ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

Youtube யும் அமெரிக்க அயோக்கியர்களையும் கண்டித்து புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Written By GM.BASHA on Friday, September 28, 2012 | 12:18 AM

நபிகள் நாயகத்தை கொச்சைபடுத்தி எடுக்கப்பட்ட அமெரிக்க திரைப்படத்தை கண்டித்து புதுக்கோட்டையில் கடந்த 15-9-2012 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்தப் போராட்டத்தில், அமெரிக்க அரசையும், திரைப்படத்தை தயாரித்தவர்களையும் அதை இன்னமும் நீக்காமல் வைத்துள்ள யூடியூபையும் கண்டித்து கொளுத்தும் வெயிலில் கோஷங்களை எழுப்பினர்.


12:18 AM | 0 comments | Read More

நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்த அமெரிக்க நாய் திடீர் கைது

Written By GM.BASHA on Thursday, September 27, 2012 | 10:01 PM

 Anti Muslim Filmmaker Who Sparked Violent Arrested
லாஸ் ஏஞ்செலஸ்: நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தி படம் எடுத்து அதை யூடியூபில் வெளியிட்ட அமெரிக்கரான நகோலா பேசலி நகோலாவை அமெரிக்க போலீஸார் இத்தனை நாட்கள் விட்டு விட்டு இப்போது திடீரென கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் இஸ்லாமியர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், கொதிப்பையும் ஏற்படுத்தியது நகோலா இயக்கிய இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் என்ற திரைப்படம். இதில் நபிகள் நாயகத்தையும், இஸ்லாமியர்களையும் இழிவுபடுத்தும் வகையில் சித்தரித்திருந்தார் நகோலா. இதனால் இஸ்லாமியர்கள் கடும் கொந்தளிப்பையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர். லிபியாவில் அமெரிக்க தூதரகத்தைத் தூக்கி அங்கிருந்த அமெரிக்க தூதரைக் கொலை செய்தனர்.
உலக நாடுகள் முழுவதிலும் அமெரிக்காவுக்கு எதிராக பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் வெடித்தன. இதையடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா டிவி விளம்பரப் படம் மூ்லம் இஸ்லாமியர்களுக்கு விளக்கம் அளித்து வேண்டுகோள் விடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய நகோலாவை அமெரிக்க போலீஸார் திடீரென கைது செய்துள்ளனர். ஆனால் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்படவில்லை. கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்க கோர்ட் ஒன்று அவருக்கு ஒரு வழக்கில் 21 மாத சிறைத் தண்டனைக்கு விதித்திருந்தது. இருப்பினும் பின்னர் அது புரேபஷனாக அது மாற்றப்பட்டது - அதாவது காத்திருப்புக் காலம். இந்த காத்திருப்புக் காலத்தின்போது அவர் இணையதளத்தை தவறாகப் பயன்படுத்திய குற்றத்திற்காக தற்போது அவரைக் கைது செய்துள்ளனராம்.
காத்திருப்புக் காலத்தின்போது அவர் ஐந்து ஆண்டுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், கம்ப்யூட்டர், இணையதளம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. அதை மீறியதற்காகத்தான் தற்போது கைது செய்துள்ளனர். மற்றபடி இஸ்லாமை இழிவுபடுத்திய குற்றத்திற்காக அவரைக் கைது செய்யவில்லை அமெரிக்க காவல்துறை.
நகோலாவை கைது செய்த போலீஸார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.
இன்னொசன்ஸ் ஆப் முஸ்லீ்ம்ஸ் என்ற பெயரில் நகோலா இயக்கிய படத்தின் 14 நிமிட டிரெய்லர்தான் யூடியூபில் வெளியிடப்பட்டது. இதுதான் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டது. அதில் நபிகள் நாயகத்தை பெண் பித்தர் போலவும், மத மோசடியாளர் என்பதாகும், குழந்தைகளை பாலியல் ரீதியாக சீரழித்தார் என்றும் கூறியுள்ளார் நகோலா.
கடந்த ஜூலை மாதம் இந்த டிரெய்லர் யூடியூபில் வெளியிடரபப்பட்டது. ஆனால் செப்டம்பர் 11ம் தேதிக்குப் பிறகுதான் பிரச்சினை பெரிதானது.
நகோலா ஒரு கிறிஸ்தவர் ஆவார், இந்த படத்தை தயாரிக்க உதவியதும் ஒரு கிறிஸ்தவ அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி :தட்ஸ் தமிழ் 
10:01 PM | 0 comments | Read More

இந்த வார 17:05 உணர்வு இதழில்..

Written By GM.BASHA on Wednesday, September 26, 2012 | 9:14 AM

1.தினமணியின் திமிர் வாதம்
2.போராட்டங்களை முறைபடுத்துவோம் – உணர்வலைகள்
3.இன்னோசன்ஸ் ஆஃப் கிறிஸ்டியன்ஸ் – புதிய திரைப்படம்(?)
4.அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியது சரியா? – பதில்கள்
5.விநாயகர் சிலையை கரைக்க விடாமல் தடுத்த இந்துக்கள் – நாடும் நடப்பும்!
6.அயோக்கியனின் தலையை கொண்டு வருபவருக்கு 1 லட்சம் அமெரிக்க டாலர் பரிசு – பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் குலாம் அகமது அதிரடி அறிவிப்பு!
7.மோனிகா எழுதும் கிளிண்டனுடனான நாறிப்போன கதை…
8.பைபிளின் போதனையை நடைமுறைபடுத்திக் காட்டிய பாதிரியார்கள்! – குழந்தைகளிடம் சிறப்பு(?) ஜெபம் செய்து சாதனை!!
9.வன்முறைக்கு வித்திட்ட வசந்த் தொலைக்காட்சி: முளையிலேயே கிள்ளி எறிந்த வடசென்னை டிஎன்டிஜே!
10.இப்படியும் தாவா செய்யலாம்…
11.கருவியல் – பாகம் 14
12.M.Sc படிப்புகளுக்கான JAM தேர்வுக்கான தேதி அறிவிப்பு
13.இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் – கல்வி உதவி தொகை 2012 – 13
14.அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் : தமுமுக – டிஎன்டிஜே ஓர் ஒப்பீடு – வாசகர் மன்றம்
15.காஜியாபாத் ஆர்ப்பாட்டத்தில் 12 முஸ்லிம்கள் சுட்டுக்கொலை
16.நபிகளாரை இழிவு படுத்தியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் டிஎன்டிஜே சார்பாக நடைபெற்ற போராட்டங்கள்! (சென்ற இதழ் தொடர்ச்சி)
17.போலி சுன்னத் வல் ஜமாஅத்தினரின் அடாவடித்தனத்தை அடக்கிய டிஎன்டிஜே! – சிவகங்கை மாவட்டம் புதுவயலில் ஏகத்துவ எழுச்சி!!
18.”முஸ்லிம்களின் போராட்டம் போதும்” – கிழிந்து தொங்கியது இரட்டை நாக்கு மக்கா பள்ளி பேஷ் இமாமின் முகம்
19.பொய்சுன்னத் ஜமாஅத்தினரின் எதிர்ப்பை தகர்த்தெரிந்து நடைபெற்ற இரத்ததான முகாம்
20.பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு விசிய சங்பரிவாரம்
21.“இன்னோசன்ஸ் ஆப் முஸ்லிம்ஸ்” திரைப்படத்திற்கு பின்னால் உள்ள உண்மை
22.தமிழகத்திற்கான பிறை அறிவிப்பு
23.கூட்டுக்குர்பானி – தலைமயக அறிவிப்பு!
தற்போது பரப்பான விற்பனையில்…
உணர்வு இதழ் உங்கள் இல்லம் தேடி வர தொடர்பு கொள்ளவும்:
9080898880
30,அரண்மனைக்காரன் தெரு , மண்ணடி, சென்னை – 1
9:14 AM | 0 comments | Read More

இணையத்தில் கோப்புகளை சேவ் செய்திட

Written By GM.BASHA on Wednesday, September 12, 2012 | 7:40 AM

இணையத்தில் கோப்புகளை சேவ்
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாக கிடைத்தாலும், இணையத்தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் கோப்புகளை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து கோப்புகளையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான கோப்புகளையும் நம் பெர்சனல் கணனியின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம்.
ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் கோப்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும் போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணையத்தளங்களிலும் நம் கோப்புகளை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.
1. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ்(Microsoft Sky Drive):
இந்த தளத்தில் கோப்புகளை சேவ் செய்து வைத்திட 7 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. முதலில் 25 ஜிபி அளவு தரப்பட்டது. பின்னர், இது குறைக்கப்பட்டது. இருப்பினும் முன்பு பதிந்து கொண்டவர்களுக்குத் தொடர்ந்து 25 ஜிபி அனுமதிக்கப்படுகிறது.
நம் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள், வீடியோ கோப்புகளை அதிக எண்ணிக்கையில் சேவ் செய்து வைத்திட இது நல்ல தளம். இதில் ஒரு குறைபாடு உள்ளது. இதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை.
எனவே பெர்சனல் தகவல்கள் அடங்கிய தனி நபர் கோப்புகளை இதில் சேவ் செய்து வைப்பதனைத் தவிர்க்கலாம். தளத்தின் இணைய முகவரி: https://skydrive.live.com/
2. மோஸி ஹோம் ப்ரீ(Mozy Home Free):
இலவசமாக 2ஜிபி வரை இத்தளத்தில் கோப்புகளை சேவ் செய்திடலாம். கூடுதலாக இடம் வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும்.
இதன் சிறப்பு, இந்த தளத்தில் உங்கள் கணக்கை செட் செய்து விட்டு குறிப்பிட்ட போல்டர்களை தேர்ந்தெடுத்து அமைத்தால் கோப்புகள் தாமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு சேவ் செய்யப்படும். இதன் தள முகவரி: http://mozy.com/home/free
3. ஐ ட்ரைவ்(IDrive):
இத்தளம் நமக்கு இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. குறிப்பிட்ட பெர்சனல் கணனி என்றில்லாமல், உங்களுடைய பெர்சனல் கணனி, மேக் கணனி, ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் உங்கள் சாதனம் எதிலிருந்தும் கோப்புகளை இந்த தளத்திற்குக் கொண்டு சென்று சேவ் செய்திடலாம்.
ஆனால் பயன்படுத்தும் மொத்த அளவு 5 ஜிபி ஆக இருக்க வேண்டும். இங்கு கோப்புகள் 256bit AES என்கிரிப்ஷன் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி சேவ் செய்யப்படுகின்றன. இதற்கான கீ உங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும்.
இந்த ட்ரைவில் கூட பதிந்து வைக்கப்பட மாட்டாது. எனவே முற்றிலும் பாதுகாப்பானது. இத்தளத்தில் கட்டணம் செலுத்தி இடம் பெற திட்டமிடுபவர்களுக்குப் பல்வேறு கட்டணத் திட்டங்கள் உள்ளன. இதன் தள முகவரி: http://www.idrive.com/index.html
4. சுகர் சிங்க்(SugarSync):
இந்த தளமும் இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில்(Android device, iPhone, iPad, BlackBerry, and Kindle Fire) இயங்கும் கணனியிலிருந்து கோப்புகளை மாற்றலாம்.
பெர்சனல் கணனியிலிருந்து மேக் கணனிக்கு கோப்புகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தளம். கோப்புகளை சுருக்கி பதிய இந்த தளம் TLS (SSL 3.3) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திகிறது.
எனவே நம் கோப்புகள் பாதுகாப்பாக பதியப்படுகின்றன. கட்டணம் செலுத்தி, கூடுதலாக இடம் பெற்றுக் கொள்ளலாம். இந்ததள முகவரி: https://www.sugarsync.com/?source=myss
7:40 AM | 0 comments | Read More

உரிமையை வென்றெடுக்க ஆர்ப்பரித்த டிஎன்டிஜே! அடங்கிய அதிகார வர்க்கம்!!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் ஏகத்துவப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் எத்தனை வகையான எதிர்ப்புகள் அடக்குமுறைகள் வந்தபோதும், அவற்றை எல்லாம் அல்லாஹ்வின் அருளால் தவிடு பொடியாக்கி இந்த சத்தியப்பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து வருகிறது.
இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக இந்த ஜமாஅத்தில் இணைந்து வருவதையும் ஊர்கள்தோறும் மர்கஸ்கள் உருவாகி வருவதும்
நிகழ்கால நிதர்சன உண்மைகள். எல்லாப் புகழும் இறைவனுக்கே!
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் (மீமிசல் புதூர்) இந்த சத்தியப்பிரச்சாரம் தற்போது அல்லாஹ்வின் அருளால் எழுச்சி பெற்று வருகிறது. இந்த ஊரில் பிரச்சாரத்தைத் தொடங்கிய காலத்தில் எத்தனை ஏளனப்பேச்சுக்கள், எத்தனை அடக்குமுறைகள். கடந்த சில ஆண்டுகளுக்குமுன் பள்ளியில் நபிவழியின்படி தொழுத இரண்டு சகோதரர்களை கடுமையான முறையில் மிரட்டி மரத்தில் கட்டிவைத்து உதைப்போம் என்று கொக்கரித்தனர்.
அதன் பிறகு வரதட்சணை ஒரு சமூகத்தீமை என்பதை விளக்கி பிரச்சாரம் செய்ய காவல்துறையில் முறையான அனுமதிபெற்று பிரச்சாரத்தைத் தொடங்கும்போது ஊரே திரண்டுவந்து கடுமையான வசவு வார்த்தைகளைக்கூறி பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினர்.
ஏகத்துவ எதிரிகளின் கோபம் உச்சத்திற்குச் சென்று நைனாமுகம்மது என்ற சகோதரர் ஆபரேசன் செய்து மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த நிலையில் பள்ளிவாசலில் வைத்து கொலை வெறிதாக்குதலுக்குள்ளானார். வழக்கும் பதியப்பட்டுள்ளது.
அதன் பிறகும் ஆத்திரம் அடங்காத ஏகத்துவ எதிரிகள் லட்சக்கணக்கில் செலவு செய்து ஐக்கிய ஜமாஅத்தை ஒன்றுதிரட்டி இவர்களை ஒடுக்கவேண்டும் நசுக்கவேண்டும் என்று நம்மைப்பற்றி அந்த மக்களிடத்தில் தவறான தகவல்களைச் சொல்லி நமக்கு எதிராகத் திரட்டினர்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு ஆர்.புதுப்பட்டினத்தில் எந்தவிதமான பகிரங்கமான பிரச்சாரமும் செய்யமுடியாத நிலையே இருந்தது.  
இந்த நிலையில் நமது சகோதரர்களால் 02-09-12 ஞாயிறு அன்று “சமுதாய ஒற்றுமை மார்க்கவிளக்கப் பொதுக்கூட்டம்” நடத்துவதற்கு டிஎன்டிஜே – ஆர்புதுப்பட்டிணம் கிளை சார்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அதில் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கான வேலைகளில் நமது சகோதரர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில் ஏகத்துவ எதிரிகளும் குறிப்பாக ம.ம.கட்சியும், சுன்னத் ஜமாஅத்தினரைத் தூண்டி விட்டனர்.  
ம.ம.கட்சியின் சதியை அறிந்த ஊர்மக்களில் பெரும்பாலானோர் அவர்களின் சதியிலிருந்து விலகிக்கொண்டனர். காரணம் இவர்கள் வன்முறை குணம் கொண்டவர்கள் என்பதால். ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய ஜமாஅத் நிர்வாகிகள் மட்டும் அவர்களின் சூழ்சிக்குப் பலியாகி பொதுக்கூட்டத்தை நடத்தவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தனர். காவல்துறையில் நமக்கு எதிராகப் புகார் செய்து தாசில்தார் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு செல்லுமளவிற்கு அவர்களின் எதிர்ப்பு இருந்தது.
பொதுக்கூட்டத்தை தடுப்பதற்கு அவர்கள் ஒவ்வொரு யுக்திகளாக கையாண்டு வருகையில் ஒரு யுக்தியைக் கையாண்டனர். என்ன யுக்தி? அதுதான் கையெழுத்துவேட்டை. நாம் என்ன செய்தாலும் ஊர்மக்கள் தலையாட்டும் தலையாட்டி பொம்மைகள் என்ற இருமாப்பில் இருந்தனர் போலும். ஒவ்வொரு வீடாகச்சென்று அவர்கள் கையெழுத்துக் கேட்கும்போது ஒரு பெரியவர் ஓடு என்று விரட்டியடித்த சம்பவமும் நிகழ்ந்தது. பெரும்பாலான சகோதரர்கள் இவர்களை வெறுத்து ஒதுக்கும்போதே இவர்கள் திருந்தி இருந்தால் இவர்கள் இன்று கேவலப்பட்டிருக்கமாட்டார்கள். பெரும்பாலான மக்கள் அவர்களாகவே முன்வந்து நீங்கள் கூட்டத்தை நடத்துங்கள்; நாங்கள் உங்களுக்கு கையெழுத்துப் போட்டுத்தருகின்றோம் என்று கூறி டிஎன்டிஜேவிற்கு கையெழுத்துப் போட்டுத்தந்தது இந்த ஜமாஅத்திற்கு அல்லாஹ் தந்த கண்ணியமாகும். அல்ஹம்துலில்லாஹ்.
உண்மையை உணர்ந்த ஐக்கிய ஜமாஅத்:
ஏற்கனவே நம்மைப்பற்றி பொய்யான காரணங்களைக் கூறி ஐக்கிய ஜமாஅத்தை நமக்கு எதிராகத் திரட்டிய இவர்கள் இம்முறையும் அந்த மக்களை நமக்கு எதிராகத் திரட்டி பொதுக்கூட்டத்தை நிறுத்திவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் அந்த மக்களோ ம.ம.க. என்ற குள்ளநரிக்கூட்டம் பின்னால் இருப்பதை உணர்ந்துகொண்டு எங்களை ரவுடிகளாக பயன்படுத்த நினைக்கிறீர்களா என்று இவர்களை விரட்டியடித்துவிட்டனர்.
அருகில் உள்ள ஜமாஅத்களிடம் ஆதரவு கேட்டனர். அந்தோபரிதாபம்! அவர்களும் இவர்களை கைவிட்டுவிட்டனர். இவர்கள் கேவலத்துக்குமேல் கேவலப்பட்டுபோய் அசிங்கப்பட்டு நின்றனர்.
அமைதிப்பேச்சுவார்த்தை என்ற பெயரில் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினர் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் போக்கிலேயே நடந்து கொண்டனர். எங்கள் ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டால் தடையைமீறி நாங்கள் எங்கள் உரிமையை பெற்றுக்கொள்வோம் என்று அறிவித்தனர் நமது சகோதரர்கள்.
அதிகாரிகளை சந்திக்கும்போது அவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்குவது நமது ஜமாஅத்தின் நடைமுறை. அந்த வகையில் நாமும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தாசில்தார் இராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பையன், ஆர்.ஐ., வி.ஏ.ஓ ஆகியோருக்கு திருக்குர்ஆன் வழங்கினோம். ஆனால் இன்ஸ்பெக்டரும் தாசில்தாரும் திருக்குர்ஆனை உதாசீனப்படுத்தி திருப்பிதந்தது அவர்கள் படித்த அதிகாரிகள்தானா? அல்லது பண்பற்ற காட்டுமிராண்டிகளா? என்று எண்ணுமளவிற்கு இருந்தது. அல்லது ஏகத்துவ எதிரிகள் கொடுத்த பணத்திற்கான விசுவாசமா? என்று தெரியவில்லை.
நாங்கள் தடையைமீறி எங்கள் உரிமையை வென்றெடுப்போம் என்று நாம் கூறும்போது இன்ஸ்பெக்டர் ஆணவத்தின் உச்சத்தில் இருந்துகொண்டு நீங்கள் தடையை மீறினால் நாங்கள் உங்களை கைது செய்து உள்ளே போடுவோம் என்று ஏகத்துவ எதிரிகளிடம் வாங்கியதற்கு விசுவாசம் காட்டினார். தாசில்தாரோ உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறார். அப்படி என்றால் பணம் இவர்களிடம் எந்த அளவிற்கு விளையாடியுள்ளது என்பதை தெளிவாக உணரமுடிகிறது. உங்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு நாமும் அங்கிருந்து வெளியேறி மாநிலத்தலைமையிடம் ஆலோசனை கேட்டு ஆர்.புதுப்பட்டினத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் காவல்துறையையும் வருவாய்த்துறையையும் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்டத்தலைமை அறிவித்தது.
விளைவு என்ன? செய்தி காட்டுத் தீ போல் நம் கொள்கை சொந்தங்கள் மத்தியில் பரவுகிறது. மக்கள் பல்லாயிரக்கணக்கில் குழும இருக்கிறார்கள் என்ற தகவலை உளவுத்துறை மூலம் அறிந்த எஸ்.பி அவர்கள் நீங்கள் தெருமுனைக்கூட்டம் நடத்த நாங்கள் அனுமதி தருகின்றோம் என்று இறங்கிவரும் அளவிற்கு அல்லாஹ்வின் மகத்தான அருள் இருந்ததை உணர முடிந்தது.
அதிகாரவர்க்கம் அடிபணிந்ததால் மாநிலத்தலைமையின் ஆலோசனையை ஏற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை கை விடுவது, தெருமுனைக்கூட்டத்தை நடத்துவது என்று நாம் முடிவுசெய்து கூட்டத்தை நடத்திக்கொண்டு சகோ. ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒருசில விஷமிகள் பள்ளிவாசல் ஒலிபெருக்கியில் நமக்காக இலவச விளம்பரம் ஒன்றை செய்தனர். என்ன விளம்பரம் தெரியுமா? தெருமுனைப்பிரச்சாரம் என்றுகூறி மாபெரும் பொதுக்கூட்டம் நடத்திக்கொண்டுள்ளனர்; அனைவரும் திரண்டுவாருங்கள் என்பதுதான் அது.
கூட்டம் நடப்பதை அறியாத மக்களும் திரண்டுவந்து நம் கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்களை கேட்டு இந்தக் கூட்டத்தைத்தான் இந்த கேடுகெட்டவர்கள் தடுக்க நினைத்தார்களா? என்று முனுமுனுத்ததை கேட்க முடிந்தது.
ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் தூரத்திலிருந்து வரும் கிளைகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது தெருமுனைக்கூட்டத்திற்கு அனுமதி கிடைத்துவிட்டது என்றும் கூடுதல் சிரமம் எடுத்துக்கொண்டு வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டோம். திட்டமிட்டபடி அனைவரும் வந்திருந்தால் ஆர்.புதுப்பட்டினம் அல்லாஹ்வின் அருளால் அதிர்ந்திருக்கும்.
மாநாடுபோல் நடந்த இந்த தெருமுனைக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கும் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டதால் வராதிருந்த எங்கள் கொள்கை சொந்தங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.




7:18 AM | 0 comments | Read More