ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

விவாதக் கலத்தில் ஜமாலியை தடுமாற்றிய ஜமாலியின் உளறல் வீடியோக்கள்.

Written By GM.BASHA on Wednesday, October 27, 2010 | 2:20 AM


 RASMIN M.I.Sc
கடந்த 23-24ம் தேதிகளில் சென்னை டி நகரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் பரேலவிகளுக்கும் இடையில் நடந்த விவாதத்தைப் பற்றிய நேரடி வர்ணனையை நாம் வெளியிட்டிருந்தோம்.

விவாதக் கலத்தில் சகோதரர் பி.ஜெ அவர்கள் ஜமாலியின் முன்னுக்குப் பின் முரனான உளரல்கள் அடங்கிய வீடியோக்களை திரையில் போட்டுக் காட்டினார்.

குறிப்பிட்ட வீடியோக்களில் ஒரு மேடையில் ஜமாலி பேசியதையே அடுத்த மேடையில் அவரே மறுத்துப் பேசியிருப்பதை பி.ஜெ எடுத்துக் காட்டினார்.

ஜமாலி தனது கருத்தையே மறுத்து பேசிய வீடியோக்கள்.

அபூதாலிப் முஸ்லிம் - அபூதாலிப் முஷ்ரிக் (கோமாலித் தனமான பேச்சு)

அபூதாலிப் முஸ்லிம் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
 
அபூதாலிப் முஷ்ரிக் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
 
அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் - அல்லாஹ் அர்ஷில் இல்லை.

இறைவனுக்கு உருவம் உண்டா என்ற விவாதத்தில் அல்லாஹ் அர்ஷில் இல்லை என்று பேசும் ஜமாலி வெளியில் ஒரு மேடையில் பேசும் போது அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று பேசுவதை கவணியுங்கள்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

அல்லாஹ் அர்ஷில் இல்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்கஇங்கு க்லிக் செய்யவும்.
 
அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூறினார் - இப்னு தைமிய்யா கூறவில்லை.

இறைவனுக்கு உருவம் உண்டா? விவாதத்தில் இப்னு தைமிய்யா அவர்கள் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று கூறவில்லை என்று பேசினார் ஜமாலி. ஆனால் மற்ற மேடைகளில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொன்னார் என்று கூறி அவரை வசை பாடும் காட்சியைப் பாருங்கள்.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொல்லவில்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டென்று இப்னு தைமிய்யா சொன்னார் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
 
இறைவன் எங்கும் இருக்கிறான் - இறைவன் எங்கும் இல்லை.

ஜமாலியும் அவரைச் சார்ந்தவர்களும் அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்ற அத்வைதக் கொள்கையை கொண்டவர்கள்.ஆனால் நாங்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல என்று இறைவனுக்கு உருவம் உண்டா என்ற விவாதத்தில் வாதித்தார் ஜமாலி.

ஆனால் வெளியில் மேடைகளில் பேசும் போது அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று வாதிடுகிறார் ஜமாலி.

அல்லாஹ் எங்கும் இருக்கிறான் என்று ஜமாலி பேசும் வீடியோவைப்பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.
  
அல்லாஹ் எங்கும் இல்லை என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்கஇங்கு க்லிக் செய்யவும்.
 
சவூதியைப் பின்பற்றலாம் - பின்பற்றக் கூடாது.

மார்க்க விஷயத்தில் ஏதாவது செய்வதாக இருந்தால் குர்ஆன் சுன்னாவில் இருந்தால் தான் செய்ய வேண்டும என்பது தவ்ஹீத் ஜமாத்தின் கொள்கை.

ஆனால் சவூதியை பின்பற்றக் கூடாது என்று ஓரிடத்திலும் தர்கா என்று வரும் போது சவூதியைப் பின்பற்றலாம் என்றும் ஜமாலி பேசிய வீடியோவைப் பாருங்கள்.

சவூதியை ஆதாரமாக எடுக்கக் கூடாது என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும்.

சவூதிதான் ஆதாரம் என்று ஜமாலி பேசும் வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யவும். 
                                                                 நன்றி:ரஸ்மின்  
2:20 AM | 0 comments | Read More

மத்ஹபுக்கு வக்காலத்து வாங்க வந்தவர் மானத்தை இழந்தார்.


 சென்னை 3வது விவாதம். 
தானாக உளறிய அப்துல்லாஹ் ஜமாலி.
தொகுப்பு :  RASMIN M.I.Sc
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கும் சுன்னத் வல் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் இடையில் கடந்த இரண்டு (2010-10-23.24) நாட்களாக சென்னை டி நகர் தியாகராஜர் மண்டபத்தில் வைத்து பகிரங்க விவாதம் நடந்தது.

இதில் சுன்னத் ஜமாத் ஐ.பேரவை சார்பாக ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களும் கலந்து கொண்டு விவாதித்தார்கள்.

சுன்னத் ஜமாத் ஐ.பேரவையின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் அசிங்கங்களும் குர்ஆன் ஹதீஸிற்க்கு மாற்றமான கருத்துக்களும் இருக்கின்றன.

தவ்ஹீத் ஜமாத்தின் நிலைபாடு :

சகோதரர் பி.ஜெயின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் பேச்சுக்களிலும் எந்தவொரு அசிங்கங்களோ குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமான கருத்துக்களோ இல்லையென்பதும்.ஷேக் அப்துல்லாஹ் மற்றும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களின் பேச்சுக்கள் எழுத்துக்கள் தப்ஸீர்கள் ஆகியவற்றில் தான் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமான கருத்துக்களும் கயமைகளும் பொய்களும் ஆபாசங்களும் நிறைந்துள்ளன.

விவாதத்தின் ஆரம்பமும் அரண்டு போன ஜமாலியும்.

விவாதம் ஆரம்பிப்பதற்காக இரு தரப்பு நடுவர்கள் சார்பாகவும் நாணயச் சுழற்சி மேற் கொள்ளப்பட்டது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தவ்ஹீத் ஜமாத் தரப்பால் சகோதரர் பி.ஜெ தனது வாதத்தை ஆரம்பித்தார்.

பொய்களின் மொத்த உருவம் ஜமாலி.

விவாதத்தின் ஒப்பந்தப் படி ஜமாலியினதும் அவரால் ஒப்புக் கொள்ளப் பட்டவர்களினதும் ஆபாசமான அசிங்கமான முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களை சகோதரர் பி.ஜெ பட்டியலிட ஆரம்பித்தார்.

முதலாவதாக அபூதாலிப் முஸ்லிம் என்று ஓரிடத்திலும் இன்னோரிடத்தில் அபூதாலிம் காபிர் என்றும் ஜமாலி பேசிய இரண்டு வீடியோ ஆதாரங்களை திரையில் போட்டுக் காட்டினார் சகோதரரர் பி.ஜெ அவர்கள்.

இடத்திற்கு தகுந்தால் போல் பேசுவதில் இவர் வல்லவர் என்பதற்கு எடுத்துக் காட்டப்பட்ட இந்த வீடியோவில் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கு இப்னு அஸாகீர் நஸயீ அபூதாவுத் ஆகிய கிரந்தங்களில் இருந்து ஒரு ஹதீஸை எடுத்துக் காட்டி அதன் ஒரு பகுதியை சொல்லி மறு பகுதியை மறைத்திருந்தார்.
அந்த ஹதீஸின் இரண்டாம் பகுதியே அபூதாலிப் அவர்கள் காபிர் தான் என்பதற்கு சான்றாக இருந்தது.

மீதியை ஏன் மறைத்தீர்கள் மக்கள் மத்தியில் ஏன் இப்படி பொய்களையும் புரட்டுகளையும் பறப்புகிறீர்கள் என்று விவாதத்தின் இருதிவரைக் கேட்டும் இந்தக் கேள்விக்கு ஜமாலி பதிலே தரவில்லை.

முதல் வாதத்திலேயே உளற ஆரம்பித்த ஜமாலி.

பி.ஜெவின் திருக்குர்ஆன் மொழியாக்கத்திலும் தவ்ஹீத் ஜமாத்தின் வெளியீடுகளிலும் ஆபாசங்கள் அசிங்கங்கள் இருக்கிறது என்று வாதிட வந்த ஜமாலி அவர்கள்.முதல் வாதத்திலேயே தலைபிற்கு கொஞ்சம் கூட சம்பந்தமின்றி பேச ஆரம்பித்தார்.

பி.ஜெ ஆண்கள் தொடையை மறைக்க வேண்டும் என்று கூறினார்.தற்போது ஆண்கள் தொடையை திறந்து கொள்ள அனுமதியுண்டு என்று கூறுகிறார் இது அவர்களது வெளியீடுகளில் உள்ள அபத்தம் என்று முதல் வாதத்தையும் கலாலா தொடர்பாக சகோதரர் பி.ஜெ அவர்களின் திருக்குர் ஆன் மொழியாக்கத்தில் 4வது அத்தியாயம் 12வது வசனத்திற்கு கொடுத்த விளக்கத்தினை அரைகுறையாக வாசித்துவிட்டு அதில் தவறு உண்டு என்று தனது இரண்டாவது வாதத்தையும் முன்வைத்தார்.

முரண்பாடு என்றால் என்னவென்று ஜமாலிக்கு பாடம் நடத்திய பி.ஜெ

விவாதம் ஆரம்பித்த அடுத்த கணமே உளறுவதற்கும் ஆரம்பித்தார் ஜமாலி இருந்தாலும் அவருடைய உளறளுக்கும் விவாதம் என்பதால் பதில் கொடுக்க வேண்டியது பி.ஜெயின் கடமை என்பதால் முதலில் முரண்பாடு என்றால் என்ன என்று விளக்கம் சொன்னார்.

ஒருவர் ஆரம்பத்தில் ஒரு கருத்தை சொல்லிவிட்டு பிறகு தான் சொன்ன கருத்து தவறு தற்போது திருத்திக் கொண்டு இந்தக் கருத்துக்கு வந்துவிட்டேன் என்று அறிவித்து விட்டு முதலாவது கூறிய கருத்துக்கு மாற்றமாக கருத்துச் சொன்னால் அதற்குப் பெயர் முரண்பாடு அல்ல திருத்தம் என்பதை கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல் பாடமாக நடத்திக் காட்டினார் சகோதரர் பி.ஜெ அவர்கள்.

இதே நேரம் ஜமாலியைப் போல் ஒரு மேடையில் ஒரு கருத்தையும் இன்னொரு மேடையில் அதற்கு மாற்றமாக இன்னொரு கருத்தையும் சொல்லிவிட்டு மக்கள் மத்தியில் ஒரு கொள்கையற்றவனாக தன்னை காட்டிக் கொள்வதென்பது மூடத்தனம் கயமைத்தனம் பித்தலாட்டம் முரண்பாடு என்பதையும் மிக அழகாக விளக்கிச் சொன்னார்.

கிழித்தெறியப் பட்ட மத்ஹபு குப்பைகளும் மாட்டிக் கொண்ட  ஜமாலியும்.

ஜமாலியுடையவும் அவர் ஆதரிப்பவர்களினதும் எழுத்துக்களிலும் பேச்சுக்களிலும் இருக்கும் முரண்பாடுகளையும் ஆபாசங்களையும் கயமைத்தனங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார் பி.ஜெ

ஆனால் சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட ஒரு கேள்விக்குக் கூட ஜமாலியினால் இறுதி வரை பதில் தரவே முடியவில்லை.
 மத்ஹபுகளில் மலிந்திருந்த அசிங்கங்கள்.

ஹனபி மற்றும் ஷாபி போன்ற மத்ஹபுகளில் ஒரு சாதாரண மனிதன் கூட நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசங்களும் அபத்தங்களும் கயமைகளும் நிறைந்துள்ளதை சகோதரர் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்டு சொன்னார்.

சகோதரர் பி.ஜெ பட்டியலிட்ட மத்ஹபு அசிங்கங்களை தலைப்புவாரியாக இங்கு குறிப்பிடுகிறோம் 

1.தானாக காற்றை விட்டு தொழுகைகளை முடிக்கலாம்.

2.கிழக்கிலிருக்கும் ஒருவரும் மேற்கில் இருக்கும் இன்னொருவரும் திருமணம் முடிக்கலாம்.அப்படி முடித்து ஆறு மாதத்தில் மனைவி பிள்ளை பெற்றால் அதனை குறை சொல்ல முடியாது ஏனெனில் கராமத்தின் மூலம் அவன் அவளிடத்தில் வந்து போயிருக்கக் கூடும். 

3.ஹஜ்ஜுடைய நேரத்தில் மனைவி தவிர யாரோடு வேண்டுமானாலும் உடலுறவு கொண்டாலும் ஹஜ் முறியாது.

4.ஹஜ்ஜுடைய காலத்தில் கழுதையுடன் புணர்வது பெண்ணின் ஹஜ்ஜை முறிக்கும் ஆணின் ஹஜ்ஜை முறிக்காது.

5.சிறுமியுடன் விபச்சாரம் செய்தால் தண்டனையில்லை.(மத்ஹபு நூல்கள் அதற்காக சொல்லும் காரணங்களை விவாதத்தில் பார்த்துக் கொள்ளவும்.)

6.ஊமைப் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் தண்டனை இல்லை 

7.விபச்சாரம் செய்துவிட்டு பணம் கொடுத்துவிட்டால் அதற்கு தண்டனை இல்லை.

8.பைத்தியத்துடன் விபச்சாரம் செய்தால் தண்டனை கிடையாது.

9.வெளிநாட்டுக் காபிர் உள்நாட்டு முஸ்லிம் பெண்ணுடன் விபச்சாரம் செய்தால் காபிருக்கு தண்டனை கிடையாது.

10.ஒரு பெண்ணை கண்ணியா இல்லையா என்று கண்டுபிடிக்க அவளை சுவற்றில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.அது சுவற்றில் படுகிறதா? இல்லையா? என்பதை வைத்து அவள் கண்ணியா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.என்ற கேவலமான வழிமுறைகள்.

11.விபச்சாரம் செய்து மாட்டிக் கொண்டவன் விபச்சாரியை மனைவி என்று சொல்லிவிட்டால் தண்டனை இல்லை.

12.தனது மர்ம உருப்பை தன்னுடைய பின் துவாரத்தில் நுழைத்தால் அவனுக்கு சட்டம் என்ன? என்று அதற்கு சட்டம் தொகுத்துள்ள மத்ஹபுவாதிகள்.

13.தான் திருமணம் செய்த மனைவியுடன் இரவில் உணர்ச்சியுடன் நெருங்கும் போது அவளுடைய மகளின் மீது தவறுதலாக கை பட்டுவிட்டால் மனைவிக்கும் கணவனுக்கும் உள்ள திருமன உறவு நீங்கிவிடும்.

14.இரண்டு பேர் திருடச் சென்று ஒருவன் உள்ளே சென்று திருடிவிட்டு வெளியிலிருப்பவனுக்கு அதனை கொடுத்தால் இருவருக்கும் தண்டனை இல்லை.(உள்ளே போனவன் திருடியதை வெளியில் கொண்டுவரவில்லை வெளியில் இருந்தவன் உள்ளே போய் திருடவில்லை இதுதான் மத்ஹபின் விளக்கமாம்.)

15.தூங்கி எழுந்ததும் பல் துலக்கும் போது முதலாவது வரும் எச்சிலை விழுங்கிவிட வேண்டும்.

16.ஹஜ்ஜின் போது சுய இன்பம் செய்தால் அது ஹஜ்ஜை பாதிக்காது.

17.தொழ வைத்த இமாமையே குர்பானி கொடுக்களாம்.

18.சிறிதளவு கஞ்சா அடிக்கலாம்.

19.குழந்தையை கடத்தியவனுக்கு தண்டனை இல்லை.

20.பல் துலக்கும் போது தனது இரண்டு கைகளிலும் உள்ள ஆட்காட்டி விரல்களைக் கொண்டு ஒரே நேரத்தில் பல் துலக்க வேண்டும்.

மத்ஹபில் உள்ள குப்பைகள் பட்டியல் போட்டு எடுத்துக் காண்பித்தார் சகோதர் பி.ஜெ அந்த அசிங்கங்களுக்கு விவாதத்தின் இறுதி வரை எந்த ஒரு பதிலையும் தராது தனது தோல்வியை ஒத்துக் கொண்டு அமைதி காத்தார் ஜமாலி.
நபியவர்கள் மீதே பொய் சொன்ன ஜமாலி. எடுத்துக் காட்டும் படி சவால் விட்டார் பி.ஜெ.

கழுதையுடன் புணருவது தொடர்பான மத்ஹபு குப்பைகளை பி.ஜெ அவர்கள் எடுத்துக் காட்டும் போது மத்ஹபு தொடர்பாக எந்த ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாத ஜமாலி இதற்கு மட்டும் நபியவர்கள் சொன்னதாக ஒரு ஹதீஸை சொன்னார்.

அதாவது :

யார் மிருகத்துடன் புணர்கிறானோ அவனுக்கு தண்டனை இல்லை. என்று நபியவர்கள் கூறிய செய்தி திர்மிதியில் பதிவு செய்யப் பட்டுள்ளதாக பொய் சொன்னார் ஜமாலி.

அப்படி ஒரு ஹதீஸே இல்லை இருந்தால் திர்மிதியில் இருந்து எடுத்துக் காட்டுங்கள்.என்று சவால் விட்டார் பி.ஜெ ஆனால் நபியின் மீது பொய் சொன்ன பொய்யர் ஜமாலி இருதிவரை அப்படி ஒரு ஹதீஸைக் காட்டவே இல்லை.

ஜமாலி நபியவர்கள் மீது துணிந்து இட்டுக் கட்டிய பொய்கள்.

அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக இப்னு அஸாகீரில் உள்ளதாக குறிப்பிட்டார் ஜமாலி ஆனால் இப்னு அஸாகீரில் உள்ள செய்தியோ அபூதாலிப் காபிர் என்பதைத் தான் குறிப்பிடுகிறது.

நபியவர்கள் அபூதாலிபை காபிர் என்று எந்த ஹதீஸில் சொன்னாரோ அதே ஹதீஸின் ஒரு பகுதியை மறைத்து அபூதாலிப் முஸ்லிம் என்று நபியவர்கள் கூறியதாக நபியின் மீதே பொய் சொன்னார் ஜமாலி.

இது தொடர்பாக அபூதாவுத் நஸாயி போன்ற கிரந்தங்களிலும் ஹதீஸ் வருவதாக சொன்னவர் கடைசி வரை ஹதீஸைக் காட்டவே இல்லை.

புகாரி முஸ்லிம் போன்ற கிரந்தங்களிலும் அபூதாலிப் முஸ்லிம் என்பதற்கான ஆதாரம் இருப்பாக சொன்னார் ஜமாலி ஆனால் அதற்கு மாற்றமாக அபூதாலிப் காபிர் என்பதற்கான ஆதாரம் தான் புகாரி முஸ்லிமில் உள்ளது.

வுழூ செய்யும் போது வாய்ப் பகுதியை மூன்று முறை தனியாகவும் மூக்கை மூன்று முறை தனியாகவும் நபியவர்கள் கழுவியதாக புகாரியை ஆதாரம் காட்டி பொய் சொன்னார்.

பெண்கள் ஜும்மாத் தொழுகைக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் சொன்னதாக முஸ்லிமில் ஹதீஸ் இருக்கிறது என்று இல்லாத ஹதீஸை இருப்பதாக நபியவர்கள் மீது இட்டுக் கட்டினார்.

பெருநாள் முடிந்து இரண்டு நாட்கள் வரை குர்பானி கொடுக்களாம் என்ற நபியவர்கள் கூறியதாக முஅத்தாவில் ஹதீஸ் இருப்பதாக இல்லாத செய்தியை நபியவர்கள் மீது துணிந்து இட்டுக்கட்டினார்.

யார் என்மீது வேண்டுமென்று பொய் சொல்கிறாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்ளட்டும் (முஸ்லிம்)

என்ற நபி மொழியை எடுத்துக் காட்டி இந்த ஹதீஸிற்கு ஏற்றாட் போல் உங்கள் வாதம் உள்ளது என்பதை பி.ஜெ அவர்கள் விவாதக் கலத்திலேயே ஜமாலியிடம் தெரிவித்தார்.

தண்டவாளம் ஏறியது ஜமாலியின் வண்டவாளம்.

விவாதத்தில் தவ்ஹீத் ஜமாத் குர்ஆன் ஹதீஸிற்கு மாற்றமாக செயல்படுகிறது என்று வாதிட வந்த ஜமாலியின் முரண்பட்ட கருத்துக்களை மக்கள் மத்தியில் வீடியோ காட்சியாக போட்டுடைத்தார் பி.ஜெ

அதாவது கூட்டத்திற்கு தகுந்தாற் போல் இடத்திற்கு ஏற்றாற் போல் பேசுவதில் வல்லவரான ஜமாலி ஒவ்வொரு மேடையிலும் ஒவ்வொரு தில்லு முல்லு வேலைகளை செய்வார்.

அவை வீடியோவாக அரங்கத்தில் போட்டுக் காட்டப்பட்டு அவரிடமே விளக்கம் கேட்கப் பட்டது.

விவாதம் செய்வாதாக அரங்கத்திற்கு வந்தவர் மதில் மேல் குந்திய பூனை போல் இருதி வரை உளரிக் கொட்டிக் கொண்டே இருந்தார்.

அரங்கத்தில் போடப்பட்ட ஜமாலியின் ஒன்றுக் கொன்று முரண்பட்ட வீடியோக்கள் தலைப்பு வாரியாக.

மார்க்க விஷயத்தில் பித்அத் புதிதாக ஒன்றும் உருவாகாது ஆனால் உலக விஷயத்தில் உருவாகும் (வாகனங்கள் நாம் பயன் படுத்தும் பொருட்கள்) என்று ஓரிடத்தில் பேசிய ஜமாலி இன்னோரிடத்தில்  தான் சொன்னதை தானே மறுத்துப் பேசிய காட்சி போட்டுக் காட்டப் பட்டது.

அபூதாலிப் முஸ்லிம் என்று ஒரு மேடையிலும் அவர் காபிர் தான் என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய வீடியோ அரங்கத்தினர் மத்தியில் போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இறைவன் அர்ஷில் இருக்கிறான் என்று ஒரு மேடையிலும் அர்ஷில் இல்லை என்று இன்னொரு மேடையிலும் ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

ஒரு விஷயம் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்டத் தேவையில்லை என்று தமிழகத்திலும் இல்லை என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டும் என்று இலங்கையிலும் ஜமாலி பேசிய வீடியோ போடப்பட்டு முரண்பாட்டிட்கு விளக்கம் கோறப்பட்டது.

மார்க்க விஷயத்திற்கு சவூதி ஆதாரமாகாது என்று ஒரு வீடியோவிலும் ஆதாரமாகும் என்று இன்னோர் வீடியோவிலும் தனக்குத் தானே முரண்பட்ட காட்சி அரங்கத்தினர் முன்னிலையில் போடப்பட்டது.

தவ்ஹீத் வாதிகள் மதிக்கும் அறிஞர்களை மரியாதையாக தான் பேசுவதாக குறிப்பிட்ட ஜமாலியிடம் இப்னு தைமிய்யா அவர்களை அவன் இவன் என்று ஜமாலி பேசிய காட்சி எடுத்துக் காண்பிக்கப் பட்டது.

இறைவனுக்கு உருவம் உண்டு என்று இப்னு தைமிய்யா கூட கூறவில்லை என்று கடந்த விவாதத்தில் வாதித்தவர் இப்னு தைமிய்யா இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறினார் என இப்னு தைமிய்யாவை மேடையில் வைத்து வசை பாடும் காட்சி போட்டுக் காண்பிக்கப் பட்டது.

இப்படி தனக்குத் தானே ஜமாலி அவர்கள் முரண்பட்டு பேசிய விடியோக்கள் அரங்கத்தில் திரையில் போட்டுக் காண்பிக்கப்பட்டது.

அந்த வீடியோக்களை பார்த்தவுடன் அவர்கள் தரப்பு மக்களே ஜமாலி யார் என்பதை தெளிவாக புரிந்து கொண்டார்கள்.

போடப்பட்ட எந்த ஒரு வீடியோவுக்கும் பதில் தர முடியாமல் திண்டாடினார் ஜமாலி.

பி.ஜெ விட்ட சவாலும் விரண்டோடிய ஜமாலியும்.

மத்ஹபு நூல்களில் உள்ள ஆபாசங்களையும் அசிங்கங்களையும் பி.ஜெ அவர்கள் பட்டியலிட்ட போது அதில் உள்ள அசிங்கங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட பேச திராணியற்றுப் போன ஜமாலி இப்படியெல்லாம் அசிங்கங்களை இவர்கள் வாசித்துக் காட்டுகிறார்கள் என்று நீழிக் கண்ணீர் வடித்தார்.

அப்போது பி.ஜெ அவர்கள் அவரிடத்தில் மத்ஹபில் உள்ள அசிங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுத்து அசிங்கம் இல்லாமல் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது போல் நீங்கள் இதை தைரியம் இருந்தால் படித்துக் காட்டுங்கள் என்று சவால் விட்டார்.

ஆனால் விவாதத்தின் இருதி வரை அதை அவர் படிக்கவே இல்லை.

விவாதத்திற்கு அவர்கள் தரப்பால் வந்தவர்களே முகம் சுழித்துப் போகும் அளவுக்குத் தான் ஜமாலியின் வாதங்கள் அமைந்தன.

அல்லாஹ் தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களால் ஊதி அணைத்துவிட நினைக்கிறார்கள்.தன்னை மறுப்போர் வெறுத்த போதும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(61:8)

                                                        நன்றி:ரஸ்மின்
2:15 AM | 0 comments | Read More

நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு

Written By GM.BASHA on Tuesday, October 26, 2010 | 4:48 AM


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.        

நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும். 



தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.       

இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்...இன்ஷா அல்லாஹ்.   


"நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான். 

என் தந்தையால் என் தாய்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.      

இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன. 

  • என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்? 
  • ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்? 
  • உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்...இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? 
  • இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
  • நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?   

இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.          

நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன். 

கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.      

பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். "தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு  பதில்கள் கிடைக்கலாம்" என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.   

அந்த குரானை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குரானை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல  நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது. 

ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குரான் கண்ணில் பட்டது. 

வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குரானைத் திறந்தேன். 

குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே...      

முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே...

அதில் ஒரு வசனம், 

தீர்ப்பு நாளின் அதிபதி --- Qur'an 1:3  

என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்...

முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா...

அதன் இரண்டாது வசனம், 

இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். --- Qur'an 2:2

என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.   

படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது. 

ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது...   

என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.     

இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்.          --- Qur'an 2:30            

இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.


நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு. 

வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது...இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன். 

அதே வசனத்தின் இறுதியில், 

அவன் " நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான் --- Qur'an 2:30. 

என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா? 

இப்போது குரானுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குரானை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.   

நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குரான் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.          


என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனி பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடை கிடைத்தன. 

குரானின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை. 

பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். 

ஒருமுறை என் மகள் கேட்டாள், 

"சரி dad, குரான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?" 

இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.  

நான் குரானை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.    

நான் எந்த அளவு குரானை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். 

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.


ஆனால் குரான், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
    
அதுமட்டுமல்லாமல், குரானைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.  

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. 

குரானை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான். 

பலரும் என்னிடம் கேட்பார்கள், "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது" என்று.

நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம். 
தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.  

இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.  

ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், "டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?" என்று,

நான் சொன்னேன், "ஒரு குழந்தை தன் தாயை எதிர்க் கொள்கிறதே, அதுபோல் தான்" என்று...

வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள். 

உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது (ஸல்) அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம். 

அதனால் தேடுவதை தொடருங்கள்...."


இது தானே குரானின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது....அல்ஹம்துலில்லாஹ்.   

நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.

அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்...

டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர். 

பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். 

இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள் 
  • "Losing my religion, A call for Help", 
  • "Struggling to Surrender" மற்றும் 
  • "Even Angels Ask:: A Journey to Islam in America" 

இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய "Losing my Religion, A call for help" புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான "Even Angels Ask" என்பதிலும் இடம் பெற்றுள்ளது.   



நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ். 

இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள். 

அதிலும் இவருடைய "Even Angels Ask" என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங். 

டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம். 

For the believers, there is always a bright spot at the end of the tunnel.....
இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக...ஆமின்.              

இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக....ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...


Dr.Jeffrey Lang's Books can be bought at:
1. Amazon.com
2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.
        a) Losing My Religion, A call for Help.  ISBN: 978-1590080276
        b) Struggling to surrender. ISBN: 978-0915957262
        c) Even Angels Ask. ISBN: 978-0915957675 


My Sincere Thanks to:
1. Br. Eddie
2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA. 
3. Amazon.com

References:
1. Dr.Lang's Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom
                   நன்றி:எதிர்குரல்.காம்
4:48 AM | 0 comments | Read More

கேள்வி இங்கே பதில் எங்கே?

Written By GM.BASHA on Thursday, October 14, 2010 | 10:53 PM

கடந்த 12-09-2010 அன்று நமதூரில் மாமேதை(?)பதில் சொல்வாரா?என்றதலைப்பில்  ஒருபிரசுரம் வெளியிட்டிருந்தோம் அதில் சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது அதற்கு மாமேதை(?) இதுவரை பதிலளிக்காததால், கேள்வி இங்கே பதில் எங்கே? என்றதலைப்பில்
 இரண்டாவது பிரசுரம் வெளியிடப்பட்டிருக்கிறது   இதன்பிறகாவது மாமேதையார்(?) பதிலளிக்கின்றார என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

கேள்வி இங்கே பதில் எங்கே?

அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே கடந்த 12-09-2010 அன்று மார்க்கம் என்றபெயரில் ஜூம் ஆவில்  உளறிக்  கொட்டியவருக்கு மாமேதை(?)பதில் சொல்வாரா? என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிட்டு நாம் சில கேவிகள் கேட்டிருந்தோம் அந்த கேள்விகளுக்கு மாமேதை(?)வரைபதிலளிக்கவில்லைஎன்பதைநினைவூட்டி,
மார்க்கத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் உள்ள சகோதரர்கள் மாமேதையை(?) பதில் பிரசுரம் வெளியிட வலியுறுத்துமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

 மேலும் நாம் கேட்டிருந்த பழைய கேள்விகளோடு சில புதிய கேள்விகளையும் இணைத்துள்ளோம் இதற்கும் சேர்த்து பதிலளிக்குமாறு மாமேதையை (?)கேட்டுக் கொள்கிறோம்.மேலும் மாமேதை, மத்ஹ்பை தூக்கிப் பிடிப்பதால் நமது கேள்விகளை மத்ஹாப் சார்ந்தவைகலாகவே அமைத்துள்ளோம்,ஏனென்றால் மார்க்கம் அறியாத மக்களிடத்திலே மத்ஹாப் வெறியூட்டப்பட்டு  ,மத்ஹபை பின்பற்றினால் தான் சொர்க்கம் செல்லமுடியும் மத்ஹபை பின்பற்றாதவர்கள் வழிகேடர்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பொது   மக்களும் மத்ஹபைப் பற்றி அறிந்து கொள்ளவேண்டும் அவர்கள் அறிந்து கொண்டால் தான்,மார்க்கம் ( பின்பற்றத்தகுந்தது ) என்பது குரான் ஹதீஸ் மட்டுமா? அல்லது மத்ஹபுமா? என்று தெளிவுபெறமுடியும்.

சகோதர சகோதரிகளே இதுநாள் வரை மத்ஹாப் ஆலிம்கள் செய்த பயனை மட்டுமே கேட்டுவந்தீர்கள் இனிவரும் காலங்களில் உண்மையான மார்க்கமான (குரான் ஹதீசையும்) அறிந்துகொள்ள இருக்கின்றீர்கள் அல்ஹம்துலில்லாஹ் இந்த பொன்னான வாய்ப்பை ஏற்ப்படுத்தி தந்த மாமேதையார் (?) அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்க் கொள்கிறோம்.

மத்ஹபில் மார்க்கத்திற்கு முரணான என்னென்ன கருத்துக்கள் மலிந்து கிடக்கின்றன, மத்ஹாப் ஒரு ஆபாசக் களஞ்சியம்,அதைப் பின்பற்றுவது வழிகேடு போன்ற போன்றவற்றைப் பார்ப்போம்.

இனிவிசயத்திர்க்கு வருவோம் ...
            
தொழுகையில் விளையாடும் மத்ஹப்

நாய் அல்லது பூனையை,இச் கொட்டி அன்புடன் அழைத்தாலோ,அல்லது ஒரு கழுதையை ஓட்டினாலோ தொழுகை வீணாகிவிடாது.காரணம்,அது எழுத்துவடிவிலான வார்த்தை கிடையாது.அத்தஹியாத் இருப்பு அளவிற்கு அவர் உட்காருவதற்கு முன்னாள் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் இரண்டும் சமம்தான்.இக்காரியத்தை மறந்தோ,அல்லது உறங்கிக்கொண்டோ,அல்லது அறிந்தோ,அல்லது தவறியோ,அல்லது நிர்பந்தமாகவோ,செய்தாலும் தொழுகை வீணாகி விடாது.
நூல்:துர்ருல் முக்தார்,பாகம் 1பக்கம் 614
  
அன்பிற்கினிய  சகோதரர்களே கவனித்தீர்களா?மத்ஹாப் தொழுகையில் எவ்வாறு விளையாடுகிறது என்று.

நாம் கேட்க்கும் கேள்வி இதுதான், மத்ஹபின் இந்தச் சட்டம் குரானின் எந்த வசனத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டது ஆதாரமாக   அமைந்த ஹதீஸ் எது என்பதுதான். இதற்க்கு, குரானின் இந்த வசனத்தில் இருந்து எடுக்கப்பட்டது அல்லது இந்தஹதீஸ் ஆதாரம் என்று தெளிவாக எல்லோருக்கும் புரியும்படி பதிளளிக்க வேண்டும் வழக்கம்போல் உளறிக்கொட்டமலும்,தேவையில்லாமல் வசைபாடமலும் தெளிவாக பதிலளிக்கும் படி மாமேதயாரை (?)கேட்டுக் கொள்கிறோம்.
  
இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

"இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சிகளுக்கு உரிய நேரமன்று,தொழுகை என்பது இறைவனைத்துதிப்பதும்,பெருமைப் படுத்துவதும் குரான் ஓதுவதும் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பவர்:முஆவியா பின் அல்கஹம் அஷ்ஷூலமி(ரழி ) அவர்கள் நூல்:முஸ்லிம் 836
  
 மேலும் மறுமை நாளில் கேட்கப்படும் முதல் கேள்வி தொழுகயைப்பற்றிதான் மத்ஹபை பின்பற்றினால் மறுமையில் கேட்கப்படும் கேள்விக்கு சரியான முறையில் பதிலளிக்கமுடியுமா?என்பதையும் பொதுமக்கள் சிந்திக்கவேண்டும்,முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதற்கிணங்க இந்தமத்ஹாப் நம்மை நரகிற்கு  இழுத்துச் செல்லும் என்பதை சொல்லவும் வேண்டுமோ?.
  
தொழுகையில் விளையாட்டு
      
தொழுகை முடிந்ததும்(ஸலாம் கொடுக்காமல்)   தொழுகையில் செய்யக் கூடாத செயலைச் செய்தாலோ,அல்லது பேசக் கூடாத பேச்சை பேசியோ,அல்லது தனக்கு விருப்பமான செயலை ஏதாவது ஒருவிதத்தில் செய்தோ தொழுகையை விட்டு வெளியேறலாம்.
   உதாரணமாக,அந்தத்தொழுகை முடிந்தமாத்திரத்தில் ஒரு பார்லான தொழுகையையோ,அல்லது ஒரு நபிலான தொழுகையையோ தொழத் துவங்குவது அல்லது அஹ்ஹஹ்ஹா  என்று வெடிச்சிரிப்பு சிரிப்பது அல்லது வேண்டுமென்றே காற்று விடுவது அல்லது அப்படியே எழுந்து சென்று விடுவது அல்லது யாருக்காவது ஸலாம் சொல்வது இதுபோன்ற செயல்களை செய்து தொழுகையை விட்டு வெளிஏறிக்கொள்ளலாம்.
நூல்:ஹாஷியா இப்னு ஆபிதீன்,பாகம் 1 பக்கம் 449 
  
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே  தொழுகையை எந்த அளவிற்கு இந்த மத்ஹப்கள் கேலிக்கூத்தாக்கி இருக்கின்றன என்பதை பாருங்கள்    
மத்ஹபின் இந்தச்சட்டம் குரானின் எந்த வசனத்திலிருந்து எடுக்கப்பட்டது இதற்க்கு ஆதாரமாக அமைந்த ஹதீஸ் எது? என்பதயும்ன் மாமேதை(?) விளக்கி பதில் தரவேண்டும்.

இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

"தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும்.அதன் துவக்கம் தஹ்ரீமா(அல்லாஹுஅக்பர்) ஆகும் அதன் முடிவு (அஸ்ஸலாமு அழைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ் எனும் )தஸ்லீம் ஆகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அலி (ரழி)அவர்கள் நூல்:திர்மிதி 3 அபூதாவூது 56 
அன்பிற்கினிய என் சகோதர சகோதரிகளே நீங்களே சிந்தித்துக்கொள்ளுங்கள் மறுமை வெற்றிக்குச் சிறந்தது மாநபியின் வழியா? அல்லது மத்ஹாப் வழியா? என்று.
    
ஆலிம்கள் மட்டும் போதை பொருள் சாப்பிடலாம்

கொஞ்சம் (போதப் பொருள் சாப்பிடலாம்) என்பதன் கருத்து என்னெவெனில்,அது அறிவில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தக்கூடாது
அது போதையூட்டக் கூடியதாகவும்,தளர்சியூட்டக்கூடியதாகவும்,இருப்பினும் சரியே!
அதிகம் என்பதின் கருத்து,அது அவ்வாறு அறிவில் ஒருவிதமான பாதிப்பை ஏற்படுத்துவதாகும்.எனவே மக்ருஹ் (வெறுக்கத்தக்கதாகும்)
என்பதுடன் கொஞ்சம் சாப்பிடுவது கூடும் இது ஹராம் ஆகாது.ஆனால் இதப் பொதுமக்களிடம் கண்டிப்பாக மறைத்தாக வேண்டும் இல்லையெனில் அவர்கள் கொஞ்சம் என எண்ணிக்கொண்டு அதிகம் சாப்பிட்டு விடுவார்கள் 
நூல்:இஆனா,பாகம் 4 பக்கம் 156

மத்ஹபின் இந்தச் சட்டத்திற்கு ஆதாரமாக அமைந்த குரானின் வசனம் எது அல்லது ஆதாரமாக அமைந்த ஹதீஸ் எது என்பதை மாமேதை(?)  மக்கள் அனைவருக்கும் விளக்கி பதில் சொல்ல வேண்டும்.    
இதோ நபி (ஸல் ) அவர்களின் கூற்றை பாருங்ககள்

போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் தடைசெய்யப்பட்டது (ஹராம்)ஆகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் 
அறிவிப்பவர்:அபூ மூசா அல் அஸ்அரி (ரழி) புஹாரி 6124
"அதிகம் சாப்பிட்டால் போதை தரக்கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்)தான்"என்று நபியோ(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாவர்:ஜாபிர் (ரழி) நூல்:திர்மிதி 1788  நஸயி 5513       
இவர்கள் மத்ஹபை பின்பற்றுங்கள் என்று ஊருக்கு தான்   உபதேசம் செய்கிறார்களே
 தவிர இவர்களே மத்ஹபை பின்பற்றுவது கிடையாது
  
இதோ அதற்குரிய ஆதாரங்கள்

தராவிஹ் இருபது ரக்அத்கள் தான்  தொழவேண்டும்,எட்டு ரக்அத் களுக்கு ஆதாரங்கள் இல்லை.இதைச் செய்பவர்கள் குழப்பவாதிகள் மடையர்கள் என்று கூறிவரும் மாமேதைக்கு(?)பின்வரும் மத்ஹாப் சட்டத்தை நாமாவது சொல்லிக்கொடுத்து 
புத்தி சுவாதீனத்தை  தெளியவைப்போம்.

நபி(ஸல்)அவர்கள் ரமழானிலும்,ரமழான் அல்லாத காலங்களிலும் வித்ரு தொழுகை 
உட்பட பதினோரு ரக்அத்களைவிட அதிகமாக தொழுததில்லை.இது புஹாரி,
முஸ்லிம் ஆகிய நூல்களில் ஆயிஷா(ரழி)அவர்கள் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறே இப்னு ஹுஸைமா,இப்னு ஹிப்பான் ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.ஆனால், இப்னுஅப்பாஸ் (ரலி)அவர்கள் வாயிலாக இப்னு அபீஷைபா,தப்ரானி,பைஹகி போன்ற நூல்களில் இடம்பெற்றுள்ள,நபி(ஸல்) அவர்கள் வித்ரு தொழுகை நீங்கலாக இருபது ரக்அத்கள் தொழுதார்கள் என்ற செய்தி பலவீனமானதாகும்.(ஹனபி மத்ஹாப் நூல்:ஹாஷியா தஹ்தாவி,பாகம் 1 பக்கம் 269 )

முடிந்தால் மாமேதையார்(?) அவர்கள் இதற்க்கு மறுப்போ அல்லது பதிலோ தெரிவிக்கட்டும்.
சாக்கடையை கிளறக் கிளற எவ்வாறு நாற்றமேடுக்குமோ அதுபோல் இந்த மத்ஹபை தோண்டத் தோண்ட நாற்றம் எடுத்துக்கொண்டேதான் இருக்கும் இனிவரும் காலங்களில் மத்ஹப் ஒரு ஆபாசக் களஞ்சியம் என்பபதைப் பார்க்கலாம் இன்ஷா அல்லாஹ்.  
          வெளியீடு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
ஆர்.புதுப்பட்டினம் (கிளை)
புதுக்கோட்டை மாவட்டம்
தொடர்புக்கு:9524681116
         
10:53 PM | 0 comments | Read More