ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

அறியாத சில விசயங்களை தெரிந்து கொள்வோம்

Written By GM.BASHA on Tuesday, December 27, 2011 | 3:57 AM




இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.

6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.

* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.

* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.

* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.

* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.

* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.

* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.

* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.

* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.

* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.

* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.

*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.

*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.

*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.

*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.

*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.

*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.

*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.

*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

தகவல்:Engr.சுல்தான்
நன்றி:பயனுள்ளதகவல் 
3:57 AM | 0 comments | Read More

மருந்து வாங்கும் போது... எச்சரிக்கை!




மருந்து வாங்கும் போது... கீழ்க்கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.



1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!

தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்! 

இப்போது பெரும்பாலான மருத்துவர் கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.

கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!


2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த   Message  வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும். 

3. பில் இல்லா மருந்து மருந்தல்ல எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசர மானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.

4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின்  பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங் கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.

5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.

6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.

ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.

சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.

7. நீண்ட நாட்களுக்கு...

நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும். 

8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.

9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.

அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.

என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம். 

10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.

சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.

சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.

பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.
தகவல்:இணையத்திலிருந்து
Engr.சுல்தான்
நன்றி:பயனுள்ள தகவல் 
3:49 AM | 0 comments | Read More

செம்பருத்தி பூ - பலன் மற்றும் பயன்கள்

Written By GM.BASHA on Wednesday, December 14, 2011 | 5:47 AM



மருத்துவ குணமுள்ள செம்பருத்தி பூவின் நிறம் மற்றும் அழகில் மயங்காதவர்களே இருக்க முடியாது. ஏராளமான நிறங்கள்ஒற்றை மற்றும் அடுக்கு செம்பருத்தி என பல வகைகள் உள்ளன. கண்ணை கவரும் இதன் சிவப்பு நிறத்தால் தோட்டத்தில் மற்ற செடிகளுக்கு இடையில் பளீரென அழகாக தோற்றமளிக்கும். வீட்டில் அழகுக்காக வளர்க்கப்படும் இதில் பல்வேறு மருத்துவ குணங்களும் இருப்பது பலருக்கு தெரிவதில்லை.  செம்பருத்தி பூக்கள் மற்றும் இலைகள்,தலைமுடி வளர்ச்சிக்கும் தலையில் பொடுகு உள்ளிட்ட பிரச்னைகளுக்கும் தீர்வாகும். தேங்காய் எண்ணையில் இதன் காய்ந்த மொட்டுக்களை போட்டு ஊற வைத்து தொடர்ந்து தடவி வந்தால் கூந்தலின் கருமை நிறம் பாதுகாக்கப்படும். இங்கிலாந்தை சேர்ந்த தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்த தகவல்கள் இவை. இதை நேரடியாகவோ மறைமுகமாகவோ உட்கொண்டால் கிடைக்கும் பலன் மற்றும் பயன்களை பட்டியலிட்டுள்ளனர்.  அதன் விவரம்: 

உணவில் செம்பருத்தி பூவை சேர்த்துக் கொள்வதால் சோர்வு நீங்கும். இதன் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து டீயாக அருந்தினால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். தொடர்ந்து இதை பயன்படுத்தும் போது ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரையும். அதிகப்படியான கொழுப்பு சேர்வதை தடுக்கும். உடலுக்கு குளிர்ச்சி அளிக்க வல்லது. சருமத்தை பளபளப்பாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்கள் கொண்டது. இயற்கையின் கொடை என்பது மட்டுமின்றி பக்க விளைவுகளும் பாதிப்புகளும் அற்றது என்று இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
நன்றி:பயனுள்ளதகவல்.
5:47 AM | 0 comments | Read More

தமிழகத்தில் வரவிருக்குது கிறங்கடிக்கும் மின்கட்டணம்.

Written By GM.BASHA on Sunday, November 27, 2011 | 9:47 PM


மின் கட்டணத்தை உயர்த்தக் கோரும் தமிழக அரசின் (மின் வாரியத்தின்) மனுவை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஏற்றுக்கொண்டது.


வீடுகளுக்கு இதுவரை 7 'ஸ்லாப்புகளாக' பிரித்து மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதை இப்போது 4 'ஸ்லாப்புகளாக' குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது 100 யூனிட் வரை ஒரே 'ஸ்லாப்பாக' கணக்கிடப்பட உள்ளது.

இனிமேல் முதல் 100 யூனிட்களுக்கான கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.50 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 200 யூனிட்கள் வரை பயன்படுத்துவோர்க்கு ஒரு யூனிட்டுக்கான கட்டணம் ரூ. 2 ஆக உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

201 முதல் 500 யூனிட் வரை பயன்படுத்துவோர்க்கு யூனிட் கட்டணம் ரூ. 3.50 ஆக உயர்கிறது.

501 யூனிட் முதல் அதற்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 5.75 வீதம் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது.

வீடுகளுக்கு மின் வாரியம் பரிந்துரைத்துள்ள புதிய கட்டண விவரங்கள்.....

குறைந்தபட்ச யூனிட் கட்டணம் 2 மடங்காகிறது:

தற்போது வீடுகளுக்கு 2 மாதங்களுக்கு 50 யூனிட் வரை மின் கட்டணமாக யூனிட்டுக்கு 65 பைசா வசூலிக்கப்படுகிறது. 51வது யூனிட் முதல் 100 யூனிட் வரை 75 பைசா வசூலிக்கப்படுகிறது. இனி 100 யூனிட் வரை ஒரே கட்டணமாக யூனிட்டுக்கு ரூ.1.50 வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது கட்டணத்தை கிட்டத்தட்ட 2 மடங்குக்கும் அதிகமாக உயர்த்துமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

100 யூனிட் பயன்படுத்தினால் யூனிட் 2 ரூபாய்:

2 மாதங்களுக்கு 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு முதல் 50 யூனிட்டுகளுக்கு தற்போது 75 பைசா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை ரூ.2 ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 51 யூனிட் முதல் 100 யூனிட் வரை தற்போது 85 பைசாவாக இருக்கும் கட்டணத்தை ரூ.2 ஆகவும், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை தற்போது ரூ.1.50 ஆக இருக்கும் கட்டணத்தை 2 ரூபாயாகவும் உயர்த்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

200 யூனிட்டுக்கு மேல் போனால் யூனிட் ரூ. 3.50:

201 யூனிட் முதல் 500 யூனிட் வரை உபயோகப்படுத்துபவர்களிடம் வசூலிக்கப்படும் ஒரு யூனிட்டுக்கான ரூ.2.20 கட்டணத்தை ரூ.3.50 ஆக உயர்த்தவும்,

அதிகபட்சமாக யூனிட் விலை ரூ. 5.75 வரை!!!:

501 யூனிட் முதல் 600 யூனிட் வரை வசூலிக்கப்படும் ரூ1.80 கட்டணத்தை ரூ.5.75 ஆகவும், 601 யூனிட்டுக்கு மேல் வசூலிக்கப்படும் ரூ.4.05 கட்டணத்தை இனி ரூ.5.75 ஆகவும் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

வீடுகள் அல்லாத மற்ற இடங்களுக்கான மின் கட்டணம்:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.ரூ.4.50 (பழைய கட்டணம்-ரூ.4)

சினிமா தியேட்டர்கள், ஸ்டூடியோக்கள்- யூனிட்டுக்கு ரூ.6.80 (பழைய கட்டணம்-ரூ.4.50)

தனியார் கல்வி நிறுவனங்கள்- யூனிட்டுக்கு ரூ.8.50 (பழைய கட்டணம்-ரூ.5.50)

பொது வழிபாட்டு தலங்கள்-120 யூனிட் வரை ரூ.2.50 (பழைய கட்டணம்-ரூ.1.50), 120 யூனிட்டுக்கு மேல் ரூ.5 (பழைய கட்டணம்-ரூ.3)

குடிசை மற்றும் குறுந்தொழில்கள்- 500 யூனிட் வரை ரூ.3.50 (பழைய கட்டணம்-ரூ.1.80), 501 முதல் 1,500 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.70), 1,500 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.3.50)

விசைத்தறிகளுக்கு 500 யூனிட் வரை இலவசம்:

விசைத்தறிகள்- 500 யூனிட் வரை இலவசம். 501 யூனிட் முதல் 1000 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.1.25), 1,001 யூனிட் முதல் ,1500 யூனிட் வரை ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.25), 1501 யூனிட்டுக்கு மேல் ரூ.4 (பழைய கட்டணம்-ரூ.2.50)

தொழிற்சாலைகள்-1,500 யூனிட் வரை ரூ.5.50 (பழைய கட்டணம்-ரூ.4), 1,500 யூனிட்டுக்கு மேல் ரூ.5.50 (பழைய கட்டணம்-ரூ.5)

விவசாய மோட்டார் பம்ப் இணைப்புக்கு ஆண்டு கட்டணம்- ரூ.1,750 (பழைய கட்டணம்-ரூ.250)

வர்த்தக நிறுவனங்கள்- 100 யூனிட் வரை ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.4.30), 200 யூனிட் வரை ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.5.30), 201 யூனிட்டுக்கு மேல் ரூ.7 (பழைய கட்டணம்-ரூ.6.50)

தற்காலிக இணைப்புகள்- ரூ.10.50 (பழைய கட்டணம்-ரூ.10.50)

ரயில்வே மின் இணைப்பு- யூனிட்டுக்கு ரூ.5 (பழைய கட்டணம்-ரூ.4)

இவ்வாறு கட்டணங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

நன்றி:தட்ஸ்தமிழ் இணையம் 
9:47 PM | 0 comments | Read More

SP அவர்களுக்கு திருகுர்ஆன் வழங்கப்பட்டது

Written By GM.BASHA on Monday, November 21, 2011 | 8:40 PM

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவர்களுக்கு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக திருக்குர்ஆன் வழங்கப்பட்டது.இதை  மாவட்டத் தலைவர் நூற் முஹம்மது அவர்கள் வழங்கினார்.


8:40 PM | 0 comments | Read More

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது.

Written By GM.BASHA on Friday, November 18, 2011 | 1:52 AM

ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புத்ப்பட்டினம் கிளையில் இரண்டு மாடுகள் குர்பானி கொடுக்கப்பட்டது இதன் இறைச்சியை 130 குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

1:52 AM | 0 comments | Read More

மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம்

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து மேற்பனைக்காடு கிளையில் மாபெரும் இரததானமுகாம் 5.11.2011 அன்று நடைபெற்றது . இதற்க்கு மாவட்ட மருதுவரனிச் செயலாளர் சுல்தான் அவைர்கள் தலைமைதான்கினார்கள். முன்னிலை மாவட்ட செயலாளர் அரசை இப்ராகிம் , மாவட்ட துணை செயலாளர் ஷேக் தாவூத் ஒலி , ஜும்மா மஸ்ஜித் தலைவர் நைனா முஹமத அவர்களும் முன்னிலை வகித்தனர் . இதற்க்கு கிளை தலைவர் மூஸா  அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார் . கிளை செயலாளர் ஈஸா அவர்கள் நன்றி உரை நிகழ்த்தினார்கள் . இதில் 26 பேர் இரத்ததானம் செய்தனர். மற்றும் கிளை நிர்வாகிகள் இதில் சிறப்பான ஏற்பாடு செய்தனர் 




1:45 AM | 0 comments | Read More

பிரான்சில் கிருத்துவத்தை மிகைக்கும் இஸ்லாம்

Written By GM.BASHA on Monday, October 31, 2011 | 1:39 AM

பிரான்சில் சமீபகாலமாக முலீம்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது எந்த அளவிற்கு என்றால் தேவாலயங்கள் தொடர்ந்து மூடப்பட்டுக் கொண்டும்,பள்ளிவாசல்கள் அதிகரித்துக் கொண்டும் வருகிறது.கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் பிரான்சில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன , பள்ளிவாசல்களின் தேவைகள் அதிகமாக இருப்பதால் இவற்றின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று தலில் பாபக்கீ என்ற முஸ்லிம் தலைவர் கூறுகிறார்.

  ஐரோப்பா கண்டத்திலேயே பிரான்சில் தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள் சமீபத்தில் மட்டும் பிரான்சில் நூற்றி ஐம்பது பள்ளிவாசல்கள் கட்டப்பட்டுள்ளன ,அதேநேரத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இருபது தேவாலயங்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளது ,  இந்தகால கட்டத்தில் அறுபதுக்கும் மேற்பட்ட தேவாலயங்கள் மூடப்பட்டுள்ளன.மூடப்பட்ட இந்த தேவாலயங்கள் பள்ளிவாசல்களாக மாற்றப்படக்கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம் உள்ளன என்ற தகவலை பிரான்ஸ் கத்தோலிக் டெய்லி லாச்ரிக்ஸ் என்ற பத்திரிகை கூறுகிறது.
 மேலும் பிரான்சில் 60% மக்கள் பிறப்பால் கத்தோலிக்க கிருத்தவர்கள் ஆனால் அவர்களில் 4% மக்கள்தான் கிருத்துவத்தை பின்பற்றுகிறார்கள் .
அதேவேளை முஸ்லிம் மக்கள்தொகையில்(6 மில்லியன்  ) 70% பேர் இஸ்லாத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்களாகவும் 40%  மக்கள் தீவிரமாக பின்பற்றக்கூடியவர்களாகவும் உள்ளனர்.
  தற்போது பிரான்சில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ பிரார்த்தனையின் போது பள்ளிவாசல் பற்றாக்குறையின் காரணமாக மக்கள் வீதிகளில் தொழுவதாகவும் அதனால் வெள்ளிக்கிழமை மட்டும் பிரான்ஸ் முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுவதாகவும் அதனால் மூடப்பட்டுள்ள கத்தோலிக்க தேவாலயங்களை முஸ்லிம்களின் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கு திறந்துவிடுமாறு கோரிக்கைகள் எழுந்தவண்ணம் உள்ளன,இந்தகோரிக்கைகள் பிரான்ஸ் பாராளுமன்றம் வரை ஒலிக்க ஆரம்பித்துவிட்டது வரவிருக்கின்ற 2012 பாராளுமன்ற தேர்தலின்போது முக்கிய பிரச்சினையாக எழும் என்று நடுநிலையாளர்களால் எண்ணப்படுகிறது.
மரைன் லீ பெண் என்பவர் லியோன் நகரத்தில் ஒரு கூட்டத்தில் பேசும்போது  
முஸ்லிம்களின் இந்த எழுச்சி ஆயுதம் இல்லாமல் படைகள் இல்லாமல் ஒரு ஆக்கிரமிப்பு என்று வர்ணிக்கிறார் 
எது எப்படியோ பிரான்ஸ் முழுவதும் அல்லாஹு அக்பர் என்ற ஓரிறை நாமம் ஒலிப்பதை தற்போது கேட்கமுடிகிறது அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:ரியாஸ் 
ஆக்கம்:ஜிஎம்.                 
1:39 AM | 0 comments | Read More

புதுக்கோட்டை TNTJ விற்கு இரத்ததானத்திற்கான விருது

Written By GM.BASHA on Sunday, October 30, 2011 | 10:55 PM

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அரசு மருத்துவமணைக்கு இரத்ததான முகாம்  மூலியமாகவும், அவசர தேவைக்காகவும் இரத்தம் வழங்கியதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பாக 29.10.2011 அன்று  திருச்சி கலெக்ட்டர் அவர்கள் மூன்று கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள், அதை மாவட்ட மருத்துவரணி செயலாளர் A.R. சுல்தான் தேவ்பந்தி அவர்கள் பெற்றார்கள் . மூன்றில் ஒன்று புதுக்கோட்டைக்கும், இரண்டாவது அறந்தாங்கிக்கும், மூன்றாவது ரெத்தினகோட்டைக்கும் வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ் 




10:55 PM | 0 comments | Read More

தமிழகத்தின் தவ்ஹீத் கிராமம் ஓர் ஆய்வு

Written By GM.BASHA on Saturday, October 22, 2011 | 8:46 AM

8:46 AM | 0 comments | Read More

அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

Written By GM.BASHA on Saturday, October 15, 2011 | 12:20 AM

சிப்ஸ், பிஸ்கட், காபி மற்றும் பருப்பு வகைகளில் தயாரிக்கப்படும் நொறுக்கு தீனிகளில் உள்ள ரசாயனப்பொருள் புற்றுநோய் ஏற்படுத்தும்,'என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

சிப்ஸ்,பிஸ்கட்,வறுக்கப்பட்ட பிரட் போன்ற நொறுக்கு தீனிகள் மற்றும் காபி அருந்துவதால், உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள்  குறித்து  உலக சுகாதார நிறுவனமும் (டபிள்யுஎச்ஓ), ஐ.நா, சபையின் உணவுத் துறை வல்லுனர்களும் இணைந்து  விலங்குகளை வைத்து ஆய்வு நடத்தினர்.இதில் நொறுக்கு தீனிகளில் இருக்கும், அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருளால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பது தெரிய வந்தது.

இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: ஸ்டார்ச் கலந்த உணவுப் பொருட்களை, அதிக வெப்ப நிலையில் சமைக்கும்போது அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது. இந்த ரசாயனப் பொருள் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.குறிப்பாக, அந்த ரசாயனப் பொருள் மனிதர்கள் மற்றும் விலங்குகளில் நரம்பு தளர்ச்சி மற்றும் புற்றுநோயை உண்டாக்கும். இந்த ஆய்வுக்காகஉருளைக் கிழங்கை பல்வேறு  முறைகளை பயன்படுத்தி சமையல் செய்து பார்க்கப்பட்டது. இதில், உருளைக் கிழங்கை  நீரில் அவித்து எண்ணெயில் பொறிக்கும்போது, அதில் அக்ரிலமைடு என்ற ரசாயனப் பொருள் உருவாகிறது.இது புற்றுநோய் ஏற்படுத்தும் தன்மை கொண்டது. எனவே, அக்ரிலமைடு ரசாயனம் கலந்த உணவுப்பொருட்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாட்டு உணவு தரக் கட்டுப்பாட்டு மையங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. மேலும் மனிதர்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏறபடுத்தும் அக்ரிலமைடு ரசாயனப் பொருளை உணவுப் பொருட்களிலிருந்து குறைப்பது குறித்து, தீவிர ஆய்வு மேற்கொண்டு வருவதாக அவை தெரிவித்துள்ளன. கடந்த 2004ம் ஆண்டு ஆய்வு முடிவுகளின் படி, கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து மிகுந்த 100 உணவுப்பொருட்களை சாப்பிடுவதால், ஆஸ்திரேலியரின் உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 0.5 மைக்ரான் அளவு அக்ரிலமைடு உள்ளது தெரியவந்தது. உணவுப்பொருட்களில் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் இருப்பது கடந்த 2002 ம் ஆண்டு சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் முதன்முதலாக கண்டுபிடித்தனர்.ஆனால், அக்ரிலமைடு ரசாயனப்பொருள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் பட்டியலில் இந்த ஆண்டுதான் சேர்க்கப்பட்டது. இதுதவிர, மனிதர்களுக்கு புகைப்பிடிப்பதால் அக்ரிலமைடு ரசாயனப் பொருள் உடலில் சேர்வதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நன்றி:PT GROUP
12:20 AM | 0 comments | Read More

என்று திருந்தும் இந்த மானிட சமூகம்?

Written By GM.BASHA on Wednesday, October 5, 2011 | 8:57 AM

சேலம்: ஆயுத பூஜையையொட்டி சாலையில் உடைக்கப்பட்ட திருஷ்டிப் பூசணிக்காய் மீது ஏறிய மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த 12 வயது சிறுமி டிராக்டரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இன்று ஆயுத பூஜை தமிழகத்தில் கொண்டாடப்பட்டது. கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்களில் இதையொட்டி பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகளின் முடிவில் சாலையில், தெரு நடுவில் திருஷ்டிப் பூசணிக்காயை போட்டு உடைத்தனர்.

நடுத் தெருவல், சாலையில் பூசணிக்காய் உடைக்கக் கூடாது, அதனால் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படும், விபத்து ஏற்படும் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல்துறையினர் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அதையும் மீறி பூசணிக்காய் உடைப்பு விமரிசையாக களை கட்டியிருந்தது.

இந்த பூசணிக்காய்க்கு இன்று ஒரு சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சேலம் களரப்பேட்டை சாலையில் இன்று காலை தனது தந்தையுடன் 12 வயது சிறுமி மோட்டார் சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார். அப்போது சாலையில் உடைக்கப்பட்ட பூசணிக்காய் மீது மோட்டார்சைக்கிள் ஏறியுள்ளது. இதனால் வழுக்கிக் கொண்டு போன மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் தந்தையும், மகளும் கீழே விழுந்தனர்.

அப்போது பின்னால் வந்த டிராக்டர் சிறுமி மீதி ஏறி விட்டது. சக்ககரத்துக்குள் சிக்கி அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
தகவல்:நன்றி தட்ஸ் தமிழ் 
8:57 AM | 0 comments | Read More

மாவட்டப் பொதுக்குழு

Written By GM.BASHA on Sunday, October 2, 2011 | 8:11 AM

புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழு சகோதரர் பி.ஜே.அவர்களின் தலைமையில் 01-10-2011 சனி அன்று ஐஸ்வர்யா மஹாலில் காலை 10 மணிக்கு துவங்கியது.
ஆரம்பமாக சகோ.அதிரை உமர் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்,அதைத் தொடர்ந்து சகோ.சுல்தான் அவர்கள் ஆண்டறிக்கையை  வாசித்தார்கள்,அடுத்தபடியாக சகோ. ஹக்கீம் அவர்கள் வரவு செலவு கணக்கை வாசித்தவுடன் நிர்வாகிகளின் தேர்வு நடைபெற்றது.இதில்                             

மாவட்டத் தலைவராக சகோ.நூர் முஹம்மது 
செயலாளராக சகோ.இபுராஹீம் 
பொருளாளராக சகோ.ஹக்கீம் 
துணைத்தலைவராக சகோ.சேக்தாவூத் 
துணைச் செயலாளராக சகோ.ஜாகிர் உசேன் 
துணைச் செயலாளராக சகோ.சேக் ஒலி
துணைச் செயலாளராக சகோ.அப்துல் வஹாப் 

மருத்துவ அணி சகோ.சுல்தான் அவர்கள் 
மாணவர் அணி சகோ.சாதிக் 
தொண்டர் அணி சகோ.அமீர் அப்பாஸ் 
வர்த்தக அணி சகோ.ரிழ்மி 
ஆகியோ தேர்வு செய்யப்பட்டனர்.
இறுதியாக சகோ.பி. ஜே.அவர்களின் நிர்வாகிகளின் பண்பு என்ற உரையுடன் இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.






8:11 AM | 0 comments | Read More

சேதுபாவா சத்திர காவல்நிலைய முற்றுகை போராட்டம்!!!

Written By GM.BASHA on Saturday, October 1, 2011 | 9:29 AM

தஞ்சை மாவட்டம் புதுப்பட்டினத்தில்(அதிராம் பட்டினத்திற்கும் மல்லிபட்டினத்திர்க்கும் இடையில் இந்த ஊர் உள்ளது ) கடந்த சில தினக்களுக்கு முன் சங்பரிவாரக்குன்டர்கள் முஸ்லீம்கள் தொழுகை நடத்தும் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து பள்ளிவாசலை அடித்து நொரிக்கிவிட்டு சென்றனர்.முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலமான பள்ளிவாசலை அடித்து நொறிக்கிய காவிக் காடையர்களை கைது செய்ய மனமில்லாத சேதுபாவா சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராவீந்திர பூபதி பாதிக்கப்பட்ட முஸ்லீம்களின் மீதும் அப்பாவி இந்துக்களின் மீதும் வழக்குப்பதிவு செய்து  சிறையில் அடைத்த அயோக்கியத்தனத்தை கண்டித்து அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 30-09-2001 அன்று நடைபெற்றது இதில் ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர். 
அல்தபியின் கண்டன கணைகள்.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களில் ஒருபகுதியினர் 







பெண்கள் கூட்டடத்தின் ஒரு பகுதி 




தாக்குதலுக்குள்ளான பள்ளிவாசல் 




9:29 AM | 0 comments | Read More

வேதம் ஓதும் சாத்தான்

Written By GM.BASHA on Saturday, September 24, 2011 | 10:27 PM

போலி மத நல்லிணக்கம் பேசும் வேதம் ஓதும் சாத்தான் நரமாமிச மோடியின்போலி உண்ணாவிரதத்தைக்   கண்டித்து அம்மாபட்டினம் கிளையின் சார்பாக,ECR உள்ள பெரும்பாலான கிளைகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது.


10:27 PM | 0 comments | Read More

இணைகற்பிக்கும் இமாம்! மத்ஹபின்தீர்ப்பு

Written By GM.BASHA on Wednesday, September 21, 2011 | 4:48 AM

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று நாம் கடந்த பல ஆண்டுகளாகக் கூறி வருகிறோம். இதை ஏற்றுக் கொள்ளாத சிலர் இந்தத் தீர்ப்பின் காரணமாக முஸ்லிம் சமுதாயத்தை நாம் பிளவுபடுத்தி விட்டதாகக் கூறி வருகின்றனர்.
யாரும் கூறாத ஒன்றை நாம் கூறினாலும் ஆதாரத்துடன் தான் கூறியுள்ளோம் என்பதால் இந்த எதிர்ப்பை பொருட்படுத்தியதில்லை. இவர்களின் வாதத்தை பொய்யாக்கும் ஒரு பத்வா நம் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகில் வாழும் அனைத்து ஹனபி மத்ஹப்காரர்களின் பல்கலைக் கழகமாகக் கருதப்படும் உத்தரபிரதேசத்தில் தேவ்பந்த் நகரில் அமைந்துள்ள தாருல் உலூம் மதரஸாவும் இணைகற்பிக்கும் இமாமைப் பின்பற்றக் கூடாது என்று அளித்த பத்வாவே அது.
ஹனபி மத்ஹப்காரர்கள் தங்கள் பள்ளியில் உள்ள இமாம் இணை கற்பித்தால் அவரை உடனே இமாமத் பணியில் இருந்து நீக்கி விட்டு இணை கற்பிக்காத இமாமை நியமிப்பது அவர்களின் கடமையாகும். அதற்கு இயலாவிட்டால் அந்த இமாமைப் பின்பற்றுவதை அறவே தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இதோ அந்த பத்வா

 தகவல்:நன்றி ஆன்லைன் பி.ஜே.காம் 
4:48 AM | 0 comments | Read More

தவ்ஹீத்வாதிகளே!

Written By GM.BASHA on Saturday, September 17, 2011 | 12:16 PM


கே.எம். அப்துந் நாசிர்
முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக எங்கு நோக்கிலும் இணைவைப்புக் கொள்கைகள் ஆட்சி செய்த காலகட்டம். ஒரு கையில் இறைவேதம் மறுகையில் நபிபோதம் என்று பாடிக்கொண்டே நெருப்பை நோக்கிச் செல்லும் விட்டில் பூச்சிகளாய் இந்த இஸ்லாமிய சமுதாயம் நரகத்தை நோக்கி இழுத்துச் செல்லும் காரியங்களில் மூழ்கிக் கிடந்தது.
இறைவனின் பேரருளால் அல்லாஹ் தன்னுடைய ஏகத்துவ ஒளியை மக்களின் உள்ளங்களில் பாய்ச்சினான். ஐந்தும் பத்துமாய் இருந்தவர்கள் இலட்சக்கணக்கில் கொள்கையை நோக்கி அணிதிரண்டார்கள். தவ்ஹீதை நிலைநாட்ட தவ்ஹீத் சொந்தங்கள் வாரி வழங்கிய அற்பக் காசுகள் ஒன்று திரட்டப்பட்டு பெரும் பெரும் பள்ளிகள் உருவாக்கப்பட்டன.
ஒன்றுமே இல்லாமல் இருந்த போது இருந்த கொள்கைப் பிடிப்பு பெரும் பெரும் சொத்துக்களைப் பார்த்தவுடன் சிலரது உள்ளங்களை இன்றைக்கு சறுகச் செய்துள்ளது. சத்தியத்தைப் போதிக்க வேண்டும், இணை வைப்பை ஒழிக்க வேண்டும், அனாச்சாரங்களை அழிக்க வேண்டும் என்று பேசிய நாவுகளில் சில இன்று ஊர் வாதம் பேசத் துவங்கியுள்ளது. கொள்கையில் சறுகத் துவங்கியுள்ளது. கொள்கைவாதிகளை வீழ்த்திட கொடுமைவாதிகளோடும் கைகோர்க்கத் தயங்கவில்லை அவர்கள்.
இத்தகைய ஷைத்தானிய சக்திகளிடமிருந்து கொள்கைவாதிகளை அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். தவ்ஹீத் சொந்தங்கள் தங்களுக்கு மத்தியில் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை நம்முடைய தலைவர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக வழிகாட்டியுள்ளார்கள்.
சகோதரா! இது குருதி உறவல்ல. இவ்வுலகோடு முடிந்து போவதற்கு! மாறாக இது இறப்பிற்குப் பிறகும் தொடரும் கொள்கை உறவு. நம்மை பிளவுபடுத்தத் தான் எத்தனை எத்தனை ஷைத்தானின் சதிவலைகள், அவதூறுகள்,  விமர்சனங்கள். நம்மை பிளவு படுத்துவதன் மூலம் நம் கொள்கையை நசுக்கிவிடலாம் என நாசக்காரன் நினைக்கின்றான்.
ஆனால் நம்முடைய அழகிய முன்மாதிரி, நம் உயிரினும் மேலான நாயகத்தின் வழிகாட்டல்கள் நம்மோடு இருந்தால் நம்மை யார் தான் பிரித்திட இயலும். இதோ நாயகத்தின் வழிகாட்டல்களில் நம் உள்ளங்களை லயிக்கச் செய்வோம். அதில்தான் நம் எதிர்கால வெற்றி கனியவிருக்கிறது.
கொள்கை உறவு ஒரு கட்டிடம். சிறு மழை வெள்ளத்தில் சரியக்கூடிய கட்டிடமல்ல. புயலடித்தாலும் பூமியே நடுங்கினாலும் தளராத கட்டிடம்.  இதோ நம் கொள்கைத் தலைவர் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று வழிகாட்டுகிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர்கள்  ஒருவருக்கொருவர் (துணைநிற்கும் விஷயத்தில்) ஒரு கட்டடத்தைப் போன்றவர்கள் ஆவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு வலுவூட்டுகின்றது.
(இப்படிக் கூறும்போது) நபி (ஸல்) அவர்கள் தமது இரு கைவிரல்களை ஒன்றுடன் ஒன்றை கோத்துக் காட்டினார்கள்.  (நூல்: புகாரி 481)
நம் கொள்கை உறவு வெறும் பேச்சோடு, புன் சிரிப்போடு முடிந்து விடக்கூடியதல்ல. இது உயிரோடும். உள்ளத்தோடும் கலந்த உறவு. இதோ நம் வழிகாட்டி நன்குரைப்பதைப் பாருங்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம் காட்டு வதிலும் (உண்மையான) இறைநம்பிக்கை யாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உட-ன்) ஓர் உறுப்பு சுகவீனம டைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடல் முழுதும்) காய்ச்சலும் கண்டு விடுகிறது.
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ர-), நூல்: புகாரி 6011
நாம் ஓரிறையையும். இறைத்தூதர் நெறியையும் உண்மையில் பிசகற அறிந்த இறை நம்பிக்கையாளர்கள் என்றால், நம் கொள்கைச் சகோதரனை தன்னைப் போல் பாவிக்க வேண்டும் என நம் தலைவர் நமக்கு வழிகாட்டுவதைப் பாருங்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை (முழுமையான) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார்.
அறிவிப்பவர்:  அனஸ் (ரலி), நூல்: புகாரி 13
இந்த நேசம் என்பது காசுக்காகவோ, சுய லாபத்திற்காகவோ, உலக ஆதாயத்திற்காகவோ ஏற்பட்ட நேசமல்ல. மாறாக கொள்கைச் சகோதரன் என்பதால் ஏற்பட்ட நேசம். எங்கள் இணைவும், பிரிவும் ஏகத்துவத்திற்காகவே, ஏகனுக்காகவே என்பதைப் பறைசாற்றும் நேசம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச் சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார்.
அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார்.
அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5016
நம் கொள்கைக் கட்டிடம் சரிந்திடாமல் காப்பதற்காக அதன் இரும்புக் கம்பிகளாய், கான்கிரீட் கலவையாய், கற்பாறையாய் நமக்குள் மலர வேண்டியது நேசம். கடுகு சிறுத்தாலும் காரம் பெரிதென்பது போல் அற்பமென்றாலும் அன்பைத் தருமென்றால் அம்முறையே நம் சகோதரர்களின் சுவாசமாக வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்:  முஸ்லிம்
கொள்கையில் ஒன்றான நாம் ஓர் உடலென்றால் நம் விரலே நம் கண்ணைக் குத்தலாகுமா? நம் பற்களே நமது நாவை பதம் பார்க்கலாமா? கூடாது. நம் உடலிற்குள் எந்த விஷக்கிருமியும் நுழைந்து விடக்கூடாது. நாமே நம்மை அழித்துக் கொள்ளக்கூடாது. நம் கிளைகள் முறிந்து விடக்கூடாது. இதுதான் நம் ஏகத்துவ மார்க்கத்தில் தலையாயது. இதோ நம் நேசர் விடையளிப்பதைப் பாருங்கள்.
மக்கள், "இஸ்லாத்தில் சிறந்தது எது, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எவரது நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கின்றார்களோ அவரே (சிறந்தவர்; அவரது செயலே சிறந்தது)'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூமூசா (ரலி), நூல்: புகாரி
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும்; அவர்கள் இருவரும் போரிட்டுக் கொள்வது (கொலை செய்வது) இறை நிராகரிப்பாகும்''
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி 48
யானைக்கும் அடி சறுக்கும் என்பார்கள். அது போல் கொள்கைக் குடும்பத்திற்குள்ளும் சில சறுகல்கள் தோன்றக்கூடும். அதில் நாம் சறுகிவிடக் கூடாது. நம் ஆணிவேரான கொள்கை அறுந்து விடக்கூடாது. நம் பிடிமானம் நம் கொள்கை உறவே. அதில் நம் பிடி தளர்ந்திடலாமா? தீயில் எரித்தாலும் உயிர் பெறும் ஃபீனிக்ஸ் என்பார்கள். அது கற்பனையென்றாலும் நம் கொள்கையுறவில் அது உண்மையாகட்டும்.
நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
அல்குர்ஆன் 49:9, 10
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் தம் (கொள்கைச்) சகோதரரிடம் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவர்கள் இருவரும் சந்திக்கும் போது (இவரைவிட்டு) அவரும், (அவரை விட்டு) இவரும் முகத்தைத் திருப்பிக் கொள்வர். (இவ்வாறு செய்யலாகாது.) இவ்விருவரில் சிறந்தவர் யாரெனில், யார் முகமனை (சலாமை) முதலில் தொடங்குகிறாரோ அவர் தான்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி), நூல்: முஸ்லிம் 5003
நம் ஏகத்துவப் பூந்தோட்டத்தை நாசமாக்கும் எந்தக் களைகளும் முளைத்து விடக்கூடாது. களைகள் வளர்ந்தால் நம் மலர்த்தோட்டமே மணமற்றுப் போய்விடும். இறையச்சம் எனும் உரம் தான் களைகளை வேரறுக்கும் பூச்சிக் கொல்லியாகும். நம் கொள்கைத் தோட்டத்தின் செழிப்பிற்கு அடிப்படையாய் இறையச்சம் திகழ வேண்டும். இதோ இறுதித்தூதின் இறைச் செய்தி இயம்புவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோதரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். 
அல்குர்ஆன் 49:11, 12
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்து கொண்டிருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். "அல்லாஹ் உங்கள் உடல்களையோ உருவங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையே பார்க்கின்றான் இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற முஸ்லிம்களின் உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 5010
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்-ம் மற்றொரு முஸ்-மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவுமாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கை விட்டுவிடவுமாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபடுகின்றான்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-), நூல்: புகாரி 6951
நம் சகோதரன் நமக்கு அநீதி இழைத்தாலும் நாம் அவருக்கு உதவியே செய்ய வேண்டும். உதவி என்பது கொட்டக் கொட்ட குனிவதல்ல. மாறாக அநியாயக்காரனின் கரம் பிடித்து அவனை நம் வழிக்கு வரவழைப்பது தானே தவிர அவனைப் பகைப்பதல்ல. அது நம் நோக்கமுமல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு நீ உதவி செய்'' என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அக்கிரமத்திற்கு உள்ளானவனுக்கு நான் உதவி செய்வேன். (அது சரிதான்.) அக்கிரமக்காரனுக்கு எப்படி நான் உதவி செய்வேன்? கூறுங்கள்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவனை அக்கிரமம் செய்ய விடாமல் நீ தடுப்பாயாக! இதுவே நீ அக்கிரமக்காரனுக்குச் செய்யும் உதவியாகும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி) 
நூல்: புகாரி 6952
தியாகத் திருநாளின்போது உரையாற்றிய நம் இறுதித் தூதின் இறுதியுரையில் நாம் படிப்பினை பெறுவோம். இனிவரும் காலம் நம் வசந்த காலமாக வேண்டும். இனி தென்றல் தான் தவழ வேண்டும். நம் கொள்கைச் சகோதரர்கள் ஓர் உடலாக, ஒரு கூட்டுக் கிளிகளாக என்றும் வலம் வர சபதமேற்போம்.
(துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். "இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். அடுத்து "இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் "இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் "ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் "உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனிதமானவையாகும்'' என்று கூறிவிட்டு, "(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில் கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூபக்ரா (ரலி) 
நூல்: புகாரி ௬௭
தகவல்:நன்றி ஆன்லைன் பி.ஜே.காம்  
12:16 PM | 0 comments | Read More

சமரசம் இல்லாத சத்தியக்கொள்கைகள்

Written By GM.BASHA on Thursday, September 15, 2011 | 9:09 AM


9:09 AM | 0 comments | Read More

மனமேல் குடி காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Tuesday, September 6, 2011 | 7:24 AM

  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக, அம்மாபட்டினத்தைச் சார்ந்த TNTJ நிவாகிகளை தாக்கிய சுன்னத் ஜமாஅத் குண்டர்களை கைது செய்யக் கோரியும்,தாக்குதலுக்குள்ளான  TNTJ  நிர்வாகிகளின் மீதே பொய்வழக்குப் போட்ட மனமேல்குடி காவல்துறையை சார்ந்த ஆய்வாளர் கண்ணன்,துணைஆய்வாளர் மாரியப்பனைக் கண்டித்தும்,அவர்களை பணிநீக்கம் செய்யக்கோரியும் மேலும் TNTJ  நிர்வாகிகளின் மீது போடப்பட்ட பொய் வழக்கினை திரும்பப் பெறக்கோரியும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (06-09-2001) புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது  இதில் மாநிலத்தலைவர் சகோ.பீ.ஜெய்னுல் ஆபிதீன்,மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அல்தாபி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.ஆண்களும்,பெண்களும் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டு அநீதிக்கு எதிரான தங்களது கண்டனத்தப்பதிவு செய்தனர் அல்ஹம்துலில்லாஹ்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி 






 பெண்கள் கூட்டத்தின் ஒருபகுதி 

பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது 


  அல்தாபி அவர்கள் கண்டன உரையாற்றும் போது...



7:24 AM | 0 comments | Read More

கொள்கை ஒற்றுமையா? சமுதாய ஒற்றுமையா?

Written By GM.BASHA on Monday, September 5, 2011 | 11:26 AM


11:26 AM | 0 comments | Read More

இப்ராஹீம் நபியின் ஏகத்துவ விவாதங்கள


10:57 AM | 0 comments | Read More

மாமனிதர் நபிகள் நாயகம்


6:49 AM | 0 comments | Read More

மருத்துவ உதவி

Written By GM.BASHA on Sunday, September 4, 2011 | 4:48 AM

நமது கிளையின் சார்பாக சகோதரி நூர்அம்மாள் பீவி அவர்களுக்கு மருத்துவ உதவியாக கிளையின் சார்பில் ரூபாய் 1600  வழங்கப்பட்டது.இதை அந்த சகோதரிக்கு பிஸ்மில்லாஹ் கான் அவர்கள் வழங்கினார்.
4:48 AM | 0 comments | Read More