ஏக இறைவனின் திருப்பெயரால்...


இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வீணும் தவிர வேறில்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு மறுமை வாழ்வே சிறந்தது. விளங்க மாட்டீர்களா?

Flash Neaws...



நெஞ்சில் கைகட்டுதல்,விரலசைத்தல் போன்றவற்றிற்கு ஆதாரமில்லை என்று கூறும் ஆர்.புதுப்பட்டினத்தில் மத்ஹபு இமாமாக பணிபுரிவருக்கு பகிரங்க அறைகூவல்.பொதுமக்கள் மத்தியில் இது குறித்து விவாதிக்க தயார?.

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்
ரெத்தினக்கோட்டையில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 8-6-2013 மாபெரும் ஏகத்துவ எழுச்சி பொதுக் கூட்டம்

Total Pageviews

ஏகத்துவம்

ஏகத்துவம்
வாங்கிவிடீர்களா? ஓரிறை கொள்கை விளக்க மாதஇதழ்

தீன்குலப் பெண்மணி

தீன்குலப் பெண்மணி
வாங்கிவிட்டீர்களா? ஓரிறை கொள்கைவிளக்க பெண்கள் மாதஇதழ்

சமுதாய வாரஇதழ்

சமுதாய வாரஇதழ்
இந்தவார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் படிக்கமறவாதீர்

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி

TNTJ தொலைக்காட்சி நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வழங்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மெகா24டிவியில்.. இந்தியா 10 P.M - 11.00 P.M

சகோதரத் தளம்

SMS ல்பெற

Powered by Blogger.

Featured Posts

சேவைகள்


ஆர்.புதுப்பட்டினத்தில் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக
ஆர்.புதுப்பட்டினத்தை சேர்ந்த சகோதரர் செய்யதலி அவர்களுக்கு மருத்துவ உதவியாக
ரூ.ஆயிரம்  (1000) 10-11-2010 அன்று புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்து
 வழங்கப்பட்டது.இவர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு கால் விரலை ஆபரேசன்
 செய்து அகற்றப்பட்டுள்ளது.
 என் கணவரை ஒரு மாத காலமாக  புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அட்மிட்
 செய்துள்ளேன் ஆனால் மருத்துவர்கள் யாரும் வந்து சரியாக பார்ப்பதில்லை,இதை
 நமதூர் முக்கியஸ்தர்கள் சிலரிடம் கூறி நீங்கள் வந்து மருத்துவரைப் பார்த்து சரியான
 முறையில் வைத்தியம் பாருங்கள் என்று மருத்துவரிடம் சொல்லச் சொன்னேன் அனால்
தங்களை ஊர்காரர்கள் யாரும் வந்து பார்க்கவில்லை,கண்டுகொள்ளவில்லை நாங்கள்
ஏழையாக இருப்பதால் இவ்வாறு நடந்து கொள்கின்றனர் இதுவே ஒரு பணக்காரராக
இருந்தால் MLA,MP என்று பலருக்கும் போன் செய்து மருத்துவமனையில் ஊரே
கூடியிருப்பார்கள் என்று அவரது மனைவி தனது ஆதங்கத்தை நம்மிடம்
தெரிவித்தார்கள்.
  இதை மருத்துவமனையில் சென்று பார்த்த நமது சகோதரர்கள் அவரின் பரிதாப (இவரை
குவிண்டால் என்று பட்டப் பெயர் வைத்து அழைப்பார்கள் அந்த அளவிற்கு பருமனாக
இருந்தவர் மிகவும் மெலிந்து காணப்படுகிறார்) நிலையை கண்டு கண்கலங்கி உடனே
நமது மாவட்டத்தை தொடர்பு கொண்டு உடனே சரியான முறையில் மருத்துவம்
பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தனர்.அவரின் முழுக்காலையும் அகற்ற வேண்டி இருந்தது
நமது ஜமாத்தின் முயற்ச்சியாலும் மருத்துவர்களின் தீவிர மருத்துவத்தாலும்
எல்லாவற்றிற்கும் மேலாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்,அவரின் கால்விரல்
மட்டும் அகற்றப்பட்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளார் அல்ஹம்துலில்லாஹ்.

யஹ்யா அப்பாவிற்கு மருத்துவ உதவி.

சகோதரர் யாசின் அவர்களின் தந்தை யஹ்யா அப்பா அவர்கள் முதுகு எழும்பு முறிக்கப்பட்டு படுத்த படுக்கையாக கிடக்கிறார் அவருக்கும் நமது ஜமாத்தின் மூலம் மருத்துவ உதவியாக ரூ.1000 (ஆயிரம் வழங்கப் பட்டது ) இதை அவரது மகன் யாசின் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். 
ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா 2010
சென்ற வருடங்களைப்போலவே இந்தவருடமும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுகோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா விநியோகம் செயாப்பட்டது.இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தவருடம் பித்ராவைப் பற்றி ஒரு பிரசுரம் வெளியிட்டு உள்ளூரில் வசூல் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் இந்தவருட உள்ளூர் வசூல் 5450 சென்றவருட உளோர் வசூல் 1300 ,மேலும் குவைத் சகோதரர்கள் மூலம் 5486 புருனை சகோதரர்கள் மூலம் 3000 சவூதி சகோதரர்கள் மூலம் 3000 தலைமை மூலம் 4000 சென்றவருடத்தில் சகோதரர்கள் செய்த தவற்றால் ருபாய் 2720 மீதம் ஆகிவிட்டது அதையும் சேர்த்து ஆகமொத்தம் 23656 ருபாய்
உளோர் வசூல்:             5450
சென்றவருட இருப்பு:  2720
குவைத் மூலம்:            5486
சவூதி மூலம்:                3000
புருனை மூலம்:            3000
தலைமை மூலம்:        4000
ஆகமொத்தம்:            23656

இதில் அரிசி இரண்டரைக் கிலோ,சீனி அரைக்கிலோ,ஆயில் அரை லிட்டர்,சேமியா நூறுகிராம்,ஜவ்வரிசி நூறு கிராம்,திராட்சை முந்திரி பத்துருபை,ஏலம் பட்டை பத்துருபா,மஞ்சள் தூள் ஐம்பது கிராம்,மிளகாய் தூள் ஐம்பது கிராம்,சீரகத்தூள்,சோம்புத்தூள் ஐம்பது கிராம்,தேங்காய் ஓன்று,முட்டை ஐந்து,இறைச்சிக்காக பணம் ரூபா 100 ஆகியன 77 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது இதில் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 64 ஏழைகளுக்கும் பக்கத்து கிராமமான எம்பக்கோட்டைக்கு(இந்த உஊரில் நமது கிளை கிடையாது) 13 ஏழைகளுக்கும்  வழங்கப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்...    

ஆர்.புதுப்பட்டினத்தில் பித்ரா 2009...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர் .புதுப்பட்டினம் கிளையின் சார்பில் 2009 ஆம் ஆண்டின் ரமழானில் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது இதில் சுமார் நாற்பது ஏழைகள் பயன் பெற்றனர் அவர்களுக்கு அரிசி ,மளிகை பொருட்கள் முட்டை, கோழி போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ் .


 



10:29 PM | 0 comments | Read More