ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்

Written By GM.BASHA on Wednesday, June 29, 2011 | 6:43 AM




வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் எங்கு சென்றாலும் கூட்டம் எங்கு பார்த்தாலும் கூட்டம். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்வதற்குள் நம்மை கசக்கி பிழிந்து விடுவார்கள். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் பயணம் செய்ய மற்ற வாகனங்களை விட ரயிலில் பயணம் செய்யவே அதிகம் விரும்புகின்றனர்.  கட்டணமும் குறைவு, குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்லலாம் மற்றும் இரவு முழுவதும் எந்த வித பிரச்சினையுமின்றி தூங்கி கொண்டே செல்லலாம் என்ற பல காரணங்களால் மக்கள் அனைவரும் ரெயிலில் செல்வதை விரும்புகின்றனர். 

ரயில்வே டிக்கட்டுகளை 90 நாட்களுக்கு முன்பே பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி உள்ளதால் டிக்கட்டுகள் மளமளவென காலியாகி விடுகிறது. லைனில் காத்து கிடக்க தேவையில்லை வீட்டில் படுத்துக்கொண்டே டிக்கட்டுகளை பதிவு செய்து கொள்ளலாம். இது போன்ற வசதிகளாலே பெரும்பாலானவர்கள் இந்த ஆன்லைன் முறையை விரும்புகின்றனர். இப்படி ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறிய சிறந்த 5 தளங்களை கீழே கொடுத்துள்ளேன்.


IRCTC 
ஆன்லைனில் ரயில் விவரங்களை கண்டறியவும் டிக்கட்டுகளை முபதிவு செய்யவும் உதவும் மிக சிறந்த தளமாகும். இந்த தலத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டியது அவசியம். உறுப்பினரானால் தான் ரயில் விவரங்களை உங்களால் கண்டறிய முடியும். இணையத்தில் இந்த ஒரு தலத்தில் மட்டும் தான் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியும். காலை 8 TO 10 தட்கல் டிக்கட் வழங்கும் நேரம் என்பதால் அந்த சமயத்தில் இந்த தலத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்வது மிக சிரமம். மற்ற சமயங்களில் நன்றாக இயங்கும். 


INDIAN RAILWAY
இந்த தளத்தில் நீங்கள் தகவல்களை பெற உறுப்பினர் ஆகவேண்டிய அவசியம் இல்லை. யார் வேண்டுமானாலும் எந்த ரயிலை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். PNR நிலைப்பாட்டையும் இந்த தளம் மூலம் அறியலாம்.  இந்த தளத்தில் டிக்கட்டுக்களை முன்பதிவு செய்ய முடியாது 

இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும். மற்றும் இந்த தளத்தில் கூடுதல் வசதியாக அந்த ஏரியாக்களின் டிராவல்ஸ் கம்பெனிகளின் முகவரியோடு தொடர்பு எண்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த தளத்திலும் நீங்கள் உறுப்பினர் ஆகாமலே அனைத்து தகவல்களையும் பெற முடியும்.


TRAIN ENQUIRY
ரயில் நேரங்களை அறிய இந்த தளமும் மிக பிரபலமான தளம். ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை கொடுத்தாலே போதும் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். ஆனால் இந்த தளத்தில் PNR விவரங்களை அறிய முடியாது. 


நன்றி:வந்தேமாதரம் பிளாக்ஸ்பாட்  
6:43 AM | 0 comments | Read More

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதிவிட்டு +2 மாணவன் தற்கொலை: ஆசிரியர் கைது

Written By GM.BASHA on Wednesday, June 22, 2011 | 12:22 AM


சேலம் அருகே உள்ள பணமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 கணிதப்பிரிவில் படிக்கும் மாணவன் சீனிவாசன். சீனிவாசன் வீடு பணமரத்துப் பட்டியிலிருந்து சேலம் செல்லும் வழியில் உள்ள நெய்க்காரபட்டியில் உள்ளது. கடந்த 15ம் தேதி பள்ளிக்கூடம் திறந்த பின்னர், மூன்று நாட்களாக பள்ளிக்கு சென்று வந்தான். நேற்று முன்தினம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் வீட்டில் இருந்துள்ளான். சீனிவாசனின் பெறோர்கள் சேகர், விமலா மற்றும் அண்ணன் சத்தியமூர்த்தி ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர், இந்நிலையில் சனிக்கிழமை மதியம் சீனிவாசனின் தயார் விமலா சாப்பாட்டிற்கு வீட்டுக்கு வந்துள்ளார்.
 
அப்போது வீடு திறந்து கிடந்துள்ளது, சந்தேகமடைந்த விமலா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வீட்டு உத்திரத்தில், சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தான். மகனின் தற்கொலையால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள், கிராமத்தில் உள்ள வழக்கப்படி சீனிவாசனின் உடலை பிரேத பரிசோதனை ஆய்வுக்கு உட்ட்படுத்த பயந்துகொண்டு காவல்துறைக்கு புகார் கொடுக்காமலேயே சீனிவாசனின் உடலை எரித்துவிட்டனர்.
 
சீனிவாசனின் தற்கொலைக்கு காரணம் தெரியாத உறவினர்கள் சிலர், நேற்று காலையில் சீனிவாசனுடன் படிக்கும் சக மாணவர்களிடம் பள்ளியில் என்ன நடந்தாது என்பது குறித்து விசாரித்துள்ளர்கள். சீனிவாசனின் வகுப்பு மாணவர்கள், எங்களது கணித ஆசிரியர் செந்தில் சார் சரியாக புரியும்படி கணக்கு பாடம் நடத்துவதில்லை, அதனால் தலைமையாசிரியரிடம் புகார் கொடுப்பதற்கு எல்லா மாணவர்களிடமும் கையெழுத்து வாங்கிகொண்டிருந்தான் என்று சொல்லியுள்ளார்கள்.
 
சீனிவாசனின் தற்கொலைக்கு பள்ளியில் நடந்த சம்பவம் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டு உறவினர்கள் நேற்று சீனிவாசனின் பள்ளி புத்தகப்பையை திறந்து பார்த்துள்ளார்கள். அதில், சீனிவாசன் கைப்பட எழுதிய ஏழு பக்க கடிதம் இருந்துள்ளது. அதில், எனது சாவுக்கு என் பெற்றோர்களோ, உறவினர்களோ காரணமல்ல... என் முடிவை எழுதியவர்கள், நான் படிக்கும், பனமரத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கணித ஆசிரியர் செந்தில், தமிழ் அய்யா ராமலிங்கம், இயற்பியல் ஆசிரியர், மற்றும் வேதியியல் ஆசிரியர்கள் தான் காரணம் என்று எழுதப்பட்டிருந்தது.
 
நான் 11வகுப்பு படிக்கும் போதிலிருந்தே எங்களுக்கு கணக்கு பாடம் நடத்தும் செந்தில் ஆசிரியர் பாடம் நடத்துவது புரிவதில்லை... எங்களுக்கு, புரியும்படி பாடத்தை மெதுவாக நடத்துங்கள் என்று பலமுறை சொல்லியுள்ளோம். கடந்த 16ம் தேதி எங்களுக்கு செந்தில் ஆசிரியர் கணக்கு பாடம் நடத்தினார். அவர் வேகமாக நடத்தியதால், எனக்கு புரிய வில்லை, சார் மெதுவாக நடத்துங்கள் என்று கேட்டேன், என்னை முறைத்துப் பார்த்துவிட்டு, போர்டில் உள்ளதை மட்டும் எழுது என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
 
செந்தில் ஆசிரியர், கணக்கு படத்தை புரியும்படி, மெதுவாக நடத்தச்சொல்லி, தலைமையாசிரியரிடம் புகார் கொடுக்க என் வகுப்பு மாணவர்களிடம் கையெழுத்து வாங்கினேன், இந்த புகாரை தலைமையாசிரியரிடம் கொடுக்கலாமா...? என்று கெமிஸ்ட்டரி ஆசிரியரிடம் கேட்டேன். அவர் எல்லா ஆசிரியகளிடமும் நான் சொன்னதை சொல்லிவிட்டார்....
 
அன்று, மாலை நான் பள்ளி முடிந்து நானும், என் நண்பர் ஜீவாவும் வீட்டுக்கு வந்து கொடிருந்த போது, வேதியல் ஆசிரியர், என்னை கூப்பிட்டு... படிக்க வந்தா படிக்கற வேலைய மட்டும் பார், தேவையில்லாத வேலையெல்லாம் பாக்காதே, என கோபமாக திட்டினார். நீ எல்லா பசங்க முன்னாலயும் கணக்கு பாடம் புரியலையுன்னு கேட்டியாமே... என்னுடைய வகுப்புல அப்படி கேட்டுப்பார் என்ன நடக்குதுன்னு பார்.... என மிரட்டினார். பாடம் நடத்தும் போது சந்தேகம் கேட்க கூடத சார்..., எங்க கிலாசுல செந்தில் சார் நடத்துற கணக்கு பாடம் யாருக்கும் புரிய மாட்டிங்குது சார்.... என்று கூறினேன்.
 
மறுநாள் 17 தேதி கம்ப்யூட்டார் ஆசிரியர், என்னை கூப்பிட்டு என்ன ரிப்போர்ட் எழுதி கையெழுத்து எல்லாம் வாங்கியிருக்கிராயாமே... ஏன் வகுப்பு ஆசிரியரான என்கிட்ட சொல்லலை... என்று கேட்டார். அப்போது இயற்பியல் ஆசிரியர், நீ என்ன பெரிய இவனா... மூடிக்கிட்டு டெஸ்ட் எழுதுடா என்று மிரட்டினார். அப்போது பின்னல் வந்த தமிழ் அய்யா ராமலிங்கம், நீ என்னடா...பெரிய ரௌடியா, நீ படிக்கறது பள்ளிக்கூடம், இது காலேஜ் கிடையாது, எங்க மேல நீ பெட்டிசன் எல்லாம் போடமுடியாது, உன்ன பள்ளிக்கூடத்துல செத்துக்கிட்டதே பெரிய விஷயம், இந்த லட்சணத்துல நீ ரௌடித்தனம் பண்ணறே... உனக்கு புரிஞ்சா படி..., இல்லன்னா, டி.சி வாங்கிக்கிட்டு போய் உனக்கு பிடிச்ச வாத்தியார் இருக்கற பள்ளிக்குடத்துக்கு சேர்ந்து படி என்று மிரட்டினார்.
 
மாலை 3.30 மணிக்கு தலைமையாசிரியரிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு வந்து, இந்த கடிதத்தை எழுத்துகிறேன். எனக்காக அம்மா, அப்பா இருவரும் அழக்குகூடாது, அப்போது தான் என் ஆத்மா சாந்தியடையும். எனக்கு அடுத்த பிறவியிருந்தால் அதில் நான் மனிதனாக பிறக்க கூடாது, அரசு பள்ளிகளையும், அதன் ஆசிரியர்களையும் நன்றாக கவனித்தால் தான் என்னைப்போன்ற மாணவர்களை மேம்படுத்த முடியும்.
 
என் சாவு, அரசு பள்ளியில் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்த வேண்டும், இல்லையானால் என்னை மாதிரி எத்தனை உயிர்களை ஆசிரியர்கள் எடுக்கப்போகிரார்களோ தெரியவில்லை... திறைமையான ஆசிரியர்கள் பலர் வேலையில்லாமல் காத்திருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், மேல்நிலை வகுப்புகளுக்கு, நல்ல திறமையான ஆசிரியர்களை போடவேண்டும் என முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த கடிதத்தை சி.ஈ.ஓ விடம் ஒப்படைக்க வேண்டும்.
 
என் மரணத்திற்கு பின்னர் சட்டம் அதன் கடமையை செய்யவேண்டும் என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளான். சீனிவாசன் சாவுக்கு காரணம் ஆசிரியர்கள் தான் எனபதை அறிந்த உறவினர்கள், நேற்று சேலம் எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் சொன்னதன் பின்னர், மல்லூர் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளார். சீனிவாசனது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சீனிவாசன் தற்கொலை பற்றி காவல் நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க அறிவுறுத்தினார்.
 
அதன் பின்னர், மல்லூர் காவல் நிலையத்தில் சீனிவாசன் தற்கொலை செய்துகொண்டது சம்பந்தமாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இன்று துறை ரீதியான விசாரணையை துவக்கியுள்ளர்கள். கணக்கு ஆசிரியர் செந்திலை போலீசார் கைது செய்துள்ளனர்.
நன்றி:கிங்தமிழ் 
12:22 AM | 0 comments | Read More

அதிகம் டி.வி பார்த்தால் விரைவில் மரணம்-எச்சரிக்கை ரிப்போர்ட்

Written By GM.BASHA on Thursday, June 16, 2011 | 2:58 AM





இடியட் பாக்ஸ் என் அழைக்கப்படும் தொ(ல்)லைக்காட்சியை அதிகம் பார்த்தால் இளம் வயதில் மரணம் ஏற்படும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    அதிக நேரம் டி.வி பார்ப்பதினால் சர்க்கரை நோய்,இதய அடைப்பு மற்றும் இளம் வயதில் மரணம் ஆகியவை ஏற்ப்படும் என்று அமெரிக்காவில் உள்ள 'ஹார்வார்டு ஸ்கூல் ஆப் புப்ளிக் ஹெல்த்' என்ற மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் தெரிவித்துள்ளது.

     ஒரு நளில் இரண்டு மணி நேரத்துக்கு அதிகமாக டி.வி.பார்த்தால் சர்க்கரை வியாதி வருமென்றும்,மூன்று மணி நேரத்துக்கு அதிகமாக டி,வி,பார்த்தால் இதய அடைப்பு ஏற்ப்படும் என்றும்,அதிக நேரம் டி.வி.பார்த்தால் இளம் வயதிலேயே மரணம் சம்பவிக்கும் என்றும்,இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர்கள் பிராங் ஹூ,மற்றும் கிரான்ட் வெட்ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

     இந்த ஆராய்சிகளின் நோக்கம் உடலுழைப்பை அதிகப்படுதச் செய்வது மட்டுமில்லாமல்,டி.வி.பார்ப்பது போன்ற சோம்பேறித்தனமான செயல்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் ஏற்ப்படும் தீமைகளை எடுத்துச் சொல்வதுதான் என்று பிரான்க் தெரிவித்தார்.

    அதிகம் டி.வி.பார்ப்பதால் சர்க்கரை நோயோடு உடல்பருமனும் ஏற்ப்படும் என்று கிரான்ட் வெட் தெரிவித்தார்.1970 லிருந்து 2011வரை டி.வி.பார்ப்பது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளையும் கருத்தில் கொண்டே இவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

    அனைத்திலும் முன்னிலை வகிக்கும் அமெரிக்கர்கள் தான் டி.வி.பாப்பதிலும் முன்னிலை வகிக்கின்றனர்.ஒருநாளில் அமெரிக்கர்கள் 5 மணி நேரம் டி.வி.பார்ப்பதாகவும்,ஐரோப்பியர்கள் 3 லிருந்து 4மணிநேரம் டி.வி.பார்ப்பதாகவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.மனிக்ககனக்கில் டி.வி.பார்ப்பதால் நோய்கள் வரும் என்ற இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து நாள் முழுவதும் 'மெகா சீரியல்களைப்'பார்த்து அழும் நம்மவர்கள் சிந்திப்பார்களா? 
நன்றி:தினமணி.         
2:58 AM | 0 comments | Read More

ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் ஆபாச பத்திரிக்கைகள்...

Written By GM.BASHA on Wednesday, June 15, 2011 | 11:03 PM

அதிமுக அரசு ஆட்சியமைத்து ஒரு மாதங்களை நெருங்கிவிட்டது..
தேர்தலுக்கு முன்பும், தேர்தல் சமயத்திலும், அப்போதைய ஆளும்கட்சிக்கு ஜால்ரா அடித்துக்கொண்டிருந்த , - காரணம் - பெரும்பாலும், கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தையும் மிரட்டலையும் சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் புலம்பிக்கொண்டிருந்த -பத்திரிக்கைகள், ஆட்சி மாற்றம் நிழ்கந்தவுடன் தங்கள் ஆனந்தத்தை வெளிக்காட்டி குதூகலித்தன.
கருணாநிதியின் இந்த படுதோல்விக்கு காரணம் - அவரது கடந்த கால ஆட்சியின் ஊழலும், குடும்ப உறுப்பினர்களின் அளவுக்கதிகமான தலையீடுதான் என்று தெரிந்தும், ஜெயலலிதா ஏதோ சாதனை செய்தும், தனது திறமையினாலும்தான்  மறுபடியும் வெற்றிபெற்றார் என்பதுபோல தமது மன இச்சைப்படி பொய்களை பரப்பி வருகின்றன..

இப்படி ஒவ்வொருத்தரும் தமது சொந்த கருத்துக்களையும், தமது சொந்த விருப்பு வெறுப்புகளையும் மக்களிடம் திணிப்பதிலேயே குறியாக இருந்துகொண்டு, பொய்களையும் புரட்டுகளையும் பரப்பி, பொதுமக்களை - ஏற்கனவே சினிமா - சின்னத்திரை - மாயைகளால்  அறிவிழந்து முட்டாள்களாக இருக்கும் பொதுமக்களை  மேலும் முட்டாள்களாக்கி வருகின்றன.


ஜெயலலிதா தாம் ஆட்சி அமைக்கும்போதே, கோமாளி சோவின் ஆலோசனையின் பேரில்  ஒரு பயங்கரவாதி நரேந்திர மோடி என்பவனை அழைத்து அந்த பதவியேற்ப்பு விழாவை அசிங்கப்படுத்தினர்.
 வீண் கூச்சலிட்டு ஒன்றும் உபயோகமில்லை என்று  தெரிந்து்ம்   பக்கத்து  நாட்டில் இருக்கும் ராஜபக்ஷேவை தூக்கில் போடவேண்டும் என்று கூக்குரலிடும் - இந்த மேதாவிகள், உள்நாட்டிலேயே கொலை - மதவெறியாட்டம் போட்ட பயங்கரவாதி நரந்திரன் மோடியை வரவேற்று மகிழ்ந்தனர்.
 அவனை விரட்டி அடிக்கவேண்டிய பொறுப்பிலிருந்த போலி கம்யூனிஸ்ட்டுகள் கூடிகுலாவின.  முஸ்லிம்களுக்கான கட்சி என்று  ஓலமிட்ட தமுமுக வினர் புறமுதுகு காட்டி மோடியைக்கண்டு ஓடி ஒளிந்தனர்.

இப்படி ஆரம்பித்த ஜெயாவின் ஆட்சி, அவரது ஆணவத்தினாலும், பிடிவாதத்தினாலும் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணமும் - படிப்பும்  நாசாமாவது கண்டும் இந்த ஜால்ரா போடும் ஆபாச பத்திரிக்கைகள் சிறிதும் வாய் திறக்காமல் மெளனமாக இருக்கும் காட்சி அருவருக்க வைக்கிறது.
மின்சார சேமிப்பு என்று இலவச டிவியை ஜெயலலிதா ரத்து செய்தார். எமிஜியாரால் கலைக்கப்பட்ட மேல்சபையை மீண்டும் கொண்டுவரமாட்டோம்  என்று மேல்சபை நியமனத்தையும் ரத்து செய்தார். எல்லாம் சரிதான்..
ஆனால் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டபட்ட காரணத்திற்காக, புதிய தலைமை செயலகத்தை புறக்கணித்திருப்பதை தட்டிக்கேட்க வக்கில்லாமல் இந்த ஆபாச ஜால்ரா பத்திரிக்கைகள் மயிரை    புடுங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த கட்டிடம் கருணாநிதி சினிமா வசனம் எழுதி சாம்பாதித்து கட்டிய கட்டிடமல்ல.
 ஜெயலலிதா எம்ஜியாருடனும், சிவாஜியுடனும்,  சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய கட்டிடமுமல்ல, இஷ்டத்திற்கு விட்டுவிட.
 அத்தனையும் பொதுமக்களின் வரிப்பணம்..
இந்த பத்திரிக்கைகளும் சட்டமும் என்ன புடுங்கிகொண்டிருக்கின்றன என்று தெரியவில்லை..
அப்படியே அந்த கட்டிடம் முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லைஎன்றாலும்,  ஒரு குறிப்பிட்ட காலவரையறை கொடுத்து அதற்குள் முழுமையாக கட்டிமுடித்து அங்கேயே சட்டசபை இயங்கவேண்டும் என்று அறிவுள்ள எவனும் சொல்லுவான்.
 இதை தட்டிகேட்க முடியாத கோழைகளாக சட்டமும் பத்திரிக்கைகளும் - ஆளும் கட்சிக்கு தலையாட்டும் அடிவருடிகளாக இருப்பது இந்நாட்டின்  சாபக்கேடு.


கருணாநிதி கட்டினார் என்பதற்காகவே புதிய த

மைசெயலக கட்டிடத்திற்கு போக விரும்பாத ஜெயலலிதா, கருணாநிதி காலத்தில் கட்டிய பாலங்கள் சாலைகளில் பயணம் செய்யாமல் இருப்பாரா?
கருணாநிதி ஆட்சிகாலத்தில் கொண்டுவந்த சில நல்ல திட்டங்களையும் ரத்து செய்து ஆட்சியமைப்பையும் அரசியல் சாசன சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்.
கலைஞர் காப்பீடு  திட்டம் - சில பல குறைகள் இருந்தாலும் பலராலும் பாராட்டப்பட பயனளித்த நல்லதொரு திட்டம்தான்.
இவருக்கு பிடிக்காதது கருனாநிதியைதான்..தேவைப்பட்டால் அந்த திட்டத்துக்கு ஜெயலலிதா காப்பீடு திட்டம் என்று பெயரை வைத்துக்கொள்ளட்டும். பல லட்சகணக்கான மக்கள் பயனடைந்த இந்த திட்டத்தை ரத்து செய்து தனது சுய வெறுப்பு விருப்பை இதில் காட்டுவது ஏன்?
இதை கண்டித்து தட்டிக்கேட்க வேண்டிய  ஜால்ரா பத்திரிகைகளும் வாயையும் -----யும் மூடிக்கொண்டிருப்பது ஏன்?

சமச்சீர் கல்வியின் பாடும் இதே நிலைதான். சென்ற கல்வியாண்டில் அமல் படுத்தப்பட்ட இந்த சமச்சீர் கல்வி, இந்த ஆண்டில் திடீரென்று ரத்து செய்யப்பட்டதால் படிக்கும் மாணவர்களும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் இன்னும்  கல்வி  நிறுவனங்களும் பெருமளவில் குழம்பிப் போயிருக்கின்றன..
 இன்னும் இதற்காக அச்சடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ருபாய் மதிப்புள்ள புத்தகங்களும், இன்னும் மாற்றியமைக்கப்பட்ட கல்வித்திட்டங்களுக்காக இனி மேலும் அச்சடிக்கப்பட்ட புதிய புத்தகங்களுக்கான பணமும் யார் வீட்டு பணம்?
 மீண்டும் கேட்கிறேன், ஜெயலலிதா ஆடிப்பாடி நடித்து சம்பாதித்ட பணமா அவர் இஷ்ட்டத்துக்கு வீணடிக்க?


அடுத்ததாக மெட்ரோ ரயில் திட்டம்..பலவேறு நாடுகளில் வெற்றிகரமாக இயங்கிவரும் திட்டம்தான் மெட்ரோ ரயில் திட்டம்.

மலேசியா, ஜப்பான், அமெரிக்க போன்ற குறிப்பிட்ட நாடுகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு, நிதி பற்றாக்குறையிலும் நஷ்டத்திலும் இயங்கிவரும் இன்னொரு திட்டம் மோனோ ரயில் திட்டம்.
மெட்ரோ ரயில் திட்டத்தை நிறுத்திவிட்டு, மோனோ ரயில் திட்டத்தை தொடங்குவதாக அறிவித்திருப்பதும் கடைந்தெடுத்த முட்டாள்தனம்.
அதற்கும் ஆபாச பத்திரிக்கைகள் வாய்திறக்காமல் இருப்பதும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
ரஜியினின் மருத்துவம் பற்றியும்,
கமலின் அடுத்தபடம் பற்றியும்
விஜயின் அரசியல் பிரவேசம் பற்றியும்,
வடிவேலுவின் சினிமா வாய்ப்பு பற்றியும்
சோனியா அகர்வாலின் மறுமணம் பற்றியும்
தமனாவின் நீச்சல் உடை பற்றியும்.
விஜயகாந்த் குடிப்பது பற்றியும்
முக்கியத்துவம் கொடுத்து எழுதும் ஆபாச வியாபாரிகளுக்கு
நாசாமாக போகும் மக்கள் பணத்தைப் பற்றி என்ன அக்கறை?
 

நன்றி:மர்மயோகி 
11:03 PM | 0 comments | Read More

முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்...

Written By GM.BASHA on Tuesday, June 14, 2011 | 6:52 AM



நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..

பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.
 
நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில்  அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...


இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து  Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா  சாப்ட்வேர்  நம்ம  computer  - இல் இன்ஸ்டால் ஆகும்..


  Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...
 
6:52 AM | 0 comments | Read More

போலீஸ் நிலையத்தில் சிறுமி கற்பழித்துக் கொலை! போலீஸாரே கற்பழித்தனர்: தாய் பரபரப்புப் புகார்!!

Written By GM.BASHA on Monday, June 13, 2011 | 3:36 AM




உத்தரபிரதேச மாநிலம் லக்கீம்பூர்பேரி மாவட்டத்தில் லிஹாஷான் பகுதியைச் சேர்ந்த இந்திஜாமலி தரணம் ஆகியோரின் மகள் சோனா. 14 வயதான இவர் அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் அருகில் ஆடு மேய்க்கச் சென்றாள். இந்நிலையில் போலீஸ் நிலைய வளாகத்தில் வெட்டப்பட்ட மரத்தில் பிணமாக சோனா தொங்கிக் கொண்டிருந்தாள். போலீஸ் நிலையத்தில் போலீசார் சோனத்தை பலத்காரம் செய்து, கொலை செய்து விட்டதாகவும் தற்கொலை செய்து கொண்டார் என மற்றவர்களை நம்ப வைப்பதற்காக மரத்தில் தொங்க வி்ட்டதாகவும் தாய் தரணம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
சோனா பிணமாகக் கிடந்த நேரத்தில் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் இரண்டு சப்இன்பெக்டர்கள் உட்பட 11 போலீஸாரும் ஒட்டு மொத்தமாக சஸ்பன்ஸ் செய்யப்பட்டுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகுதான் சோனா கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்று தெரியவரும் என்றும் போலீஸ் சூப்பிரண்ட் ராய் தெரிவித்தார்.
 
சோனா சாவில் போலீஸார் சம்பந்தப்பட்டுள்ளனரா எனக் கண்டறிவதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்ட் தலைமையில் நீதி விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
  
நன்றி:கிங் தமிழ் 
3:36 AM | 0 comments | Read More

மாமா கட்சி ரவுடிகளின் அராஜகம் வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?

Written By GM.BASHA on Monday, June 6, 2011 | 10:36 PM


 1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.
நன்றி:TNTJ.NET
10:36 PM | 0 comments | Read More

மாமா கட்சி ரவுடிகளின் அராஜகம் வட மரைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?


 1. சென்னை மண்ணடி எண்: 7, வடமரைக்காயர் தெருவிலுள்ள இரண்டு மாடி கட்டிடம் முஸ்லிம் ட்ரஸ்ட் பெயரில் அதன் ஆயுட்கால சேர்மன் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களது பெயரில் பதிவு செய்யப்பட்டதாகும்
2. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்திற்கு பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அமைப்பாளராக இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் முதல் மாடியில் தமுமுக அலுவலகம் இயங்குவதற்கு அனுமதி வழங்கியிருந்தார்.
3. உணர்வு வார இதழை நிர்வகித்து வரும் முஸ்லிம் மீடியா ட்ரஸ்டின் சேர்மனாகவும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இருந்த காரணத்தினால் அந்த கட்டிடத்தின் இரண்டாம் மாடியில் உணர்வு வார இதழ் அலுவலகம் இயங்குவதற்கும் அனுமதியளித்திருந்தார்.
4. 2004ஆம் ஆண்டு தமுமுகவிலிருந்து பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களும் அதன் முன்னனி பேச்சாளர்களும் கூண்டோடு விலகியதையடுத்து தமுமுக அலுவலகம் அந்த கட்டிடத்தில் இயங்குவதற்கு தடை செய்ய அதிகாரமிருந்தும் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அதை செய்யவில்லை
5. எவ்வித சட்டப்பூர்வ உரிமையும் இல்லாமல் முஸ்லிம் ட்ரஸ்ட் கட்டடத்தின் முதல்மாடியில் இயங்கிவந்த தமுமுகவினர், 2004ஆம் ஆண்டு உணர்வு அலுவலக ஊழியர்களைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்தி ரவுடித்தனம் செய்ததால் காவல்துறை மூலம் கிரிமினல் வழக்கு பதிவுசெய்யப்பட்டு RDO விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
6. RDO விசாரணையில் இறுதித் தீர்ப்பு வரும் வரை முதல் மாடியை தமுமுக வும், இரண்டாம் மாடியை உணர்வு இதழும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்; யாரும் யாருக்கும் இடையூறு செய்யக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
7. RDO உத்தரவிட்ட 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை உணர்வு வார இதழின் நிர்வாகப்பிரிவு அலுவலகம் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
8. 2004ஆம் ஆண்டு முதல் கடந்த 2011 மே 27ஆம் தேதி வரை ஆயிரக்கணக்கான கடிதங்கள் தபால் துறை மூலம் அந்த அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டவை ஆதாரங்களாக நம்மிடம் உள்ளன.
9. கடந்த 2011 மே 27ஆம் தேதி அன்று நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும், மற்றும் உணர்வு இதழின் பொறுப்பாளர்களும் ஊட்டி சென்றுவிட்டனர்.
10. இதைத் தெரிந்து கொண்ட மமகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ் உள்ளிட்டவர்கள் அத்துமீறி உணர்வு வார இதழ் அலுவலகத்தின் பூட்டை உடைத்து ரூபாய் 5லட்சம் பெருமானமுள்ள பொருட்களைத் திருடிச்சென்றதுடன் மறுபூட்டுப் போட்டு உணர்வு வார இதழ் அலுவலகத்தை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
11. செயல்வீரர்கள் கூட்டத்தை முடித்து 31.05.2011 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை திரும்பிய உணர்வு வார இதழின் பொறுப்பாளர்கள் தமது நிர்வாக அலுவலகம் சென்ற போது ரவுடிக்கும்பலோடு காத்திருந்த மமகவினர் உள்ளே செல்லவிடாமல் தடுத்து விரட்டியடித்து விட்டனர்.
12. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்பதற்காகவும், சட்ட விரோத ஆக்கிரமிப்பிற்கு இந்த அரசின் ஆதரவு இருக்காது என்ற நம்பிக்கையிலும் சென்னை மாநகர ஆணையாளர் திரிபாதி அவர்களைச் சந்தித்து ஆதாரங்களை எடுத்துக்காட்டி தவ்ஹீத் ஜமாஅத் முறையிட்டது.
13. தவ்ஹீத் ஜமாஅத் கூறுவதில் உண்மையிருப்பதை விளங்கிக் கொண்ட ஆணையாளர் அவர்கள் தமக்கு அடுத்த பொறுப்பிலுள்ள JC செந்தாமரைகண்ணன் அவர்களுக்கு நமது புகாரை அனுப்பியதுடன் அவரிடம் நேரில் விளக்குமாறும் சட்டப்படி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
14. அதன் பிறகு JC செந்தாமரைகண்ணன் ACஅவர்களுக்கு அதை அனுப்ப அவர் B1 காவல்நிலையத்திற்கு அதை அனுப்ப இழுத்தடிப்பு வேலைகள் ஆரம்பமாயின.
15. 14ஆண்டுகளாக இயங்கிவந்த ஒரு வார இதழின் அலுவலகம் ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு பாரதூரமான விஷயத்தை -ஏற்கனவே RDO வால் இடப்பட்ட உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில் – B1 காவல்நிலையத்தில் ஒரு பெட்டி கேஸுக்கு தரப்படும் முக்கியத்துவம் கூட தராமல் ஏனோ தானோ என்று தவ்ஹீத் ஜமாஅத்தின் புகாரை குப்பைக்கூடைக்கு அனுப்பும் வகையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது.
16. காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் வரக்கூடிய ஜூன் 9ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவித்திருக்கின்றது.
17. யாரும் பயப்பட வேண்டாம்; எல்லாம் சட்டப்படி நடக்கும் என்று பதவியேற்ற முதல்நாள் ஜெயலலிதா சொன்னது வழக்கமான அரசியல் பாம்மாத்து அறிவிப்பு தான் என்பது இதன் மூலமாக நிரூபணமாகின்றது.
நன்றி:TNTJ.NET
10:17 PM | 0 comments | Read More

பராஅத்தும் மத்ஹபுகளும்

Written By GM.BASHA on Thursday, June 2, 2011 | 3:59 AM



நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பதுகிடையாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)
மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)
நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.
அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்

” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.
மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்
وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)
ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)
மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.
ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )
فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )
وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)

அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

-----------------------------------------------------------------------
"நீங்கள் , மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள் ! நன்மையை ஏவுகிறீர்கள் ! தீமையைத்தடுக்கிறீர்கள் ! அல்லாஹ்வை நம்புகிறீர்கள் !"
அல்குரான் 3: 110

Thanks:QITC
3:59 AM | 0 comments | Read More