ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

அரைவேக்காட்டிற்கு பதிலடி

Written By GM.BASHA on Friday, March 29, 2013 | 9:31 PM

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டைமாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பாக  கடந்த சில வாரங்களாக ஜும்ஆ வில் தவ்ஹீத் ஜமாஅத் தை பற்றி சகட்டு மேனிக்கு ஆதாரமில்லாமல் விமர்சித்து வந்த போலி மத்ஹபு வாதிக்கு பதிலடியாக சஹாபாக்களை பின்பற்றலாமா?என்ற பிரசுரம் ஊரில் உள்ள அனைத்து மக்களுக்கும் விநியோகிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.



அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சஹாபாக்களை பின்பற்றலாமா?

இஸ்லாமிய மார்க்கம் தெளிந்த நீரோடை போன்று தெளிவான மார்க்கம் இதில் எந்த குழப்பத்திற்கும்  இடமில்லை, அல்லாஹ் திருமறையில் குர் ஆன்,ஹதீஸை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளான். ஆனால் போலி மத்ஹப் இமாமோ சஹாபாக்களை பின்பற்றவேண்டும் என்றும் அவ்வாறு  சஹாபாக்களை பின் பற்றாதவர்கள் யூதர்கள்,காபிர்கள் என்றும்  நம்மீது உள்ள வெறுப்பின் காரணமாக தனது அரிப்பை ஜூம்ஆ  மேடையில் சொரிந்து தீர்த்து கொண்டுள்ளார். நாம் ஏற்கனவே குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் ஆதாரத்தோடு விளக்கியுள்ளோம் "யார் யூதர்கள்" என்று, யூதராக  இருப்பவர்  முஸ்லிமாக இருக்க முடியாது இது உலகறிந்த உண்மை. இனி விசயத்திற்கு வருவோம்.

முஸ்லீம்கள் வஹீயை (இறைச் செய்தியை ) மட்டுமேஆதாரமாகக் கொள்ளவேண்டும் என்பதையும், வஹீ இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் சொந்த அபிப்ராயமாகக் கூறியதை,செய்ததைக் கூட மார்க்கமாக செய்ய வேண்டியதில்லை என்பதை விளங்காத காரணத்தினால் சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறி இஸ்லாத்தின் மூல ஆதாரத்தை மாற்றி அமைக்கின்றனர். வஹீ  இல்லாமல் தேனை நபி(ஸல்அவர்கள் ஹராமாக்கியதையும்,வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாக கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல் )அவர்கள் தமது சொல்,செயலைக்கூட  வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும்,வஹீயை பெறாத சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று  மத்ஹபு ஜமாஅத் இமாம் பலஹீனமான செய்தியை கொண்டும், குர் ஆனுக்கு தவறான விளக்கம் வைத்தும் கூறுவது இவரது அறியாமையை படம் பிடித்து காட்டுகிறது.

 
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை ) பொருப்பாளராக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்! (அல்குர்ஆன் 7:3)

என்னிடமிருந்து உங்களுக்கு நேர் வழி வரும் போது எனது நேர் வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை.அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.(அல்குர் ஆன் 2:38)

(
முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!   (அல்குர் ஆன் 6:106)

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும்,அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்;கட்டுப்பட்டோம்"என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும்.அவர்களே வெற்றிபெற்றோர்.(அல்குர் ஆன் 24:51)

அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரன்படாதீர்கள் (அவ்வாறு செய்தால் ) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன்  அல்லாஹ் இருக்கிறான்.(அல்குர் ஆன் 8:46)

இதுவே எனது நேரான வழி.எனவே இதனையே பின்பற்றுங்கள்!பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை,அவனது (ஒரு )வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும்.நீங்கள் (இறைவனை ) அஞ்சுவதற்காக  இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.(அல்குர் ஆன் 6:153)

அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது  நம்பிக்கை கொண்ட ஆணுக்கும்,பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை.அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு  விட்டார்.(அல்குர் ஆன் 33:36)

எனக்கே அஞ்சுங்கள்!இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன்.எனது அருளை உங்களுக்கு முழுமை படுத்திவிட்டேன் இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக்கொண்டேன்.(அல்குர் ஆன் 5:3)

இந்தவசனங்களும் இன்னும் சில வசனங்களும் இறைச் செய்தியை,குர் ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத்  தெளிவாக  எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது சஹாபாக்களை மதிக்காத,திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகின்றனர் இந்த போலி மத்ஹபு வாதிகள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள்,நம்மைவிட ஈமானில் சிறந்தவர்கள்  என்றெல்லாம் வரக் கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை.இதற்கு ஏராளமான குர் ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் சான்றாக உள்ளன.
உதாரனத்திற்கு ஒன்றை மட்டும் பார்க்கலாம்,

 
என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியலவைக்கூட  அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:அபூசயீத் அல்குத்ரீ (ரலி ) நூல்:புகாரி 3673.

உங்களில் (மக்கா )வெற்றிக்கு முன் (நல்வழியில் )செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும் )சமமாக மாட்டார்கள்.அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களைவிட மகத்தான பதவியுடையவர்கள் .(அல்குர் ஆன் 57:10)

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதும் மறுத்ததில்லை.நபித்தோழர்களின் சிறப்புகளை சீண்டிப்பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்திலே ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையை தவ்ஹீத் ஜமாஅத் கிழிக்காமல் விட்டதில்லை.
அதேசமயம் இத்தகைய சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாக கருதும் எந்த வொரு செயல்பாட்டையும் ஏற்றுக்கொள்ளமுடியாது.குர்ஆன் ,ஹதீஸ் ஆகிய இரண்டும்தான் மார்க்கத்தின் ஆதாரங்கள்.சஹாபாக்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது அவர்களிடமும் தவறுகள் ஏற்படத்தான் செய்யும்.
இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை

#
சில நபித்தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர் ஆன் ,ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

#
பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்கு தெரியாமல் இருந்துள்ளன.

#
குர் ஆன்,ஹதீஸில் இல்லாத சிலவிசயங்களை  அவர்களாக உருவாக்கினார்கள்.
என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.எனவேதான் குர் ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது  என்கிறோம்.

தமத்துஃ  ஹஜ்
தமத்துஃ  ஹஜ் என்ற ஒரு ஹஜ் முறை இருப்பதை இன்றைக்குகூட நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையுடையவர்கள் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்.ஆனால் உமர் (ரலி ),உஸ்மான் (ரலி )ஆகிய மிகப்பெரிய நபித்தோழர்களுக்கு இது தெரியாமல் இருந்துள்ளது இது ஏன்? பார்க்க நூல்: திர்மிதி (753), புகாரி (1563). மத்ஹபு வாதி இமாம் பதிலளிக்கவேண்டும்.

ஒருவர் உடலுறவு கொண்டு விட்டு இந்திரியம் வெளியாகாவிட்டால் அவருடைய சட்டம் என்ன? என்று நான் உஸ்மான் (ரலி )இடம் கேட்டேன் அதற்கு,அவர் தமது ஆண்குறியை கழுவி விட்டு,தொழுகைக்கு உழுச்செய்வது போன்று செய்ய வேண்டும்.இதை நான் நபி (ஸல் )அவர்களிடமிருந்து கேட்டேன்  என உஸ்மான் (ரலி ) கூறினார்கள்.அறிவிப்பவர்:ஸைத் பின் காலித்(ரலி )  நூல்:புகாரி 179,292.

கடமையான குளிப்பு விசயத்தில் இதுதான் மார்க்க சட்டமா? மத்ஹபு வாதி இமாம் மழுப்பாமல் பதிலளிக்க வேண்டும்.
தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து விட்டுத் தொழலாம் என்பது தெரிந்திருந்தும் அப்துல்லாஹ் இப்னு மஸ் ஊத் (ரலி )அவர்கள் தயம்மும் செய்து தொழக்கூடாது என்று கூறுகின்றார்கள்.பார்க்க புஹாரி 346,347.
இன்னும் ஏராளமான விஷயங்கள் உள்ளன விரிவை அஞ்சி சுருக்கமாக இத்துடன் முடித்து கொள்கிறோம்.
சுன்னத் ஜமாஅத் என்ற போர்வையில் ஒழிந்து கொண்டு இந்த போலி ஆலிம்கள் ஷியாக் கொள்கையை  மக்களுக்கு போதித்து மக்களை எவ்வாறெல்லாம் வழி கெடுக்கின்றனர் என்பதை இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களின் பார்க்கலாம்

                                                           
மார்க்கம் மற்றும் சமுதாயப்பணிகளில்
                                                                       
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
                                             
ஆர்.புதுப்பட்டினம் (கிளை ) புதுக்கோட்டை மாவட்டம்
                                                    
தொடர்புக்கு:9524681116,9047158483,9003574814
9:31 PM | 0 comments | Read More

மத்ஹப் ஜமாத்தை சார்ந்த இமாம் பதிலளிப்பாரா?

Written By GM.BASHA on Tuesday, March 19, 2013 | 4:51 AM

 ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹப் ஜமாத்தை சார்ந்த இமாம் சிலவாரங்களாக ஜும் ஆ மேடையில் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி மக்களிடம் தப்பும் தவறுமாக விமர்சித்து வருகிறார் அவருக்கு பதிலளிக்கும் விதமாக முஸ்லீம்களே சிந்திப்பீர் என்ற தலைப்பில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பில் 150 பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.




4:51 AM | 0 comments | Read More

தெருமுனை பிரச்சாரம்

Written By GM.BASHA on Monday, March 18, 2013 | 9:45 PM


அல்லாஹு அக்பர் அல்லாஹ்வின் மாபெரும் அருளால் கடந்த 16.03.2013 சனி மாலை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பில் மாபெரும் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.இந்த சத்திய பிரச்சாரத்திற்கு இந்த ஊரில் கடந்த காலங்களில் காவல்துறை மத்தியிலும் போலி சுன்னத்வல் ஜமாஅத் இமாம்களால் தவ்ஹீத் ஜமாத்தை பற்றி தவறான முறையில் சொல்லப்பட்டு அறியாத அந்த மக்களாலும்  கடுமையான எதிர்ப்பு இருந்து வந்தது இதை கண்டித்து கடந்த பிப்ரவரி 23 அன்று மீமிசலில் ஒரு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது நினைவிருக்கலாம்.அல்லாஹ்வின் ஜோதியை தங்களது வாய்களால் ஊத்தி அணைக்கலாம் என்று நினைக்கின்றனர் மறுப்பவர்கள் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தனது ஜோதியை முழுமை படுத்தியே தீருவான்.என்ற வசனம் நம் நெஞ்சில் நிழலாடுகிறது.
9:45 PM | 0 comments | Read More

பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய தஹுதியானவர்கள் யார?

Written By GM.BASHA on Thursday, March 14, 2013 | 3:14 AM


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்புதுப்பட்டினம் கிளையின் சார்பில் பள்ளிவாசல்களை நிர்வாகம் செய்ய தஹுதியானவர்கள் யார் ?என்ற தலைப்பில் 150 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.  
3:14 AM | 0 comments | Read More

உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்தவரும் டிஎன்டிஜே!

Written By GM.BASHA on Tuesday, March 12, 2013 | 11:12 PM

உலக அளவில் இரத்த தானத்தில் முத்திரை பதித்தவரும் டிஎன்டிஜே!

 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மனிதநேயப் பணிகளில் முக்கிய இடத்தை வகிப்பது இரத்ததான சேவையாகும். தொடர்ந்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் இரத்ததானம் செய்வதில் டிஎன்டிஜே அனைத்து அமைப்புகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு தொடர்ந்து முதலிடம் வகித்து வருவதே இதற்கு மிகப்பெரிய சான்றாகும். அல்ஹம்துலில்லாஹ்…
கடந்த 2012ஆம் ஆண்டில் தவ்ஹீத் ஜமாஅத்தின் மாவட்டங்கள் மற்றும் கிளைகள் மூலம் 213 இரத்ததான முகாம்கள் நடத்தப்பட்டு 17,622 பேர் குருதிக்கொடை அளித்துள்ளனர்.
கடந்த ஆண்டில் தமிழகத்தில் மட்டும் டிஎன்டிஜே சார்பாக  173 முகாம்களில் 12,111 பேர் இரத்ததானம் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் வெளிநாட்டிலுள்ள டிஎன்டிஜே கிளைகள் மூலம் 31 முகாம்கள் நடத்தப்பட்டு 3,813 நபர்கள் குருதிக் கொடையளித்துள்ளனர்.
அவசர இரத்ததானமாக 1,698 நபர்களுக்கு குருதிக் கொடை வழங்கப்பட்டுள்ளது.
தனியொரு அமைப்பு இந்த அளவிற்கு கிட்டதட்ட பதினெட்டாயிரம் யூனிட்டுகளுக்கு நெருக்கமாக குருதிக் கொடை கொடுத்திருப்பது இதுவரை தமிழக வரலாற்றில் இல்லாத புதிய சாதனையாகும்.
டிஎன்டிஜேவின் வருகைக்கு முன்பாக தமிழக அளவில் முதலிடம் பெரும் அமைப்புகள் ஐந்தாயிரம் யூனிட்டுகள் இரத்ததானம் செய்வதே பெரிய விஷயமாக பார்க்கப்பட்ட நிலையில் இருபதாயிரம் பேரை தொடக்கூடிய அளவிற்கு இரத்ததானத்தில் புதிய மைல்கல்லை டிஎன்டிஜே எட்டியுள்ளது.
முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் குண்டு வைக்கக்கூடியவர்கள்; தீவிரவாதிகள்; பிறரது இரத்தத்தைக் குடிக்கக்கூடியவர்கள் என்ற ஒரு கருத்தை தமிழகத்து ஊடகங்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு காலத்தில் விதைத்திருந்தன. ஆனால் டிஎன்டிஜேவின் தன்னலம் பாராத இந்த மனித நேயச் சேவையின் மூலம் முஸ்லிம்கள்தான் இரத்ததானம் செய்வதில் முன்னணியில் உள்ளார்கள். அவர்கள்தான் தங்களது இரத்தத்தைக் கொடுத்து பிறரது உயிரைக் காக்கக்கூடிய மனிதநேயப் பணியில் முதன்மையானவர்கள். அவர்களை முந்துவதற்கு பெரும்பான்மையான இந்து சமுதாய அமைப்புகளால் கூட இயலாது என்று அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த மனிதநேயப்பணி சொல்ல வைத்துள்ளது.
முஸ்லிம்களில் சிறுபான்மையாக இருக்கக்கூடிய இந்த ஏகத்துவக் கொள்கைக் கூட்டம் மறுமை வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதால்தான் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாக செய்து வரமுடிகின்றது.
மேலும், சென்னை, மதுரை போன்ற பெருநகரங்களில் உள்ள அனைத்து முக்கிய மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜேவை அறியாத மருத்துவர்கள் இல்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு நிலைமை உருவாகியுள்ளது. யாரேனும் வெளிமாநிலத்திலிருந்தோ, சென்னை மற்றும் மதுரை போன்ற பெருநகரங்களுக்கு தொடர்பில்லாத ஊர்களிலிருந்தோ வந்து அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்களேயானால் அவர்களிடத்தில் நீங்கள் டிஎன்டிஜேவை அணுகுங்கள்; எத்தனை யூனிட்டுகள் இரத்தம் உங்களுக்குத் தேவைப்பட்டாலும் அவர்கள் அதை வழங்குவார்கள் என்று அந்தந்த மருத்துவமனையிலுள்ள மருத்துவர்களே அவர்களை நம்மிடம் அணுகச் சொல்லக்கூடிய அளவிற்கு அனைத்து மருத்துவமனைகளிலும் டிஎன்டிஜே தனி இடம்பிடித்துள்ளது.
இவ்வாறு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் வெளியூர் சகோதரர்கள் தங்களது அறுவைச் சிகிச்சைக்கான இரத்தத்தை வெளியில் காசு கொடுத்து வாங்கவும் வழியில்லாமல், தங்களுக்கு உதவ யாராவது முன்வரமாட்டார்களா? என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு ஒரு பைசாகூட செலவுவைக்காமல் நமது சகோதரர்கள் அளிக்கும் குருதிக்கொடைக்கு அந்த சகோதரர்கள் அதற்கு பலனாக எவ்வளவோ கைமாறு செய்ய எத்தனித்தாலும் அவர்களிடத்தில் ஆட்டோவுக்கு கூட போக்குவரத்துப் பணம் வாங்காமல் திரும்பும் நமது சகோதரர்களைப் பார்த்து மருத்துவமனையிலுள்ளவர்களும், நோயாளியின் உறவினர்களும் பூரித்துப்போகின்றார்கள்.
அதுமட்டுமல்லாமல், நீங்கள் தரக்கூடிய இரத்தம்தான் தூய்மையானதாக உள்ளது என்றும், பீடி, சிகரட், மது போன்ற தீயபழக்க வழக்கங்கள் உங்களது உறுப்பினர்களிடம் இல்லாதது அதற்குரிய காரணம் என்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் உள்ளவர்கள் கூறுவது இந்த ஜமாஅத்தின் பணிகள் எந்த அளவிற்கு பிறமத சகோதரர்களை சென்றடைந்துள்ளது என்பதையும், இந்த ஜமாஅத்தைப் பற்றி பிறமத சகோதரர்கள் எந்த அளவிற்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றது.
இரத்ததானத்தில் முதலிடம் பிடித்த தென்சென்னை மாவட்டம் :
கடந்த 2012ஆம் ஆண்டு இரத்ததானத்தில் அதிகமான நபர்கள்  இரத்ததானம் செய்ததன் மூலம் முதலிடத்தை பிடித்த மாவட்டம் தென்சென்னை மாவட்டம் ஆகும். மொத்தம் 46 முகாம்களில் 3,834 நபர்கள் தென்சென்னை சார்பாக இரத்ததானம் செய்துள்ளார்கள்.
திருவள்ளூர் மற்றும் வடசென்னை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. அரசு தரப்பிலிருந்து பல்வேறு விருதுகளும் டிஎன்டிஜேவின் இரத்த தான சேவையை பாராட்டி வழங்கப்பட்டுள்ளன.
சாதனை படைத்த தேனி மாவட்டம் :
இதில் குறிப்பிடத்தக்க மற்றொரு விஷயம் என்னவென்றால் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள தேனி மாவட்டம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. நமது தேனி மாவட்டத்தின் இந்த சேவையை அறிந்த அரசு மருத்துவமனை நிர்வாகம், அரசாங்க இரத்த வங்கியில் போதிய இரத்த இருப்பு இல்லாத நிலையில், டிஎன்டிஜேவின் தேனி மாவட்ட நிர்வாகத்தை அணுகி முகாம்களை நடத்தும்படி கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இரத்ததான முகாம்களை நமது சகோதரர்கள் நடத்தி தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் உள்ள இரத்த வங்கியிலுள்ள இரத்த இருப்பு பற்றாக்குறையை நீக்கியுள்ளனர்.
பரவலாக அரசு மருத்துவமனைகளில் இரத்தம் கையிருப்பு இல்லாவிட்டால் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனை நிர்வாகங்கள் டிஎன்டிஜேவின் நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு முகாம்களை நடத்தச் சொல்லி கோரிக்கை வைக்கின்றன. அவர்களது கோரிக்கைகளை ஏற்று நமது நிர்வாகிகள் இரத்ததான முகாம்களை நடத்தி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.
வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிக்கும் ரியாத் மண்டலம்:
இந்தியாவிற்கு வெளியே உள்ள டிஎன்டிஜேவின் வெளிநாட்டு கிளைகளும் இரத்ததான முகாம்களை போட்டி போட்டு நடத்தி மனிதநேயப்பணியை உலகளாவிய அளவில் செவ்வனே செய்து வருகின்றன.
அந்த வகையில் வெளிநாடுகளில் இரத்ததானத்தில் முதலிடம் வகிப்பது ரியாத் மண்டலம் ஆகும். கடந்த 2012 ஆம் ஆண்டு ரியாத் மண்டலத்தின் சார்பாக 1,214 நபர்கள் இரத்ததானம் செய்துள்ளனர். ரியாத்தைத் தொடர்ந்து தம்மாம் மற்றும் குவைத் ஆகிய மண்டலங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன.
சவூதி அரேபியாவில் நமது சகோதரர்கள் வழங்கும் இரத்தங்கள் சேகரிக்கப்பட்டு ஹஜ் செய்ய வரும் ஹாஜிகளுக்கும்,  ரமலான் மாதத்தில் உம்ரா செய்ய வருவோருக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்க ஒரு விஷயமாகும்.
இதுவல்லாமல் டிஎன்டிஜேவின் இந்த ஏகத்துவப்படை ஸ்ரீலங்கா, துபாய், அபுதாபி, பஹ்ரைன், ஷார்ஜா, புருனை, கத்தார் ஆகிய நாடுகளிலும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் இரத்த தானம் செய்து உலகளாவிய அளவில் இரத்ததானத்தில் தனி முத்திரை பதித்து வருகின்றனர்.
அவசர இரத்த தான சேவையில் மதுரை முதலிடம் :
இரத்ததான முகாம்களில் இரத்தம் வழங்கி உயிர் காக்கும் பணி ஒரு வகை என்றால், திடீரென்று ஏற்பாடு செய்யப்படும் அறுவை சிகிச்சைகளுக்கு உடனடியாகத் தேவைப்படும் இரத்தத்தை அதிரடியாக வழங்கி உயிர்காக்கும் பணி மற்றொரு வகை.
இந்த அவசர இரத்ததான சேவையில் மதுரை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை பெற்று வருகின்றது. சென்ற ஆண்டு 574 நபர்கள் அவசர இரத்த தானம் வழங்கியுள்ளார்கள். மதுரையைத் தொடர்ந்து திருச்சி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
டிஎன்டிஜேவின் இந்த தன்னலமில்லாத இரத்ததானப்பணி இன்னும் சிறப்பாக அமைய வல்ல இறைவனை பிரார்த்திப்போம்.
“ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்’
அல்குர் ஆன் : 5 – 32
தாயகம் 2012
எண் மாவட்டம் முகாம்கள் நபர்கள் தர வரிசை
1 தென்சென்னை 46 3834 1
2 திருவள்ளூர் 54 3531 2
3 வட சென்னை 19 1760 3
4 தேனி 5 795 4
5 இராமநாதபுரம் 5 221 5
6 காஞ்சி கிழக்கு 3 183 6
7 தஞ்சை தெற்கு 5 179 7
8 விருதுநகர் 2 165 8
9 காஞ்சி மேற்கு 2 130 9
10 விழுப்புரம் மேற்கு 4 126 10
11 நெல்லை 2 93 11
12 நாகை தெற்கு 1 82 12
13 திருவாரூர் 2 74 13
14 புதுக்கோட்டை 2 73 14
15 காரைக்கால் 2 70 15
16 சிவகங்கை 2 69 16
17 கோவை 1 67 17
18 நாமக்கல் 2 65 18
19 தி மலை 1 60 19
20 வேலூர் 1 58 20
21 ஈரோடு 2 56 21
22 திருப்பூர் 1 55 22
23 சேலம் 1 55 23
24 தஞ்சை வடக்கு 1 52 24
25 பெங்களுர் 1 50 25
26 திருச்சி 1 43 26
27 நாகை வடக்கு 1 42 27
28 பெரம்பலூர் 1 42 28
29 கரூர் 1 30 29
30 நிலகிரி 1 26 30
31 திருவாரூர் 1 25 31
  மொத்தம் 173 12,111  
வளைகுடா (2012)
எண் மண்டலம் முகாம்கள் நபர்கள் தர வரிசை
1 ரியாத் 6 1214 1
2 தம்மாம் 10 868 2
3 குவைத் 3 494 3
4 துபாய் 3 456 4
5 ஸ்ரீலங்கா 2 233 5
6 அபுதாபி 3 233 6
7 பஹ்ரைன் 1 97 7
8 ஷார்ஜா 1 87 8
9 புருனை 1 82 9
10 கத்தார் 1 49 10
  மொத்தம் 31 3,813  
அவசர தேவை
எண் மாவட்டம் நபர்கள் தர வரிசை
1 மதுரை(அவசரதேவைக்கு) 574 1
2 திருச்சி(அவசரதேவைக்கு) 342 2
3 நெல்லை(அவசரதேவைக்கு) 308 3
4 திருப்பூர்(அவசரதேவைக்கு) 262 4
5 தென்சென்னை(அவசரதேவைக்கு) 111 5
6 விருதுநகர்(அவசரதேவைக்கு) 73 6
7 வடசென்னை(அவசரதேவைக்கு) 22 7
8 ஈரோடு (அவசரதேவைக்கு) 6 8
  மொத்தம் 1,698 
11:12 PM | 0 comments | Read More