ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

கூட்டுத்தொகை

Featured Posts

பாபர் மஸ்ஜித் தீர்ப்பு

Written By GM.BASHA on Thursday, September 30, 2010 | 5:21 AM


1. சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கரை மூன்றாக பிரிக்க வேண்டும்.

2. மூன்றில் ஒரு பங்கு பாபர் மசுதி கமிட்டிடம் ஒப்படைக்கப்படவேண்டும். 

3. மற்றௌரு பங்கு நிர்மோகி அகாரா அமைப்பிடம் தர வேண்டும். 

3. மூன்றாவது பங்கு  புதிதாக அமைக்கப்படும் அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.

4. மூன்றாக பிரிக்கும் வரை தற்போதை நிலை தொடர நீதிமன்றம் உத்தரவு.அயோத்தி வழக்கு: பரபரப்பான தீர்ப்பு
 
5.சர்ச்சைக்குரிய நிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்.
 
6.சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமைக்கோரிய சன்னிவக்பு நிர்மோகி அகரா மனு நிராகரிப்பு
முழு விபரம் இன்ஷா அலலாஹ் நாளை 
5:21 AM | 0 comments | Read More

என்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்"

Written By GM.BASHA on Monday, September 27, 2010 | 11:17 PM




அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

            சகோதரி ஏஞ்சலா கொலின்ஸ் (Angela Collins), 9/11க்கு பிறகு இஸ்லாத்தை தழுவிய ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களில் ஒருவர். கலிபோர்னியாவின் மிஷன் வியேகோ நகரத்தின் அல்-ரிதா (Al-Ridah Academy) இஸ்லாமிய சிறுவர்கள் பள்ளியின் முன்னாள் முதல்வர். 


ஏஞ்சலா அவர்களின் வாழ்க்கைக்கான தேடல் 9/11னுக்கு முன்பே தொடங்கிவிட்டது. மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட அவர், அங்கு தான் கண்ட முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் கவரப்பட்டு, பின்னர் அமெரிக்கா திரும்பி, அங்குள்ள முஸ்லிம்களிடம் பழகி இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டார். 

இஸ்லாம் குறித்து தவறாக யாரும் பேசினால் அவர்களிடம் தன் மறுப்பை தெரிவிக்கும் அளவு ஆர்வம் கொண்டிருந்த ஏஞ்சலா, அவர்களுக்கு தெளிவாக பதில் கூற வேண்டுமென்பதற்காக குரானை படிக்கத் தொடங்க, அதன் விளைவாக 9/11 நடந்து சில வாரங்களுக்கு பிறகு இஸ்லாமை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்...அல்ஹம்துலில்லாஹ். 

இது குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.... 
  

"நம்மையும், உலகில் உள்ள மற்ற அனைத்தையும் படைத்தவனுக்கு முழுமையாக அடிபணிய சொல்கின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் தான். ஒரு முஸ்லிமாக, நான் எந்தவொரு காரியத்தை தொடங்கினாலும் அதில் ஒரு நோக்கம் இருக்க வேண்டும் என்றும், பின்னர் அந்த நோக்கத்தை சரியான வழியில் உருமாற்ற வேண்டும் என்பதையும் அறிந்தே இருக்கின்றேன். இது என்னை மேம்படுத்த உதவுகின்றது.   

அல்லாஹ் என்னுடைய இதயத்தை திறந்திருக்கின்றான், இஸ்லாம் எனக்கு திசையை காட்டியிருக்கின்றது, என்னை படைத்தவனை திருப்திபடுத்தி அதன் மூலம் இந்த உலகின் மகிழ்ச்சியையும், இறைவன் நாடினால் மறுமையின் மகிழ்ச்சியையும் பெற விரும்புகின்றேன்.

நான் சமீபத்தில் இஸ்லாத்தை தழுவியவள். என் முன்னோர்கள் கத்தோலிக்க கிருத்துவர்கள். பதினான்காவது வயதில் திருத்துவ கொள்கையை நிராகரித்து விட்டேன். 

என் நம்பிக்கை என்று வரும்போது நான் மிகவும் குழம்பி போனேன். ஏன் இறைவன் மனித ரூபத்தில் வரவேண்டும்?, ஏன் மனிதர்களின் பாவங்களுக்காக தான் கொல்லப்பட அனுமதிக்க வேண்டும்?

என் வாழ்நாள் முழுவதும் அனைத்தையும் புரிந்து கொள்ள தேடியிருக்கின்றேன். ஆனால் இதனை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்னுடைய சந்தேகங்களை பாஸ்டர்களிடமும் அறிஞர்களிடம் கேட்பேன். அவர்களும் அதீத முயற்சி எடுத்து தங்களால் முடித்தவரை கிருத்துவ நம்பிக்கையை விளக்க முயன்றார்கள். 

இப்போது என்னை நானே கேட்டுக்கொண்டேன், "ஏன் என்னுடைய மார்க்கம் இவ்வளவு சிக்கலாக இருக்க வேண்டும்?"  

சிறிது காலம் சென்ற பிறகு இந்த குழப்பத்தை எளிதாக்க முடிவெடுத்தேன். ஒரே இறைவன் தான், அவன் தான் நம்மை படைத்தவன்....அவ்வளவுதான். வேறு எந்த விளக்கமும் அறிவுக்கு ஒத்துவரவில்லை.  

இறைவனுடைய வார்த்தைகளை தங்கள் சொந்த விருப்பங்களுக்காக மாற்றிய மனிதர்களின் தவறுகளை விளக்க வந்த மார்க்கமாக நான் இஸ்லாமை பார்க்கின்றேன். 

இஸ்லாம் எளிமையானது. இங்கு இறைவன் இறைவனாக மட்டுமே பார்க்கப்படுகின்றான். அவன் நம்மை படைத்தான், நாம் அவனை மட்டுமே வணங்குகின்றோம். 

தன்னுடைய செய்தியை மனித சமுதாயத்துக்கு அறிவிக்க, இறைவன், மூசா (அலை), ஈசா (அலை), முஹம்மது (ஸல்) என்று நபிமார்களை அனுப்பி வைத்தான். இஸ்லாத்தில், ஈசா (அலை) மட்டுமே இறக்காத நபியாக இருக்கின்றார். அதனாலேயே உலகின் இறுதி நாளுக்கு முன்பு வேதம் கொடுக்கப்பட்டவர்களை வழி நடத்த அவர் வருவார். குரான் இறுதி இறைவேதமாகவும், மனிதர்களின் கரங்களால் மாற்றப்படாத வேதமாகவும் இருக்கின்றது. 

இஸ்லாம் உறுதிப்படுத்துகின்றது, நீங்கள் முஸ்லிம் என்பதால் மட்டும் உங்களுக்கு சுவர்க்கம் கிடைத்து விடாது என்று. இறைவன் ஒருவனே என்று நீங்கள் நம்பினால் மட்டும் நேராக சுவர்க்கத்துக்கு போய் விட முடியாது. சுவர்க்கத்துக்கு செல்ல உங்களுடைய எண்ணங்களும், செய்கைகளும் இறைத்தூதர்கள் வாழ்ந்து காட்டிய படியும் அவர்கள் கொண்டு வந்த இறைச்செய்தியை சார்ந்தும் இருக்கவேண்டும்.     

சுவர்க்கம் என்பது உங்கள் தாய் தந்தையர் காட்டியப்படி நடந்தால் மட்டும் வந்துவிடாது. மாறாக, ஒரு முஸ்லிமாக, தொடர்ந்து உண்மையை ஆராய்வதும், அதனை அறிந்து கொள்ள முயல்வதும் நம்முடைய பொறுப்பாகும்.    

குரானின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் இருமுறை படித்த பிறகு, விரிவான குறிப்புகளை எடுத்துக்கொண்ட பிறகு, இந்த தலைசிறந்த படைப்பு என்னை படைத்தவனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்று நம்பத் தொடங்கினேன். 
  
சந்தேகமே இல்லாமல், என்னைப் பற்றி நான் அறிந்திருந்ததை விட இந்த புத்தகத்தின் ஆசிரியருக்கு அதிகமாகவே தெரிந்திருக்கின்றது. 

இங்கே என்னுடைய நாட்டில் (அமெரிக்கா) இஸ்லாம் தவறான புரிதலுக்கும், வெறுப்புக்கும் ஆளாகி இருக்கின்றது. நான் இஸ்லாத்தை தழுவியது என்னுடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் புதிராக இருந்தது. 

மத்திய கிழக்கில் நான் கண்ட முஸ்லிம்களின் வாழ்க்கை முறையில் அதிக வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களிடம் பெருந்தன்மையையும், தாராள மனப்பான்மையையும் மிக அழகிய ஒன்றாக கண்டேன். அதுமட்டுமல்லாமல், அவர்கள் கண்ணுக்கு அந்நியமான ஒரு பெண்ணை அவர்களில் ஒருவராக உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். 

இருந்தாலும், முஸ்லிம்களிடம் அவர்கள் சார்ந்த கலாச்சார தாக்கம் அதிகமாகவே இருக்கின்றது. முஸ்லிமாக பிறந்த ஒருவர் தான் சார்ந்த கலாச்சார தாக்கத்திலிருந்து வெளிவர எவ்வளவு கடினப்படுகின்றார் என்பதை உணர்ந்திருக்கின்றேன்.  

அதனால் நான் கலாச்சார வேறுபாடுகளை தள்ளி வைத்து விட்டு, குரான் மற்றும் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறை படியே வாழ முயற்சிக்கின்றேன்.  

இஸ்லாம் என்ற அமைப்பு (system) பல்வேறு பின்னணியை கொண்ட மக்களை தன்னகத்தே கொண்ட ஒன்று. இஸ்லாம் எந்தவொரு சூழ்நிலைக்கும் பொருந்தும் மார்க்கம். 

நான் நம்பிக்கையுடன் கூறுவேன், இஸ்லாம் என்ற ஒன்றை அல்லாஹ் எனக்குள் விதைத்திருக்காவிட்டால் என்னை என்னால் நிச்சயம் கண்டுபிடித்திருக்க முடியாது.   

இன்று, இதோ நான், ஏஞ்சலா, முஸ்லிம் அமெரிக்க பெண்: தன்னை படைத்தவனை பல காலங்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு ஆன்மா....இந்த பிரபஞ்சத்தையும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள அனைத்தையும் படைத்தவனை இஸ்லாத்தில் கண்டிருக்கின்றது....

ஏஞ்சலா கொலின்ஸ்"     

சகோதரி ஏஞ்சலா அவர்களின் பெற்றோர்கள் சிறிது காலத்திற்கு பிறகு அவரை ஏற்றுக்கொண்டார்கள். தங்களுடைய மகளின் முடிவை தாங்கள் ஏற்றுக்கொண்டதாகவும், இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பிறகு தங்கள் மகள் அதிக மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் குறிப்பிடுகின்றனர்...அல்ஹம்துலில்லாஹ். 

இஸ்லாம், எத்தனை சோதனைகள் வந்தாலும் அதனை தாண்டி கம்பீரமாய் நிற்கும். கோடானுகோடி பேரை தொடர்ந்து அரவணைக்கும். அதில் நம்முடைய பங்கும் சிறிதளவேணும் இருக்க வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்....
மேலும் "அல்லாஹ் இறக்கி வைத்த இதைப் பின்பற்றுங்கள்" என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் "அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எந்த வழியில் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்" என்று கூறுகிறார்கள்; என்ன! அவர்களுடைய மூதாதையர்கள் எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? --- Qur'an 2:170        



இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின். 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

Original article published as: 
1. Why I decided to Submit - Angela Colins, dated 9th September 2006 on islamicity.com. 

Tamil translation of the meanings of the original article written by:
1. Aashiq Ahamed. A

My Sincere thanks to:
1. Youtube.

Reference:
1. Choosing Islam: My Life as a convert - Sandra Marquez, People Magazine dated 4th September 2006. 
              நன்றி :எதிர்க்குரல்.
11:17 PM | 0 comments | Read More

பி.ஜெய்னுலாப்தீன் ( PJ ) தவ்ஹீத்வாதியா? தீவிரவாதியா?

Written By GM.BASHA on Wednesday, September 22, 2010 | 12:12 AM

                                                                Rasmin M.I.Sc (India)







கடந்த 19.09.2010 ஞாயிற்றுக் கிழமையன்று வெளியிடப்பட்ட லக்பிம ஆங்கில நாளேட்டில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதாகவும் அந்த இயக்கங்களுக்கும் தீவிரவாத இயக்கங்களான லக்ஷர் அல்உம்மா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.



ரங்கா ஜயசூரிய என்ற ஒருவரினால் எழுதப்பட்ட அந்த கட்டுரையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு தீவிரவாத இயக்கம் என்றும் அதன் அமைப்பாளர் சகோதரர் பி.ஜெ அவர்கள் தீவிரவாதி என்றும் அபான்டமான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது.



Wahhabist terriorist traning in srilanka ? என்ற தலைப்பிடப்பட்ட அந்தக் கட்டுரையில் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் அனைத்தும் தீவிரவாத அமைப்புகள் தான் என்றும் இங்குள்ள அமைப்புகளுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் பயிற்சியளிப்பதாகவும் அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டுள்ளது.



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தீவிரவாத இயக்கமா?



லக்பிம ஆங்கில நாளேட்டின் செய்தியில் தமிழகத்தில் மார்க்க மற்றும் சமுதாய பணியில் ஈடுபட்டு வரும் மபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டுள்ளது.



கடந்த 25 வருடகாலமாக தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடந்த 2006ம் ஆண்டு 10லட்சம் மக்களை கூட்டி மபெரும் அரசியில் மாநாட்டை கும்பகோணத்தில் நடத்திக் காட்டியது.



அது போல் கடந்த 2008ம் ஆண்டு தஞ்சையில் சுமார் பத்து லட்சம் மக்களை கூட்டி மாபெரும் மாநாட்டை இந்த அமைப்பு நடத்தியதின் மூலம் அரசாங்கத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்லாமல் தற்போது தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு அமைவதற்கு ஒட்டுமொத்த தமிழக முஸ்லீம்களின் வாக்குகளையும் பெற்றுக் கொடுத்த பெருமை இந்த அமைப்புக்கே உரியது.



இருதியாக கடந்து ஜுலை 4ம் தேதி அன்று சுமார் 15 லட்சம் மக்களை ஒன்று கூட்டி இந்திய முஸ்லீம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு மாபெரும் அரசியல் மாநாட்டையும் நடத்திக்காட்டியது.



இப்படி மக்கள் பேரியக்கமாக திகழும் ஒரு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக காட்டி அவர்களுடன் இலங்கையில் இயங்கும் தவ்ஹீத் அமைப்புகள் இணைந்து தீவிரவாத பயிற்சி மேற்கௌ;வதாக கூறியிருப்பது ஒரு இயக்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் மாபெரும் குற்றமாகும்.



கடந்த நான்கு வருடங்களாக இரத்ததானம் செய்வதில் தமிழகத்திலேயே முதல் இடத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தான் இருக்கிறது இப்படிப்பட்ட ஒரு அமைபை தீவிரவாத இயக்கமாக லக்பிம பத்திரிக்கை வர்ணித்ததின் மூலம் பத்திரிக்கையின் நம்பகத்தன்மையை இந்தப் பத்திரிக்கை இழந்துள்ளது.



யார் இந்த பி.ஜெ?



தமிழுலகறிந்த பிரபல பேச்சாளரும் எழுத்தாளரும் குர்ஆன் மொழிபெயர்பாளரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நிருவனத்தலைவருமான அறிஞர் பி.ஜெ அவர்கள் தமிழ்நாட்டில் தொன்டி என்ற ஊரில் பிறந்தவர் தனது பாடசாலைக் கல்வியின் பின்னால் அரபிமொழியைப் படித்து இஸ்லாமிய மார்க்கத்தை மிகத் தொளிவாக விளங்கிய பி.ஜெ அவர்கள் திருமறைக் குர்ஆனையும் நபியவர்களின் வார்த்தைகளையும் மாத்திரம் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டு தனது பிரச்சாரப் பணியை ஆரம்பித்தார்.



இளவயதிலேயே தனது பிரச்சாரத்தின் மூலம் பெரும் புரட்சியை உண்டு பண்ணிய அறிஞர் பி.ஜெ அவர்கள் இஸ்லாத்தின் மீது கலங்கம் சுமத்தியவர்களிடம் பகிரங்க விவாதம் செய்து அவைகளில் வெற்றியும் பெற்றார்.அல்ஹம்துலில்லாஹ்



இஸ்லாமியர்களின் புனித ஆலயம் கஃபாவை விமர்சித்த மதுரையைச் சேர்ந்த ஜபமனியுடன் விவாதித்து இஸ்லாமே உண்மை மார்க்கம் என்பதை தனது இளவயதிலேயே நிரூபித்துக் காட்டினார்.



நபியவர்களுக்குப் பின்னர் மீண்டும் ஒரு தூதர் வருவார் என்று கூறி மிர்சா குலாம் என்ற பொய்யனை இறைவனின் தூதர் என்று வாதிட்ட காதியானிகளுடன் விவாதித்ததின் மூலம் தமிழகத்தில் அவர்களின் கொட்டத்தை அடக்கினார்.



சுன்னத் ஜமாத் என்ற பெயரில் மார்க்கத்தில் இல்லாத காரியங்களை செய்துவரும் கப்ரு வணங்கிகளுடன் பல விவாதங்கள் செய்து இணைவைத்தல் என்னும் பெரும்பாவத்திலிருந்த மக்கள் அந்த பாவத்தை விட்டும் விளகிவர இறைவனின் உதவியினால் இவரின் ஆழ்ந்த மார்க்க அறிவும் சிறந்த பேச்சாற்றலும் மிகவும் முக்கியத்துவப்பட்டது.



கடவுலே இல்லை என்று தமிழகத்தில் பிரச்சாரம் செய்துவந்த திராவிடக் கலகத்தைச் சேர்ந்வர்களுடன் விவாதித்து இருதியில் அவர்கள் அனைவரும் திருமறைக்குர்ஆனை சகோதரர் பி.ஜெயிடம் கேட்டுவாங்கிப் போவதற்கு அது காரணமாக அமைந்தது.



திருமறைக் குர்ஆனை மிக எழிய தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு மிகத் தெளிவான விளக்கவுரைகளை வழங்கியதின் மூலம் படித்த மற்றும் பாமர மக்களிடமும் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றார்.



அத்துடன் இதுவரைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.



அவருடைய புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளன.



அச்சத் என்கின்ற மாணவர் சகோதரர் பி.ஜெயுடைய வரலாற்றை எழுதி முதுகலைப்பட்டத்தை வென்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது



கடந்த 25 வருடங்களாக பேச்சு மற்றும் எழுத்தின் மூலம் மார்க்கப் பிரச்சாரம் செய்துவரும் சகோதரர் பி.ஜெ அவர்கள் சமுதாய சேவையிலும் தன்னை அர்ப்பனித்துக் கொண்டவர்.



பி.ஜெ தீவிரவாதியா?



சகோதரர் பி.ஜெ அவர்களை லக்பிம நாளேடு தீவிரவாதியாக வர்ணித்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க விஷயமாகும்.



தீவிரவாதத்திற்கு எதிராக பி.ஜெ அவர்களின் பங்களிப்பு என்ன?



கடந்த 25 வருடங்களாக இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்ற மாற்று மத அன்பர்களுக்கான நிகழ்சி நடத்துவதின் மூலம் தீவிரவாதிகளையும் தீவிரவாதத்தையும் கடுமையாக எதிர்த்துவருகிறார்.



1980களிலிருந்து இலங்கையில் தீவிரவாதத்தில் ஈடுபட்ட விடுதலைப் புலிகளை எதிர்த்த இந்தியாவின் ஓரே அமைப்பு டி.என்.டி.ஜெ மாத்திரம் தான் அதுபோல் ஒரே தலைவரும் சகோதரர் பி.ஜெ மாத்திரம்தான்.



இலங்கையில் நடந்த இருதி யுத்தத்தின் போது சிவாஜிலிங்கம் எம்.பி.இந்தியாவிற்கு சென்று போரில் விடுதலைப் புலிகளுக்கு ஆதவு தரும்படி கேட்டதற்கு ஒருக்காலும் விடுதலைப் புலிகளை ஆதரிக்க முடியாது என்று தெளிவாக அறிவித்தவர் இந்த பி.ஜெ



அல்கைதா லக்ஷர் ஏ தைபா அல்உம்மா மற்றும் இது போன்ற தீவிரவாத அமைப்புகள் அனைத்தையும் தெளிவாக விமர்சித்து எதிர்க்கக் கூடிய ஒரு மிகப் பெரும் பிரச்சாரகராகவும் இவர் திகழ்கிறார்.



அல்உம்மா போன்ற அமைப்புகள் இவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதும் இவர் தீவிரவாதத்தை எதிர்பதனால் தான் என்பதையும் இங்கு குறிபிட வேண்டியுள்ளது.



தமிழக முன்னால் முதல்வர் ஜயலலிதா முதல் இன்னால் முதல்வர் கருணாநிதி வரை பல முறை முஸ்லீம்கள் விஷயமாக பல சந்திப்புகளை இவர் மேற்கொண்டுள்ளார்.



கடந்த ஜுலை 4ம் தேதி டி.என்.டி.ஜெ நடத்திய மாநாட்டின் பின் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் சகோதரர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களை டெல்லிக்கு அழைத்து பேசியதும் விஷேசமாக குறிப்பிடத்தக்கது.



லக்பிம பத்திரிக்கை ஆசிரியரே உங்களிடம் சில கேள்விகள்.



இஸ்லாமியப் பேரறிஞர் சகோதர் பி.ஜெ அவர்களை தீவிரவாதிகளாக தாங்கள் சித்தரித்துள்ளீர்கள்………



உங்கள் நாளேடு வெளியிடும் செய்திகள் அனைத்தினதும் உண்மைத் தன்மையை அறியாமல் தாங்கள் வெளியிடுவதை நிருத்திக் கொள்ளுங்கள்.



பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள் தீவிரவாதி என்றால் தீவிரவாதி பிரதமருடன் பகிரங்க சந்திப்பை மேற்கொள்ள முடியுமா?



டி.என்.டி.ஜெ தீவிரவாத இயக்கமெனில் தீவிரவாத இயக்கத்திடமா தி.மு.க அரசு தேர்தலில் ஆதரவு கேட்டது?



கலைஞர் கருணாநிதிக்கும் பி.ஜெக்கும் இடையில் பல முறை சந்திப்புகள் நிகழ்ந்துள்ளது அப்படியெனில் கருணாநிதியும் தீவிரவாதியா?



மன்மோகன்சிங்குடன் பி.ஜெ பேச்சுவார்த்தை நடத்தியதால் இந்தியப் பிரதமரையும் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று லக்பிம செய்தி வெளியிடுமா?



தவ்ஹீத் இயக்கங்களை தீவிரவாத இயக்கங்களாக சித்தரித்ததற்காகவும் தமிழக முஸ்லீம் பேரியக்கமான டி.என்.டி.ஜெயையும் அதன் அமைப்பாளரையும் தீவிரவாதிகளாக பொய் குற்றம் சாட்டியதற்காகவும் பகிரங்க மண்ணிப்பு கேட்க வேண்டும்.



அப்படி மண்ணிப்புக் கேட்காத பட்சத்தில் லக்பிம நாளிதல் பெரும் சட்டச் சிக்களை எதிர் கொள்ளவேண்டிவரும் என்பதையும் பத்திரிக்கையின் விற்பனை கேள்விக்குறியாக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

                                  நன்றி:சகோதரர் Rasmin M.I.Sc (India)
12:12 AM | 0 comments | Read More

அநீதிக்கு எதிரான போராட்டக் களத்தில் TNTJ

Written By GM.BASHA on Tuesday, September 21, 2010 | 11:48 PM

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடியைச் சார்ந்தசகோதரர்அப்துல்ஹமீது அவர்களின்மகன்சாகுல்ஹமீது.ஏழ்மையானகுடும்பத்தைச்
சார்ந்தஇந்தசகோதரர்அருகில்உள்ளசுதர்ச்சன  நாச்சியப்பன்
எஞ்சினியரிங்கல்லூரிஎன்றதனியார்கல்லூரியில்  இரண்டாம்
ஆண்டுபயின்றுவந்தார்.கடந்த சுமார்இருபத்தி ஐந்து நாட்களுக்கு
முன் கல்லூரிக்கு சென்ற இவர் தனியார் பேருந்தில்சில சமூக
 விரோதிகளால் மர்மமானமுறையில்படுகொலை செய்யப்பட்டார்.
இன்னலில்லாஹி வஇன்னா இலைய்ஹி ராஜீவூன்.
இவரது தந்தை ஒரு ஐஸ் வியாபாரி தங்களுடைய ஏழ்மை
நிலையையும் பொருட்படுத்தாமல் தங்கள் மகன் படித்து
நல்லநிலைக்குவரவேண்டும்என்று படிக்கவைத்தார் .
ஆனால் கயவர்கள் அவரைபடுகொலைசெய்து விட்டார்கள்.
இவருக்கு திருமண வயதில் ஒருசகோதரி உள்ளார்.
சகோதரர்படுகொலைசெய்யப்பட்டு   இருபத்தி ஐந்து நாட்கள்
ஆகியும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால்
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டைமாவட்டம்,
புதுக்கோட்டை பழைய பேருந்தில்
இருந்து கலக்டர் அழுவலகம் வரை ஊர்வலமாகச் சென்று
கலக்டர்அழுவலகம்முற்றுகை என்ற போராட்டத்தை அறிவித்து
 நடத்தியது.
இறுதியாக கலக்டர் அவர்களிடம் மூன்று கோரிக்கைகளை வலியுறுத்திமனுக்கொடுக்கப்பட்டது.
1,சமூகவிரோத கொலைகார கும்பலை பதினைந்து நாட்களுக்குள்
கண்டுபிடித்து கடுமையான தண்டனை கிடைக்க வழிவகை
செய்யவேண்டும்.
2,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ருபாய் ஐந்துலட்சம் நிவாரணம்
 வழங்க வேண்டும்.
3,பாதிக்கப்பட்டகுடும்பத்தைச்சார்ந்தசகோதரிக்கு அரசு வேலை
 வழலங்க வேண்டும்.
என்றமூன்றுஅம்ச கோரிக்கையை வலியுறுத்திஇந்தபோராட்டம்
அமைந்திருந்தது .இந்தபோராட்டத்தில் ஐநூறுக்கும் அதிகமான
 சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் எழுப்பப்பட்ட கோசங்கள்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதி 


கலெக்டர் அவர்களிடம் அளிக்கப் பட்டமனு 

கலெக்டர் அவர்களிடம் மனு அளிக்கும் போது

கொலை செய்யப்பட சாகுல் ஹமீது 

பத்திரிக்கையாளர் பேட்டியின்போது 


      
மறுநாள் வெளிவந்த பத்திரிக்கைச் செய்தி


11:48 PM | 0 comments | Read More

பழைய சாதத்தில் இவ்வளவு விசயமா!

Written By GM.BASHA on Sunday, September 19, 2010 | 3:58 AM

நோய் எதிர்ப்பு சக்தி,உடல் சுறுசுறுப்பாக, பன்றிக் காய்ச்சல்,எந்தக் காய்ச்சலும் அணுகாது!, உடல் சூட்டைத் தணிப்பதோடு, குடல்புண், வயிற்று வலி குணப்பட, சிறு குடலுக்கு நன்மை, அலர்ஜி, அரிப்பு போன்றவை சரியாக, சட்டென்று இரத்த அழுத்தம் கட்டுக்குள் வர, உடல் எடையும் குறைய..
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது என்கிறார் அமெரிக்காவில் இருக்கும் ஒரு மருத்துவர்.

தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்!

கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது!

"காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.

அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.

இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.

மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும். அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும்.

எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்".

பழைய சாதத்தை எப்படி செய்வது? (அது சரி!)

பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான்.

ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.) மதிய உணவு நேரம் வரை டீ, காபி கேக்காது வயிறு!
Source:http://chittarkottai.com/general/health_tips2.htm
 
                                                                                             நன்றி: வாஞ்சூரார்.
 
3:58 AM | 0 comments | Read More

ஏர்டெல் வாடிக்கையாளர்களே உசார்!!!

Written By GM.BASHA on Saturday, September 18, 2010 | 1:18 AM

குறிப்பு: இந்த கட்டுரையின் நோக்கம்,  ஏர்டெல் நிறுவனத்தை இழிவுபடுத்துவதற்காக  அல்ல. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பல நூதன முறையில் ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த பதிவு. மேலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து  புகார்களும் ஏர்டெல்-லில் பதிவு செய்யப்பட்ட புகார்களே…!airtel desinetworkcocc ஏமாற்றும் ஏர்டெல் – பகுதி2
வாசகர் பெருமக்களுக்கு , ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை பல மோசடி வேலைகளில் ஈடுபடுத்தி வருவதை “ஏமாற்றும் ஏர்டேல் பகுதி 1-ல்” பார்த்தோம். மேலும் சில முக்கிய  நூதன திருட்டு பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.
கடந்த மாதம் 17-ம் தேதியன்று நமது வாசகர் ஒருவரின் ஏர்டெல் சிம் கார்டு பொருத்தப்பட்ட மொபைல் போன் களவு போனது. மொபைல் தொலைந்த வருத்தத்தில் இருந்த நமது வாசகர் சிம் கார்டையாவது செயலிழக்க(block) செய்து புதிய சிம்கார்டை(Duplicate sim) பெறலாமே.. என நினைத்துள்ளார்.  இது தொடர்பாக அவர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்புகொண்டு……..“தமது ஏர்டெல் எண்ணை தற்காலிகமாக செயலிழக்க(block) செய்யுங்கள் மற்றும்  அதே எண்ணில் புதிய சிம் கார்டு(Duplicate sim) பெற வழிமுறைகளை கூறுங்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  இதற்கு ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, நமது வாசகரிடம் ஒரு சில பாதுகாப்பு தொடர்பான (security questions) வினாக்களை(Last recharge, address,etc.,) கேட்டுள்ளார்கள்,  அதற்கு நமது வாசகரும் பதில் அளித்துள்ளார். இறுதியாக ஏர்டெல் சேவை மைய அதிகாரி நமது வாசகரின் ஏர்டெல் எண்னை தற்காலிகமாக செயலிழக்க செய்து விட்டு, மாதிரி சிம் கார்டு(Duplicate sim) பெற அருகிலுள்ள ஏதேனும் ஒரு ஏர்டெல் ஷோரூ-மிற்கு சென்று……
(1). உங்கள் முகவரி அடங்கியுள்ள அடையாள சான்றிதழ் நகல்
(2).பாஸ்போர்ட் அளவுள்ள ஒரு புகைப்படம்
(3).ரூபாய் 25 /-
செலுத்தி புதிய மாதிரி சிம் கார்டு(Duplicate sim) பெற்றுக்கொள்ளுங்கள் என வழிமுறைகளை கொடுத்துள்ளார்.
கடந்த மாதம் 23-ம் தேதி, நமது வாசகரும் அவ்வாரே அருகிலுள்ள ஏர்டெல் ஷோரூமிற்கு சென்று புதிய (Duplicate sim) சிம் கார்டு பெறுவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து அதற்கான தொகை ரூபாய்.25 செலுதியுள்ளார். ஆனால் ஏர்டெல் ஷோரூம் அதிகாரிகள் ஏர்டெல் டூப்ளிகேட் சிம்கார்டு பெற 49 ரூபாய் கொடுங்கள் என நமது வாசகரிடம் கேட்டுள்ளனர்.
அதற்கு நமது வாசகர் பதில் …..,
ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, டூப்ளிகேட் சிம் கார்டு பெற 25 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என தகவல் கொடுத்துள்ளார், நீங்கள் ஏன் 49 ரூபாய் வசூல் செய்கிறீர்கள் என வினா எழுப்பியுள்ளார்.”
அதற்கு ஏர்டெல் ஷோரூம் அதிகாரியின் பதி்ல் …………..
டூப்ளிகேட் சிம் அல்லது புதிய சிம் கார்டு பெருவதற்கும் 49 ரூபாய்தான் கட்டணம்
என உறுதியாக பதில் அளித்துள்ளனர். மீண்டும நமது வாசகர் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரியை தொடர்புகொண்டு….. 49 ரூபாய் கேட்கிறார்களே……. என முறையிட்டுள்ளார். அப்பொழுது வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி நமது வாசகரிடம்…. போனை அவர்களிடம் கொடுங்கள்.. நான் பேசுகிறேன்…… என்று கூறியுள்ளார்…
வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி, ஷோரூம் அதிகாரியிடம்….., டூப்ளிகேட் சிம்மிற்கான கட்டணம் 25 ரூபாய்தான். நீங்கள் ஏன் 49 ரூபாய் வசூல் செய்கிறீர்கள்? என வினவியுள்ளார்.
இதற்கு ஏர்டெல் ஷோரூம் அதிகாரி, வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிக்கு அளித்த பதில்……
நாங்கள் மொத்தமாக  சிம் கார்டுகளை விற்பதற்கான அனுமதி ஏர்டெல்-லில் பெற்றுள்ளோம். நாங்கள் வாங்கும் போது ஒரு சிம் கார்டின் விலை 49 ரூபாய்தான் இருந்தது இடையில் ஏற்ப்பட்ட விலை குறைப்பிற்கு நாங்கள் பொருப்பல்ல. நாங்கள் 49 ரூபாய்க்கு தான் விற்ப்போம். 25 ரூபாய்க்கு விற்கமாட்டோம்.” என பதில் அளித்தார்கள்.
வாடிக்கையார் சேவைமைய அதிகாரி நமது வாசகரிடம்………
ஏர்டெல், டூப்ளிகேட் சிம்மிற்கான விலை 25 ரூபாய் என நிர்ணயம் செய்துள்ளது… ஆனால் இந்த ஷோரூம் அதிகாரிகள் அதை ஏற்க மறுக்கிறார்கள். நீங்கள் 49 ரூபாய் செலுத்தி டூப்ளிகேட் சிம் வாங்கி விடுங்கள். பிறகு அதற்கான ரசிதை(bill) வாங்கி ஸ்கேன் செய்து ஏர்டெல்லிற்கு (121@airtelindia.com
)  ஒரு மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.. நீங்கள் கூடுதாலாக செலுத்திய பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறோம்
” என்று தகவல் கொடுத்துள்ளார்.
அவ்வாரே 49 ரூபாய் செலுத்தி டூப்ளிகேட் சிம் மற்றும் அதற்கான ரசீதை பெற்ற நமது வாசகர்…..
Airtelbill ஏமாற்றும் ஏர்டெல் – பகுதி2
அந்த ரசீதை ஸ்கேன் செய்து ஏர்டெல் நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மின்னஞ்சல் உங்கள் பார்வைக்கு இதோ……….
———Original Message———-
From: premkumarnew80@yahoo.co.in
To: 121@airtelindia.com
Cc:
Sent: 25/01/2010 17:50:32
Subject: Problem while bring the duplicate sim card – Mobile No:9600515487
Hello sir madam I lost my mobile phone loaded with my airtel sim card(9600515487) on 17th January 2010. I have spoken to the airtel customer care executive in order to block my phone number. They accepted my request and advised me to produce my address proof with photo from any airtel dealers to get a duplicate sim card for Rs 25.
After that I went to Airtel authorized showroom Bonjour Bonheur Cellcomn No.543 M.G.Road Pudhucherry-1 on 23rd January 2010. I gave them my proof with photo and Rs 25. They strictly said that you have to pay Rs. 49 to get a duplicate sim. Again I talked to Airtel customer care executive and said that they are charging Rs 49 not Rs 25. Then the customer care executive had a conversion with the dealer to know the reason.
The dealer says ¿We have bulk of old stock sim cards. We have the rights to sales those sim cards with Rs.49(old prize) for those stocks¿. Finally the customer care executive Mr.Karthick advised me ¿Please buy a duplicate sim card for Rs 49 from that show room with bill. Then please send this issue as complaint to our email address with the scanned copy of that bill¿.
As per this conversation I am herewith attached my bill with this email. Please do the needful and let me know the correct reason. I need to know who is providing me a false statement.
Thanks
M. Premkumar
மது வாடிக்கையாளர் இந்த மின்னஞ்சல் அனுப்பியதும்,  எந்தவித முன் அறிவிப்பின்றி… ஏர்டெல் நிறுவனம்…, நமது வாசகரிடம் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட ரூபாய்.24 ஐ  நமது வாசகரின்  ஏர்டெல் மொபைல் எண்ணிற்கு ரீச்சார் செய்து விட்டது… கடமைக்கு ஒரு பதில் மின்னஞ்சல் அனுப்பிவிட்டது.  ஏர்டெல் நமது வாசகருக்கு அனுப்பிய பதில் மின் அஞ்சல் உங்கள் பார்வைக்கு இதோ….
Re: PROBLEM WHILE BRING THE DUPLICATE SIM CARD – MOBILE NO:9600515487 [|BAL|9600515487|2501201015583|]
Monday, 25 January, 2010 8:05 PM
From:”121@airtelindia.com” 121@airtelindia.com
To:premkumarnew80@yahoo.co.in
Dear sir :
Thank you for contacting Airtel.
This is with reference to your email dated 25/01/2010 for you Airtel number 9600515487.
We apologize for the inconvenience caused to you in this regard.
We would like to confirm you that your balance Rs.24/- additionally charged for Duplicate SIM Card has been credited to your account as on 25/01/2010.
For further assistance, mail us at 121@airtelindia.com.
We thank you and value your association with Airtel.
Warm Regards,
Karthik D
Customer Care
Bharti Airtel Limited

இத்தனை பிரச்சனைகளை கடந்து நமது வாசகர்,  தன்னிடம் அதிகபடியாக வசூல் செய்த ரூபாய் 24-ஐ திரும்ப பெற்றார். இந்த பிரச்சனைக்கு பிறகும் அந்த ஏர்டெல் ஷோரூமில் 49 ரூபாய்கே சிம் கார்டுகள் விற்கப்படுகின்றன என்பது கூடுதல் தகவல்.
இந்த ஏர்டெல் ஷோரூம்,  ஏர்டெல் சிம்கார்டுகளை மட்டுமே விற்பனை மற்றும் சேவை புறியும் ஒரு ஷோரூம். மளிகை அங்காடி அல்ல.  இப்படிபட்ட ஒரு ஷோரூமில் 25 ரூபாய் மதிப்புள்ள சிம்கார்டுகள் 49 ரூபாய்க்கு விற்று மக்களை ஏமாற்றியுள்ளது குறிப்பிடதக்கது.
நமது வாசகர் போல் பல்லாயிர கணக்கானோர் நாடு முழுவதும் ஏமாற்றப்பட்டுகின்றனர்.  நமது வாசகர் ஏமாற்றம் அதற்கு ஓர் உதாரணம்.
அந்த ஏர்டெல் ஷோரூமில் ரூபாய் 49 ற்கு விற்கப்பட்ட  மொத்த சிம்கார்டுகலுக்கு அவர்கள் கூடுதலாக வசூல் செய்த தொகையை உரியவருக்கு எப்படி திருப்பி தருவார்கள்….?  இதற்கு ஏர்டெல் எடுத்த நடவடிக்கை எண்ண…? இதற்கு யார் பொறுப்பு……?
இதுபோன்ற கேடுகெட்ட நிறுவனங்களில் நமது மக்கள் பணம் பல நூதன முறையில் திருடுவது தொடர் கதையாகவே உள்ளதே…..!  இதிலிருந்து நமது மக்களை காப்பாற்ற போவது யார்…?  மக்களின் அறியாமையை ஆயுதமாக பயன்படுத்தும் பல மோசடி நிறுவனங்களை தண்டிக்கபோவது யார்…?

                                                                                நன்றி:வானூர் ஆன்லைன்




1:18 AM | 1 comments | Read More

ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா 2010

Written By GM.BASHA on Monday, September 13, 2010 | 1:33 AM

சென்ற வருடங்களைப்போலவே இந்தவருடமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா விநியோகம் செயாப்பட்டது.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தவருடம் பித்ராவைப் பற்றி ஒரு பிரசுரம் வெளியிட்டு உள்ளூரில் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்தவருட உள்ளூர் வசூல் 5450 சென்றவருட உளோர் வசூல் 1300 ,மேலும் குவைத் சகோதரர்கள் மூலம் 5486 புருனை சகோதரர்கள் மூலம் 3000 சவூதி சகோதரர்கள் மூலம் 3000 தலைமை மூலம் 4000 சென்றவருடத்தில் சகோதரர்கள் செய்த தவற்றால் ருபாய் 2720 மீதம் ஆகிவிட்டது அதையும் சேர்த்து ஆகமொத்தம் 23656 ருபாய்
உளோர் வசூல்:             5450
சென்றவருட இருப்பு:  2720
குவைத் மூலம்:            5486
சவூதி மூலம்:                3000
புருனை மூலம்:            3000
தலைமை மூலம்:        4000
ஆகமொத்தம்:            23656

இதில் அரிசி இரண்டரைக் கிலோ,சீனி அரைக்கிலோ,ஆயில் அரை லிட்டர்,சேமியா நூறுகிராம்,ஜவ்வரிசி நூறு கிராம்,திராட்சை முந்திரி பத்துருபை,ஏலம் பட்டை பத்துருபா,மஞ்சள் தூள் ஐம்பது கிராம்,மிளகாய் தூள் ஐம்பது கிராம்,சீரகத்தூள்,சோம்புத்தூள் ஐம்பது கிராம்,தேங்காய் ஓன்று,முட்டை ஐந்து,இறைச்சிக்காக பணம் ரூபா 100 ஆகியன 77 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது இதில் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 64 ஏழைகளுக்கும் பக்கத்து கிராமமான எம்பக்கோட்டைக்கு(இந்த உஊரில் நமது கிளை கிடையாது) 13 ஏழைகளுக்கும்  வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்...    




                                        
1:33 AM | 0 comments | Read More

மாமேதை(?)பதில் சொல்வர?

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டம்  ஆர்.புதுப்பட்டினத்தில் ஏகத்துவ சகோதரர்கள்  சொற்ப எண்ணிக்கையில் இருந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சிறந்த முறையில் ஏகத்துவ பிரச்சாரம் செய்துவருகின்றனர்
இதற்கு ஊரில் யாரும் எதிர்ப்பு இல்லை என்றாலும் சேகு உதுமான் என்ற குராபி நஜாத் காரர்கள் தொப்பி இல்லாமல் தொழுளுகின்றனர் நெஞ்சில் கைகட்டிதொழுளுகின்றனர் விரலசைக்கின்றனர் மேலும்,தனிஜமாத் வைத்து தொழுளுகின்றனர் என்று ஊர்  நிர்வாகத்தை  துண்டி விட்டு  சமீபகாலமாக அமைதியாக இருக்கும் ஊரில் பிரச்சனையை கிளப்பிவிட்டுக்கொண்டு இருக்கிறார் சமீபத்தில் தனி ஜாமாஅத் வைத்து தொழுத நமது சகோதரர்களை ஊர் நிர்வாகம் கடுமையான முறையில் எச்சரிக்கை செய்து இனிமேல் இவ்வாறு செய்தால் ஊர் நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்திருந்தது.
 இந்த வருட ரமலான் பித்ராவை வசூல் செய்வதற்காக ஆர்.புதுப்பட்டினம் கிளை சார்பாக ஒரு பிரசுரம் விநியோகிகப்பட்டிருன்தது இதற்கு ஊரில் பொதுமக்களிடத்தில் நல்லவரவேர்ப்பு   இருந்தது இதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் வஞ்சகத்தை நெஞ்சகத்திலே வைத்திருந்த  குராபி சேகு உதுமான் ஏகத்துவ சகோதரர்களை சாடுவதற்கும் பழிவாங்குவதற்கும் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார் .
அதற்க்கு இந்த ரமழான் பெருநாள் அன்று ஜூம் ஆவில் சந்தர்ப்பம் கிடைக்கிறது கிடைத்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி,எட்டு ரகாத்துகள் தொழுபவர்கள் மடையர்கள் என்றும்,மேலும் குரானையும் ஹதீசையும் மட்டும் பின்பற்றிக்கொண்டு மதஹ்பை பின்பற்றாவிட்டால் சுவர்க்கம் செல்லமுடியாது,அரபுமொழி தெரியாதவர்கள் புகாரி ,முஸ்லிமில் இருந்து ஒரு ஹதீஸை சொன்னால் அது ஹராம் ஆஹிவிடும் என்றெல்லாம் உளறிக்கொட்டியுள்ளார் அதற்க்கு மறுப்பாக மாமேதை(?)பதில் சொல்வர?என்ற தலைப்பில் நமது கிளையின் சார்பாக ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.இதுபோன்று குழப்பம் விளைவிக்கும் இவர்மீது சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் பரிசீளிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது .
12:16 AM | 0 comments | Read More

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி

Written By GM.BASHA on Wednesday, September 8, 2010 | 12:18 AM

சவுதியில் பாதிக்கப் பட்ட இலங்கைப் பெண் ஆரியவதிக்கு SLTJ ரூபா 75000ம் நிதியுதவி.
கடந்த 10 நாட்களாக பேசப்பட்டு வரும் மிக பரபரப்பான செய்தி ஆரியவதி என்ற இலங்கைப் பெண் சவூதியில் வைத்து பாதிக்கப் பட்டதாகும்.

குறிப்பிட்ட பெண் சவூதிக்கு வீட்டு வேலைக்காக சென்றவர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இலங்கை திரும்பினார்.இலங்கை திரும்பி அடுத்த நாள் ஆரியவதி மாத்தரையில் கம்புருபிட்டிய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார்.

அவரைச் சோதித்துப் பார்த்த மருத்துவ குழு ஆரியவதியின் உடலில் கிட்டத்தட்ட 23 ஆணிகள் ஏற்றப் பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

23 ஆணிகளும் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக கூறப்பட்ட சவுதியைச் சேர்ந்த தம்பதியினரை சவுதி அரசு கைது செய்துள்ளது.

இந்தச் செய்தி கடந்த சில தினங்களாக இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் சிங்கள மக்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய தவறான எண்ணத்தையும் உண்டு பண்ணியது.

ரூபா 75000ம் மருத்துவ உதவி வழங்கியது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்.

கடந்த 01.02.2010 செவ்வாய் கிழமையன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் நிருவாகிகள் ஆரியவதியை சந்திப்பதற்காக அவருடைய சொந்த ஊருக்கே சென்றனர்.

அங்கு ஆரியவதியைச் சந்தித்த ஜமாத்தின் தலைவர் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக ஆரியவதியின் மருத்துவ செலவுக்காக 75000 (எழுபத்தி ஐயாயிரம்) ரூபாவை அவரிடத்தில் கொடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள்களுக்கு பேட்டியளித்த ஜமாத்தின் தலைவர் ரியால் அவர்கள்  சகோதரி ஆரியவதிக்கு ஏற்பட்ட இந்த கொடுமையை கடுமையாக கண்டிப்பதுடன் இஸ்லாத்திற்கும் குறிப்பிட்ட சவுதிய தம்பதின் செயலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார்.

அதனைத் தொடர்ந்து சிங்கள மொழியில் பேட்டியளித்த ஜமாத்தின் செயலாளர் சகோதரர் அப்துர் ராஸிக் அவர்கள் இஸ்லாம் மனித நேயத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தெளிவாக விளக்கினார்.

பூனைக்கு தண்ணீர் கொடுத்ததின் மூலம் ஒரு பெண் சுவர்கம் சென்றதையும் உணவு கொடுக்காமல் சாகடித்ததின் மூலம் ஒரு பெண் நரகம் சென்றதையும் எடுத்துக் காட்டி நபியவர்கள் இப்படி கூறியிருக்கிறார்கள் இஸ்லாம் மனித நேயத்தினை வலியுருத்தும் மார்க்கம் அதனால் இந்த செயலை நாம் நமது ஜமாத் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் என்று கூறினார்.

இந்தச் செய்தியைக் கேட்ட சிரச நியுஸ் பெஸ்டின் செய்தியாளர் இஸ்லாத்தின் இந்தக் கொள்கை தாம் அதிகம் நேசிப்பதாகவும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் மிக முக்கியமான பணியைத்தான் செய்திருப்பதாகவும் கூறி பாராட்டுத் தெரிவித்தார்.

 லங்கா தீப என்ற இலங்கையின்  பிரபல சிங்களப் பத்திரிக்கையின் செய்தியும் புகைப்படமும்.
முஸ்லீம்கள் சார்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் ஆரியவதியை சந்திக்க வந்தது தனக்கு மிக சந்தோஷமாக இருப்பதாக லங்காதீப என்ற சிங்கள பத்திரிக்கையின் செய்தியாளர் குறிப்பிட்டார்.

நன்றி:Rasmin
12:18 AM | 0 comments | Read More

திருவிடைச்சேரி துப்பாக்கிச் சூடு விவகாரம் ஓர் விளக்கம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (TNTJ) மீது சில சுயநலவாதிகள் பரப்பும் அவதூருக்கு ஜமாத் தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை.

திருவாரூர் மாவட்டம் திருவிடைச்சேரி என்ற கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹாஜி முஹம்மது என்பவர் துப்பாக்கியால் சுட்டு இருவர் இறந்து விட்டதாகவும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் என்றும் பரப்பப்படும் செய்தி உண்மைக்கு முரணானதாகும்.

துப்பாக்கியால் சுட்டவர் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகியோ உறுப்பினரோ அனுதாபியோ அல்ல. அவர் எங்கள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுகை நடத்தக்கூடியவரும் அல்ல. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகளை ஆதரிப்பவரும் அல்ல.

அவரது உறவினர் குத்புதீன் என்பவரை சிலர் தாக்கிவிட்டனர் என்பதால்  உறவினருக்காக நியாயம் கேட்க அவர் வந்தபோது ஊர் ஜமாஅத்தார்களுக்கும் அவருக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையின் போது தான் அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். சுடப்பட்டவர்களில் முஸ்லிமல்லாதவர் மூன்று பேர் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தச் சம்பவத்திற்கும் தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. எந்தக் காலத்திலும் இது போன்ற வன்முறையை தவ்ஹீத் ஜமாஅத் கையில் எடுத்ததில்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தச் சம்பவம் தொடர்பான முழு தகவல்கள் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு (6-9-2010) ரமளான் நேரடி ஒளிபரப்பில்  மவ்லவி பி.ஜே அவர்கள் உரையாற்றுவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்!

இறைவன் திருமறையில்..

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதி ருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 49-6)

முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

”கேள்விபடுவதையேல்லாம் பரப்புவது ஒருவரை பொய்யன் என்று சொல்வற்கு போதுமானதாகும்” (முஸ்லிம்-6)

நன்றி:Rasmin

12:16 AM | 0 comments | Read More

படிக்கும் வயதில் கற்பமாகும் மாணவிகளுக்கு(?) தனிக் கல்லூரி. மலேசிய அரசின் கேடு கெட்ட கொள்கை.

Written By GM.BASHA on Thursday, September 2, 2010 | 1:01 AM


மலேசியா அசராங்கம் அன்மையில் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை மிக மிக ஆச்சரியத்தை உண்டு பண்ணியுள்ளது.

அதாவது படிக்கும் காலத்திலேயே கற்பமாகும் இளம் பெண்களுக்கு தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மலேசியாவின் மலாக்கா மாநில அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் தி ஸ்டார் நாளிதல் செய்தி வெளியிட்டுள்ளது.

திருமணம் செய்து கொள்ளாமலேயே படிக்கும் காலத்தில் பல இளம் பெண்கள் விபச்சாரத்தின் மூலம் கற்பமாவதாகவும் அப்படி கற்பமடைபவர்கள் பல கஷ்டங்களை சந்திப்பதாகவும் அதனால்த்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன் வரும் 16ம் தேதி குறிப்பிட்ட பள்ளி திறக்கப்படும் என்றும் அதனை மலாக்கா மாநில இஸ்லாமிய விவகாரத்துறை நிர்வகிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மலேசியாவின் இஸ்லாமிய நிலை என்ன?

மலேசியாவைப் பொருத்தமட்டில் இஸ்லாமிய நாடாக தன்னை அந்த நாடு வெளியுலகத்திற்கு காட்டிக் கொண்டாலும் அந்த நாட்டிற்கும் இஸ்லாமிய விழுமியங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அதாவது பெயரளவில் தான் தன்னை இஸ்லாமிய நாடு என அந்த நாடு அறிமுகம் செய்துள்ளதே தவிர இஸ்லாமிய சட்டங்கள் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அங்கு செயல்படுத்தப் படுவதில்லை.

மலேசியாவும் மத்ஹபு குப்பைகளும்.

மலேசியாவில் வாழும் மக்களில் பெரும்பாலானவர்கள் ஷாபி மத்ஹபை பின்பற்றுபவர்கள் அங்குள்ள சட்ட திட்டங்களில் பெரும்பாலானவை ஷாபி மத்ஹபைப் பின்பற்றித்தான் அமைக்கப் பட்டுள்ளன.

ஆண்மீகத்திலிருந்து அரசியல் வரை பெரும்பாலும் ஷாபி மத்கபின் ஆதிக்கமே அங்குள்ளது.

குர்ஆன் ஹதீஸ் மாத்திரம்தான் மார்க்கத்தின் ஆதாரங்கள் இவை இரண்டையும் மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என யாராவது தூய இஸ்லாத்தை பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கெதிராக அரசாங்க சட்டங்கள் பாயும்.

விபச்சாரத்தை கவணிக்க இஸ்லாமிய விவகார அமைச்சு 
 
மலேசியாவின் கேடு கெட்ட அரசு விபச்சாரத்தை கவணிக்க இஸ்லாமிய விவகாரங்களுக்கான அமைச்சைப் பயன்படுத்துவது மிக மிக கண்டிக்கத்தக்க செயலாகும்.

அத்தோடு இந்தச் செய்தி வெளியிடப் பட்டதை இது வரைக்கும் அந்நாட்டு உலமாக்கள்(?) என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் மாத்திரம் சென்ற வருடம் திருமணம் செய்யாமலேயே குழந்தைக்கு தாயானவர்கள் எண்ணிக்கை 170 அவர்களில் 70 பேர்கள் டீன் ஏஜ் மாணவர்களாகும்.

இப்படி திருமணமாகாமலேயே குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்களால் நாட்டில் பல பிரச்சினைகள் ஏற்படுவதாகவும் அந்நாட்டு அரசு செய்தி வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய நிலைபாடு என்ன?

இது கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் விஷயத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வெண்டும் என்பது பற்றி ஏகத்துவம் மாத இதழில் சகோதரர் ஷம்சுல்லுஹா அவர்கள் வெளியிட்ட ஆசிரியர் தலையங்கத்தை இங்கு தருகிறோம்.

மறுமைத் தேர்வே முதன்மைத் தேர்வு

1. கல்வி நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்தல்

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைக் கிறித்துவப் பள்ளிக்கூடங்களில் கொண்டு போய்ச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர் என்பதை விட வெறி கொண்டு அலைகின்றனர் என்றே சொல்ல வேண்டும். அங்கு போய் பயில்கின்ற பிஞ்சு நெஞ்சுகளில் கிறித்தவப் போதனைகள்இ கிறித்தவப் பிரார்த்தனைகள் பதியப்படுவதுடன் மண்டியிட்டுச் செய்கின்ற வணக்க வழிபாடுகளும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.

தும்மினால் கூட "ஏசப்பா' என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்குஇ உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்கின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போல எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்''அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) 
நூல்: புகாரி 1358,1359,1385 முஸ்லிம் 4803

நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் செய்கின்றனர்.

கிறித்தவ நிறுவனங்களில் பணி புரிவோர் பிஞ்சு உள்ளங்களில்இ தளிர்க்கின்ற சின்னஞ்சிறு நாற்றுக்களிடம் தங்கள் நச்சுக் கருத்துக்களை நடுவதற்குப் பாடம் பயின்றவர்கள்; பயிற்சி பெற்றவர்கள்.

இந்தக் கிறித்தவ மையங்களில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்த்து கிறித்துவ மயமாக்குவதற்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் போட்டி போட்டுக் கொள்கின்றனர். இது மழலைப் பிள்ளைகளின் நிலை என்றால் விடலைப் பிள்ளைகளின் நிலை வேதனையிலும் வேதனையாக அமைந்துள்ளது.

முஸ்லிம்கள் நடத்தும் பொறியியல் கல்லூரிகளில் தங்கள் பிள்ளைகளைக் கொண்டு போய் சேர்க்காமல் கிறித்தவ நிறுவனங்களில் கொண்டு போய் சேர்க்கின்றனர். அரசாங்கத்தின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் இதைச் செய்தாலாவது பரவாயில்லை. பணம் கட்டிச் சேர்க்கும் போதும் இத்தகைய கிறித்தவப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பது தான் வேதனையாகும். இந்தக் கல்லூரிகள் முஸ்லிம் மாணவர்களை ஜும்ஆ கூடத் தொழ அனுமதிப்பதில்லை. இப்படி இம்மைக்காக மறுமையை இழப்பதற்குப் பெற்றோர்கள் முன்வரலாமா? என்பதைச் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்.

2. பெண்களின் மேல்படிப்பு

பெற்றோர்கள் தங்கள் பெண் மக்களைக் கல்லூரியில் சேர்ப்பதில் கடுமையான ஆர்வத்தைக் காட்டுகின்றனர். ஒரு பெண்ணுக்கு உயர் கல்வி வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. ஆனால் உன்னத கற்பா? உயர் கல்வியா? என்று கேட்டால் கற்பு தான் என்று இந்தப் பெற்றோர் பதிலளிப்பர்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சர்வ சாதாரணமாக சக மாணவர்களுடன் திரையரங்கம் சென்று அருகருகே அமர்ந்து படம் பார்ப்பதுஇ ஹோட்டல்இ பார்க்இ பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள்இ ஆபாசக் கலப்புகள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகள் எப்படி கற்பு சுத்தம் கொண்டிருப்பார்கள் என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும். அதனால் நம்முடைய பெண் பிள்ளைகளை நரகத்திலிருந்து காப்பாற்றியாக வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 66:6)

ஆனால் நம்முடைய உலக ஆசை இதையெல்லாம் செய்வதற்குத் தடையாக அமைகின்றது. இதை உள்ளடக்கும் விதமாகத் தான் அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:

ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும்இ நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)

நாம் நம்முடைய பிள்ளைகளின் மறுமைத் தேர்வை முதன்மையாக்குவோமாக!

கற்பா? கல்லூரியா?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலைஇ மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்.

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாகஇ காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள் தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்ற போது ஆட்டோவே அதிர்கின்ற வகையில் அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் - நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட் சர்ட் அணிந்து இன் செய்து சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணிஇ நான்கரை மணி 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்று தான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலை தான். இப்போது சிந்தியுங்கள். இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!
ஆட்டோஇ வேன் பயணம் தான் இப்படி என்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலப் புத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள் ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போதுஇ குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவதுஇ பாடல்களைப் பாடி ஆடுவது கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம் தான். கணவன்இ மனைவி போல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளிஇ கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும்இ வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள் தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லி விட்டு பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றன. முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம்இ விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத் தான் நமது அருமை மகள் திரையரங்கில் திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம். இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?
பிற மதத்தவருடன் காதல் பயணம்

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில்இ நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும் போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது. கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்து விடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்.

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு! பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும் கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டு விட்டு ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தை விட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும் போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும் போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கலில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாலியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விடஇபாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும்இ வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள்இ கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

"கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத ஆண் உறவினருடன் தவிர ஒரு பெண் மூன்று மைல்கள் தூரத்திற்கான பயணத்தை மேற்கொள்ளக் கூடாது' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
 நூல்: தப்ரானி

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த வயதானவர்களாக ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை  இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும் போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது.


நன்றி:Rasmin,M.I.Sc 
1:01 AM | 0 comments | Read More

பர்தா ஒரு தடையல்ல...

Written By GM.BASHA on Wednesday, September 1, 2010 | 10:35 PM

  ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
சகோதரர் றிழ்வான் அவர்களுக்கு
அஸ்ஸலாமு அலைக்கும்! 
                                                                                                                                                                  சகோதரி மாஷா நசீமுக்கு அன்பு நிறைந்த மடல் படித்தேன். அவசியமான மற்றும் சிறந்ததொரு பதிவு என்பதில் இரு கருத்தில்லை. ஆனால் அது சற்று விரிவாக அமைந்திருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து. எனவே நானும் சில கருத்துகளை வரைகின்றேன்.
                                                                                                                                                                         இந்த காலத்தில் இதையெல்லாம் பார்த்தால் முடியுமா? என்பது தான் தற்போதைய நங்கைகளின் எண்ணமாக இருக்கின்றது. மேலாடை சுதந்திரம் எனும் பெயரில் ஆடைகளின்றி நங்கையர் வலம் வரும்; போது அதற்கு உலகின் பல நாடுகளும் அனுமதியும் வழங்கி இருக்கும் போது முற்றிலும் மறைத்து வெளிவருவது சற்று சிரமமானதாகவே அவர்களுக்கு படுகின்றது. அதற்கு காரணம் ஃபர்தா என்பது கருப்பு நிற உடை என நினைப்பது தான். 
                                                                                                                                                                                      இந்த படத்தை பாருங்கள்.   

இங்கே நிற்கும் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் அணிந்திருப்பதும் ஃபர்தா தான். உலகை வெறுத்து சேவைகள் செய்யும் கன்னியாஸ்திரிகளால் தான் அவ்வாறு இருக்க முடியும், நம்மால் முடியாது எனும் முடிவுக்கு வந்து விட வேண்டாம். அருகே நிற்கும் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டில் அவர்களும் ஃபர்தா அணிந்து தான் நிற்கின்றார். ஒரு நாட்டின் ஜனாதிபதி ஃபர்தா அணிந்து உலகின் பல நாடுகளுக்கும் சென்று வரும் போது நம்மால் முடியாதா?
அடுத்த படத்தை கவனியுங்கள்.
  






இங்கிலாந்து ராணி எலிசபெத் அம்மையார் ஃபர்தாவுடன் காட்சி அளிக்கின்றார்.கடற்கரையில் முழு நிர்வாணமாக கிடக்கும் கலாச்சாரத்தை கொண்ட இங்கிலாந்து நாட்டின் ராணி, வெளி இடங்களுக்கு செல்லும் போதும் உலக தலைவர்களை சந்திக்கும் போதும் இந்த உடையைத் தான் தேர்ந்தெடுக்கின்றார். ஏனெனில் இது தான் அவருக்கு கண்ணியமாக படுகின்றது. அவருக்கு மட்டுமல்ல உலகின் எந்தவொரு பெண் தலைவரும் ஆபாச ஆடைகளை கண்ணியமானவை என்று சொன்னதில்லை. எனவே சகோதரி மாஷா நஷீம் அவர்கள் முகம், முன் கைகளை தவிர பிற அவயங்களை மறைப்பது அவசியமானதாகும். அவ்வாறு உடலை மறைக்கும் போது அந்நியர்களின் கோரப் பார்வையிலிருந்தும் தவறான எண்ணங்களிலிருந்தும் பாதுகாப்பு பெறுவதோடு இறைவனின் கட்டளையை நிறைவேற்றியதற்கான நன்மைகளையும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகின்றது. 
                                                                                                                                                                    அத்துடன் தனிமையில் பிற ஆண்களுடன் உரையாடுவது, கை குலுக்குவது, தந்தை அல்லது சகோதரனின் துணையின்றி நீண்ட தூரங்களுக்கு பயணம் செய்வது போன்றவற்றை தவிர்த்து கொள்ள வேண்டும். இவைகள் உங்கள் வளர்ச்சிக்கு தடையல்ல, வளர்ச்சிக்கான ஊக்கமே.  ஏனெனில் இஸ்லாம் என்பது பிற மதங்களை போல் பெண்களை வீட்டில் முடக்கி போடும் மதமல்ல, பெண்களுக்கு அதிகமான உரிமைகளை பெற்று தந்துள்ள மார்க்கமாகும்.                                                                               நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் மனைவியும் மூமின்களின் அன்னையுமான ஆயிஷா(ரலி) அவர்கள், மிகப்பெரிய அறிஞராக இருந்தவர். அவரிடம் கல்வி கற்க ஆண்கள், பெண்கள் என்ற பேதமின்றி ஏராளமான ஸஹாபாக்கள் வந்து கொண்டே இருப்பர். ஆனால் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு ஃபர்தா முறையை பேணித் தான் அவர்கள் கல்வியை வழங்கினார்கள். கைகுலுக்குதல், தனிமை பயணம், வீண் பேச்சு இவை எதுவுமே அவர்களிடம் இருந்ததில்லை என்று வரலாறு கூறுகின்றது.                                                                                                                        எனவே அந்த அன்னையை முன்னுதாரணமாகக் கொண்டு தாங்களும் சென்று சாதனை படைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆவல். ஏனெனில் தங்களை தொடர்ந்து வர காத்திருக்கும் இஸ்லாமிய சகோதரிகள் ஏராளம். எனவே அதை உணர்ந்து இஸ்லாமிய வரம்பிற்குள் நின்று கொண்டு மென்மேலும் சாதனை படைக்க வாழ்த்துகின்றேன். 
                                                                                                                                                                   தங்களை நேரில் பார்க்காவிடினும் தங்களின் வளர்ச்சியையும் உயர்ச்சியையும் காண இறைவனிடம் மன்றாடும் ஏராளமான உள்ளங்கள் இங்கே இருக்கும் அதே வேளையில் உங்களின் வீழ்ச்சியை காணவும் இஸ்லாமிய வரம்பிலிருந்து தங்களை சிறிது சிறிதாக விலக்கவும் சில கூட்டங்கள் காத்துக் கொண்டிருப்பது நீங்கள் அறியாத உண்மை. அத்தகையவர்களிடமிருந்து இறைவன் தங்களையும் தங்களைப் போன்ற இஸ்லாமிய சகோதரிகளையும் பாதுகாக்க வேண்டும். தங்களுக்காக எனது பார்வையில்பட்ட 'ஃபர்தாவுக்குள் பிரபலங்கள்' சிலரை பார்வைக்கு வைக்கின்றேன்.

உடல் அசைவுகளுக்கு இதுதான் சௌகரியம் என நினைத்து டூ பீஸ் எனும் ஒட்டுத் துணிகளை உடுத்து உலகளாவிய ஓட்ட பந்தயத்தில் கலந்து கொண்ட வீராங்கனைகளுக்கு மத்தியில் ஒரு பெண் உடலை மறைத்து தனது ஓட்டத்தை துவங்கினார். துவக்கத்தில் அவரை பார்த்து சிரிக்க வைத்தவரை இறுதியில் நாணி தலைய குனிய வைத்தார். அவர் தான் ருகையா என்ற பெண்மணி. பஹ்ரைன் நாட்டை சார்ந்த இவர் 200 மீட்டர் ஓட்டத்தில் பர்தா அணிந்து விளையாடி தங்கபதக்கம் பெற்று உலக சாதனை புரிந்தார்


மடோனா நஜாரியன் என்ற இந்த மங்கைக்கு டென்னிஸில் சாதனை படைக்க ஃபர்தா தடையாக இருக்க வில்லை.

ஈரானிய மங்கைகள் அந்நிய ஆண்களுக்கு தங்கள் அவயங்களை காண்பிக்காமல் இந்த வருட ஒலிம்பிக்கில் கால்பந்து விளையாட முனைந்ததால் அவர்கள் ஆட அனுமதிக்கப்படவில்லை. ஆக, சௌகரியம் என்பது மனதை பொறுத்ததே. கண்ணியமான உடை என்றால் அது ஃபர்தா என்பதற்கு இன்னும் உதாரணம் வேண்டுமோ?


Thanks to NEED CHANGES.
10:35 PM | 0 comments | Read More