுத்ததும் மாறுபடும். மருந்துகள் வாழ்க்கை முறை மாற்றம், மின் அலைக் கருவிகள் பயன்படுத்தும் சிகிச்சை போன்றவை உண்டு. மின் அலைக் கருவியைப் பயன் படுத்தி சிகிச்சை செய்வதால் வாழ்க்கை முழுவதும் மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்க்க முடியும்.
நாடித்துடிப்பை எப்படி பரிசோதிப்பது?

உங்கள் ஆள் காட்டி, இரண்டாவது, மூன்றாவது விரல்களின் நுனிகளை அடுத்த கையின் மணிக்கட்டின் கட்டை விரலின் அடிப்பாகத்திற்குச் சற்று கீழே வைக்கவும். விரல்களை லேசாக அழுத்தவும். நாடித் துடிப்பை இப்போது உணர முடியும்.
ஒரு கடிகாரத்தைப் பயன்படுத்தி 30 வினாடிகளுக்கு எத்தனை நாடித் துடிப்பு என்று கணக்கிடுங்கள். இதனை இரண் டால் பெருக்கவும். வருகிற விடையே உங்கள் நாடி த்துடிப்பு.
உங்கள் நாடித்துடிப்பு ஒழுங்கற்று இருந் தால் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கு கணக் கிடுங்கள். முப்பது விநாடிகளில் நிறுத்த வேண்டாம்.
நன்றி:பயனுள்ளதஹவல்.காம்
4:52 AM | 0 comments | Read More

நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா

Written By GM.BASHA on Tuesday, April 10, 2012 | 7:16 AM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் கந்தூரி விழாவை கண்டித்து நரஹிற்கு அழைத்து செல்லும் கந்தூரி விழா
என்ற தலைப்பின் நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.
பொதுவாக எல்லா ஊர்களிலும் யானைக்கு ,குரங்குக்கெல்லாம் தர்ஹா கட்டியுள்ளனர் ஆனால் எங்கள் ஊரில்மட்டும் தான் யாருமே இறந்து அடக்கம் செய்யப்படாமல் கற்பனைப்பாத்திரத்திர்க்கு தர்ஹா கட்டியுள்ளனர் இந்தபெருமை ஆர்.புதுப்பட்டினம் சுன்னத் ஜமாத்தை மட்டுமே சாரும் 
7:16 AM | 0 comments | Read More

நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் பெண்கள் பயன்

Written By GM.BASHA on Monday, April 2, 2012 | 11:53 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆ.புதுப்பட்டினம் கிளையின் 01 - 04 2012 ஞாயிறு அன்று நிரந்தர நரகை பெற்றுத்தரும் தர்ஹா வழிபாடு   என்ற தலைப்பில் சகோ.முஜாஹித் அவர்கள் உரையாற்றினார்கள் இதில் பெண்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். 

11:53 PM | 0 comments | Read More

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்

Written By GM.BASHA on Friday, March 30, 2012 | 7:28 AM





திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப்
பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.


இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.


குழந்தைகள் வளர்ச்சிக்கு: வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற பழம் இது. எலும்புகள் நன்றாக உறுதியாக வளரவும், பற்கள் வலுப்பெறவும் மற்றும் உடல் வளர்ச்சிக்கும் தேவையான சத்து கால்சியம்தான்.


கால்சியம் அதாவது சுண்ணாம்புச் சத்து இந்தப் பழத்தில் அதிகம் நிறைந்துள்ளது. இந்தப் பழத்தை இரவு உணவுக்குப் பிறகு 10 பழங்கள் வீதம் எடுத்து பாலில் போட்டு காய்ச்சி பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் குழந்தைகள் ஆரோக்கியமாகவும், பலமாகவும் இருப்பார்கள்.


இரத்த விருத்திக்கு: எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.


உடல் வலி குணமாக: பெருஞ்சீரகத்தோடு இப்பழத்தை சேர்த்து கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வலி அனைத்தும் தீரும். இந்தப் பழத்தை அவ்வப்போது ஒன்று இரண்டு சாப்பிட்டு வருதல் நல்லது.


கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.


மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு: மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும்.


குடல்புண் ஆற: அஜீரணக் கோளாறுகளால் குடலில் உள்ள வாய்வுக்கள் சீற்றம் ஏற்பட்டு குடல் சுவற்றை புண்ணாக்கி விடுகின்றன. இவர்கள் உலர்ந்த திராட்சைப் பழங்களை நீரில் கொதிக்கவைத்து கஷாயம் போல் செய்து அருந்தி வந்தால் குடல் புண்கள் குணமாகும்.


இதயத் துடிப்பு சீராக: சிலருக்கு இதயம் மிக வேகமாகத் துடிக்கும். இவர்கள் எப்போதும் ஒருவிதமான பதட்டத்துடனே காணப்படுவார்கள். இவர்கள் பாலில் இந்தப் பழங்களைப் போட்டு காய்ச்சி ஆறியபின் மறுபடியும் காய்ச்சி, பாலையும் பழத்தையும் சாப்பிட்டு வந்தால் இதயத் துடிப்பு சீராகும்.


சுகமான நித்திரைக்கு: தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு பாலில் நான்கு அல்லது 5 காய்ந்த திராட்சையைப் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பாலை அருந்தி வந்தால் சுகமான நித்திரை கிடைக்கும். தினமும் உலர்ந்த திராட்சையை சாப்பிட்டு நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்.


உலர்ந்த திராட்சை உண்போர் கவனத்திற்கு: சளி பிடித்திருக்கும் போதும், காச நோய் உள்ளவர்களும், வாத நோய் உள்ளவர்களும் திராட்சை அல்லது உலர்ந்த திராட்சைக் கொண்டு செய்யப்படும் மருந்துகளை தவிர்ப்பது நல்லது.


உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர். எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும்.


குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

7:28 AM | 0 comments | Read More