ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

Written By GM.BASHA on Tuesday, August 31, 2010 | 10:39 PM


கண்டு கொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ்.
இலங்கை தவ்ஹீத் சகோதரரின் உலக சாதனை. வீடியோ ஆதாரத்துடன்.
MOTOR BIKE IN A HAND BAG
தொகுப்பு - Rasmin M.I.Sc
உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் பைக்  -   பைக்குள் தூக்கிச் செல்லப் படும் ஆச்சரியம். 
 நேரில் பார்வையிட்டார் (T.N.TJ) மாநில துணைத் தலைவர்


அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? (47:24)

திருமறைக் குர்ஆனை யார் படித்து சிந்திக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

திருமறையை படித்து அதன் மூலம் பல சாதனைகளை நிகழ்த்துபவர்களையும் இந்த உலகம் தினமும் கண்டு வருகிறது.

அந்த வரிசையில் மிகமுக்கிய இடத்தை பிடித்திருக்கிறார் ஓர் ஏகத்துவ சகோதரர் தனது கண்டு பிடிப்புகளுக்கு அடிப்படை திருக்குர்ஆன் தான் எனக் கூறும் இந்தச் சகோதரின் அபார கண்டுபிடிப்புகள் தொடர்பாக விரிவாக நாம் ஆராய்வோம்.

கண்டுபிடிப்பாளர் கவ்ஸ்ஸின் குடும்பப் பின்னனி என்ன?

52 வயதான அப்துல் மஜீத் கவ்ஸ் இலங்கையின் எழில் கொஞ்சும் மத்திய மலை நாட்டின் தாயகமான கண்டி வத்தே கெதர பொல்கொல்ல என்ற ஊரில் ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் நான்காம் நபராகப் பிறந்தார்.

இவர் தற்போது திஹாரிக்கு அண்மையிலுள்ள ஹொரகொல்லை ஒட்சட்வத்தை என்ற ஊரில் வசித்து வருகிறார்.

இவருடைய தந்தை இலங்கை இராணுவத்தில் இயந்திரவியல் நிபுனராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் கட்டுகஸ்தொட்டை என்ற ஊரில் வாகனம் திருத்தும் நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.

அக்காலகட்டத்தில் ஒன்பது வயது சிறுவராக இருந்த கவ்ஸ் அவர்கள் பாடசாலையில் (School) நடந்த கண்காட்சி நிகழ்ச்சியில் நீராவியால் இயங்கும் ஓர் இயந்திரத்தை செய்து காட்சிப் படுத்தியதின் மூலமாக தனது அபார திறமையை வெளிக்காட்டினார்.

கண்ட களமும் கொண்ட கொள்கையும்.

ஓரே இறைவனை மட்டும் வணங்கி அவனுக்கு மாத்திரமே அணைத்து வணக்க வழிபாடுகளையும் செய்து திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டதின் மூலமாக தன்னை ஓர் தூய்மையான தவ்ஹீத் வாதியாக மாற்றிக் கொண்ட சகோதரர் கவ்ஸ் அவர்கள் திருமறைக் குர்ஆனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்.

தனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையே திருக்குர்ஆன் தான் என மனந்திறந்து சொல்பவர்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்தவர்.

நம்முடைய இந்த காலகட்டத்தில் நம் கண்முன் இருக்கும் ஜப்பான் சீனா இந்தியா போன்ற நாடுகளின் மோட்டார் வண்டிகள் அனைத்தையும் விட மிகச் சிரிய மோட்டார் வண்டியை இவர்தான் வடிவமைத்துள்ளார்.

உலகிலேயே மிகச் சிரிய மோட்டார் வண்டியொன்றை இந்தியாவைச் சேர்த்த ஒருவர் கண்டுபிடித்துள்ளதாக தனது நண்பர் மூலம் அறிந்து கொண்ட கவ்ஸ் அவர்கள் செய்தி அறிந்து சரியாக ஒன்பது மாதங்களில் 9 அங்குல மோட்டார் வண்டியை கண்டுபிடித்தார்.

இந்தியாவில் கண்டுபிடிக்கப் பட்ட மோட்டார் வண்டி 12 அங்குலம் உடையதாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

(வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.)

கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த மோட்டார் வண்டியின் சிறப்பம்சங்கள்.

நமது வீடுகளில் அன்றாடம் நாம் பயண்படுத்தும் பொருட்களை வைத்தே இந்த சிரிய மோட்டார் வண்டியின் 40 வீதமான பாகங்களை கவ்ஸ் அவர்கள் வடிவமைத்துள்ளார்.

அத்துடன் மிக முக்கியமான அம்சம் என்னவெனில் இந்த மோட்டார் வண்டிக்கு மற்ற மோட்டார் வண்டிகளுக்கு உள்ளதைப் போன்ற செஸி என்ற பகுதி இல்லை என்பதுதான்.

மோட்டார் வண்டியைப் பொருத்தவரை மனிதனுக்கு முதுகெழும்பு எவ்வளவு முக்கிமோ அந்தளவுக்கு மோட்டார் வண்டிக்கு செஸி என்ற பகுதி முக்கியமாகும்.

செஸி இல்லாவிடில் மோட்டார் வண்டி இல்லை என்ற கருத்தை பொய்யாக்கி செஸி இல்லாமல் மோட்டார் வண்டியை இயக்க முடியும் என தன்னுடைய கண்டு பிடிப்பின் மூலம் நிரூபித்திருக்கிறார் கவ்ஸ்.

மோட்டார் வண்டி பற்றிய சில முக்கிய தகவல்கள்.

சகோதரர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்கள் தான் கண்டுபிடித்த மோட்டார் வண்டிக்கு வைத்துள்ள பெயர் Taprabane saying.. gift  from  allah  to  srilanka
இந்த மோட்டார் வண்டி 9 அங்குலம் உயரமும் 2.5 அடி நீளமும் கொண்டதாகும்.
அத்துடன் இந்த மோட்டார் வண்டி கைப் பையினுல் போட்டு செல்லும் வகையில் வெரும் 23 கிலோ கிராம் மாத்திரம் எடை கொண்டதாகும்.



வண்டி தொடர்பான இன்னும் சில குறிப்புகள்.

Speed 35-40 km/h

Fuel  -  1 bottle (petrol + oil)

Engine capacity   -  50cc

Gear   -  centrifuga
l

பட்ட கஷ்டமும் கிண்ணஸில் கிடைத்த பதிவும்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டுபிடித்த இந்த மிகச் சிரிய மோட்டார் வண்டி உலக சாதனைகள் மற்றும் சாதனையாளர்களின் பெயர்கள் பதியப் பட்டு கவுரவப் படுத்தப் படும் கிண்ணஸ் என்ற புத்தகத்திலும் பதியப் பட்டு உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை கண்டுபிடித்து வடிவமைத்தவர் என்ற பெருமையை இவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது என்பது மிக முக்கியமான விஷயமாகும்.



















இலங்கை ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்காவின் நிறைவேற்றப் படாத வாக்குறுதி.

தான் கண்டுபிடித்த உலகின் மிகச் சிரிய மோட்டார் வண்டியை சகோதரர் கவ்ஸ் அவர்கள் அன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா பண்டார நாயக்கா குமாரதுங்கவின் முன்னிலையில் அலரி மாளிகையிலும் ஓட்டிக் காண்பித்தார்.  


அப்போது கவ்ஸ் அவர்களின் கண்டுபிடிப்பைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த சந்திரிக்கா சகோதரர் கவ்ஸை பாராட்டியதுடன் கண்டுபிடிப்புக்கான உரிமைச் சான்றிதழ் (பேடன்ட்) பெற்றுத் தருவதாகவும் ஜின்வா உலகக் கண்காட்சிக்கு அனுப்புவதாகவும் குறித்த கண்காட்சிக்காக ஜனாதிபதியின் நிதியிலிருந்து ஒரு தொகை பணம் தருவதாகவும் கூறினார்.

ஆனால் அவர் கூறிய அனைத்தும் இன்று வரை நிறைவேற்றப் படாத வெரும் வாக்குறுதியாகத்தான் இருக்கிறது.

நேரடியாக சந்தித்த TNTJ மாநிலத் துனைத் தலைவர்.

கண்டுபிடிப்பாளர் அப்துல் மஜீத் கவ்ஸ் அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைத் தலைவர் சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் இலங்கை வந்த போது நேரடியாக சந்தித்துப் பேசினார்.

அவருடன் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தேசிய நிர்வாகிகளும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அப்போது தனது கண்டுபிடிப்புக்களைப் பற்றி தெரிவித்த கவ்ஸ் அவர்கள் சிரிய ரக மோட்டார் வண்டியை ஓட்டியும் காண்பித்தார்.

சகோதரர் கோவை ரஹ்மதுல்லாஹ் அவர்கள் அவரின் கண்டுபிடிப்புகளைப் பாராட்டி உற்சாகப்படுத்தினார்.

(ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் ஹொரகொல்லைக் கிளையின் தலைவராக இருப்பவர் சகோதரர் கவ்ஸ் அவர்களின் மகன் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.)

சகோதரர் கவ்ஸின் இதர கண்டுபிடிப்புகள்.

தனக்கு இறைவனால் கொடுக்கப் பட்டுள்ள இந்த சிறப்பான அறிவுத் திறனை நல்வழியில் செலுத்தப் பாடுபடும் சகோதரர் கவ்ஸ் அவர்கள் சமுதாயத்திற்கு தேவையான் பல கண்டு பிடிப்புகளின் சொந்தக்காரராவார்.

தொழினுட்ப அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கண்டுபிடிப்புகளிலேயே கேஸ் மூலம் செயல்படும் வாகனங்கள் மிகப் பிரதானமானவை.

ஆனால் 1998ம் ஆண்டு சகோதரர் கவ்ஸ் அவர்கள் கண்டு பிடித்த பெற்றோல் மற்றும் காஸின் மூலம் இயங்கும் மோட்டார் வண்டி உலகில் தற்போதுள்ள மோட்டார் வண்டிகளை விட மிக வித்தியாசமானது.

காப்பரேட்டர் சம்பந்தப் படாமல் வாயு இணைப்பு வழங்கப் பட்டுள்ளமை இதன் விசேஷ அம்சமாகும்.

அப்துல் மஜீத் கவ்ஸ் வாயு இணைப்புக்கென்றே விசேஷ தொகுதியொன்றை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இது வரை உருவாக்கப் பட்டுள்ள அனைத்து வாகனங்களுக்கும் வாயு இணைப்பானது காப்பரேட்டருடன் சம்பந்தப்படுத்தப்பட்டே இணைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இதிலுள்ள மற்றுமொரு விசேஷமான அம்சம் வண்டி போய்க் கொண்டிருக்கும் போதே பெற்றோலிலிருந்து வாயுவிற்கும் வாயுவிலிருந்து பெற்றோலிற்கும் மாற்றும் வசதி உள்ளதாகும்.தற்போது நடைமுறையில் உள்ள வாகனங்களில் வாயு தீர்ந்த பின்னர் தான் பெற்றோலிலும் பெற்றோல் தீர்ந்த பின்னர் தான் வாயுவிலும் (கேஸ்) இயக்க முடியும்.

பூமியதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் கருவி.

பலவகையான கண்டுபிடிப்புத் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்ச்சியின் போது மக்களுக்கு அதனை முன்கூட்டியே தெரிவிக்கும் ஒரு கருவியையும் கண்டுபிடித்துள்ளார்.

சுனாமி போன்றவைகள் வரும் போது அல்லது வழமைக்கு மாற்றமாக ஏதாவது ஒரு செயல்பாடு கடலில் நடக்கும் போது அதனை தெரிவிப்பதற்கு உருவாக்கப் பட்ட கருவியைப் போல் சகோதரர் கவ்ஸ் அவர்கள் பூமியதிர்சி பற்றிய முன்னெச்சரிக்கைக் கருவியை உருவாக்கியுள்ளார்.

காட்டு யானையை விரட்டும் கருவி.

இலங்கையின் பல பகுதிகளிலும் காட்டு யானையின் தொல்லை இருப்பதாலும் அவை மக்கள் வாழும் பகுதிக்குள் வந்து மக்களுக்கு இடையூரை உண்டு பண்ணுவதாலும் அவற்றிலிருந்து பாதுகாப்புப் பெற காட்டு யானைகளை விரட்டும் ஒரு கருவியையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

ஓட்டுனரின் வேலையை செய்யும் (முச்சக்கரவண்டி) ஆட்டோ.

ஓட்டுனர் செய்ய வேண்டிய பல்வேறு வேலைகளை ஓட்டுனர் இல்லாமலேயே தண்ணீரின் மூலம் செயல் படுத்தும் ஆட்டோ ஒன்றையும் இவர் கண்டுபிடித்துள்ளார்.

காற்றினால் இயங்கும் இன்ஜின்.

சகோதரர் கவ்ஸ் அவர்கள் காற்றின் மூலம் இயங்கும் இன்ஜின் ஒன்றையும் வடிவமைத்துள்ளார் இதனைப் பார்க்கும் போது ஒரு இன்ஜின் எவ்வாறு செயற்படும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும்.

திடீர் தீ விபத்திற்கான தீர்வு.

ஹஜ் காலங்களில் மக்கள் அதிகமாக கூடியிருக்கும் நேரத்தில் திடீர் தீ விபத்துகள் ஏதும் ஏற்பட்டால் அவற்றை எப்படி தடுப்பது என்பதற்கு தன்னிடம் ஒரு சிறப்பான திட்டம் இருப்பதாக கூறும் கவ்ஸ் உரியவர்கள் முன்வந்தால் அதனை செய்து காட்டுவதாகவும் குறிப்பிடுகிறார்.

காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லும் சைக்கில்.

இருதியாக இவர் காற்சட்டைப் பைக்குள் இட்டுச் செல்லக் கூடிய அளவுள்ள மிகச் சிரியதொரு சைக்கிலைக் கண்டுபிடித்துள்ளார்.உரிய சந்தர்ப்பத்தில் அதனை அறிமுகப் படுத்தவுள்ளதாகவும் இவர் தெரிவிக்கிறார்.

கண்டுகொள்ளப் படாத கண்டுபிடிப்பாளர்.

ஆரம்ப காலத்தில் உலகின் பல கண்டுபிடிப்புகளுக்கும் அறிவியல் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக இருந்த முஸ்லீம்கள் இன்று கல்வியறிவற்றவர்களாக மார்க்க மற்றும் உலக கல்விகளுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் அனைத்து கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படை அமைத்த ஒரு சமூகம் இன்று ஒரு கண்டுபிடிப்பாளரை கண்டும் காணாமல் இருப்பது மிகவும் கவலைக்குறிய செய்தியாகும்.

அன்பின் இஸ்லாமிய நெஞ்சங்களே!

அப்துல் மஜீத் கவ்ஸ் போன்றவர்கள் நமது சமுதாயத்தின் அறிவியல் சிற்பிகள் இவர் போன்றவர்களின் கண்டுபிடிப்புத்தான் அறிவியலின் எதிர்காலம்.

ஆதலால் வீனான தொலைக்காட்டி நிகழ்ச்சிகளுக்கும் கேளிக்கை விளையாட்டுக்களுக்கும் தங்கள் பணங்களை வாரி வழங்கும் தனவந்தர்களே இவரைப் போன்ற கண்டுபிடிப்பாளர்களை ஊக்கப் படுத்துவதின் மூலம் நமது சமுதாயத்தை வளர்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன்வருவோமாக.
நன்றி:rasmin .
10:39 PM | 0 comments | Read More

பித்ரா ஒரு பார்வை

Written By GM.BASHA on Friday, August 27, 2010 | 11:14 PM

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளையின் சார்பில் பித்ரா ஒரு பார்வை என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அந்த பிரசுரத்தில் பித்ரா என்றால் என்ன?,பித்ராவை எவ்வாறு நிர்ணயம் செய்வது,யார் யார் மீது பித்ரா கடமை,பித்ராவை எவ்வாறு விநியோகம் செய்வது,போன்ற தகவல்கள் விரிவாக இடம்பெற்றுள்ளன. இதை பார்க்கும் நமதூரைசார்ந்த உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளிநாடுவாழ்  சகோதரர்கள் தங்கள் பித்ராவை தங்கள் குடும்பத்தவர்கள் பித்ராவை மற்றும் நண்பர்கள் ஆகியோர்களிடம் எடுத்துக்கூறி  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்.புதுப்பட்டினம் கிளைக்கு அனுப்பி இம்மை மற்றும் மறுமைக்கான முழுப்பயனையும் அடையுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மேலும் நமது கிளை கடந்த ஆறு ஆண்டுகளாக பித்ராவை கூட்டாக வசூல் செய்து சிறந்த முறையில்  விநியோகம் செய்து வருகின்றது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் பித்ரா வசூல் செய்வதற்கு கீழ்க்கண்ட சகோதரர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவே தங்கள் பித்ராவை இவர்களிடம் கொடுத்து உதவும்படி கேட்டுக்கொள்கிறோம். மேலும் பித்ரா சம்பத்தப்பட்ட வரவு செலவு நமது இணையத்தில் வெளியிடப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

1,சுலைமான். செல் :96985  47801,
2,செய்து அபுதாகிர்.செல்:99656  43318 .
11:14 PM | 0 comments | Read More

மாமனிதர் நபிகம் நாயகம் புத்தகம் ரியாத் ஜாலியாத் மூலம் மீண்டும் வெளியீடு



அல்லாஹ்வின் கிருபையால், மேலாண்மைக்குழு உறுப்பினர் சகோ. பி.ஜெ. அவர்களின் பல நூல்களை சவூதி அரசின் அங்கீகாரம் பெற்ற ஜாலியாத்துகள் (இஸ்லாமிய அழைப்பு வழிகாட்டி மையங்கள்) பல சமயங்களில் வெளியிட்டுள்ளன.
அவற்றுள் இது தான் பைபிள், இயேசு இறைமகனா?, பித்அத் ஓர் ஆய்வு, திருமறையின் தோற்றுவாய், நோன்பு, மாமனிதர் நபிகள் நாயகம் மற்றும் அர்த்தமுள்ள இஸ்லாம் போன்றவையும் அடங்கும்.
(மேலதிக தகவல்களுக்கு:http://onlinepj.com/vimarsanangal/pj_patriya_vimarsanam/pj_noolukku_thataiya/ )
சில வருடங்களுக்கு முன்பாக நஸீம் ஜாலியாத் மூலம் மாமனிதர் நபிகள் நாயகம் இலவச பதிப்பாக வெளியிடப்பட்டது. புத்தகத்தின் முக்கியத்துவத்தையும், முஸ்லிம் – முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகளிடம் அந்த புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, ரப்வா ஜாலியாத், இந்த வருடம் மீண்டும் அப்புத்தகத்தை மீள்பதிப்பு செய்து வெளியிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான பிரதிகள் அச்சடிக்கப்பட்டு இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன.
ரியாத் மண்டலம், சவூதி முழுவதும் இப்பிரதிகளை விநியோகிக்கும் பணியை சிறப்பாக செய்துள்ளது. தம்மாம், ஜெத்தா, அல்கசீம், அல்-அஹ்ஸா மண்டலங்களுக்கு ஆயிரக்கணக்கான புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தொலைதூர கிளைகளான அல்-ஹெயில், ஜூல்ஃபி முதலான இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் மண்டலம் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், பஹ்ரைனுக்கும் இலவச பிரதிகள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும், ரியாத் மண்டலத்தின் அனைத்து கிளைகளிலும், பொதுமக்களிடமும் பரவலாக விநியோகிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்!
2:09 AM | 0 comments | Read More

மரங்களை வெட்டுங்கள்

Written By GM.BASHA on Tuesday, August 24, 2010 | 2:12 AM


மரங்களை வெட்டுங்கள் (???!!!)




மரங்களை வெட்டுங்கள்


உலகமே ஒட்டு மொத்தமாக வெப்பமயமாதல் ( குளோபல் வார்மிங் ) பற்றி பயந்து கொண்டு இருக்கும், இன்றைய காலகட்டத்தில் 'மரங்களை நடுங்கள்' என்ற ஒரே கோஷம் தான் எங்கும் கேட்கிறது, இந்த நேரத்தில் 'மரங்களை வெட்டுங்கள்' என்று கூறுவது முரண்பாடாக தோன்றுகிறது அப்படிதானே. ஆனால் இங்கே நான் சொல்வதை முழுவதும் கவனித்தால் நீங்களும் ' ஆமாம் கண்டிப்பாக வெட்ட வேண்டும் ' என்று
சொல்வீர்கள். அப்படி அந்த மரத்தை வெட்டினால் தான் நம் மண்ணின் மாண்பை காப்பாற்ற முடியும் என்பதுதான் விஞ்ஞானிகள் நமக்கு கொடுக்கும் ஒரே எச்சரிக்கை.


மண்ணின் வில்லன்


அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'காட்டு கருவேல மரம்' தான் அது

நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் விதையை இங்கு தூவியதாக ஒரு கருத்தும் , கிராம மக்களுக்கு அடுப்பு எரிக்க விறகு வேண்டும் என்பதற்காக ஒரு அரசியல்வாதி (நல்ல எண்ணம்தான், இதன் நச்சு தன்மை பற்றி தெரியாமல் இருந்திருக்கலாம் ) வெளிநாட்டில் இருந்து தருவித்ததாகவும் இரு விதமான கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் எப்படி வந்தது என்பது அல்ல...., இப்போதைய பிரச்சனை....!? , இம்மரத்தால் என்னவெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறது என்று பார்பதுதான் அவசியம். முதலில் இந்த மரத்தின் தன்மைகளை பார்க்கலாம்.


இதன் கொடூரமான குணங்கள்


இவை எந்த வித வறட்சியிலும் நன்கு வளரக்கூடியது . மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல் இருந்தாலும் இவை கவலை படாது. பூமியின் அடி ஆழம் வரை கூட தன் வேர்களை அனுப்பி நீரை உறிஞ்சி , தன் இலைகளை வாடவிடாமல் பார்த்து கொள்கிறது,
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு
விடுகிறது...!

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி தழுவி செல்லும் காற்றில் இருக்கும் ஈரபதத்தையும் இம்மரம் உறிஞ்சிவிடுகிறது..... ??!! இப்படி காற்றின் ஈரபதத்தையும் , நிலத்தடி நீரையும் இழந்து அந்த பகுதியே வறட்சியின் பிடியில் தாண்டவமாடும்.

தென் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம் என்பது அதிர்ச்சியான ஒன்றுதான். ஆனால் இதை அறியாமல் அந்த மக்கள், இன்னும் புதிதாக மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள் என்று என்னும் போது அறியாமையை குறித்து வருந்த வேண்டி இருக்கிறது.


உடம்பு முழுதும் விஷம்


இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது. முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது , ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அதுதான். இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகிவிடும் , அதாவது சினைபிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன்தான் பிறக்கும்....?!!


ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றிவிடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது. இதன் பக்கத்தில் வேறு என்ற செடியும் வளராது, தவிர மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த வேலிகாத்தான் மரங்கள், ஆக்சிசனை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது , ஆனால் கரிமிலவாயுவை மிக அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுதன்மையாக மாறிவிடுகிறது.


அறியாமை

நமக்கு தெரியாமலேயே இப்படிப்பட்ட மரங்களை கண்டுகொள்ளாமல் இருக்கிறோம் என்பது வருத்தத்துக்கு உரியதுதான்.

கேரளாவின் விழிப்புணர்வு

நமது அண்டை மாநிலமான கேரளாவில் இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.....!! அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஒரு இடத்தில் கூட காண முடியாது. ஆனால் நம் தமிழ்நாட்டில் விறகிற்க்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்....??! என்ன முரண்பாடு...?? என்ன அறியாமை..??

ஆராய்ச்சியாளர்களும், இந்த மரங்கள் இருக்கும் இடங்களில் வாழும் மனிதர்களின் மனதையும் இந்த மரம் மாற்றி வன்முறை எண்ணத்தை கொடுக்கும் என்று கண்டு பிடித்து உள்ளனர்.


நல்ல மரம் ஆரோக்கியம்

வேப்பமரம் வளர்ப்பது எவ்வளவு நல்லது என்பதை யாவரும் அறிவோம், மற்றும் ஆலமரமும் , அரசமரமும் மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் நாம். இருந்தும் இந்த முள் மரத்தை பற்றி சரியாக விழிப்புணர்ச்சி நம்மிடம் இல்லையே என்பதே என் ஆதங்கம் .

சுற்றுபுறத்தில் புல், பூண்டை கூட வளரவிடாமல் தடுக்கும் இந்த முள் மரத்தை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை அரசாங்கம் தீவிர முயற்சி எடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் . சமூக ஆர்வலர்கள் இந்த மரத்தை பற்றிய பிரசாரங்களை செயல் படுத்தலாம், செய்வார்களா?


இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்....

இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்.....! நம் மண்ணின் மாண்பை காப்போம்..!!
                                                                                                                                            நன்றி:முஜாஹித்பின்ரசீன்   

2:12 AM | 0 comments | Read More

”ரமளான் நேரடி ஒளிபரப்பு” வெளிநாட்டு வாழ் மக்களிடையே ஏற்படுத்திய தாக்கம்! டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையின் முதல் பக்கச் செய்தி!

Written By GM.BASHA on Monday, August 23, 2010 | 3:56 AM




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமையகத்தில் பி.ஜே அவர்கள் நிகழ்த்தும்இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் நெஞ்சங்கள் பார்த்து பயனடைய வேண்டும் என்ற நோக்கத்தில் www.tntj.net www.onlinepj.com ஆகிய இரு இணையதளங்களில் நாம் கூடுதல் தொழில் நுட்பத்தில் நேரடி ஒளிபரப்பு செய்து வருகின்றோம்!.
இந்த நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி வெளிநாட்டு வாழ் தமிழ் பேசும் நெஞ்சங்களிடையே மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்களின் இறை உணர்வை வழுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாகவும் முன்னணி ஆங்கில பத்திரிக்கையான THE TIMES OF INDIA முதற் பக்கச் செய்தி (இன்று 21-8-2010) வெளியிட்டுள்ளது!
அல்ஹம்துலில்லாஹ்!

3:56 AM | 0 comments | Read More

கதையல்ல நிஜம் தாயினாலேயே நிர்வாணப்படுத்தப்பட்ட மகள்.

Written By GM.BASHA on Tuesday, August 17, 2010 | 3:41 AM



விஜய் டிவியில் பரபரப்புப் பேட்டி. கலத்தில் தவ்ஹீத் ஜமாத்.

  தொகுப்பு  Rasmin  M.I.Sc

 வீடியோ மற்றும் பின்னனித் தகவல்கள்.

கோவை மாவட்டம் குனியமுத்தூர் என்ற ஊரில் ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட கொடுமை ஊரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது கடந்த 9.08.2010 அன்று விஜய் டிவியின் நிஜம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு சகோதரி தனக்கு நடந்த அவலத்தை அந்த நிகழ்சியில் தெரிவித்தது பார்ப்போரை கண்கலங்க வைத்தது.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை அடைய முயற்சிப்பதாகவும் அவர் தன்னை துன்புருத்துவதாகவும் அந்த நிகழ்சியில் தெளிவாக குறிப்பிட்டதுடன் இதற்கு தனது தாயும் தந்தையும் கூட உடந்தை என்பதை பகிரங்கமாக தெரிவித்தார்.

நடந்தது என்ன?

விஜய் டிவியின் நிகழ்சிக்கு முன் இந்த சகோதரிக்கு நடந்தது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

அதாவது கடந்த 19.02.2010 அன்று கோவை குனியமுத்தூர்  போலிஸ் நிலையத்தில் சபிய்யா பானு என்ற சகோதரி தனது தாய் மாமனுடன் சென்று ஒரு வழக்குப் பதிவு செய்தார்.

ஆரச்சாமி என்ற ஒருவர் தன்னை மானபங்கப் படுத்த முயல்வதாகவும்.அதற்கு தனது தாயும் தந்தையும் உடந்தையாக இருப்பதாகவும் அவர்கள் தன்தை ஆரச்சாமிக்கு திருமணம் முடித்துக் கொடுக்க முயல்வதாகவும் இதனைத் தடுத்து நிருத்த காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார்.

அததைத் தொடர்ந்து கோட்டின் மூலம் ஆரச்சாமி ஜாமினில் வெளிவந்து விடுகிறான் அந்த வழக்கு இன்னும் நிழுவையில் உள்ளது.

அந்தச் சகோதரியின் தாய் மாமா பாட்டி அனைவரும் இவரை அவரின் வீட்டிட்கு அனுப்ப வேண்டாம்.இந்தப் பெண்ணை அங்கு அனுப்பினால் அவர்கள் மீண்டும் அவருக்கு துன்பம் கொடுப்பார்கள் என்று போலிஸில் சொல்லியும் ஏதோ ஒரு காரணத்தினால் அந்தச் சகோதரி மீண்டும் அவருடைய பெற்றோருடனே அனுப்பப் பட்டார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்குகிறது.

மீண்டும் 02.07.2010 அன்று வெள்ளிக்கிழமை ஸ்கூல் சென்ற அந்தச் சகோதரி அங்கிருந்து திருப்பூரிலிருக்கும் தனது தாய் மாமாவின் வீட்டிட்கு செல்கிறாள்.

அந்த மாமா குறிப்பிட்ட சகோதரியை அழைத்துக் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டத்தை அனுகினார்.

பிரச்சினையை கையிலெடுத்தது தவ்ஹீத் ஜமாத்

07.07.2010 அன்று இந்தச் சகோதரிக்கு நேர்ந்த கொடுமையை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தில் அவருடைய தாய் மாமா மூலமாக தெரியப் படுத்துகிறார்.

பிரச்சினையை கையில் எடுத்த தவ்ஹீத் ஜமாத் உடனே கலத்தில் குதித்தது.

07.07.2010 அன்று தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்;ட நிர்வாகம் கமிஷ்னரை சந்திக்கிறார்கள்.

குறிப்பிட்ட சகோதரிக்கு நடந்த கொடுமைகள் கமிஷ்னரிடம் தெளிவாக விளக்கப் பட்டது.அதனைத் தொடர்ந்து கமிஷ்னரின் வேண்டுதலுக்கிணங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அந்தச் சகோதரியுடன் மாவட்ட நிர்வாகம் சென்றது.

மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டவுடன் 09.07.2010 அன்று மீண்டும் அந்தச் சகோதரியை அழைத்துக் கொண்டு விசாரனைக்கு வரும் படி அனைத்துக் மகளிர் காவல் நிலையம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டது.
அதுவரை தவ்ஹீத் ஜமாத்தின் பாதுகாப்பில் அந்தச் சகோதரியை வைத்துக் கொள்வதாகவும் முடிவு செய்யப் பட்டது.

09.07.2010 அன்று மகளிர் காவல் நிலையத்தில் வைத்து குறிப்பிட்ட சகோதரியின் தாயிடத்தில் விசாரனை செய்யப் பட்டபோது தாய் தனது மகள் என்று கூடப் பார்க்காமல் காரசாரமாக அந்தச் சகோதரியை திட்டுகிறார்.

அதனைத் தொடர்ந்து மீண்டும் மகளிர் காவல் நிலையம் 12.07.2010 அன்று விசாரனைக்கு வரும்படி சொல்ல அழைத்து சென்றது தவ்ஹீத் ஜமாத் நிர்வாகம்.

மீண்டும் விசாரனையின் போது தனது மகளை காரசாரமாக வாய்க்கு வந்தபடி திட்டுகிறார் அந்தப் பெண்ணின் தாய்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலையத்தின் உத்தரவின் பேரில் தவ்ஹீத் ஜமாத்தின்; பாதுகாப்பில் குறிப்பிட்ட சகோதரி ஒப்படைக்கப் படுகிறார்.

தந்தையின் தீக்குழிப்பு நாடகம்.

19.07.2010 அன்று சாதிக் பாஷா(இவர் இந்துவாக இருந்து இஸ்லாத்தில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.) என்ற அந்தச் சகோதரியின் தந்தை கலக்டர் அலுவலகத்தின் முன் தீக்குழிக்கச் முயன்றார்.

அதனைத் தொடர்ந்து மகளிர் காவல் நிலைய வேண்டுதலின்படி நீதிபதி விசாரனைக்கு அந்தச் சகோதரி அழைத்துச் செல்லப் படுகிறார்.

கிட்டத் தட்ட 3 மணிநேரங்கள் விசாரனை நடத்தப் பட்ட பின் அந்த சகோதரியின் தாய் மற்றும் தந்தையை கடுமையாக கண்டித்து அதன் பின்  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் கோவை மாவட்ட கட்டுப் பாட்டில் அந்தச் சகோதரி விடப்பட்டார்.

விஜய் டிவி நிகழ்ச்சி.

நீதிபதி விசாரனையில் தான் குற்றவாளி என்று நிரூபிக்கப் பட்டதை மறைப்பதற்காக விஜய் டிவியின் கதையல்ல நிஜம் நிகழ்ச்சிக்கு அந்தப் பெண்ணின் தாய் தெரியப் படுத்தினார் அதனைத் தொடர்ந்து விஜய் டிவி நிர்வாகம் தவ்ஹீத் ஜமாத்தை கேட்டுக் கொண்டதற்கு இணங்க அந்தச் சகோதரியை குறிப்பிட்ட நிகழ்சியில் கலந்து கொள்ள அழைத்துச் சென்றது தவ்ஹீத் ஜமாத்.

கதையல்ல நிஜம்.

குறிப்பிட்ட சகோதரி பொய் சொல்கிறார் என்று செய்தி பரப்பிய தாய் தந்தை உற்பட ஆரச்சாமி என்ற காமுகனையும் விஜய் டிவி நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தது.

அந்த நிகழ்ச்சியில் சகோதரி அவர்கள் தான் இந்த ஆரச்சாமியால் பாதிக்கப் பட்ட முறையை தெளிவாக விளக்கினார்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி என்ற பெண்ணே இந்தச் சகோதரியின் செய்தியைக் கேட்டு ஆச்சரியப் பட்டார்.

சகோதரி ஆரச்சாமியைப் பற்றி சொன்ன சில செய்திகள்.

இவன் என்னுடைய தாயுடன் தவறான தொடர்பை வைத்திருக்கிறான்.

இது என் தந்தைக்கும் தெரியும்.

இவன் என்னை அடைவதற்கு பல முறை முயன்றான்.

என்னுடன் யார் பேசினாலும் அவர்களை கடுமையாக தாக்குகிறான்.

என்னை யாருடனும் பேசக்கூட விடுவதில்லை.

நான் வெளியில் சென்று விடாமல் இருக்க என் தாயும் இவனும் சேர்ந்து என்னை நிர்வாணப் படுத்தினார்கள்(சொல்லும் போதே விம்முகிறார்)

எனது தாய் தந்தையின் கண்முன்னே என்னை கடுமையாக தாக்குவான்.

இருவரும் அதனைப் பார்த்துக் கொண்டுதான் இருப்பார்கள்

இவனுக்கும் எனக்கும் எந்தத் உறவு முறைச் சொந்தமும் இல்லை ஆனாலும் இவன் என்மேல் என் தந்தையை விட அதிகமான அதிகாரம் செலுத்துகிறான்.

இப்படி பல செய்திகளை ஆரச்சாமி என்ற அந்த ஆசாமியைப் பற்றி சகோதரி எடுத்து வைத்தார்.

லக்ஷ்மியின் கேள்வியும் சகோதரியின் பதிலும்.

நிகழ்சியை நடத்திய லக்ஷ்மி அவர்கள் இப்படியெல்லாம் உன்னை இவன் துன்புருத்தக் காரணம் என்ன என்று கேட்டார்.

அதற்கு அந்தச் சகோதரி நான் இப்படி இவனிடமும் என் தாய் தந்தையிடமும் கஷ்டப் பட காரணம் என்னுடைய அழகு இதன் காரணமாகத் தான் இந்தக் காமுகன் என்னை இப்படி கஷ்டப் படுத்துகிறான் என்று அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

ஆரச்சாமியும் லக்ஷ்மியின் எச்சரிக்கையும்.

நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர் லக்ஷ்மி அந்த நிகழ்சியில் ஆரச்சாரமியை விசாரனைக்கு உட்படுத்தினார்.

அந்த விசாரனையில் நீங்கள் ஏன் இந்தப் பெண்னை இப்படி கஷ்டப் படுத்துகிறீர்கள் உங்களுக்கு இவர் என்ன உறவு இவருக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை கேட்க.

அரண்டு போன ஆரச்சாமி தனக்கும் குறிப்பிட்ட அந்த சகோதரிக்கும் எந்த ஒரு உறவும் இல்லை.

அவருடைய தாயாருடன் நான் வியாபாரம் செய்கிறேன்.அதனால் இந்தப் பெண்ணையும் எனக்குத் தெரியும் வீட்டிட்கு போய் வருவேன்.

அவருடைய நல்லது கெட்டதுகளை பார்த்துக் கொள்வேன்  என்று சொன்னார்.

அதற்கு பின் பேசிய லக்ஷ்மி இவர் சொல்வதில் என்ன உண்மை இருக்கிறது என்று சகோதரியிடம் கேட்க இவருக்கும் எனது தாய்க்கும் வேறுவிதமாக தொடர்பு இருக்கிறது.

அத்தோடு இவர் என்னையும் அடைய முயற்சிக்கிறார் என்பதை அந்தக் காமுகனுக்கு முன் விஜய் டிவியில் தெளிவாக தெரிவித்தார்.

இதனை மறுத்த ஆரச்சாமிக்கு பதில் கூறிய லக்ஷ்மி எந்தப் பெண்ணும் இல்லாத ஒன்றை தன்மேல் சொல்லி தனது எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ள மாட்டார் நீங்கள் இப்படி நடந்ததால் தான் இவர் இப்படி குறிப்பிடுகிறார் என்பதை விளக்கி சொல்ல தான் அப்படி நடந்தேன் என்பதற்கு சாட்சியாக ஆரச்சாமி அமைதியாக இருந்தார்.

வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

விசாரிக்கப் பட்ட தாயும் தந்தையும்.

இருதியாக தாயையும் தந்தையையும் விசாரித்தார் லக்ஷ்மி அப்போது தாய் மாறி மாறி பேசியது அவர் ஒரு குற்றவாளிதான் என்பதையும் தந்த ஒரு கையாலாகாத ஆரச்சாமியின் பணத்திற்கு அடிமையான ஒருவன் என்பதும் தெளிவாக விளங்கியது.

தீக்குழிப்பு என்று கூறியதெல்லாம் நாடகம் என்பதும் அந்த வீடியோவில் நிரூபிக்கப் பட்டது.

அதே போல் இனிமேல் எந்தவிதமான கஷ்டமும் இந்தப் பெண்ணுக்கு கொடுக்கக் கூடாது என்றும் அதில் தெரிவிக்கப் பட்டது.

தந்தையை எச்சரித்த லக்ஷ்மி.

சம்பந்தமே இல்லாத ஒருவன் உங்கள் பிள்ளையை அடித்து துன்புருத்தியுள்ளான் இதையெல்லாம் பார்த்து நீங்கள் சும்மா இருந்துள்ளீர்கள்.

இனிமேலாவது ஒரு ஆண்மகனைப் போல் நடந்து கொள்ளுங்கள் என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.

தகவல் :

சகோதரர் நவ்ஷாத்
செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாவட்டம்.
Ph : 00919150125002

                                                                                                                                     நன்றி:ரஷ்மின்.
3:41 AM | 0 comments | Read More

மாரிஸ் புகைல் இஸ்லாத்தை தழுவிய நிகழ்வு

Written By GM.BASHA on Monday, August 16, 2010 | 3:13 AM


மஸ்ஊத் அப்துர்ரஊப்
ஒரு பிரான்ஸ் நாட்டவரும் மம்மியும் 1981ல் பிரான்ஸிஸ்கோ மில்ட்ரன் பிரான்ஸின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்த போது என்பதுகளின் கடைசிப்பகுதியில் பிர்அவ்னின் சடலத்தைப் பகுப்பாய்வுக்குட்படுத்துவதற்காக தம்மிடம் ஒப்படைக்குமாறு பிரான்ஸ் அரசு எகிப்திடம் கோரிக்கை முன்வைத்தது. இவ்வேண்டுகோலுக்கினங்க பிர்அவ்னின் சடலம் விமானம் மூலமாக பிரான்ஸிற்குக் கொண்டு செல்லப்பட்டது. இவ்விமானத்தை வரவேற்பதற்காக பிரான்ஸின் அதிபரும் விமான நிலையத்தில் காத்திருந்தார். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர். அரச வரவேற்பளிக்கப்பட்ட பின்னர் பிர்அவ்னின் உடல் ஆய்வகம் நோக்கிக் கொண்டு செல்லப்பட்டது.
தொள்பொருள் ஆய்வாளர்கள் சத்திரசிகிச்சை நிபுணர்களென ஆரய்ச்சிக்குத் தேவையானவர்களனைவரும் ஆய்வகத்திலே குழுமியிருந்தனர். சத்திரசிகிச்சை குழுவுக்கு prof:Maurice Bucaille தலைமை தாங்கினார். பிர்அவ்ன் எப்படி மரணமடைந்தான் என்பது பற்றிய தகவல்களை கண்டுபிடிப்பதற்காக ஆய்வாளர்கள் பெரும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இக்குழுவுக்குத் தலைமை வகித்த prof:Maurice அவர்களும் இப்பணியில் மூழ்கியிருந்தார். நல்லிரவு கழித்து ஆய்வு முடிவு வெளியாகியது. உடலில் உப்பு படிந்திருப்பதானது பிர்அவ்ன் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளமைக்கான சிறந்த சான்றாகும் என்றும் கடலில் மூழ்கியவுடனே இவ்வுடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் உடலைப் பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடலுக்கடியிலிருந்து வெளியெடுக்கப்பட்டிருந்தாலும் உடல் பழுதடையாமல் எந்த பாதிப்புக்களும் ஏற்பட்டிருக்காமல் காணப்பட்டமை பெரும் ஆச்சரியமாகவிருந்தது. prof:Maurice பிர்அவ்னின் உடல் கடலுள்ளிருந்து வெளியெடுக்கப்பட்டமை தொடர்பாகவும்இ அவ்வுடல் கடலுக்கடியிலே பாதுகாக்கப்படடிருந்தமை தொடர்பாகவும் தனது ஆய்வின் இறுதியரிக்கையினைத் தயாரித்தார். அங்கு குழுமியிருந்தவர்களில் ஒருவர் இன்னொருவரின் காதில் மெதுவாக ‘அவசரப்படாதே. முஸ்லிம்கள் இந்த மம்மி மூழ்கடிக்கப்பட்டதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.” என்று கூறினார். prof:Maurice அவர்கள் அந்த நபர் சொன்ன இத்தகவலை ஏற்கவில்லை. பிர்அவ்னைப்பற்றிய இச்செய்திளை அறிவதென்றால் கணனி வசதியுடன் கூடிய நவீன ஆய்வு மையங்கள் மூலமாகவே அறிந்துகொள்ள முடியுமென்று கூறினார். அதாவது பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்ட செய்தி பற்றி முஸ்லிம்களுக்குத் தெரியுமென்று அந்த நபர் கூறியதை மாரிஸ் புகைல் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது அங்கிருந்த இன்னொருவர் ‘பிர்அவ்ன் மூழ்கடிக்கப்பட்டதாகவும்இ மூழ்கடிக்கப்பட்ட பின் அவனின் உடல் பாதுகாக்கப்படுமெனவும் முஸ்லிம்களின் அல்குர்ஆனில் கூறப்படுகின்றதே” என்று கூறினார். இச்செய்தியைக் கேள்வியுற்ற மாரிஸ் புகைல் அவர்கள் மேலும் திடுக்கிட்டுப் போனார். ‘இது எப்படி சாத்தியமாகும்? இந்த மம்மியின் உடல் 1898ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. முஸ்லிம்களின் அல்குர்ஆனோ 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களிடம் இருக்கின்றது. எகிப்தியப் பழங்குடி மக்கள் தமது மன்னர்கள் இறந்த பின் அவர்களின் சடலங்கள் கெட்டுவிடாமல் இருப்பதற்காக ஒரு வகை மருத்துவ முறையினைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்ற செய்தி சில தசாப்பதங்களுக்கு முன்னர்தான் அரேபியர் உட்பட அனைவருக்கும் தெரியவாகிற்று அதற்கு முன்னர் முஸ்லிம்களுக்கு இந்த மம்மி பற்றிய தகவல் தெரிவதற்கு வாய்பில்லாத போது இது எப்படி சாத்தியமாயிற்று?” என்று அங்கு கூடியிருந்தவர்களிடம் வினவ ஆரம்பித்தார்.
prof:Maurice அவர்கள் அன்றைய இரவு பிர்அவ்னின் உடலுக்கு முன்னாலிருந்து அதை ஆழமாக அவதானிக்கத் தொடங்கினார். முஸ்லிம்களின் அல்குர்ஆன் இந்த மம்மியைப் பற்றிப் பேசுகின்றது என்று அந்த நபர் சொன்ன தகவல் ‘மூஸாவைத் துரத்திச் சென்ற அந்த பிர்அவ்ன் இதுவாகத்தான் இருக்க முடியுமோ?” ‘முஸ்லிம்களின் முஹம்மத் இவரை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருப்பாரோ?” ‘முஸ்லிம்களின் அல்குர்ஆன் கூறும் அந்த மம்மி இதுவாகத்தான் இருக்குமோ?” போன்ற வினாக்ளை அவருள் ஏற்படுத்தியது. மாரிஸ் அவர்களுக்குத் தூக்கம் வரவில்லை. தவ்ராத்தைக் கொண்டு தருமாறு அங்குள்ளவர்களிடம் மாரிஸ் அவர்கள் வேண்டிக் கொண்டதும் தவ்ராத் அங்கு கொண்டு வரப்பட்டது. தவ்ராத்தைப் படித்தார். ‘பிர்அவ்னின் படைகள் தண்ணீரில் மூழ்கின. அவனும் கடலில் மூழ்கினான். அவர்களுள் ஒருவரும் தப்பவில்லை” என்பது மாத்திரமே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்ஜீலைப் படித்தார். அதிலும் இவ்வுடல் பாதுகாக்கப்படுவது பற்றி எதுவும் கூறப்பட்டிருக்கவில்லை. மாரிஸ் அவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார். பரிசோதனை முடிந்ததும் பிர்அவ்னின் உடல் எகிப்துக்குக் கொண்டு வரப்பட்டது.
இருந்தாலும் மாரிஸ் அவர்களால் ஒரு நிமிடமேனும் தாமதிக்க முடியவில்லை. இது பற்றி அறிவதற்காக முஸ்லிம் அறிஞர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவென இஸ்லாமிய நாடுகளுக்குப் பயணமாகத் தொடங்கினார். அந்த சந்திப்பிலே அவர் முதலாவதாக வினவியது பிர்அவ்னின் உடல் கடலில் மூழ்கடிக்கப்பட்டபின் பாதுகாக்கப்படுவது பற்றித்தான். அப்போது சபையிலிருந்த ஒருவர் அல்குர்ஆனில் சூறா யூனுஸில் இடம் பெறும் ‘உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்”. என்ற வசனத்தை ஓதிக் காண்பித்தார். இக்குர்ஆன் வசனம் மாரிஸ் புகைல் அவர்களின் உள்ளத்தையே உலுக்கியது. உடனே எழுந்து எல்லோருக்கும் முன்னால் சத்தத்தை உயர்த்தியவராக ‘நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல் குர்ஆனை நம்பி விட்டேன்” என்று அவர் இஸ்லாத்தைத் தழுவினார்.
பின்னர் பிரான்ஸிற்குச் சென்று 10 வருடங்களாக நவீன கண்டு பிடிப்புக்கள் அல்குர்ஆனுக்கு எவ்வளவு தூரம் உடன்படுகின்றன என்ற ஆய்வை மேற்கொண்டு ‘அல்குர்ஆன்இ தவ்ராத் இன்ஜீல்…. நவீன அறிவியலின் ஒளியில் புனித வேதங்கள் ஓர் ஆய்வு” எனும் நூலை வெளியிட்டார். இதைப்பார்த்த மேற்குலகு அதிர்ந்து போனது. குறுகிய காலத்துள் இப்புத்தகம் விற்றுத் தீர்ந்து போனமை குறிப்பிடத்தக்கதாகும். இன்றைக்கும் எகிப்து நூதன சாலைக்கு பல ஆய்வாளர்கள் வந்து செல்வதைக் காண்கின்றோம். இவர்களுள் மாரிஸ் புகைல் போன்று படிப்பினை பெற்றவர்களைக் காண்பதற்கில்லை என்றுதான் கூறமுடிகின்றது. எனவே அல்குர்ஆன் வெறும் விஞ்ஞான உண்மைகளை மாத்திரம் சொல்லவில்லை மனித சமூகத்துக்குத் தேவையான எத்தனையோ அரிய பல வழிகாட்டல்களை சொல்லித் தருகின்றது. இதையுணர்ந்து மனித சமூகம் அதைப்படிக்குமானால் இன்னும் பல மாரிஸ் புகைல்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.
                                                                                                                                                                  நான்றி:முஜஹித்ஸ்ரீலங்கா.
3:13 AM | 0 comments | Read More

மகனால் மனம் திருந்திய தந்தை ஓர் உண்மைச் சம்பவம்




மஸ்ஊத் அப்துர்ரஊப்
எனது முதல் குழந்தையை எனது மனைவி பெற்றெடுக்கும் போது எனக்கு வயது முப்பதைத் தாண்டியிருக்கவில்லை. இரவின் கடைசிப் பகுதி வரைக்கும் அரட்டையடித்துக் கொண்டிருந்த அந்த இரவை நான் மறக்கமாட்டேன். அது வெட்டிப்பேச்சுக்கள் நிறைந்த ஓரிரவாக இருந்தது. மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதிலும் கூடாத செய்திகளை ஏனையவர்கள் மீது சுமத்துவதிலும் மூழ்கிப்போன ஓரிரவாக அது இருந்தது. பெரும்பாலும் அவர்களை சிரிப்பூட்டுவதையும் புறம் பேசுவதையும் நானே பொறுப்பேற்றிருந்தேன். அந்த இரவை நான் நினைவுபடுத்திப் பார்க்கிறேன்.
ஆம் நான் அனைவரையும் கேலி செய்தேன் எனது நண்பர்கள் வரைக்கும் எவரும் என்னிடமிருந்து தப்பவில்லை. சில நபர்கள் எனது கிண்டல்களிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ள என்னை விலகி நடந்தார்கள்.அந்த இரவில் நான் கண் தெரியாத ஒரு மனிதரைப் பார்த்தேன். அவர் சந்தியிலே தடுமாறித் தடுமாறிச் சென்று கொண்டிருந்தார். அதில் கவனிக்கவேண்டியது என்னவெனில் எனது கால்களை அவருக்கு முன்னே நான் வைத்தேன் உடனே அவர் கீழே விழுந்தார்.  அவர் தனது தலையால் உந்து நோக்கி அவர் என்ன கூறுகிறார் என்பதை அவரே அறியாத நிலையிலிருந்தார். நான் சிரித்தவனாக சந்தை வழியே நடந்தேன். வழமைபோல தாமதமாகவே என் வீட்டுக்கு வந்தேன். என் மனைவி என்னை எதிர்பார்த்தவாறு இருந்ததைக் கண்டேன். அவளோ பார்ப்பதற்கு பரிதாபமான நிலையிலிருந்தாள். கவலை தோய்ந்த குரலில் “ராஷீத் நீங்க எங்கே இருந்தீங்க?” அவள் கேட்டாள். நான் கேலி செய்தவனாக வழக்கம் போல ‘செவ்வாய்க் கிரகத்தில் என் நண்பர்களுடன் நகைச்சுவையில் இருந்தேன்” என்று கூறினேன்.
‘நான் சோர்ந்து போயுள்ளேன். எனது பிரசவ நேரம் சில நொடிகள்தான் என்பது எனக்குத் தெரிகிறது” என்று அவள் கூறினாள் அப்போது அவளின் கன்னத்திலே கண்ணீர்ச் சொட்டுக்கள் வடிந்தன. எனது இரவு நேர வெட்டிப்பேச்சைக் குறைத்து என் மனைவியின் விடயத்திலே நான் கவனம் எடுக்க வேண்டும் என்பது கட்டயாம் என நான் உணர்ந்தேன். குறிப்பாக அவள் தனது ஒன்பதாவது மாதத்திலிருப்பதால் நான் மிக அவதானத்துடன் இருப்பது அவசியம் என எனக்குப் புலப்பட்டது. உடனே என் மனைவியை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றேன். பிரசவ அறைக்குள் நுழைந்தேன். தாங்க முடியாத வேதனைகளால் என் மனைவி நீண்ட நேரம் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். பொறுமை இழந்தவனாக நான் அவளின் பிரசவத்தை எதிர்பார்த்திருந்தேன். அவளின் மகப்பேற்றுக்காய் நான் அவசரப்பட்டேன். நீண்ட நேரம் நான் காத்திருந்ததால் எனக்கு சோர்வேற்பட்டது. தவிர்க்கமுடியாது நான் வீடு சென்றேன். என் மனைவியைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களிடம் என் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்து எனக்கு நற்செய்தி கூறச்சொல்லியிருந்தேன்.
சில மணிநேரத்துக்குப் பின்னர் ஸாலிம் பிறந்த செய்தியை எனக்கு கூறுவதற்காய் என்னோடு அவர்கள் தொடர்பு கொண்டார்கள். உடனே மருத்துவமனைக்கு நான் விரைந்தேன். அங்கே சென்ற நான் என் மனைவியின் அறையைத்தான் முதலில் அவர்களிடம் கேட்டேன். என் மனைவிக்குப் பொறுப்பான வைத்தியரை நாடுமாறு என்னிடம் அவர்கள் வேண்டிக் கொண்டனர். ‘அவர் எந்த வைத்தியர் என எனக்குச் சொல்லுங்க” என்று உரத்த குரலில் நான் அவர்களிடம் கேட்டேன் ஏனெனில் என் மகன் சாலிமைப் பார்ப்பதற்கு நான் ஆவலாய் இருந்தேன்.
நான் வைத்தியரின் அறைக்குள் நுழைந்தேன் அல்லாஹ்வின் சோதனைகள் பற்றியும் அவனின் ஏற்பாட்டு விதிகளை நல்ல முறையில் பொருந்திக் கொள்வது பற்றியும் என்னிடம் அன்பாய் எடுத்துக் கூறினார். பின்னர் “உனது குழந்தையின் கண்களில் கடுமையான திறை காணப்படுகிறது அதனால் உன் குழந்தை கண் பார்வையிழந்திருப்பது தெரியவந்துள்ளது” என்று அவர் கூறினார். நான் தலை குனிந்தேன். நான் சந்தித்த கடந்த கால நிகழ்வுகளை ஒரு கனம் அலவிப்பார்த்தேன். அப்போது சந்தையிலே ஏலனம் செய்து தொந்தரவுபடுத்தி சிரிப்புக்கு ஆளான அந்த கண்தெரியாத மனிதர் என் நினைவில் தெரிந்தார். அல்லாஹ் மிகத் தூய்மையானவன் அவன் எப்படி நாடினானோ அவ்வாறே உலகம் இயங்குகிறது. சற்று நேரம் நிலைகுலைந்தவனாக நான் நின்றிருந்தேன். என் மனைவியையும் என் குழந்தையையும் ஞாபகப்படுத்தினேன். வைத்தியரின் கருனைத் தன்மைக்காய் அவருக்கு நன்றி கூறிவிட்டு என் மனைவியைப் பார்ப்பதற்காய் நடந்தேன். என் மனைவி கவலைப்படவில்லை அவள் அல்லாஹ்வின் விதிகளை நம்பியவளாகவும் ஏற்பவளாகவும் மனிதர்களை ஏலனம் செய்யக்கூடாதென காலமெல்லாம் எனக்கு உபதேசிப்பவளாகவுமிருந்தாள் ‘புறம்பேசவேண்டாம்” என அடிக்கடி எனக்கு அவள் அறிவுரை கூறுவாள்.
வைத்தியசாலையிலிருந்து தாயும் சேயும் நானும் வெளியேறினோம். உண்மையிலேயே என் குழந்தையிலே அதிகமாக நான் கவனமெடுக்கவில்லை. அவனை வீட்டில் இல்லாதவாறே என் குழந்தையை நான் கணக்கிட்டேன். என் குழந்தை அழுகின்ற போது முன்னறைக்குச் சென்று உறங்குவதற்காக நான் விரண்டோடிவிடுவேன். ஆனால் என் மனைவி குழந்தை ஸாலிம் மீது அதிகம் கவனமெடுப்பவளாக அவனை அதிகமாய் நேசிப்பவளாக இருந்தாள். இருந்தாலும் நான் அவனை வெறுத்திருக்கவில்லை என்றாலும் அவனை என்னால் நேசிக்க முடியவில்லை. ஸாலிம் வளர்ந்தான் தவழ ஆரம்பித்தான் அவனுடைய தவழுகை அபூர்வமாய் இருந்தது. அவனுடைய வயது ஒரு வருடத்தை எட்டியது அவன் நடக்க முயற்சித்தான். அவனைப் பார்த்த போது அவனால் நடக்கவும் முடியாத அங்கவீனம் என்பது தெரியவந்தது. அது என்னுள்ளத்தில் இன்னும் சுமையை அதிகரித்தது.
அவனுக்குப் பின்னால் என் மனைவி உமரையும் காலிதையும் பெற்றெடுத்தாள். வருடங்கள் கழிந்தன ஸாலிமும் பெருத்து ஆளானான். அவனுடைய இரு சகோதரர்களும் அவ்வாறே வளர்ச்சியடைந்தார்கள். அதிகமாக வீட்டிலிருப்பதை நான் விரும்பவில்லை. எந்நேரமும் என் நண்பர்களுடனேயே இருந்தேன். உண்மையில் நான் என் நண்பர்களின் கையில் ஒரு விளையாட்டுப் பொருளைப்போன்றே இருந்தேன். ஆனால் என் மனைவி என்னைத் திருத்தும் முயற்சியில் நம்பிக்கையிழக்கவில்லை. எனக்கு நேர்வழி கிடைப்பதற்காக எப்போதும் அவள் துஆ செய்பவளாக இருந்தாள். எனது மோசமான நடத்தைகளால் அவள் கோபமடையவில்லை. என்றாலும் நான் சாலிமைக் கணக்கெடுக்காது அவனுடைய சகோதரர்கள் மீது கவனமெடுப்பதைப் பார்த்து அவள் அதிகம் கவலையடைந்திருந்தாள்.
ஸாலிமும் வளர்ந்தான் அவனுடன் என் கவலையும் வளர்ந்தது. எனது மனைவி அவனை அங்கவீனர் பாடசாலையொன்றில் சேர்க்குமாறு என்னிடம் வேண்டியபோது நான் அதை மறுக்கவில்லை. வேலை செய்வதும் உறங்குவதும் சாப்பிடுவதும் இரவு நேர அரட்டை என்றும் எனது காலங்கள் கழிந்தன. எனது கெட்ட நாட்கள் பற்றி நான் யோசிக்கவில்லை.
ஒரு வெள்ளிக்கிழமை தினமன்று பகல் நேரம் பதினொரு மணியளவில் நித்திரை விட்டெழுந்தேன் நான் வலீமா ஒன்றுக்கு அழைக்கப்பட்டிருந்ததால் குறித்த நேரத்தைவிட முன்னர் நான் விழித்திருந்ததன் காரணமாக நேரம் மிச்சமாயிருந்தது. ஆடையணிந்து வாசனை பூசி வீட்டிலிருந்து வெளியேறுவதற்காக வீட்டின் வரவேற்பறையைக்கடந்து நான் சென்ற போது ஸாலிமுடைய காட்சி என்னை நிறுத்தியது. ஸாலிம் அழுது கடந்து கொண்டிருந்தான் ஸாலிமுடைய குழந்தைப் பருவத்திலிருந்து கடந்த 10 வருடங்களில் அவன் விடயத்தில் நான்  கவனம் செலுத்தியது இதுவே முதற்தடவையாகும்.
நான் அவன் பக்கம் பார்க்கவில்லை அவனை நான் காணாததுபோல் செல்ல முயற்சித்தேன் அவன் தனது தாயை அழைக்கும் சத்தத்தை நான் கேட்டேன். ஏனெனில் நானும் அவ்வறையிலேயே இருப்பேன் இருந்தும் நான் அவனை அன்பாய் தூக்கியது கூட இல்லை. அவனைப் பார்த்தேன் அவனருகே சென்று ஸாலிம் எதற்காக அழுகிறாய் எனக்கேட்டேன் எனது ஓசையை அவன் கேட்டதும் அழுகையை நிறுத்திவிட்டான் நான் அவனருகே இருப்பதை அவன் உணர்ந்ததும் தனது இரு சிறு கைகளாலும் அவன் எதையோ தேட ஆரம்பித்தான். ‘நீ எதைத் தேடுகிறாய்” என நான் கேட்டேன் அவன் என்னைவிட்டுத் தூரமாக முயற்சிக்கின்றான் என்பது எனக்குத் தெரியவந்தது. ஏனெனில் அப்போது இப்பொழுதா உனக்கு என்னைத் தெரிந்தது சென்ற 10 வருடங்களாக நீ எங்கிருந்தாய்? என்று அவன் பேசுவதுபோன்று இருந்தது. அவனது அறைக்குள் நுழைந்தான் நானும் அவனைப் பின் தொடர்ந்தேன் ஆரம்பத்தில் தனது அழுகைக்கான காரணத்தை என்னிடம் கூற அவன் மறுத்துவிட்டான். அன்பாய் அவனிடம் விசாரித்தேன் ஸாலிம் தன் அழுகையின் காரணத்தைக் கூற ஆரம்பித்தான் பணிவாய் அவன் பேச்சை செவிமடுத்தேன் என்ன காரணம் தெரியுமா? ஸாலிமை பள்ளிக்குக் கூட்டிச் செல்லும் அவனுடைய சகோதரன் உமர் சற்று தாமதமாகிவிட்டான் ஏனெனில் ஜும்ஆ தினமாகவிருந்ததால் முதல் வரிசையில் தனக்கு இடமில்லாது போயிருக்கும் என்று ஸாலிம் பயந்தான். எனவேதான் உமரை அழைத்துள்ளான் தன் தாயை அழைத்துள்ளான். என்றாலும் யாரும் அவனுக்கு பதில் கூறவில்லை எனவே அழுதிருக்கிறான்.
அவனுடைய இரு கண்களுக்குமிடையில் வழிந்தோடும் கண்ணீரைப் பார்த்தேன். எஞ்சிய அவனுடைய வார்த்தைகளைக் கேட்பதற்கு என்னால் முடியவில்லை. எனது கைகளை அவனுடைய வாயில் வைத்து இதற்காகவா ஸாலிம் நீ அழுதாய் என நான் கேட்க அவன் “ஆம்” என்றான். என் நண்பர்களை மறந்தேன் வலீமாவையும் மறந்தேன் ஸாலிம் நீ கவலைப்படாதே இன்று உன்னை யார் பள்ளிக்கு அழைத்துச் செல்வதென்று உனக்குத் தெரியுமா என அவனிடம் வினவினேன் அவன் ‘உமர் என்னை அழைத்துச் செல்வான் என்றாலும் அவன் எப்போதும் தாமதமாகவே செல்வான்” என்று வருத்தத்துடன் கூறினான். ‘இல்லை நானே உன்னை அழைத்துச் செல்வேன்” எனச் சொன்னதும் சாலிம் திடுக்கிட்டான். அவன் இதை நம்பவில்லைஇ நான் அவனைக் கேலி செய்வதாக நினைத்து என்னிடம் என்னிடம் விளக்கம் கேட்டழுதான். அவன் கண்ணீரைத் துடைத்து அவன் கைகளைப் பற்றி காருக்கு அவனை அழைத்துச் செல்ல முனைந்தேன் ‘பள்ளி பக்கத்தில்தான் இருக்கிறது நான் நடந்தே செல்லவேண்டும்” என்று கூறி அவன் காரில் செல்ல மறுத்தான். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் அவ்வாறே என்னிடம் சொன்னான் நான் கடைசியில் எப்போது பள்ளிக்குள் நுழைந்தேன் என்பதை நான் மறந்துவிட்டேன். என்றாலும் இத்தடவை முதலாவதாக நான் பள்ளிக்குள் நுழையும்போது என்னுள் பயத்தை உணர்கின்றேன். கடந்த பல வருடங்களாய் நான் பள்ளிக்குச் செல்லாததை நினைத்து என்னை நானே நொந்து கொண்டேன். நாடி நரம்புகளிலெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போல் எனக்கோர் உணர்வு ஏற்பட்டது.
பள்ளிவாயல் முழுவதுமாய் சனம் நிறைந்து காணப்பட்டது. என்றாலும் ஸாலிமுக்காய் முதல் வரிசையில் ஓரிடம் இருக்கத்தான் செய்தது இருவரும் ஜும்ஆ பிரசங்கத்தைக் கேட்டோம். அவன் எனக்கருகிலிருந்து தொழுதான் ஆனால் உண்மையில் நான் தான் அவனருகிலிருந்து தொழுதேன். தொழுகை முடிந்ததும் ஸாலிம் என்னிடம் குர்ஆனை எடுத்துத் தருமாறு வேண்டினான் நான் ஆச்சரியப்பட்டேன். ‘கண் தெரியாமல் எவ்வாறு குர்ஆனை ஓதப்போகிறான்”  நான் அவனைக் கணக்கெடுக்காதது போல் இருந்தேன் இருந்தாலும் அவன் உணர்வுகள் பாதிக்கப்படக்கூடாதென்று குர்ஆனை எடுத்துக் கொடுத்தேன். சூரத்துல் கஹ்பை புரட்டித் தருமாறு என்னிடம் அவன் வேண்ட ஒரு முறை பக்கங்களைப் புரட்டினேன் இன்னொருமுறை சூராக்கள் அட்டவனையையும் புரட்டி குறித்த சூராவைத் தேடி எடுத்து அவனிடம் கொடுத்தேன். குர்ஆனை எடுத்து தன் முன்னே வைத்த அவன் தன் கண்கள் மூடிய நிலையில் சூரத்துல் கஹ்பை ஓத ஆரம்பித்தான். யா அல்லாஹ் அவன் அந்த சூராவை முழுமையாகப் பாடமிட்டிருந்தான். நான் வெட்கப்பட்டேன்.
அல்குர்ஆனை எடுத்தேன் அந்த சூராவை மீண்டும் மீண்டும் ஓதினேன். என்னை மன்னித்து எனக்கு நேர்வழிகாட்டுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். என்னால் தாங்க முடியாது குழந்தைகள் போன்று அழ ஆரம்பித்தேன். பள்ளியில் சில மனிதர்கள் ஸ{ன்னத் தொழுது கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்து நான் வெட்கமடைந்தேன். என் அழுகையை மறைக்க முயற்சித்தேன் முடியாமல் தேமித் தேமி அழ ஆரம்பித்தேன். அவ்வேளை ஒரு சிறிய கை என்னைத் தேடுவது போன்றும் பின்னர் அது என் கண்ணீரைத் துடைப்பது போன்றும் உணர்ந்தேன். அது யாருமில்லை ஸாலிம்தான். அவனை என் நெஞ்சோடு அனைத்து அவனைப் பார்த்து ‘நீ அல்ல குருடன் உண்மையில் நான்தான் குருடன்” என எனக்குள் நானே கூறிக்கொண்டேன்.
பின்னர் வீட்டுக்கு வந்தோம் என் மனைவி ஸாலிம் மீது பயம் கொண்டவளாய் காணப்பட்டாள். ஸாலிமுடன் நானும் ஜும்ஆத் தொழுகை நிறைவேற்றிய விடயம் அவளுக்குத் தெரிந்ததும் அவளின் கவலை கண்ணீராய் மாறியது. அன்றைய தினத்திலிருந்து எந்தவொரு ஜமாஅத் தொழுகையையும் பள்ளியில் நிறைவேற்றாமல் நானிருந்ததில்லை.
தீய நண்பர்களை வெறுத்தொதுக்கி பள்ளிவாயலில் நான் சந்தித்த நல்லவர்களுடன் தோழமை கொண்டேன். அவர்களுடன் சேர்ந்து ஈமானின் சுவையை நான் உணர்ந்தேன் மறுமைக்காய் என்னை அழைத்துச் செல்லும் விடயங்களை இனங்கண்டேன். எந்தவொரு வித்ர் தொழுகையும் என்னை விட்டுத்தப்பிப் போகவில்லை. ஒரு மாதத்திலேயே குர்ஆனை பலமுறை முழுமையாய் ஓதி முடித்தேன். நான் மக்களைக் கேலி செய்ததற்காகவும்  புறம் பேசியதற்காகவும் அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டும். என்பதற்காய் எனது நாவு முழுவதும் அல்லாஹ்வை திக்ர் செய்வதில் நனைந்திருந்தது. நான் என் குடும்பத்துடன் மிக  நெருக்கமாயுள்ளேன் என்பதை உணர்ந்தேன்.
நீண்ட நாட்களாய் என் மனைவியின் கண்களில் குடிகொண்டிருந்த அச்சமும் கவலையும் மறைந்து போயின. எந்நேரமும் என் மகன் ஸாலிமுடைய முகத்தில் புன்னகை வெள்ளமானது. யார் இவற்றைக் காண்பாரோ அவர் இவ்வுலகமே சொந்தமானது போன்ற ஒரு பிரமை சந்தோசத்தால் ஏற்படும். அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்காய் அவனைப் புகழ்ந்தேன்.
ஒரு நாள் என் நல்ல நண்பர்கள் தூரப் பிரதேசமொன்றுக்குச் சென்று அழைப்புப் பணி செய்ய வேண்டும் என்பதற்காய் பயணிக்க முடிவு செய்தார்கள். அந்தப் பயண விடயத்தில் நான் தடுமாற்றத்திலிருந்தேன். அல்லாஹ்விடம் உதவி வேண்டினேன். என் மனைவியிடமும் ஆலோசித்தேன் அனேகமாக அவள் இதற்கினங்கமாட்டாலென்றே நான் நினைத்தேன் ஆனால் நிலைமை தலைகீழாய் மாறியது. அவளோ அதற்குச் சம்மதித்தாள். நான் மிகவும் ஆனந்தமடைந்தேன். என் மனைவி எனக்கு மென்மேலும் உற்சாகமூட்டினாள் அவளிடம் எந்தவொரு ஆலோசனை பெறாமல் தீய விடயங்களுக்காய் நான் பலமுறை பயணம் செய்ததை அவள் ஏற்கனவே கண்டிருக்கின்றாள் ஸாலிமிடம் சென்று நான் பயணம் மேற்கொள்ளும் செய்தியைக் கூறினேன். என்னை வழியனுப்புவதற்காய் என்னிரு கைகளையும் அவன் கைகளால் பற்றினான். மூன்றரை மாதங்களாய் என் வீட்டைவிட்டும் நான் பிரிந்திருந்தேன். இக்காலங்களில் எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் நான் என் குடும்பத்தாருடன் தொடர்பு கொண்டேன். அவர்களுடன் இரக்கப்பட்டேன் எத்தனை நேரம் நான் ஸாலிமுடன் இரக்கப்பட்டுப் பேசியிருப்பேன்? அவன் குரலைக் கேட்பதற்கு எவ்வளவு நான் ஆசைப்பட்டிருப்பேன்! ஏனெனில் அவன் ஒருத்தனே நான் பிரயாணம் செய்ததிலிருந்து என்னுடன் பேசவில்லை. ஏனென்றால் நான் தொடர்பு கொள்ளும் போதெல்லாம் ஒன்றில் அவன் மத்ரஸாவிலிருந்தான் அல்லது பள்ளியிலிருந்தான் அவன் மேல் எனக்கிருந்த பாசத்தை என் மனைவியிடம் நான் கூறும் போதெல்லாம் அவள் மிகவும் சந்தோசப்பட்டவளாய் மெய்மறந்திருப்பாள்
கடைசியில் ஒருமுறை நான் அவளுடன் தொலைபேசியில் பேசியபோது வழமை போன்ற அவளின் ஆனந்தச்சிரிப்பை நான் கேட்கவில்லை. அவளின் குரலில் மாற்றம் விளங்கியது. என் ‘ஸலாத்தை ஸாலிமுக்கு எடுத்துரையுங்கள்” என்று அவளிடம் கூறியதும் அதற்கவள் ‘இன்ஷா அல்லாஹ்” என்று சொல்லி அமைதியானாள். இறுதியில் பிரயாணத்தை முடித்து வீட்டுக்கு வந்தேன். கதவைத் தட்டினேன். ஸாலிம்தான் கதவைத் திறக்க வேண்டும் என நான் ஆவலோடிருந்தேன் இருந்தாலும் என் இரு கைகளுக்கிடையில் நான் சுமந்து அனைக்கும் போது வாப்பா என்று சொல்லி அழும் நான்கு வயதையெட்டாத என் மகன் காலிதை நினைக்கும் போது உள்ளம் வலித்தது. வீட்டுக்குள் நான் நுழையும்போது எனதுள்ளம் ஏன் வேதனைப்பட்டது என்பதை நான் அறியேன் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடியவனாய் வீட்டுக்குள் நுழைந்தேன் என் மனைவி என்னை வரவேற்றாள் அவள் முகமோ மாறியிருந்தது என்றாலும் சந்தோஷமடைந்தவள் போல் தன்னை அவள் சுதாகரித்துக் கொள்வது எனக்கு விளங்கியது உனக்கு என்ன நேர்ந்ததென்று அவளிடம் நான் கேட்டபோது ‘ஒன்றுமில்லை” எனப் பதிலளித்தாள்.
திடீரென ஸாலிம் என் நினைவுக்கு வந்ததும் ‘ஸாலிம் எங்கே” என்று நான் அவளிடம் கேட்க தன்னால் பதில் கூறமுடியாமல் தலை குனிந்தால் அவளின் கன்னங்களிலே கண்ணீர்த்துளிகள் விழுந்தன. ‘ஸாலிம்! ஸாலிம் எங்கே” என்று சத்தமிட்டு நான் அவளிடம் கேட்டபோது ‘வாப்பா ஸாலிம் அல்லாஹ்விடமுள்ள சுவனத்துக்குப் போய்விட்டார்” என்ற என் மகன் காலிதின் ஓசையைத்தான் என்னால் கேட்க முடிந்தது. என் மனைவியால் நிலைமையை தாங்கிக்கொள்ள முடியவில்லை பொறுக்க முடியாமல் நிலத்தில் விழுமளவுக்கு அழுதாள். அறையிலிருந்து வெளியேறினேன். நான் வருவதற்கு இரு வாரங்களுக்கு முன்பு ஸாலிமுக்குக் காய்ச்சல் ஏற்பட்டு என் மனைவி அவனை வைத்தியசாலைக்கு கொண்டு போயுள்ளாள். அவனுக்கு காய்ச்சல் கடுமையாகி அவள் அவனருகிலிருக்கும் போதே அவன் உயிர் பிரிந்திரிக்கின்றது என்ற செய்தியை நான் அறிந்தேன்.
                                                                                                                                                                         நன்றி:முஜஹித்ஸ்ரீலங்கா.
3:06 AM | 0 comments | Read More

காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை தர தயார்-பிரதமர் மன்மோகன் சிங்

Written By GM.BASHA on Tuesday, August 10, 2010 | 10:29 PM

டெல்லி: இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.






காஷ்மீருக்கு சுதந்திரம் கோரி பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதப் போராட்டம் நடந்து வரும் நிலையில் அங்கு புதிய வகையான போராட்டம் வெடித்துள்ளது.

காஷ்மீரில் இருந்து ராணுவத்தை உடனே அகற்ற வேண்டும், காஷ்மீருக்கு சுதந்திரம் வேண்டும் என்று பிரிவினைவாத கட்சிகளி்ன் ஆதரவுடன் பொது மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலில் சிறிய அளவில் தொடங்கிய இந்தப் போராட்டம் மாநிலம் முழுவதும் பரவிவிட்டது. பள்ளி, கல்லூரிகளை புறக்கணித்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டங்கள நடத்தி வருகின்றனர்.

தினந்தோறும் மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஊரடங்கையும் மீறி ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருவதால் இதை ராணுவத்தைக் கொண்டு கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. ராணுவம் மற்றும் மத்தியப் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் பல அப்பாவிகள் உயிரிழந்துவிட்ட நிலையிலும் போராட்டங்கள் ஓயவில்லை.

இந் நிலையில் இந்த விவகாரம் ஏதோ கிரீன்லாந்தில் நடப்பது போல மத்திய அரசு அமைதி காத்து வந்தது. முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு முழு அதிகாரத்தையும் தந்துவிட்டு, அவரே பிரச்சனைக்குத் தீர்வு காண்பார் என்பது போல அரசு நடந்து கொண்டது.

ஆனால், அவரது கட்சியினரே பொது மக்களுடன் சேர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதால் அவரால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அதே போல போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குமாறு மத்தியப் படைகளுக்கு ஒரு நாள் உத்தரவு தரும் மத்திய அரசு, மறுநாள் துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்று உத்தரவிடுகிறது. இதனால் படையினர் திட்டமிட்டு செயல்பட முடியாத நிலைமை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடுகளால் ஏற்படும் பொது மக்களின் உயிரிழப்புகளை உலக அளவில் பாகிஸ்தான் பிரச்சனையாக்க முயல்வதால், இந்த விவகாரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல் மத்திய அரசு கையைப் பிசைந்து வருகிறது.

அதே போல மத்திய உளவுப் பிரிவினரும் இந்தப் பிரச்சனையை குழப்பியடித்து வருகின்றனர். இவர்கள் தரும் தகவல்களை மட்டுமே வைத்துக் கொண்டு மத்திய அரசு எடுக்கும் முடிவுகள் பிரச்சனையைத் தீர்க்க உதவவில்லை.

அரசியல்ரீதியாக அணுக வேண்டிய இந்த விவகாரத்தை ஆயுதங்கள் கொண்டோ அல்லது உளவுப் பிரிவினரின் டெக்னிக்குகளைக் கொண்டோ கையாள்வது மேலும் சிக்கலாக்கும் என்பதை மத்திய அரசு மிகத் தாமதமாக உணர்ந்து கொண்டதாகத் தெரிகிறது.

இதையடுத்து நேற்று அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் கூட்டினார். இதை மிக முக்கிய எதிர்க் கட்சியான மக்கள் ஜனநாயகக் கட்சியும் புறக்கணித்துவிட்டது.

அதே நேரத்தில் காஷ்மீரை ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, காஷ்மீர் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகம்மது யூசுப் தாரிகாமி, சுயேச்சை எம்எல்ஏ குலாம் ஹசன் மிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் 4 மணி நேரம் நடந்த இக் கூட்டத்துக்குப் பின் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் உருது மொழியில் உரையாற்றிய பேசிய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:

காஷ்மீரில் அண்மையில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் வேதனையளிப்பதாக உள்ளது. கலவரத்தில் மகன், மகளை இழந்து வாடும் ஒவ்வொரு தாய், தந்தை மற்றும் குடும்பங்களின் துயரத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதைப் போல உணர்கின்றனர். இதை மத்திய அரசும் உணர்ந்துள்ளது. அவர்கள் சுய மரியாதையுடன் வாழ முழு உரிமை உண்டு.

மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டியது காலத்தின் கட்டாயம். காஷ்மீர் இளைஞர்களின் வலி எனக்குப் புரிகிறது. காஷ்மீர் விவகாரத்தில் அடுத்தடுத்து தவறுகள் நடந்துவிட்டதை ஒப்புக் கொள்கிறேன்.

மாநிலத்தில் அமலில் இருக்கும் ஆயுதப் படை சிறப்புச் சட்ட விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. சட்டம், ஒழுங்கு முழு பொறுப்பையும் ஏற்க மாநில போலீஸாருக்கு இப்போதைக்கு போதிய ஆள்பலம் இல்லை.

இதனால் மாநில போலீஸ் படையை பலப்படுத்த வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

கலவரத்தைக் கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு படையினரும், மாநில போலீஸாரும் மிகப் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். அவர்களில் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இனிமேலும் காஷ்மீரில் வன்முறை சம்பவங்கள் நீடிப்பதை அனுமதிக்க முடியாது. அதற்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

காஷ்மீர் இளைஞர்களுக்கு தனியார், அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விரிவான திட்டத்தை தயாரிக்க பொருளாதார நிபுணர் சி. ரங்கராஜன் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு மூன்று மாதங்களில் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும்.

காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஜனநாயக வரம்புகளுக்கு உள்பட்டு எல்லா பிரச்சனைகள் குறித்தும் பேச்சுவார்த்தைக்கு அரசு தயாராக உள்ளது.

இந்திய அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு சுயாட்சி உரிமை வழங்க அரசு தயாராக உள்ளது. ஆனால், இதற்கு முதலில் அனைத்துக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும்.

இந்தப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வே சரியானது என்றாலும், அதை அரசியல் சட்டத்துக்கு உட்பட்டே செய்ய முடியும். நீங்கள் அரசியல் சட்டத்தின் வேலைக்காரர்கள் மட்டும் தான்.

பிரச்சனைக்கு அரசியல் தீர்வு ஏற்பட முதலில் மாநிலத்தில் நிரந்தர அமைதி நிலவ வேண்டும். அதற்கான வாய்ப்பை காஷ்மீர் மக்கள் உருவாக்கித் தரவேண்டும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப. சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, எஸ்.எம்.கிருஷ்ணா, குலாம்நபி ஆசாத் மற்றும் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

                                                                                                                                                                                     தட்ஸ்தமிழ் 
10:29 PM | 0 comments | Read More

பூமியை தக்கப்போகும் சோலார் சுனாமி

Written By GM.BASHA on Wednesday, August 4, 2010 | 5:05 AM


லண்டன்: சூரியனில் ஏற்பட்டுள்ள திடீர் வெடிப்பு காரணமாக பூமி உள்ளி்ட்ட கிரகங்களை மின் காந்த கதிர்வீச்சுக்கள் தாக்கவுள்ளன.

'சோலார் சுனாமி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கதிர்வீச்சால் சில பாதிப்புகள் ஏற்படலாம்.

சூரியனின் மையத்தில் உள்ள கரோனா எனப்படும் அதன் கரு ஹைட்ரஜன், ஹீலியம், ஆக்ஸிஜன், கார்பன், நியான், இரும்பு உள்ளிட்டவைகளால் ஆனது.

இதில் ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியத்தை உருவாக்குவது தான் சூரியனின் வெப்பத்துக்குக் காரணம். இந்த அணு இணைப்புகளின்போது வெளிப்படும் சக்தி தான் வெப்பமாக வெளிப்படுகிறது.

அப்போது உருவாகும் மிக அதிக சக்தி கொண்ட காமா கதிர்கள் தான் போட்டான்களாக மாறி நமக்கு சூரிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. இந்த போட்டான் கதிர்கள் சூரியனின் மையப் பகுதியில் இருந்து அதன் வெளிப்பகுதிக்கு வரவே 10,000 முதல் 1.7 லட்சம் ஆண்டுகள் வரை ஆகும்.

(போட்டானுடன் கூடவே வெளியேறும் இன்னொரு சூரிய துகள் நியூட்ரினோ. இதைப் பற்றி பின்னர் பார்ப்போம். இப்போது விஷயத்துக்கு வருவோம்.)

சூரியனில் நடக்கும் இந்த அணு உலை இணைப்பின்போது உருவாகும் கூடுதலான சக்தியும் வெப்பமும் சூரிய வெடிப்புகளாக அவ்வப்போது வெளியேறுகிறது. அப்போது சூரியனிலிருந்து அதிக வெப்பத்திலான வாயுக்கள் பிளாஸ்மாவாக பீய்ச்சிடிக்கப்படும். (super heated gases தான் பிளாஸ்மா).

இந்த பிளாஸ்மா தன்னுடன் சுமந்து வரும் பயங்கரமான மின் காந்த கதிர்கள் பூமி உள்ளிட்ட மற்ற கிரகங்களுக்கு பெரும் பாதிப்புகளை உருவாக்குகின்றன. பூமியி்ல் உள்ள வளிமண்டலமும் அதிலுள்ள வாயுக்களும் நம்மை இந்த மின்காந்த கதிர்வீச்சுக்களில் இருந்து பாதுகாத்து விடுகின்றன.

இல்லாவிட்டால் சூரியனின் பிளாஸ்மா அலைகள் தாக்குதலில் பூமி என்றைக்கோ பஸ்மாகியிருக்கும்.

இந் நிலையில் சூரியனின் வட பகுதியில் இன்னொரு மகா வெடிப்பு நடந்திருக்கிறது. சூரியனில் ஏற்பட்ட இந்த வெடிப்பின் அகலமே நமது பூமியின் அளவைவிட பெரியது என்கிறார்கள்.

பூமியை நோக்கிய திசையில் இந்த சூரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளதை பல தொலைநோக்கிகளும் பல செயற்கைக்கோள்களும் கடந்த ஜூலை 31ம் தேதி பதிவு செய்துள்ளன.

இதனால் கிளம்பிய கதிர்வீ்ச்சுக்களும் மின் காந்த அலைகளும் சூரியனில் இருந்து 93 மில்லியன் மைல்கள் வரை பரவியுள்ளன.

இதற்கு சோலார் சுனாமி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நமது காற்று மண்டலத்தின் உபயத்தால் இதனால் பூமிக்கு பெரிய அளவில் பாதி்ப்பு ஏதும் இருக்காது என்றாலும் சில செயற்கைக் கோள்களுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

அதே நேரத்தில் இன்று இரவு இந்த மின்காந்த கதி்ர்வீச்சுக்கள் பூமியை அடையும்போது அதன் துருவப் பகுதிகளில் (ஆர்க்டிக், அண்டார்டிகா பகுதிகள்) Auroa Borealis எனப்படும் மாபெரும் பல நிற வெளிச்சம் உருவாகும். வானில் பல ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு நீளும் இந்த வெளிச்சம், பூமியை மின் காந்த அலைகள் தாக்குவதின் எதிரொலி தான்.
   நன்றி:தட்ஸ் தமிழ்.

5:05 AM | 0 comments | Read More